பணி நிறைவு பெற்ற அரசு ஊழியருக்கு, 8வது ஊதியக் குழுவின் புதிய ஓய்வூதியத்திற்கான நிர்ணயக் காரணி வழங்கப்படா விட்டால் ஏற்படும் இழப்பீடு எவ்வளவு?



எட்டாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறை படுத்தப்படும் முன்பு, பணி நிறைவு பெற்ற, ஒரு அரசு ஊழியருக்கு, ஊதியக் குழுவின் புதிய ஓய்வூதியத்திற்கான நிர்ணயக் காரணி வழங்கப்படா விட்டால் ஏற்படும் இழப்பீடு தோராயமாக எவ்வளவு?


பணிக் காலம் 31 ஆண்டுகள்


பணி நிறைவுத் தேதி 30.11.2025


பணி நிறைவடையும் போது பெற்ற அடிப்படை ஊதியம் ரூ 1,00,000


நிர்ணயம் செய்யப்படும் அடிப்படை ஓய்வூதியம் ரூ 50,000


8 வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஊதிய நிர்ணயக் காரணி 1.9 என வைத்துக் கொள்வோம்.


ஓய்வு பெற்றவர்களுக்கும், 8 வது ஊதியக் குழுவின் பரிந்துரை அமல் படுத்தப் பட்டால், 


01.01.2026 அன்று நிர்ணயிக்கப் படும், அடிப்படை ஓய்வூதியம் 

ரூ 50,000 x 1.9 = ரூ 95,000

DA ரூ 0

மொத்தம் = ரூ 95,000


ஓய்வு பெற்றவர்களுக்கு, 8 வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் வழங்கப்படா விட்டால், பெறும் ஓய்வூதியம் :


அடிப்படை ஓய்வூதியம் ரூ 50,000

01.01.2026 அன்று அகவிலைப்படி 61% (தோராயமாக) - ரூ 30,500


மொத்த ஓய்வூதியம் - ரூ 81,500


ஒவ்வொரு மாதமும் ஏற்படும் ஓய்வூதிய இழப்பு :


ரூ 95,000 - ரூ 80,500 = ரூ 14500.


ஒரு ஆண்டிற்கு இழப்பு:


ரூ 14500 x 12 = ரூ 1,64,000.


பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் மேற்கண்ட மாதிரி கணக்கீடு செய்யப் பட்டுள்ளது.


8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் அரசின் கொள்கை முடிவு பற்றிய அறிவிப்பு வந்தால் மட்டுமே, உண்மை நிலை தெரிய வரும்.