கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>CCE Materials

>>>ஆகஸ்ட் 31 [August 31]....

  • மலேசிய விடுதலை தினம்(1957)
  • கிர்கிஸ்தான் விடுதலை தினம்(1991)
  • வேல்ஸ் இளவரசி டயானா இறந்த தினம்(1997)
  • வடகொரியா தனது முதலாவது செயற்கைகோளை ஏவியது(1998)

>>>QUIZ PROGRAMME CONDUCTED BY PUDHIYATHALAIMURAI - ENTRY FORM & VELLORE CEO PROCEEDINGS

>>>COMMUNITY / INCOME / NATIVITY FORMS

>>>பத்தாம் வகுப்பு - தமிழ் - முதல் மற்றும் இரண்டாம் தாள் - முதன்மையான வினாக்களும், விடைக்குறிப்புகளும்...

>>>மாணவர்களின் நடிப்புத் திறன் வளர்க்க போட்டி

நடிப்பு திறனை மேம்படுத்தும் வகையில், அரசு பள்ளி 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, போட்டி நடத்த, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள், 6 முதல் 8 நிமிட நேரத்தில் தங்களது நடிப்பு திறனை வெளிப்படுத்த வேண்டும்.
போட்டிகள் பள்ளி அளவில் செப்டம்பர் 3ம் தேதியும், ஒன்றிய அளவில் செப்டம்பர் 5, 6ம் தேதியும், மாவட்ட அளவில் செப்டம்பர் 12ம் தேதியும், மாநில அளவில் செப்டம்பர் 18ம் தேதியும் நடத்தப்பட உள்ளன. போட்டிக்கு வரும் மாணவர்கள் பள்ளிச் சீருடையில் பங்கேற்க வேண்டும்.
ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மற்றும் விரிவுரையாளர், பள்ளி தலைமையாசிரியர்கள் நடுவர்களாக செயல்படுவர். மாநில அளவில் தேர்வாகும் மாணவர்கள், தேசிய போட்டியில் பங்கேற்க உள்ளனர். முதல் மூன்று இடங்களை பிடிபவர்களுக்கு, சான்றிதழ்கள், ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

>>>47 லட்சம் மாணவ, மாணவியருக்கு வண்ண பென்சில்கள்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா வண்ணப் பென்சில், கணித உபகரணப் பெட்டி ஆகியவற்றை, செப்டம்பர் இறுதியில் வழங்க, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, விலையில்லா காலணி, பாடப் புத்தகம், சைக்கிள், வண்ணப் பென்சில், கிரையான் பென்சில், புத்தகப் பை, ஊக்கத் தொகை உள்ளிட்ட, 14 திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதில், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும், 12.50 லட்சம் மாணவர்களுக்கு, விலையில்லா கிரையான் பென்சில் வழங்குவதற்கான பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் பயிலும், 35 லட்சம் மாணவர்களுக்கு, வண்ணப் பென்சில் வழங்கும் திட்டமும், இறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும், 46 லட்சம் மாணவர்களுக்கு, விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்குவதற்கான ஏற்பாடுகளும் முடிந்துள்ளன. கிரையான் பென்சில், வண்ணப் பென்சில் தலா, 16, தனித்தனி பாக்கெட்டுகளில் வழங்கப்படுகின்றன.
பாக்கெட்டின் முன்புறம், தமிழக அரசின் முத்திரையுடன், முதல்வர் படம் பொறிக்கப்பட்டுள்ளது; பின்புறம், மாணவரின் பெயர், வகுப்பு, பள்ளி, மாவட்டம் ஆகியவை அச்சிடப்பட்டுள்ளன. வகுப்புகளில், பென்சில் பாக்கெட்டுகள் மாறிவிடாமல் இருக்கவே, இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>அரசு பள்ளி உள்கட்டமைப்புக்கு ரூ.129 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, நபார்டு வங்கி, 129 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுதொடர்பாக, நபார்டு வங்கியின், தமிழ்நாடு மண்டல தலைமை மேலாளர் லலிதா வெளியிட்ட அறிக்கை: ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ், தமிழகத்தில், 31 மாவட்டங்களில் அமைந்திருக்கும், 131 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 129.82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், புதிதாக, 1,508 வகுப்பறைகள், 112 ஆய்வுக் கூடங்கள், விடுதிகள், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால், 1.7 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைவர்.
ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ், 2012-13ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த நிதியாக, 822 கோடி ரூபாய், தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், சேமிப்பு தானிய கிடங்குகளை உருவாக்க மட்டும், சிறப்பு நிதியாக, 151.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>சி.பி.எஸ்.இ. கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சி.பி.எஸ்.இ. சார்பில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்க்ளுக்கு, 2012ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
டில்லியை தலைமையிடமாக கொண்ட சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மெரிட் ஸ்காலர்ஷிப் வழங்கவுள்ளது. இதுமட்டுமின்றி சி.பி.எஸ்.இ. மெரிட் ஸ்காலர்ஷிப் திட்டம் மூலம் ஒரு பெண் குழந்தையை தேர்வு செய்து 12ம் வகுப்பிற்கான உதவிதொகை வழங்கவுள்ளது.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கும் சி.பி.எஸ்.இ.  மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தகுதி, விண்ணப்பம் மற்றும் இதர தகவல்களை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை அனுப்ப அக்டோபர் 31ம் தேதி கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>ஆகஸ்ட் 30 [August 30]....

  • சர்வதேச காணாமல் போனோர் தினம்
  • ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது(1835)
  • பிரபல நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் இறந்த தினம்(1957)
  • இந்திய தொழிலதிபர் கே.கே.பிர்லா இறந்த தினம்(2008)

>>>உணவு வீணாக்குவதை தடுக்க சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு பாடம்

உணவின் முக்கியத்துவத்தையும், அதன் மகத்துவத்தையும் விளக்கும் வகையில் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தர திட்டமிடப்பட்டுள்ளது.
பட்டினியால் வாடும் குழந்தைகள் பற்றி அரசு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேசிய அளவிலான ஆய்வில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 42 சதவிகிதம் பேர் எடைக் குறைவாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. மேலும், 5 வயதுக்கு கீழான 58% குழந்தைகள் சத்துக்குறைவுடன் காணப்படுவதாகவும் அதில் கண்டறியப்பட்டது.
இந்தப் புள்ளிவிவரங்களை சி.பி.எஸ்.இ மாணவர்களுக்குத் தெரிவிப்பதுடன், உணவை வீணடிப்பதை தடுக்கவும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ. இயக்குனர் (பயிற்சி மற்றும் கல்வி) சாதனா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மாணவர்களுக்கு உணவை வீணடிப்பதால் ஏற்படும் நஷ்டங்கள் பற்றியும், பள்ளிக்கு கொண்டு வரும் உணவு மீதமானால் அதனைத் தயக்கமின்றி திருப்பி எடுத்துச் செல்ல வலியுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>மாணவ, மாணவியர் தற்கொலைகளை தடுக்க உத்தரவு

கல்லூரி மாணவ, மாணவியர் தற்கொலையைத் தடுக்க, கல்லூரிப் பேராசிரியர்கள், கவுன்சிலர்களாகச் செயல்பட வேண்டும் என, உயர்கல்வித் துறை கூறியுள்ளது.
கல்லூரி மாணவ, மாணவியர் தற்கொலைகள் தொடர்ந்து வருவதை அடுத்து, அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளுக்கு, உயர்கல்வித் துறை செயலர், சுற்று அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
கல்லூரி மாணவர்களின் தற்கொலைகள், அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இவற்றை உடனடியாகத் தடுக்க வேண்டும். இதற்கு, கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்களின் கவுன்சிலர்களாக, பேராசிரியர்கள் செயல்பட வேண்டும். கல்லூரியின் மூத்த பேராசிரியர் ஒருவரை, கல்லூரியின் கவுன்சிலராக நியமித்து, மாணவர்களுக்கு தொடர் கவுன்சிலிங்கை வழங்க வேண்டும் என, அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
உயர்கல்வித் துறையின் சுற்று அறிக்கையைத் தொடர்ந்து, கல்லூரி ஆசிரியர்கள் கூட்டங்கள், முதல்வர் தலைமையில் கல்லூரிகளில் நடந்துள்ளன.
இதுகுறித்து, கல்லூரி ஆசிரியர் வசந்தி கூறியதாவது: உயர் கல்வித்துறையின் சுற்றறிக்கையில், தன்னம்பிக்கையையும், மன உறுதியையும் ஏற்படுத்தும் வகையில், மாணவ, மாணவியருக்கு அறிவுரைகள் கூற வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது.
தேர்வில் தோல்வி அடைவதால் ஏற்படும் மனச்சுமை, சக மாணவர்களுடன் ஏற்படும் மோதல்களால் உருவாகும் தனிமை, கல்விச் சுமையால் உண்டாகும் அச்சம், வீட்டுப் பிரச்னைகளால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை போன்றவற்றால் தான், மாணவர்கள் அதிகளவில் தற்கொலைகளை நோக்கிப் போகின்றனர்.
இவற்றுக்கு உரிய ஆலோசனைகளை, அவர்களுக்கு வழங்கும் வகையில், மாணவர்களுடன் மனம்விட்டுப் பேசி, பிரச்னைகளை அறிந்துகொள்ள வேண்டும். பிரச்னைகளை கண்டு கோழைத்தனமான முடிவுகளை எடுக்காமல், தைரியமாக அவற்றை எதிர்கொண்டு, அவற்றிலிருந்து வெளிவர வேண்டும் போன்ற ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்க, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
வகுப்பு ஆசிரியர்கள், மற்ற ஆசிரியர்களை விட, மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்கள். இந்த விஷயத்தில், அவர்கள் கவனம் செலுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு வசந்தி கூறினார்.
மாணவர்களிடையே அதிகமாக இருக்கும் காதல் உறவுகள், பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. அதற்காக, இரு பாலரும் பணத்தைச் செலவழிப்பது, படிப்பில் ஆர்வம் குறைதல் போன்ற பிரச்னைகளில் தொடங்கி, கோழைத்தனமான முடிவுக்கு செல்வது வரை, பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன.
இதற்கு கல்லூரிகளில் கவுன்சிலிங் கொடுப்பது, எந்த அளவுக்கு சாத்தியம்; அதில், ஆசிரியர்கள் பங்கு என்ன என்பது இனித்தான் தெரியவரும். மாணவர்களோடு, பெற்றோருக்கும் கவுன்சிலிங் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றும், ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.

