தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு...

 


தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


காலமுறை ஊதியம் பெற்று வரும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் குறைந்தபட்சமாக 2556 ரூபாயும், அதிகபட்சமாக 4 ஆயிரம் ரூபாயும் சம்பள விகிதங்களில் கூடுதலாக பெறுவார்கள்.


அதே போன்று கட்டுனர்கள் குறைந்தபட்சமாக 2337 ரூபாயும், அதிகபட்சமாக 3500 ரூபாயும் கூடுதலாக பெறுவார்கள்.


ரேஷன் கடைகளில் புதிதாக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு தொகுப்பு ஊதியத்தையும் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.


ஊதிய உயர்வின் மூலம் 23 ஆயிரத்து 793 பேர் பயன்பெறுவார்கள் என்றும், 19 முதல் 24 சதவீதம் வரை கூடுதல் நிதிப்பயன் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


>>>  ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு - அரசாணை எண்: 24, நாள்: 22-02-2021...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.