>>>ஆதிதிராவிட நலப்பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிட கலந்தாய்வு

சென்னையில் நேற்று, ஆதிதிராவிட பள்ளிகளுக்கு தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கடந்த, 2010-11ம் ஆண்டில், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில், காலியாக உள்ள பட்டதாரி காலி பணியிடங்களை நிரப்புவதற்கு, ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம், தேர்வு நடத்தப்பட்டது. இதில், தேர்வானவர்களுக்கு, நேற்று, சேப்பாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகத்தில், கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில், ஆதிதிராவிடர் நல ஆணையர், சிவசங்கரன் தலைமை வகித்து, ஆசிரியர்களிடம் நேர்காணல் நடத்தினார். தமிழகமெங்கிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 37 ஆசிரியர்கள், நலத்துறை கல்வி அதிகாரிகள், இதில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.