>>>10, 12ம் வகுப்புகளுக்கு செப்.12ல் காலாண்டு பொதுத்தேர்வு

நடப்புக் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி தொடங்கும் என தமிழக அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
முழு ஆண்டுத் தேர்வை போலவே காலாண்டுத் தேர்வுக்கும், அரையாண்டுத் தேர்வுக்கும் வினாத்தாளை படித்துப் பார்க்க 10 நிமிஷமும், தேர்வு எண் உள்ளிட்ட விவரங்களை எழுத 5 நிமிஷமும் வழங்கப்படவுள்ளது. இதனால் தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். பிளஸ் 2 தேர்வுகள் செப்டம்பர் 25ம் தேதி வரையும், 10ம் வகுப்புத் தேர்வுகள் செப்டம்பர் 20ம் தேதி வரையும் நடைபெறவுள்ளன.
இந்தக் கல்வி ஆண்டு முதல் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் ஒரே தேதியில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் காலாண்டுத் தேர்வுக்கு வழங்கப்பட உள்ளது இதுதான் முதல்முறையாகும். ஒரே வினாத்தாள் தயாரிக்கப்படுவதால் வினாக்கள் தரமுள்ளதாக அமையும் என்பது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் பாடத் திட்டப்படி ஒரே மாதிரியான வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுத் தேர்வை சந்திக்கும் மாணவர்கள் பதட்டம் காரணமாக தேர்வுகள சரியாக எழுத முடியாத நிலை இருப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையை மாற்ற காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை பொதுத் தேர்வைப் போல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக நடத்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இதன் எதிர்லியாக தற்போது தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக காலாண்டுத் தேர்வுகள் நடைபெறவுள்ளது.

>>>சமச்சீர் கல்வி திட்டத்தை செயல்படுத்தாத பள்ளிக்கு நோட்டீஸ்

தமிழக அரசின் அங்கீகாரத்துடன் இயங்கும் பிரபல தனியார் பள்ளிகள், சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தாமல், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்களை நடத்தி வருகின்றன. சமீபத்தில், பிரபல தனியார் பள்ளி ஒன்றில், இத்தகைய முறைகேட்டை கண்டுபிடித்த, மெட்ரிக் குலேஷன் பள்ளிகள் இயக்குனரகம், அதன் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற, பிரபல தனியார் பள்ளிகள், சமச்சீர் கல்வி திட்டத்தையே பின்பற்ற வேண்டும். ஆனால், பிரபல தனியார் பள்ளிகள், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்களையே அமல்படுத்துகின்றன.
மெட்ரிக் பாடத் திட்டத்திற்கு நிகராக, சமச்சீர் கல்வி திட்டம் இல்லை என, குறைபடும் இத்தகைய பள்ளிகள், சமச்சீர் பாடத் திட்டத்தை புறக்கணித்துள்ளன. இது, அரசின் விதிமுறைகளுக்கு எதிரானது. ஆனால், உள்ளூரில் உள்ள கல்வி அதிகாரிகளை, சரிக்கட்டி தொடர்ந்து சி.பி.எஸ்.இ. பாடத் திட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில், சென்னை, முகப்பேரில் உள்ள பிரபலமான மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி திட்டத்திற்குப் பதிலாக, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டம் செயல்படுத்தப்படுவது, அரசின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து, ஐந்து பேர் கொண்ட சிறப்பு அதிகாரிகள் குழுவை அமைத்து, திடீரென பள்ளியில் ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க, மெட்ரிக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது.
அதன்படி, பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்ட, குழுவைச் சேர்ந்த, திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளியில் விதிமீறல் நடந்துள்ளதாக, கடந்த 1ம் தேதி, இயக்குனரகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தார்.
அறிக்கையில் அவர் கூறிஇருப்பதாவது: ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி திட்டம் நடைமுறைப் படுத்தவில்லை. ஆறு, ஏழாம் வகுப்புகளுக்கு, சமச்சீர் கல்வி திட்ட பாடப் புத்தகங்களுடன், கூடுதலாக, சி.பி.எஸ்.இ., கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
8ம் வகுப்பு மாணவர்களுக்கும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்கள் நடத்தப்படுகின்றன. தமிழக அரசின் அங்கீகாரத்தை பெற்று, பொதுக்கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி திட்டத்தை பின்பற்றாமல், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை நடத்தி வருவது, மெட்ரிக் பள்ளிகளின் விதிமுறைகளுக்கு முரணானது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், விதிமுறையை கடைபிடிக்காத பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் எனவும், இயக்குனருக்கு அவர் பரிந்துரைத்தார். இதன் அடிப்படையில், கடந்த 14ம் தேதியிட்ட இயக்குனரின், "நோட்டீஸ்&' பள்ளிக்கு அனுப்பப்பட்டது.
நேற்று மாலை, பள்ளி நிர்வாகம் இதற்கு பதிலளித்து உள்ளதாகவும்; அதில், செய்த தவறுக்கு உரிய பதிலை அளிக்காமல், பள்ளியின் சாதனைகளை அளந்துள்ளதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விவகாரத்தில், அரசின் ஆலோசனையைப் பெற்று, விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், மாநிலம் முழுவதும் உள்ள பிரபலமான தனியார் பள்ளிகளை பட்டியல் எடுத்து, சிறப்பு குழுக்கள் அமைத்து ஆய்வு செய்து, முறைகேடு செய்துள்ள பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>அங்கீகாரம் பெறாத 1,022 பள்ளிகளுக்கு 9 மாதம் கெடு

இலவச, கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, அனைத்துப் பள்ளிகளும் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகாரம் பெறாத, 1,022 பள்ளிகள், வரும் மே மாதத்திற்குள், தொடர் அங்கீகாரம் பெற, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், சம்பந்தபட்ட அதிகாரிகளே இதற்குப் பொறுப்பாவர் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், 1,022 பள்ளிகள், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, தொடர் அங்கீகாரம் பெறாதது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், இத்தகையப் பள்ளிகளை நேரடியாக ஆய்வு செய்து, தொடர் அங்கீகாரம் பெறுவதற்கான ஆவணங்களைப் பெற, பள்ளி நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும். அடுத்த கல்வியாண்டு துவங்குவதற்குள், இந்தப் பள்ளிகள், அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை, முதன்மைக் கல்வி அலுவலர்கள் எடுக்க வேண்டும். தவறினால், சம்பந்தப்பட்ட ஆய்வு அதிகாரிகளே, அனைத்திற்கும் பொறுப்பேற்க நேரிடும்.
சிறுபான்மை பள்ளிகளாக இருந்தால், அந்தப் பள்ளி குறித்த ஆவணங்களை, பள்ளிக்கல்வி இணை இயக்குனருக்கு (இடைநிலைக் கல்வி) அனுப்ப வேண்டும். சிறுபான்மை அல்லாத பள்ளிகளுக்கு, தொடர் அங்கீகாரம் வழங்குவது குறித்த முடிவை, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே எடுக்கலாம். இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல், தொடக்கக் கல்வித் துறையின் கீழும், 500க்கும் மேற்பட்ட பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளும், அங்கீகாரம் பெற வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது. புதிய விதிமுறைகள் காரணமாக, தொடர் அங்கீகாரம் பெற முடியாத நிலையில், 700க்கும் மேற்பட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளன.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட இந்தப் பள்ளிகள், குறைந்த இடப்பரப்பில் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளை, மூடவும் முடியாத நிலை உள்ளது. எனவே, இந்தப் பள்ளிகளின் பிரச்னை குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில், அரசு தன் முடிவை விரைவில் அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது

>>>ராகிங் - தடுப்பது, தப்பிப்பது எப்படி?

