கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>இந்தியாவில் தட்டம்மை மரணங்கள் அதிகமாக இருக்க காரணம் ?

 
முதலில் தட்டம்மை என்றால் என்ன என்பதை பாப்போம் தட்டம்மை சின்னமுத்து, மணல்வாரி அம்மை, (Measles,morbilli ) என்றெல்லாம் அறியப்படும் இந்த நோய் பாராமைக்சோவைரசு குடும்பத்தைச் சேர்ந்த மோர்பில்லி தீநுண்மத்தால் ஏற்படும் ஓர் சுவாச நோய்த்தொற்றாகும். மோர்பி தீநுண்மங்கள் உறையுடைய, ஓரிழை எதிர்-உணர்வு ரைபோநியூக்ளிக் அமில தீநுண்மங்களாகும். நோய் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், மூக்கொழுகல், சிவந்த கண்கள் ஏற்படுவதுடன் பொதுவான நீல-வெள்ளை நிற மையப்பகுதி கொண்ட சிறிய சிவப்பு நிற புள்ளிகள் போன்ற தோற்றம் வாயினுள் ஏற்படும். உடல் முழுவதும் தோலில் கொப்புளங்கள் இருக்கும்.

தட்டம்மை நோய்த்தொற்று உள்ளவரின் மூக்கில் அல்லது தொண்டையில் வடியும் நீருடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொற்றும்போது இந்நோய் பரவுகிறது. தொற்றிய இடத்தில் இரண்டுமணி நேரம் வரை வீரியத்துடன் காணப்படும். உடலில் கொப்புளங்கள் தோன்றுவதற்கு நான்கு நாட்கள் முன்பாகவும் நோய் வடிந்த பிறகு நான்கு நாட்கள் வரையும் நோயுற்றவரிடமிருந்த பிறருக்கு நோய் தொற்ற வாய்ப்புள்ளது விரைவாகப் பரவக்கூடிய இந்த தீநுண்மம் நோயுற்றவருடன் வாழும் இடத்தை பகிரும் 90% நபர்களுக்கு தொற்றக்கூடிய வாய்ப்பு உள்ளது. தட்டம்மை தொற்றியவருக்கு முதல் தொடர்பிலிருந்து ஒன்பது முதல் பன்னிரெண்டு நாட்கள் வரை அறிகுறியில்லா அடைவுக்காலமாக இருக்கிறது.

சத்துக்குறைவு உள்ள இளம் குழந்தைகள் இந்த நோயால் இறக்க நேரிடலாம். இந்த நோய்க்கான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை உரிய காலத்தில் போடுவதுடன் சுகாதார பழக்கவழக்கங்களை கையாளுதலால் சிசு மரணங்களை தவிர்க்கலாம். இந்தியாவில் இந்த நோயால் 47% சிறார்கள் மரணமடைவதாக ஆய்வுக்கட்டுரையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீசல்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தட்டம்மையால் ஏற்படும் குழந்தை மரணங்கள் ஒரு பக்கம் உலக அளவில் வேகமாக குறைந்துகொண்டிருந்தாலும் இந்தியாவில் இத்தகைய மரணங்கள் உரிய வேகத்தில் குறையாமல் இருப்பது கவலை தருவதாக லான்செட் என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியான ஆய்வுக்கட்டுரை கவலை வெளியிட்டிருக்கிறது.

உலக அளவில் 127 நாடுகளில் தட்டம்மையால் ஏற்படும் சிறார் மரணங்களை ஒப்பிட்டு ஆராய்ந்த இந்த ஆய்வுக்கட்டுரை ஆசிரியர்கள், 2010 ஆம் ஆண்டு உலக அளவில் தட்டம்மையால் ஏற்பட்ட சிறார் மரணங்களில் 47 சதவீத மரணங்கள் இந்தியாவில் நடப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். இதே காலகட்டத்தில் ஆப்ரிக்க நாடுகளில் தட்டம்மையால் ஏற்படும் சிறார் மரணங்களின் சதவீதம் 36 சதவீதமாக இருப்பதை சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், தட்டம்மை மரணங்களை தடுப்பதில் இந்தியா ஆப்ரிக்க நாடுகளைவிட பின் தங்கியிருப்பது கவலை தருவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

