ரயில் பயணம் - 35 பைசாவில் ரூ.10 இலட்சம் விபத்து காப்பீடு குறித்த தகவல்கள் (Train Travel - Rs.10 Lakh Accident Insurance at 35 Paisa - Details)...
ஒடிசா இரயில் விபத்துக்கு பிறகு, பயணச் சீட்டுடன் பலரும் 35 பைசா விபத்து காப்பீடு குறித்து விழிப்புணர்வு பதிவு இட்டு வருகிறார்கள். அதில் இன்னும் ஒரு விஷயத்தை அதிகப்படியாக சேர்த்து கொண்டால், இழப்பீடு பெறுவது எளிதாக இருக்கும்.
இரயில் பயணம் செய்ய ஆன்லைன் புக்கிங் செய்யும் போது, விபத்து காப்பீடாக 0.35 பைசா கட்டிய பின்னர் உங்கள் ஆன்லைன் டிக்கெட் காப்பி உங்கள் இ-மெயிலுக்கு வருமல்லவா, அதை அடுத்து நீங்கள் எடுத்த அந்த இன்சூரன்ஸ் சம்பந்தமாக HAT என்று ஒரு தனி இ-மெயிலும் உங்கள் இன்பாக்ஸுக்கு வரும்.
பின்னர் அதனுள் சென்று உங்கள் பிஎன்ஆர் நம்பர் மற்றும் உங்கள் மொபைல் நம்பரை இட்டால், அடுத்ததாக ஒரு திரை விரியும். அதில் உங்கள் இன்சூரன்ஸ்க்கான நாமினியை பதிவு செய்து முடித்து வைத்தால்தான் அந்த இன்சூரன்ஸ் முழுமை பெறும்.
எனவே முப்பத்தைந்து பைசா கட்டுவதுடன் கையோடு நாமினியாக குடும்ப உறுப்பினர்கள் யாரையாவது பதிந்தும் வைத்து விடுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.