கல்வி நிறுவனங்களில், சீனியர் மாணவர்களால், ஜுனியர் மாணவர்களின் மீது இழைக்கப்படும் பல்வேறான சட்டவிரோத இன்னல்களே ராகிங் எனப்படுகிறது. ராகிங் என்பது பலவிதங்களில் நடத்தப்படுகிறது.
* ஜுனியர் மாணவர் எந்த உடை அணிய வேண்டும் என கட்டளையிடும் உடைரீதியான ராகிங்.
* குடும்ப பின்னணி, ஜாதி மற்றும் பிற ஏற்றத்தாழ்வுகளை வைத்து நிகழ்த்தப்படும் வார்த்தைக் கொடுமைகள்.
* மரத்தில் ஏறு, சத்தம் போடு போன்ற செயல்களை செய்ய வற்புறுத்தும் சில்லரைத்தனமான ராகிங்.
* உடைகளை கழட்டு என்று மிரட்டும் பாலியல் ரீதியான ராகிங்.
* கேன்டீன் பணத்தைக் கட்டு, சிகரெட் மற்றும் மது வாங்கி வா போன்ற பொருளாதார ரீதியிலான சுரண்டல் ராகிங்.
* இந்த பையை தூக்கி வா, இந்த அசைன்மென்டை நீ செய்துவிடு போன்ற உடல்ரீதியிலான துன்புறுத்தல்.
* ஜுனியர் மாணவர்களை மொத்தமாக பென்ச் மீது ஏறி நிற்கச்சொல்லுதல் போன்ற மாஸ் ராகிங்.
இதுபோன்ற பலவித ராகிங் செயல்பாடுகளால், ஒரு மாணவர், உடல்ரீதியாக பாதிக்கப்படுவதோடு, மனரீதியாகவும் மோசமாக பாதிக்கப்படுகிறார். அவர்களின் தன்னம்பிக்கை உடைந்து, மனச்சிதைவு ஏற்படுகிறது.
இந்த ராகிங் செயல்பாடுகள் பல நேரங்களில் கொலைகளிலும், தற்கொலைகளிலும் சென்று முடிந்துள்ளன. பலர், வாழ்வில் தடம் மாறி சென்றுள்ளனர்.
மாணவர்களுக்கான 24மணி நேர ஹெல்ப்லைன்
கடந்த 2009ம் ஆண்டின் ராகவன் கமிட்டி பரிந்துரைப்படி, ராகிங் தடுப்பு தொடர்பான ஒரு வழிகாட்டு நெறிமுறையை உச்சநீதிமன்றம் வழங்கியது. வாரத்தின் அனைத்து நாட்களும், 24 மணிநேரமும் புழக்கத்திலிருக்கும், மாணவர்களுக்கான ஒரு ஹெல்ப்லைன் ஏற்படுத்தப்பட்டது. ராகிங்கால் தன் மகனை இழந்த ராஜேந்திர கச்ரூ எனும் ஒரு பேராசிரியர், இந்த ஹெல்ப்லைன் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினார். அவர், அமன் சத்யா கச்ரூ டிரஸ்ட்(ASKT) -ஐ உருவாக்கினார். ஆனால், அந்த ஹெல்ப்லைனில் பல குறைபாடுகள் இருந்தன.
புகார்கள் 24 முதல் 48 மணி நேரங்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. மேலும், பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றமிழைப்பவர் ஆகியோரின் உண்மையான அடையாளத்தை தெரிவிக்க வேண்டியிருந்தது. இதைத்தவிர, தாமதத்தினால், ஒரு சில மாணவர்களுக்கே பயன் கிடைத்தது.
ஹெல்ப்லைனை சரிசெய்தல்
2012ம் ஆண்டு ஜனவரி மாதம், கால் சென்டர் கண்காணிப்பிற்கு, ASKT -க்கு அனுமதி வழங்கியது. எனவே, தற்போதைய நிலையில், ஒரு மாணவர், தனது அடையாளத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் புகார் பதிவுசெய்ய முடியும் மற்றும் புகாரானது, சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு 15 நிமிடத்திற்குள் தெரிவிக்கப்படும். மேலும், Caller recording machine இயந்திரம் மற்றும் மாணவர் மற்றும் கல்லூரி ஆகியவற்றின் தகவல் தரவுதளத்தை உருவாக்க ஒரு மென்பொருளும் தற்போது நிறுவப்பட்டுள்ளது என்று ராஜேந்திர கச்ரூ தெரிவிக்கிறார்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் நிரப்பப்படும் கட்டாய அபிடவிட்டுகளால்(mandatory affidavit), குற்றம் இழைப்பவர்களை, ஹெல்ப்லைன் நெருக்கமாக கண்காணிக்கும்.
எங்கே ராகிங் அதிகம்?
நகர் அல்லது ஊரிலிருந்து மிகவும் ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கும் கல்லூரிகளிலேயே ராகிங் நடவடிக்கைகள் மிகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற கல்லூரிகளை மீடியாவும், ராகிங் தடுப்புக் குழுக்களும் எளிதாக அணுக முடிவதில்லை. மேலும், பல கல்லூரிகளும், தங்களின் இமேஜ் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, ராகிங் குற்றங்களை மறைத்து விடுகின்றன.
ராகிங் கொடுமைப் பற்றி பெரும்பாலான புகார்கள், ஒரிஸா, பீகார், மேற்கு வங்கம், உத்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்தே வருகின்றன என்பதாக கச்ரூ தெரிவிக்கிறார். மேலும், ராகிங் நடவடிக்கைகள், மாணவர்கள் எப்போதும் ஒன்றாகவே தங்கியிருக்கும் ரெசிடென்ஷியல் வகையிலான கல்லூரிகளிலேயே அதிகம் நடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனியாரிட்டி போதை
பொதுவாக, பொறியியல் கல்லூரிகளை ஒப்பிடுகையில், மருத்துவ கல்லூரிகளிலிருந்துதான் ராகிங் புகார்கள் அதிகம் வருகின்றன. உதாரணமாக, 250 மருத்துவக் கல்லூரிகளை எடுத்துக்கொண்டால், அவற்றில் 100 கல்லூரிகளில் ராகிங் நடவடிக்கைகள் உள்ளன. ஏன், மருத்துவக் கல்லூரிகளில் அதிகம் என்றால், அங்கே, சீனியர் டாக்டர்களை, ஜுனியர் டாக்டர்கள் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
இதனால் சீனியர்களுக்கு மனதில் ஒரு போதை ஏற்பட்டு விடுகிறது. நாம் என்ன சொன்னாலும் அவர்கள் செய்தாக வேண்டும் மற்றும் அவர்கள் நம் ஆதிக்கத்தின் கீழ் என்ற எண்ணம் ஏற்பட்டு, பல முறைதவறிய நடவடிக்கைக்கு வழி வகுக்கிறது. இதனைத் தடுக்க, கல்லூரி ஆசிரியர்களும், ஊழியர்களும் தொடர்ந்த கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.
கல்வி நிறுவனங்களின் நடவடிக்கை
சில கல்வி நிறுவனங்கள் ராகிங் விஷயத்தில் கடினமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. தமிழகத்திலுள்ள விஐடி பல்கலை மற்றும் ஐஐடி-கான்பூர் போன்றவைகளை இவற்றுக்கு உதாரணமாக கூறலாம். கண்காணிப்பு கேமரா பொறுத்துதல், தனி கண்காணிப்பாளர்களை பணியமர்த்தல், மாணவர்களிடம் தொடர்ச்சியாக குறைகளைக் கேட்டு, அவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்தல், ஆசிரியர்கள், மாணவர்களின் மீது தனி கவனம் செலுத்துதல், பிடிபடும் மாணவர்களை இடைநீக்கம் செய்தல் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
ராகிங் செய்வோரின் மறுபக்கம்
ஒருவகையில் பார்த்தால் ராகிங்கில் ஈடுபடுபவர்களும் மனநலம் சரியில்லாதவர்களே. அவர்கள் ராகிங்கை தங்களுக்கான ஒரு வடிகாலாக நினைக்கின்றனர். தெளிவான அறிவும், தெளிந்த சிந்தனையும் உடையவர்கள் அந்த நடவடிக்கையில் ஈடுபடும் வாய்ப்பில்லை.
எனவே, அதுபோன்றவர்களை, தொழில்துறை சார்ந்த ப்ராஜெக்ட்டுகள் மற்றும் Extra curricular activities போன்றவற்றில் ஈடுபடுத்த வேண்டும்.
நீங்கள் எவ்வாறு உதவலாம்?
ராகிங்கால் பாதிக்கப்பட்டவர்களை கண்டால், அவர்களுக்கு காயமிருப்பதை கண்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும். பாதிக்கப்பட்டவருக்கு சிறிது ஓய்வும், மன ஆறுதலும் தேவை. ஆனால், ராகிங்கை தடுப்பதற்கான தொடர் கண்காணிப்பும், கடுமையான தண்டனைகளும் உண்டு என்பதை பாதிக்கப்பட்டவர் அறிந்தால்தான், அவர் விரைவில் சகஜ நிலைக்கு வருவார்.
ராகிங் புகாரை பதிவுசெய்வது எவ்வாறு?
Anti-ragging helpline, anti-ragging online NGOs மற்றும் internal college helplines ஆகியவற்றில் அழைக்கவும்.
24 மணி நேரத்திற்குள், காவல்துறையிடம் எப்ஐஆர் பதிவு செய்யவும்.
அடையாளத்தை வெளிக்காட்டி கொள்ளாமல், நண்பர் உதவியுடன் ஆர்டிஐ பதிவு செய்து, அபிடவிட் நகலைப் பெற்று, ராகிங் செய்வோரின் பெற்றோரிடம் தெரியப்படுத்தவும். www.no2ragging.org/samplerti.doc என்ற வலையிலிருந்து RTI மாதிரியைப் பெறவும்.
சர்வதேச ராகிங் தடுப்பு ஹெல்ப்லைன் எண் - 1800-180-5522. இ-மெயில் - helpline@antiragging.net
ஆன்லைன் அபிடவிட்டை www.antiragging.in மற்றும் www.amanmoment.org ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்யவும்.
கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி வழங்கியுள்ள வழிகாட்டல்கள்
சேர்க்கை கையேட்டில், ராகிங் தடுப்பு ஹெல்ப்லைன் எண்ணை வெளியிட வேண்டும்.
ராகிங்கில் ஈடுபட மாட்டோம் என்று பெற்றோரும், மாணவர்களும் உறுதியளித்த அபிடவிட் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
புதிதாக சேரும் அனைத்து மாணவர்களுக்கும், சம்பந்தப்பட்ட நிர்வாகிகளின் தொலைபேசி எண் மற்றும் முகவரி அடங்கிய நோட்டீசை விநியோகிக்க வேண்டும்.
புகார் கொடுப்பவரின் அடையாளம் சிறப்பாக பாதுகாக்கப்பட வேண்டும்.
முடிந்தளவிற்கு, புதிதாக சேர்பவர்களை, சீனியர்களுடன் அல்லாமல், தனி ஹாஸ்டலில் தங்க வைக்க முயற்சிக்க வேண்டும்.

