2021ஆம் ஆண்டிற்கான "தமிழ்ச் செம்மல்" - விருது முனைவர் கடவூர் மணிமாறனுக்கு தமிழ்நாடு அரசு வழங்கி கௌரவப்படுத்த இருக்கிறது.
வரும் டிசம்பர் 21ம் தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தமிழ்ச் செம்மல் விருதினை வழங்க உள்ளார்.
குளித்தலை தமிழ்ப்பேரவைத் தலைவரும், ஆகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், பன்னூல் படைப்பாளருமான முனைவர் கடவூர் மணிமாறன் அவர்கள் பல ஆயிரக்கணக்கான மாணவர்களையும், ஆசிரியர்களையும் செதுக்கியும், புதுக்கியும் நல்லதோர் தமிழ்சிந்தனையை(பற்றை) அவர்களிடத்தே விதைத்தும் அரும் தொண்டாற்றியவர். அவர் முதல்வரின் திருக்கரங்களால் தமிழ்ச் செம்மல் விருது பெறுவது சாலச்சிறந்தது.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.