இப்படியான மரணங்களை தடுக்கவேண்டுமானால், இளம்பிள்ளைகளுக்கு அளிக்கப்படும் தட்டம்மை தடுப்பு மருந்தளிக்கும் முறையை மேம்படுத்த வேண்டும் என்றும், பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் இந்த தடுப்பு மருந்துகள் கட்டாயம் அளிக்கப்படவேண்டும் என்றும் அந்த ஆய்வாளர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விவரங்கள் குறித்து பிபிசி தமிழோசைக்கு செவ்வியளித்த உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியாவுக்கான தேசிய போலியோ ஒழிப்புத்திட்டத்தின் மருத்துவ கண்காணிப்பு அதிகாரி மருத்துவர் சுரேந்திரன் அவர்கள், இந்தியாவின் தென் மாநிலங்களை ஒப்பிடும்போது வட மாநிலங்களில் கிராமப்புற மருத்துவ கட்டமைப்புக்கள் வலுவாக இல்லாததால் எல்லா குழந்தைகளுக்கும் தட்டம்மை தடுப்பு மருந்து அளிப்பது என்கிற இலக்கு முழுமையாக எட்டமுடியாமல் இருப்பதாக தெரிவிக்கிறார்.

மீசல்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தட்டம்மையால் ஏற்படும் குழந்தை மரணங்கள் ஒரு பக்கம் உலக அளவில் வேகமாக குறைந்துகொண்டிருந்தாலும் இந்தியாவில் இத்தகைய மரணங்கள் உரிய வேகத்தில் குறையாமல் இருப்பது கவலை தருவதாக லான்செட் என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியான ஆய்வுக்கட்டுரை கவலை வெளியிட்டிருக்கிறது.

உலக அளவில் 127 நாடுகளில் தட்டம்மையால் ஏற்படும் சிறார் மரணங்களை ஒப்பிட்டு ஆராய்ந்த இந்த ஆய்வுக்கட்டுரை ஆசிரியர்கள், 2010 ஆம் ஆண்டு உலக அளவில் தட்டம்மையால் ஏற்பட்ட சிறார் மரணங்களில் 47 சதவீத மரணங்கள் இந்தியாவில் நடப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். இதே காலகட்டத்தில் ஆப்ரிக்க நாடுகளில் தட்டம்மையால் ஏற்படும் சிறார் மரணங்களின் சதவீதம் 36 சதவீதமாக இருப்பதை சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், தட்டம்மை மரணங்களை தடுப்பதில் இந்தியா ஆப்ரிக்க நாடுகளைவிட பின் தங்கியிருப்பது கவலை தருவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

இப்படியான மரணங்களை தடுக்கவேண்டுமானால், இளம்பிள்ளைகளுக்கு அளிக்கப்படும் தட்டம்மை தடுப்பு மருந்தளிக்கும் முறையை மேம்படுத்த வேண்டும் என்றும், பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் இந்த தடுப்பு மருந்துகள் கட்டாயம் அளிக்கப்படவேண்டும் என்றும் அந்த ஆய்வாளர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விவரங்கள் குறித்து பிபிசி தமிழோசைக்கு செவ்வியளித்த உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியாவுக்கான தேசிய போலியோ ஒழிப்புத்திட்டத்தின் மருத்துவ கண்காணிப்பு அதிகாரி மருத்துவர் சுரேந்திரன் அவர்கள், இந்தியாவின் தென் மாநிலங்களை ஒப்பிடும்போது வட மாநிலங்களில் கிராமப்புற மருத்துவ கட்டமைப்புக்கள் வலுவாக இல்லாததால் எல்லா குழந்தைகளுக்கும் தட்டம்மை தடுப்பு மருந்து அளிப்பது என்கிற இலக்கு முழுமையாக எட்டமுடியாமல் இருப்பதாக தெரிவிக்கிறார்.கண்டிப்பாக நம்ம குழந்தைகளுக்கு முக்கியமான தடுப்புசிகள் டாக்டருடைய பரிதுரை படி போடவேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேர்தல் பணி சான்றிதழ் வைத்திருப்போர் / EDC - Election Duty Certificate Voters - வாக்கு பதிவு செய்யும் முறை...

   தேர்தல் பணி சான்றிதழ் வைத்திருப்போர் / EDC - Election Duty Certificate Voters - வாக்கு பதிவு செய்யும் முறை... >>> தரவிறக்கம் செய...