>>>ஆகஸ்ட் 29 [August 29]....

  • இந்திய தேசிய விளையாட்டு தினம்
  • செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் உருவாக்கப்பட்டது(708)
  • பிரேசிலை தனி நாடாக போர்ச்சுக்கல் அறிவித்தது(1825)
  • மைக்கேல் பாரடே மின்காந்த தூண்டலை கண்டுபிடித்தார்(1831)

>>>ஆகஸ்ட் 28 [August 28]....

  • வில்லியம் ஹேர்ச்செல், சனி கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார்(1789)
  • ஹென்ரி ஹட்சன், டெலவர் வளைகுடா பகுதியை கண்டுபிடித்தார்(1609)
  • குவைத்தை தனது ஒரு பகுதியாக ஈராக் அறிவித்தது(1990)
  • சயின்டிபிக் அமெரிக்கன் என்ற இதழின் முதல் பதிப்பு வெளியானது(1845)
  • காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்(1898)

>>>ஆகஸ்ட் 27 [August 27]....

  • மால்டோவா விடுதலை தினம்(1991)
  • கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை பிறந்த தினம்(1876)
  • உலகின் முதல் ஜெட் விமானமான ஹென்கெல் ஹி 178 சேவைக்கு விடப்பட்டது(1939)
  • மலேசிய அரசியலமைப்பு சாசனம் அமலானது(1957)

>>>TamilNadu Teachers Eligiblity Test 2012- Tentative Provisional List of Candidates and Individual Query

Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) – 2012
 
1. As per notification No.4/2012 dated 07.03.2012, Teachers Recruitment Board conducted Teacher Eligibility Test for Paper I and Paper-II on 12.07.2012. 2,88,588 candidates wrote exam for Paper-I and 3,88,175 candidates wrote exam for Paper-II. (Totally 6,76,763) The tentative answer keys was published on the website of the Teachers Recruitment Board and representations, objections etc. were invited from the candidates within one week. All the representations received within the stipulated time have been thoroughly examined by subject experts. After thorough scrutiny, a revised and final answer key has been arrived at and based on that, OMR answer sheets have been valued and provisional results of the written examination is published herein.
2. Candidates who have secured 60% marks and above are declared to have passed the Teacher Eligibility Test subject to the Certificate Verification and production of valid documents at the time of Certificate Verification. Dates for Certificate Verification will be announced shortly.
3. The Board on a sympathetic note, permitted candidates to carry out certain corrections for their mistakes in the application forms. But the same concession can not be extended in the answer sheets in a competitive examinations. Therefore, the Teachers Recruitment Board has resolved to deduct 5 marks for candidates who failed to indicate booklet series in the OMR answer sheets. For those candidates who failed to indicate their subject option in Paper II, the Board has resolved to deduct 3 marks those candidates who failed to indicate the correct language option, the Board resolved to deduct 2 marks. Candidates who took their original OMR answer sheets with them, their candidature has been cancelled and the Board has also directed to initiate departmental action against the Hall Invigilators for their negligent conduct. OMR Answer sheets of candidates who wrote different roll number other than the actual roll number allotted to them have not been valued and their candidatures have also been cancelled. Some candidates have written examination paper other than mentioned in their application form. Their OMR answer sheets are not evaluated and candidature cancelled. Board has also resolved to initiate departmental action against the concerned Hall invigilators. In some cases, the signatures in the OMR sheets do not match with the signatures in application form. candidature of such case, has been declared as invalid and the Board has also resolved that they will be debarred from writing any examination conducted by Teachers Recruitment Board for the next five years.
4. Many candidates had requested for correction in their name spellings. They were permitted to correct their name by following the prescribed procedures at the time of examination by submitting suitable documentary evidence. Candidates who have carried out correction in their names in the OMR answer sheets , but failed to submit documentary evidence, their request has not been considered in the absence of documentary evidence.
5. In HNUBR Girls Higher Secondary School, Nilakottai and Kikani Higher Secondary School, Coimbatore, the OMR answer sheet meant for Paper II was supplied for Paper-I. In HNUBR Girls Higher Secondary School, Nilakottai, Dindigul District the OMR answer sheet meant for Paper-I was supplied for Paper-II. The Board regrets for the mistake committed by the Hall Invigilators, but the appropriate action was taken to evaluate the Answer sheets correctly as per their question papers. Candidates are also requested to bring to the notice of the Board if they find any discrepancy, the Board undertakes to correct it.
Utmost care has been taken in preparing the list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list will not confer any right of enforcement.








>>>ஆகஸ்ட் 26 [August 26]....

  • அமெரிக்காவில் பெண்கள் சமஉரிமை தினம்
  • புனிதர் அன்னை தெரசா பிறந்த தினம்(1910)
  • தமிழறிஞர் திரு.வி.கல்யாண சுந்தரனார் பிறந்த தினம்(1883)
  • அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது(1920)

>>>ஆகஸ்ட் 24 [August 24]....

  • உக்ரேன் விடுதலை தினம்(1991)
  • கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது(1690)
  • நேட்டோ ஒப்பந்தம் அமலுக்கு வந்தது(1949)
  • ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் பிரதேசம் உருவாக்கப்பட்டது(1936)
  • நாமக்கல் கவிஞர் வே.ராமலிங்கம் பிள்ளை இறந்த தினம்(1972)

>>>(New Health Insurance Scheme - NHIS) Form for furnishing Data of Employee and their eligible Family Members for insurance coverage under New Health Insurance Scheme, 2012 to Insurance Company/Third Party Administrator

>>>ஆகஸ்ட் 22 [August 22]....

  • ரஷ்ய கொடி நாள்
  • சென்னை நகரம் உருவாக்கப்பட்ட தினம்(1639)
  • தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் ‌தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது(1926)
  • 12 நாடுகள் இணைந்து ஜெனீவாவில் செஞ்சிலுவை சங்கத்தை ஆரம்பித்தன(1864)
  • நெப்டியூனின் முதல் கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்டது(1989)

>>>COMMUNITY/ NATIVITY CERTIFICATES TO STUDENTS - 2012-13 - INSTRUCTIONS

>>>பள்ளிகளில் மாணவ - மாணவியரின் பாதுகாப்பு தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் அறிவுரைகள்


 
br‹id-6 jäœehL gŸë¡ fšé Ïiz Ïa¡Fe® (Ïilãiy¡ fšé) brašKiwfŸ e.f.v©.5/2012,  ehŸ:  07.2012 மற்றும் ntYh® kht£l Kj‹ik¡ fšé mYty® mt®fë‹ brašKiwfŸ e.f.v©. 5134/M3/2012,  ehŸ : 03.08.2012 ன் படி

 gŸë¡ fšé gŸë¡ fšé¤Jiwæ‹ Ñœ brašgL« mid¤J gŸëfëY« khzt / khzéaU¡F ghJfh¥ò trÂfŸ V‰gL¤Jjš m¿Îiu tH§Fjš

gh®itæš f©l gŸë¡ fšé Ïa¡Fe® mt®fë‹ brašKiwfë‹go, gŸëfëš V‰gL« mr«ghéj§fŸ, k‰W« ég¤Jகis j鮡F« bghU£L Ñœ¡f©l m¿Îiufis Ëg‰WkhW mid¤J tif gŸëfS¡F« bjçé¡fyh»wJ.
1.        khzt®fis V‰¿¢ bršY« thfd§fis gŸë ã®thff§fŸ KG guhkç¥Ãš it¤J¡bfhŸs nt©L«.
2.       m›thfd§fis Ïa¡F« X£Le®fS¡F bjëthd m¿Îiufis ã®thf« tH§f nt©L«.
3.       muR gŸëfëš, Ïytr g°gh° £l¤Â‹ Ñœ ga‹bgW« gŸë khzt®fŸ, ngUªJ ãiya§fŸ, k‰W« ngUªJfëš gaz« brŒÍ«nghJ mt®fë‹  ghJfh¥ò F¿¤J khzt®fS¡F m¿Îiu tH§f nt©L«.
4.       kiHfhy¤Âid eh« v®neh¡»ÍŸsjhš kiHædhš V‰gL« ghÂ¥òfŸ, f£ol§fŸ, ä‹ Ïiz¥ò M»at‰¿id gŸë ã®thf« / jiyik MÁça® jdJ Áw¥ò f©fhâ¥Ã‹  Ñœ bfh©L tUjš nt©L«.
5.       fê¥Ãl« k‰W« Rfhjhu« M»at‰¿id guhkç¤jš M»at‰¿id khzt®fS¡F bjëthf vL¤Jiu¡f nt©L«.
                nkY« khzt®fë‹ ghJfh¥Ãid ã®thf« / jiyik MÁça® j§fë‹ jiyaha flikahf fU brašglnt©L« v‹W« MŒÎ mYty®fŸ gŸë gh®it nk‰bfhŸS«nghJ Ï¥bghUŸ F¿¤J jåftd« nk‰bfhŸsΫ bjçé¡f¥gL»wJ.

>>>பள்ளிக்கல்வித்துறை - 2012-2013 - மாநில அளவிலான அறிவியல் கருத்தரங்கு 30-08-2012 (வியாழன்) அன்று சென்னை-8, மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது...

>>>SCHOOL EDUCATION - POST CONTINUANCE G.O. 279 - 4748 TEACHING AND NON- TEACHING STAFF

>>>REVIEW MEETING OF CHIEF EDUCATIONAL OFFICERS- MINUTES

>>>1,200 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் காலி

அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மூலம் நியமிக்கப்பட்ட, 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களில், பல்வேறு காரணங்களால் 1200 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை விரைவில் நிரப்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பு கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.
மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம், இந்தாண்டு துவக்கத்தில் ரூ.5 ஆயிரம் மாத சம்பளம் அடிப்படையில் கணினி, தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் இதுவரை மாநிலம் முழுவதும் 15 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. பணி கிடைத்த பள்ளிகள் தொலைவாக இருந்தது, வேறு பள்ளிக்கு மாற்றம் கேட்டு கிடைக்காத காரணத்தால் தேர்வான ஆசிரியர்கள் இன்னும் பணியில் சேராமல் இருப்பது, பகுதி நேர ஆசிரியர்களாக தேர்வு பெற்ற பின் வேறு வேலைகள் கிடைத்து சென்றது போன்ற காரணங்களால் மாநிலம் முழுவதும் இன்னும் சுமார் 1,200 பணியிடங்கள் வரை காலியாக உள்ளதாக அனைவருக்கும் கல்வி திட்டம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்பணியிடங்களை தகுதியுள்ள ஆசிரியர்கள் மூலம் நிரப்ப தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களுக்கு இரண்டாவது முறையாக அழைப்பு விடுப்பதா? அல்லது தகுதி அடிப்படையில் புதியவர்களை தேர்வு செய்வதா? என்று கல்வி துறை அதிகாரிகள் பரிசீலனை நடத்தி வருகின்றனர்.
எந்த வகையிலாவது காலியாக உள்ள இடங்களுக்கு பகுதி நேர ஆசிரியர்களை விரைவில் நியமித்து கல்வி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தகுதியுள்ள ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

>>>டி.ஆர்.பி.,யில் தேர்வானவர்களுக்கு வடக்கு மாவட்டத்தில் பணிவாய்ப்பு

டி.ஆர்.பி., மூலம் தேர்வான முதுகலை ஆசிரியர்களுக்கு, கடலூர் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் தான், அதிக பணி வாய்ப்புகள் உள்ளன.
சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை நடத்திய டி.ஆர்.பி.,தேர்வில் தேர்ச்சி பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தலை, முதன்மை கல்வி அலுவலர்கள் நடத்தினர். சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து பாடங்களுக்கும் 35 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
மற்ற மாவட்டங்களில் தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, காலியிடங்கள் பற்றிய விவரமும் சேகரிக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள இரு கல்வி மாவட்டங்களில், 60க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன.
அதிகாரி ஒருவர் கூறுகையில், டி.ஆர்.பி.,யில் தேர்வு பெற்றவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். தென் மாவட்டங்களில் இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களுக்கு காலியிடங்கள் குறைவாக உள்ளன.
திருச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் தான் காலியிடங்கள் அதிகமாக உள்ளன. இயற்பியல்,வேதியியல் பாடங்களுக்கு தென் பகுதியில் இருந்து தேர்வான பலருக்கு வடக்கு, மத்திய மாவட்டங்களில் பணி வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது என்றார்.

>>>டி.ஆர்.பி. தேர்வுப் பணிகளை தனியாரிடம் வழங்க முடிவு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வரும் தேர்வுப் பணிகள், தகுதி வாய்ந்த தனியார் நிறுவனத்திடம், மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளன.
பள்ளி, கல்லூரி ஆசிரியர் தேர்வு, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளுக்கான ஆசிரியர் தேர்வு போன்றவற்றை, டி.ஆர்.பி., நடத்தி வருகிறது. அனைத்து பணியிடங்களுக்கும், போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்து, சம்பந்தப்பட்ட துறைகளிடம் தேர்வுப் பட்டியலை ஒப்படைக்கும் பணியை, டி.ஆர்.பி., செய்கிறது.
தேர்வுப் பணிகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக, அதில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. அதன்படி, தேர்வுப் பணிகளில், நவீன தகவல் தொழில்நுட்பத்தை கையாள்வதற்காக, அதை தகுதி வாய்ந்த தனியார் நிறுவனத்திடம், ஒப்பந்த அடிப்படையில் வழங்க, "டெண்டர்" விளம்பரம் வெளியிட்டுள்ளது.
ஸ்கேனிங், பிரின்ட்டிங், தகவல் தொகுப்பு நிர்வாகம் மற்றும் தேர்வுப் பணிகளில் அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள், 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த நிறுவனத்திடம், முதலில் ஒரு ஆண்டுக்கு மட்டும் பணி வழங்கப்படும்.
அந்த நிறுவனத்தின் சேவையில் திருப்தி ஏற்பட்டால், ஒப்பந்தம் மேற்கொண்டு நீட்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு செய்யப்படும் நிறுவனம், தேர்வுப் பணிகளுக்கு தேவையான அனைத்து மின்னணு சாதனங்கள் மற்றும் தேவையான பணியாளரை நியமனம் செய்ய வேண்டும்.
ஸ்கேனிங், பிரின்ட்டிங் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும், டி.ஆர்.பி., இடத்தில் நடக்கும் எனவும், தேர்வு செய்யப்படும் நிறுவனம், திங்கள் முதல், சனிக்கிழமை வரை, தினமும் காலை, 9 முதல், மாலை 6 மணி வரை, வேலை செய்ய வேண்டும் எனவும், டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள சம்பத் மாளிகையில், நான்காவது தளத்தில், டி.ஆர்.பி., இயங்கி வருகிறது. இந்த தளத்தில் போதிய இட வசதி இல்லை. ஆறாவது மற்றும் எட்டாவது தளத்தில் இயங்கி வந்த, விளையாட்டு பல்கலை அலுவலகம், தரமணிக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்த இரு தளங்களையும், டி.ஆர்.பி., எடுத்துக் கொண்டது.
இந்த தளங்களில், தேர்வு செய்யப்படும் சேவை நிறுவனத்தின் அலுவலகம் அமைய, அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
தேர்வுப் பணிகளுக்கான தகவல் தொழில்நுட்பப் பணிகளை, தற்போது, தனியார் நிறுவனம் ஒன்று வழங்கி வருகிறது. இந்நிறுவனம் பல ஆண்டுகளாக சேவை வழங்கி வரும் நிலையில், நவீன தகவல் தொழில்நுட்பத்தை புகுத்தும் வகையில், புதிய நிறுவனத்தை தேர்வு செய்ய, தற்போது, "டெண்டர்" கோரப்பட்டுள்ளது.

>>>எஸ்.சி.,- எஸ்.டி., மாணவிகளுக்கு வங்கிகள் மூலம் உதவித்தொகை

ஒன்பதாம் வகுப்பு எஸ்.சி.,- எஸ்.டி., மாணவிகளுக்கு, மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையை, வங்கிகளில் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் இடைநிற்றல் கல்வியை தடுக்கவும், குறைந்தபட்சம் 10ம் வகுப்பாவது கட்டாயம் படிக்கவும், மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக, எஸ்.சி., -எஸ்.டி., மாணவிகளின் இடைநிற்றலை தடுப்பதோடு, மேல்படிப்பை தொடரும் வகையில் 9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு 2,000 ரூபாய் கல்வித் உதவித்தொகை வழங்குகிறது.
அந்தந்த பள்ளி நிர்வாகம் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு கண்டறியப்பட்டதால், இவ்வாண்டு முதல் உதவித்தொகை தேசிய வங்கி கிளைகள் மூலம் கிடைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாணவியின் வங்கிக் கணக்கு எண், கிளையின் பெயர், குறியீட்டு எண் போன்ற தகவல்களை முதன்மை கல்வி அலுவலக ஊழியர்கள் சேகரித்து, பள்ளிக்கல்வித் துறைக்கு அனுப்புகின்றனர்.
கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் எஸ்.சி.,- எஸ்.டி.,மாணவிகளுக்கு மத்திய அரசு 2000 ரூபாய் உதவித்தொகையை கடந்த 2009 முதல் வழங்குகிறது.
இத்தொகையை 2 ஆண்டுக்கு எடுக்க முடியாது. 11ம் வகுப்பு சேரும்போது, எடுக்கலாம். மேல் படிப்புக்காகவே இத்தொகை வழங்கப்படுகிறது. முறைகேடுகளை தவிர்க்க, மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் கல்வி உதவித் தொகைகள் இனி வங்கிகள் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

>>>எம்.பி.ஏ.க்களில் 21% பேர் மட்டுமே வேலைக்கு தகுதியானவர்கள்..!.?

இந்தியாவில் மேலாண்மைப் (எம்.பி.ஏ) படிப்பை முடிக்கும் பட்டதாரிகளில் வெறும் 21 சதவிகிதம் பேர் மட்டுமே பணியில் சேருவதற்கு தகுதி படைத்தவர்களாக இருக்கிறார்கள் என தனியார் நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான ஆய்வில் தெரியவந்துள்ளது.
மெரி ட்ராக் (MeriTrac) என்ற அந்த நிறுவனம் கடந்த 2007ம் ஆண்டு இதே போன்று நாடு முழுவதும் நடத்திய ஆய்வில், 25 சதவிகித் மேலாண்மைப் பட்டதாரிகள் பணிக்கு தகுதியானவர்கள் என்ற புள்ளிவிவரம் தெரியவந்தது.
நாடு முழுவதும் உள்ள் 25 தலை சிறந்த பிசினஸ் ஸ்கூல் உட்பட, 100 மேலாண்மைக் கல்வி பயிற்றுவிக்கும் 100 கல்வி நிறுவனங்களில் 2,264 எம்.பி.ஏ. மாணவர்களிடம் இந்த நிறுவனம் ஆய்வு நடத்தியது. verbal ability, quantitative ability மற்றும் reasoning ஆகிய பிரிவுகளில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அதற்குரிய மதிப்பெண்களும் வழங்கப்பட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற மாணவர்களில், 52.58% பேர் மட்டுமே verbal ability தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இதேபோல் quantitative ability தேர்வில் 41.17% மாணவர்களும், reasoning தேர்வில் 37.51% மாணவர்களும் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பொதுவாக verbal ability தேர்வில் 45% மதிப்பெண்ணும், quantitative ability தேர்வில் 35% மதிப்பெண்ணும், reasoning தேர்வில் 40% மதிப்பெண்ணும் பெற்றாலே தேர்ச்சி பெற்றதாக கருதப்பட்ட இந்த ஆய்விலேயே 21 சதவிகித மாணவர்கள் மட்டுமே பணிக்குச் செல்லத் தகுதியானவர்கள் எனத் தெரியவந்துள்ளது, பிசினஸ் ஸ்கூல் கல்வி நிறுவனங்களின் தரம் பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

>>>2030ல் இந்திய பல்கலை.,களில் 40 கோடி மாணவர்கள்

 
இந்தியாவில் மேற்படிப்பைத் தேர்வு செய்யும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற கல்வி தொடர்பான மாநாட்டில் பேசிய போது இதனைத் தெரிவித்த அவர், மேற்படிப்பைத் தேர்வு செய்பவர்களின் சதவிகிதம் கடந்த 4 ஆண்டுகளில் 12.4 சதவீதத்தில் இருந்து 20.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
வரும் 2030ம் ஆண்டுக்குள் இந்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 40 கோடியை எட்டிவிடும் என்று தெரிவித்த அவர், இந்த எண்ணிக்கை அமெரிக்காவின் மக்கள் தொகைக்கு இணையானதாக இருக்கும் என்றார்.
எனினும், இந்த அளவு மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு தற்போதுள்ளதை விட கூடுதலாக 800 பல்கலைக்கழகங்களும், 50 ஆயிரம் கல்லூரிகளும் தேவைப்படும் எனத் தெரிவித்த அவர், இவற்றை உருவாக்குவதில் ஒரு ஆண்டு தாமதம் ஏற்பட்டாலும், பல மாணவர்களின் மேற்படிப்பு பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

>>>பி.எட்., படிப்பில் சேர மாணவியரிடம் ஆர்வமில்லை... டி.இ.டி. தேர்வை எதிர்கொள்ள தயக்கம்...

நடப்பு கல்வியாண்டு அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில், பி.எட்., படிப்புக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பி.எட்., பட்டதாரிகள், டி.இ.டி., தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே, அரசு பணியில் சேர முடியும் என்ற, மத்திய அரசின் அறிவிப்பு, இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என, கருதப்படுகிறது.
கடந்த காலங்களில், மருத்துவம், இன்ஜினியரிங், சட்டம் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கு இணையாக, பி.எட்., படிப்புக்கும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. குறிப்பாக, பெண்கள் மத்தியில், அதிக ஆர்வம் இருந்தது. பி.எட்., படித்து, அரசு பள்ளியில், ஆசிரியர் பணிக்கு சேர்ந்துவிட்டால், ஓய்வு பெறும் வரை, எவ்வித பிரச்னையும் இல்லை என்ற சூழ்நிலை, முன்பு இருந்தது. திறமையான ஆசிரியர்கள் மட்டும் பணியாற்ற, வழிவகுக்கும் வகையில், பி.எட்., முடித்தவர்களும், படிப்பவர்களும், ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) வெற்றி பெற்றால் மட்டுமே, அரசு பணியில் சேர முடியும் என, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது; தற்போது பணியில் இருப்பவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என, தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, பணியில் உள்ள ஆசிரியர்களும், டி.இ.டி., தேர்வு எழுதி வருகின்றனர்.
இந்நிலையில், டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள, அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில், பி.எட்., பிரிவில் 125, எம்.எட்., பிரிவில் 35 என, மொத்தம் 160 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வியாண்டு, பி.எட்., படிப்பு மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், கடந்த 11ல் துவங்கியது; 18ல் நிறைவடைந்தது. 700க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்; கடந்த கல்வியாண்டில் 900க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். எதிர்காலத்தில், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில், ஆசிரியர் பணிக்கு அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கல்வியியல் படிப்பில் சேர, மாணவியரிடம் ஆர்வம் குறைந்து வருவது, ஆசிரியர் சமுதாயத்தினரிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு கல்வியியல் கல்லூரி முதல்வர் இந்திராணி கூறியதாவது: பெரும்பாலான பி.எட்., மாணவ, மாணவியர், அரசு வேலை பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக, கல்வி கற்கின்றனர். தகுதி மற்றும் திறமைவாய்ந்த ஆசிரியர்களை நியமிக்கும் நோக்கில், பி.எட்., பட்டம் பெற்றோர், ஆசிரியர் தகுதி தேர்விலும் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அரசு பணியில் சேர முடியும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது; தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. நடப்பு கல்வியாண்டில், அரசு கல்வியியல் கல்லூரி பி.எட்., மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பம் குறைந்துள்ளதற்கு, இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். தனியார் பள்ளிகளில் குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை மட்டும் கருத்தில் கொள்ளாமல், தகுதி மற்றும் திறமைவாய்ந்த ஆசிரியர்களுக்கு, தனியார் பள்ளிகளில், அதிக ஊதியம் வழங்கப்படுவது குறித்தும், சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். எதிர்காலத்தில், தகுதி மற்றும் திறமை கொண்டிருந்தால், அரசு பள்ளிகளைப் போன்றே, தனியார் பள்ளிகளிலும், அதிக ஊதியம் பெற வாய்ப்பு உள்ளது.

>>>ஆகஸ்ட் 21 [August 21]....

  • ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1821)
  • டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது(1842)
  • ஸ்டாலின்கிராட் போர் துவங்கியது(1942)
  • ‌ஜேம்ஸ் குக், கிழக்கு ஆஸ்திரேலியாவை கைப்பற்றி, அதற்கு நியூசவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார்(1770)

>>>21ம் தேதி நேரடி எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு

நேரடி எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு, 21ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும், என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவித்தார்.
அவரது அறிவிப்பு: ஏப்ரலில், நேரடி எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது. தேர்வருக்கான மதிப்பெண் சான்றிதழ், அவர்களின் முகவரிக்கு, மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடக்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர், தங்களது இருப்பிட முகவரிக்கு உட்பட்ட மாவட்ட கல்வி அலுவலகத்தில் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
அறிவியல் செய்முறை வகுப்புகளில் கலந்துகொள்ள, 27ம் தேதிக்குள், பெயரை பதிவு செய்ய வேண்டும். அறிவியல் செய்முறை வகுப்புகளில் கலந்துகொள்ளாத தேர்வர், பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.
செய்முறைத் தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்ப படிவத்தை, தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

>>>ஆகஸ்ட் 20 [August 20]....

  • நேபாள் தந்தையர் தினம்
  • இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் பிறந்த தினம்(1944)
  • ஹங்கேரி நாடு, முதலாம் ஸ்டீபன் என்பவரால் உருவாக்கப்பட்டது(1000)
  • இலங்கையில் ஒரு ரூபாய் தாள் வழங்கப்பட்டது(1917)
  • இலங்கை குடியுரிமை சட்டம், இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது(1948)

>>>கல்வி கடன் விண்ணப்பங்களை நிராகரிக்க கூடாது - மத்திய நிதி அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்கள்

"வங்கியில் கல்விக் கடன் பெறுவது மாணவரின் உரிமை.கடன் கேட்டு வரும் விண்ணப்பங்களை எந்த வங்கி அதிகாரியும் நிராகரிக்க கூடாது' என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.வங்கி தலை வர்கள் பொது துறை வங்கி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர், பின்னர் செய்தியாளர்க ளிடம் பேசியதாவது:
மக்களிடம் புழங்கும் பணம் அவர்களின் தேவை தவிர, பிற நேரங்களில் வங்கிகளில் இருப்பதுதான் சரியாக இருக்கும். ஆனால், ஏறத்தாழ 11 லட்சம் கோடி ரூபாய் வரை தனிநபர்களிடம் இருந்து வருகிறது. இந்த பணத்தை வங்கிகளுக்கு வரவழைக்கும் நோக்கில் சில நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.தயாரிப்பு துறை மீண்டும் எழுச்சி காண, நுகர்வோர் சாதன கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க வேண்டும்.
மேலும், சுலபமாக கடனை திரும்பச் செலுத்த வசதியான, மாத தவணை திட்டத்தை வங்கிகள் நடைமுறைபடுத்த வேண்டும். வறட்சி பாதித்த பகுதிகளை சேர்ந்தவர்களின் குறுகிய கால விவசாயக் கடனை, நீண்ட நாள் கடன் திட்டங்களாக மாற்ற வேண்டும்.
விவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டில் 5.75 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை, 6 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தவும் வாய்ப்புள்ளது. விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் அளிக்கப்பட்ட கடன், சரிவர திரும்ப செலுத்தப்பட்டு வருகிறது.மாணவர்கள் சுலபமாக கல்விக் கடன் பெறும் வகையில், கடன் வழங்குவதற்கான நடைமுறைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும். கல்விக் கடன் விண்ணப்பங்களை எந்த வங்கி அதிகாரியும் நிராகரிக்க கூடாது.
ஏ.டி.எம்.,:வங்கித் துறை,ஆரோக்கியமாகவும், சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறது.நாட்டில் தற்போது 63 ஆயி ரம் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்கள் (ஏ.டி.எம்.,) உள்ளன. இதை, அடுத்த இரண்டு ஆண்டு களில் இரு மடங்காக உயர்த்த வங்கிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
பணம் வழங்குவது மட்டுமின்றி, பணத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் நவீன வசதி கொண்டதாகவும் ஏ.டி.எம்.,கள் இருக்க வேண்டும். இதனால் வங்கித் துறையிலேயே பணம் நிலையாக இருக்கும்.முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம், நமது பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். சிறிய, நடுத்தர மற்றும் பெரிய தொழில்கள் என அனைத்து மட்டங்களிலும், முதலீடுகள் சீரமைக்கப்பட வேண்டும்.
பிரச்னைகள்:வங்கித் தலைவர்களுடனான சந்திப்பில், எரிபொருள் வினியோக ஒப்பந்தம், ஒப்புதல் மற்றும் அனுமதி வழங்குவதில் ஏற்படும் காலதாமதம், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணை யம், மாநில மின் வாரியங்கள் குறித்த காலத்தில் பணம் செலுத்தாதது உட்பட, தாங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டனர். தடைக்கற்களாக உள்ள இப் பிரச்னைகள், சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
முதலீட்டு சக்கரம் சுழலத் தொடங்கி, முதலீட்டு இன்ஜின் இயங்கத் தொடங்கினால், பெரும்பாலான பிரச்னைகள் தீர்க்கப்பட்டு விடும். கடன் தேவைப்படும் துறைகளில் தீவிர கவனம் செலுத்துமாறு வங்கிகள் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளன.
மாத தவணை:நடுத்தர வர்க்கத்தினர், கடனுக்கான மாத தவணை தொகை உயர்ந்து, பணம் செலுத்தும் காலம் நீடித்து வருவது குறித்து புகார் தெரிவிக்கின்றனர். நுகர்வோர் சாதனங்களை அதிகம் பயன்படுத்தும் நடுத்தர வர்க்கத்தினர், சாதனங்கள் வாங்குவதை ஒத்தி வைக்கும் போக்கு காணப்படுகிறது.இது, தொழில்துறையின் வளர்ச் சிக்கு உகந்தது அல்ல. முதலீட்டு திட்டங்கள் செயல்பாட்டிற்கு வரும்போது, மக்களுக்கு நுகர்வோர் சாதனங்களை வாங்குவதில் ஊக்கம் பிறக்கும். இது, தயாரிப்பு துறை என்ற இன்ஜின் செயல்பட வழி வகுக்கும்.
மாதாந்திர தவணை தொகை, சுலபமாக செலுத்தும் வகையில் இருக்க வேண்டும். அப்போது தான் மக்கள், இரு சக்கர வாகனங்கள், கார், குளிர்சாதன பெட்டிகள், சலவை இயந்திரங்கள், மிக்சி, கிரைண்டர்கள் உள்ளிட்டவற்றை சுலபமாக வாங்குவர்.
இது, தயாரிப்பு துறை, சுணங்காமல் செயல்படவும், பெரிய நிறுவனங்கள் தொடர்ந்து இத்தகைய சாதனங்களை தயாரிக்கவும் துணை புரியும். இதனால், உதிரி பாகங்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொடர்ந்து வர்த்தகம் மேற்கொள்ள முடியும்.
கார் கடன்:ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கார் கடனுக்கான மாதாந்திர தவணைத் தொகையை குறைத்துள்ளது. இவ்வங்கியை, இதர வங்கிகளும் பின்பற்ற வேண்டும். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஏழு ஆண்டு கால கார் கடனுக்கு, ஒரு லட்ச ரூபாய்க்கு, மாத தவணையாக 1,766 ரூபாய் நிர்ணயித்திருந்தது.
இதையடுத்து இவ்வங்கியின் கார்கடன் மூலம்,நாள்தோறும் 400 கார்கள் விற்பனையாயின. பின்னர்,மாத தவணை தொகை 1,725ஆக குறைக்கப்பட்டதால், நாளொன்றுக்கு கார் விற்பனை 700 ஆக உயர்ந்தது. பின்பு, மாத தவணை 1,699 ரூபாயாக குறைக்கப்பட்டதை தொடர்ந்து, நாளொன்றுக்கு கார் விற்பனை 1,200 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

>>>ஆகஸ்ட் 19 [August 19]....

  • உலக புகைப்பட தினம்
  • சர்வதேச மனிதநேய தினம்
  • ஆப்கானிஸ்தான் விடுதலை தினம்(1919)
  • கொழும்பு தலைமை தபால் அலுவலகம் திறக்கப்பட்டது(1895)
  • ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் அமைக்கப்பட்டது(1768)

>>>பள்ளி சத்துணவு திட்டத்தில் பலவகை உணவுகள் சேர்ப்பு

சத்துணவுத் திட்டத்தில், பல வகை உணவுகளைச் சேர்ப்பது குறித்த அறிவிப்பு, அண்ணாதுரை பிறந்த தினத்தன்று வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. சத்துணவில், இனி, பெப்பர் முட்டை, கறிவேப்பிலை சாதம் போன்றவை வினியோகிக்க வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.
தமிழகத்தில், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, தேவையான அளவில் சத்தான உணவு அளிப்பதன் மூலம், அவர்கள் உடல் தரத்தை உயர்த்தி, கல்வி கற்பதை ஊக்குவித்து, கல்வி விகிதாச்சாரத்தை உயர்த்துவதுடன், ஊட்டச்சத்து குறைபாட்டையும் நீக்குவதற்காக, சத்துணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இத்திட்டம், 1984ம் ஆண்டு முதல், 10 முதல், 15 வயதுள்ள குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தற்போது இரண்டு முதல், ஐந்து வயதுள்ள குழந்தைகளுக்கும், முதல் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கும், 365 நாட்களும் சத்துணவு வழங்கப்படுகிறது. ஆறு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும், அதாவது, 220 நாட்களும் வழங்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும், 43 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த, 50.14 லட்சம் மாணவர்கள்; அங்கன்வாடி மையங்களைச் சேர்ந்த, 11.30 லட்சம் குழந்தைகள்; முதியோர் மற்றும் ஓய்வூதியப் பயனாளிகள், 18 ஆயிரம் பேர் என, மொத்தம், 61.62 லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர். இவர்களில், அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளுக்கு சத்து மாவு வழங்கப்படுகிறது.
பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, தினசரி, சாதம், சாம்பார் வகை உணவுகள் அளிப்பதால், மாணவர்கள் சலிப்படைந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில், தினமும் விதவிதமான உணவு வகைகளை தயாரித்து வழங்கும் விதமாக, சத்துணவுத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, "செப்" தாமுவுடன் இணைந்து, புதிய, "மெனு" தயாரிக்கும் முயற்சியில், சத்துணவுத் திட்ட அதிகாரிகள் இறங்கினர். மேலும், இது தொடர்பான செயல்முறை விளக்க பயிற்சிப் பட்டறை, சென்னை சைதாபேட்டை மாந்தோப்பு மாநகராட்சி பள்ளியில் நடந்தது.
இதைத் துவங்கி வைத்த அமைச்சர், எம்.சி.சம்பத், "தற்போது சோதனை ரீதியாக துவக்கப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் செயல்பாட்டிற்கு வரும்" என அறிவித்திருந்தார். தொடர்ந்து, திருச்சியில் ஒரு பள்ளியில் இத்திட்டத்தின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டபோது, மாணவர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.
புதிய திட்டப்படி, ஒரு நாள் வழக்கம் போல் சாதம், சாம்பார், முட்டை இருக்கும். மற்ற நாட்களில் பல்வேறு வகை சாதங்கள் வழங்கலாம் என்றும், தினசரி வழங்கப்படும் அவித்த முட்டையை மாற்றி, பெப்பர் முட்டை உட்பட பல்வேறு விதமாக வழங்கலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதி வடிவம் பெறப்பட்டு, அரசிடம் முறையான அனுமதியை, சத்துணவுத் திட்டத் துறையை உள்ளடக்கிய, சமூக நலத்துறை கோரி இருந்தது.
இதுகுறித்த விளக்கத்தை சத்துணவுத் திட்டத் துறை, "செப்" தாமுவின் ஆலோசனை பெற்று அளித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, செலவினங்கள் குறித்து நிதித் துறையும் திருப்தியடைந்து விட்டதாகத் தெரிகிறது. இதற்கான முறையான அறிவிப்பு, அடுத்த மாதம், 15ம் தேதி, அண்ணாதுரை பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
தற்போது வழங்கும் உணவு
தினம் - சாதம், சாம்பார், அவித்த முட்டை
செவ்வாய் - பச்சைப்பயறு அல்லது கொண்டைக்கடலை சுண்டல்
வெள்ளி - உருளைக்கிழங்கு கூட்டு
புதிய மதிய உணவு முறை
* வழக்கம் போல் சாதம், சாம்பார் ஒரு நாள்.
* மற்ற நாட்களில், பிரைடு ரைஸ், லெமன் சாதம், கருவேப்பில்லை அல்லது கீரை சாதம், தக்காளி சாதம் என, 13 விதமான உணவுகளில், தினமும் ஒரு உணவு வழங்கப்பட உள்ளது.
* அவித்த முட்டை ஒரு நாளும், மற்ற நாட்களில், பெப்பர் முட்டை, மசாலா முட்டை, பருப்பு முட்டை, முட்டைப் பொரியல் என, உணவு வகைக்கு ஏற்ப மாற்றித் தரப்பட உள்ளது.
* உருளை மசாலா, பச்சைப்பயறு, கொண்டைக்கடலை சுண்டல் என, இரண்டு நாட்கள் தர உள்ளனர்.

>>>ஆகஸ்ட் 18 [August 18]....

  • தாய்லாந்து தேசிய அறிவியல் தினம்
  • லாத்வியாவின் ரீகா நகரம் அமைக்கப்பட்டது(1201)
  • செவ்வாய் கோளின் ஃபோபோஸ் கண்டுபிடிக்கப்பட்டது(1877)
  • இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்த தினம்(1945)

>>>வி.ஏ.ஓ பணிக்கு செப்டம்பர் 30ல் போட்டித் தேர்வு

வருவாய்த் துறையில் காலியாக உள்ள, 1,870 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, செப்., 30ல் போட்டித் தேர்வு நடக்கிறது. இதற்கு, 10 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில், இந்த தேர்வுக்குத் தான், அதிகபட்ச தேர்வர் விண்ணப்பித்துள்ளனர். ஒரு பணியிடத்திற்கு, 534 பேர் என்ற அளவில், கடும் போட்டி எழுந்துள்ளது.
"தேர்வுக்கு விண்ணப்பிக்க, கடைசி நாளான, 10ம் தேதிக்குள் விண்ணப்பித்து, தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தாதவர்கள், 14ம் தேதிக்குள் செலுத்தலாம்" என, தேர்வாணையம் தெரிவித்திருந்தது.
கடைசி நாளில் விண்ணப்பித்தவர்கள் அனைவரும், கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கும் வகையில், 18ம் தேதி வரை நீட்டிப்பு செய்து, தேர்வாணையம் அறிவித்துள்ளது.

>>>ஆகஸ்ட் 17 [August 17]....

  • இந்தோனேஷிய விடுதலை தினம்(1945)
  • காபோன் விடுதலை தினம்(1960)
  • இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ரெட்கிலிஃப் கோடு வெளியிடப்பட்டது(1947)
  • முதல் சிடி ஜெர்மனியில் வெளியிடப்பட்டது(1982)

>>>ஆகஸ்ட் 16 [August 16]....

  • பராகுவே சிறுவர் தினம்
  • சைப்ரஸ் விடுதலை தினம்(1960)
  • இந்திய ஆன்மிகவாதி ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் இறந்த தினம்(1886)
  • சத்தத்துடனான முதல் வண்ண கார்டூன் உருவாக்கப்பட்டது(1930)

>>>IGNOU - Term End Exam Results - June 2012

>>>Results of Departmental Examinations - MAY 2012

>>>CCE Forms and Manuals

>>>PREVIOUS YEAR QUESTION PAPERS OF SSLC EXAMINATION

DEPARTMENT OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI – 600 006
QUESTION PAPERS OF SSLC EXAMINATION
June, 2011
Subjects

English
Tamil
Mathematics
  English & Tamil Medium
Science
Social Science

DEPARTMENT OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI – 600 006
QUESTION PAPERS OF ANGLO INDIAN SLC EXAMINATION
Subjects
March, 2011
June, 2011
September, 2011
English 
Mathematics
Paper I     Paper II
Paper I     Paper II
Paper I     Paper II
Science
History and Civics
 Geography  Geography  Geography  Geography
DEPARTMENT OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI – 600 006
QUESTION PAPERS OF MATRICULATION EXAMINATION
March 2011
Subjects
.
English
Paper I    
Paper II
Tamil 
Paper I  
Paper II
Mathematics
Paper I     
Paper II
Science
Paper I    
Paper II
Geography & Economics
History & Civics
June 2011
 
Subjects
.
English
Paper I    
Paper II
Tamil 
Paper I  
 
Mathematics
Paper I     
Paper II
Science
Paper I    
Paper II
Geography & Economics
History & Civics
September 2011
 
Subjects
.
English
Paper I    
Paper II
Tamil 
Paper I  
Paper II
Mathematics
Paper I     
Paper II
Science
     
Paper II
Geography & Economics
History & Civics


DEPARTMENT OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI – 600 006
QUESTION PAPERS OF ANGLO INDIAN SLC EXAMINATION
Subjects
March, 2010
September, 2010
English 
Mathematics
Paper I     Paper II
Paper I     Paper II
Science
History and Civics
 Geography  Geography  Geography
 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பொருட்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை...

 வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பொருட்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை... Things to be ...