களஞ்சியம்: E-SR Part 1 Update செய்யும் வழிமுறை குறித்த விவரம் வெளியீடு



களஞ்சியம்: E-SR Part 1 Update செய்யும் வழிமுறை குறித்த விவரம் வெளியீடு


How to update E-SR Part 1 in Kalanjiyam Website 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தவறாக ஊதிய நிர்ணயம் செய்த உயர் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை & கூடுதலாக நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை பிடித்தம் செய்த விவரம் - அரசின் துணைச் செயலாளர் கடிதம், நாள் : 29-05-2025


 வட்டாரக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு தவறாக ஊதிய நிர்ணயம் செய்த உயர் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை & கூடுதலாக நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை பிடித்தம் செய்த விவரம் - அரசின் துணைச் செயலாளர் கடிதம், நாள் : 29-05-2025


Disciplinary action against higher officials who wrongly fixed the salary of those promoted as Block Education Officers from Middle School HeadMasters & details of deduction of excess salary fixation - Letter from the Deputy Secretary to the Government, Date: 29-05-2025



நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியிலிருந்து வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெறுபவர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்தல் சார்ந்து அரசின் தெளிவுரைக் கடிதம் - Pay Fixation to BEOs - Clarification Letter from School Education Secretary 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசுப் பணிகளிலிருந்து இன்று 31-05-2025 ஒரே நாளில் 8,144 பேர் பணி ஓய்வு

 தமிழ்நாடு அரசுப் பணிகளிலிருந்து இன்று 31-05-2025 ஒரே நாளில் 8,144 பேர் பணி ஓய்வு


8,144 people retired from Tamil Nadu government jobs in a single day today, 31-05-2025


இன்று ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு


தமிழ்நாடு அரசுப் பணிகளிலிருந்து இன்று ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு பெறுகின்றனர்.

இந்தாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் ஓய்வு பெறுவது இதுவே அதிக எண்ணிக்கையாகும். 

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் இறுதியில் (மே.31) ஓய்வு பெறுவதால் இந்த எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.






SMC மூலம் ஆசிரியர்களை 02-06-2025 முதல் நியமனம் செய்ய பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள்

  

பள்ளி மேலாண்மைக் குழு SMC மூலம் ஆசிரியர்களை 02-06-2025 முதல் நியமனம் செய்ய பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள்


காலிப்பணியிடங்களில் SMC மூலம் ஆசிரியர்களை 02-06-2025 முதல் நியமனம் செய்யலாம் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


Teachers can be appointed through SMC in vacant posts from 02-06-2025 - Proceedings of the Chief Education Officer 


02.06.2025 முதல் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை SMC மூலமாக தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வமான பள்ளிக்கல்வி இயக்குநரின் (29.05.2025) குறுஞ்செய்தி மற்றும் முதன்மைக்கல்வி அலுவலரின் கடிதம்


      அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள / மகப்பேறு விடுப்பில் உள்ள / நீண்ட கால விடுப்பில் உள்ள ஆசிரியர்களின் இடங்களில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஆசிரியர்களை 02-06-2025 முதல் நியமனம் செய்யலாம் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு


அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணையிடப்பட்டுள்ளது. B.Ed தேர்ச்சியுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கவும், முதுநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு முதுநிலை பட்டம், BEd தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை தரவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வாசிப்புத்திறனை மேம்படுத்தும் செயல்பாடுகள் - பள்ளிக் கல்வித் துறை அரசாணையில் உள்ள தகவல்கள்


வாசிப்புத்திறனை மேம்படுத்தும் செயல்பாடுகள் - பள்ளிக் கல்வித் துறை அரசாணையில் உள்ள தகவல்கள்



அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக பாட விவரங்கள் வடிவமைத்து போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.


🛑இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை விவரம்: ”அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து புத்தகங்களையும் மாணவர்கள் வாசிக்கும் வகையில் கதை சொல்லும் அமர்வுகள், வாசிப்பு சவால்கள், புத்தக கழகங்கள் ஆகியவற்றின் மூலம் அறிவுத் தேடல் மற்றும் கருப்பொருள் வாசிப்பு வாரம் செயல்படுத்தப்படும்.



🛑இது தவிர வாரந்தோறும் தேசத் தலைவர்கள், அறிவியல் அறிஞர்கள், விளையாட்டு வீரர்கள், சுற்றுச்சூழல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றில் பேச்சுப் போட்டி, கதை சொல்லுதல், நடித்துக் காட்டுதல், குழு விவாதம், பட்டிமன்றம் போன்றவை நடத்தப்பட்டு மாணவர்களின் வாசிப்புத் திறன்கள் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட்டார்.


🛑இதை செயல்படுத்தும் வகையில் மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்களை மேம்படுத்த பருவம், மாதம், வாரம், வகுப்பு வாரியாக உள்ள பொருண்மைகளுக்கான விவரங்களை மாநில கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் வடிவமைக்க வேண்டும்.


🛑மேலும், பள்ளிகளில் இந்த திட்டத்தை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரகம் வாயிலாக அமல்படுத்தவும் அனுமதி வழங்கக் கோரி தொடக்கக் கல்வித் துறை கருத்துரு வழங்கியது. 


🛑அதையேற்று அதற்கான அனுமதியை வழங்கி ஆணையிடுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து 1 முதல் 8ம் வகுப்பு வரை 3 பருவங்களிலும் என்னென்ன தலைப்புகளில் வாசிப்பது, கதை சொல்லுவது, விவாதிப்பது, கலந்துரையாடுவது என்பது குறித்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.


🛑அதில் தமிழ்நாடு அரசின் சின்னங்கள், நெகிழியைத் தவிர்ப்போம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பனை மரத்தின் சிறப்பு, தேசத் தலைவர் ஜவஹர்லால் நேரு, இயற்கை அளித்த கொடை, உடலை உறுதி செய், நேர்மையின் சிறப்பு, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு காமராஜர் ஆற்றிய பணிகள், எனக்குப் பிடித்த நண்பன் என பல்வேறு தலைப்புகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



துணைத் தேர்வுகள் - பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை


துணைத் தேர்வுகள் - பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு


ஜுன்/ஜுலை 2025 மேல்நிலை இரண்டாமாண்டு, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுகளுக்கு *விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் (தட்கல் உட்பட) முடிந்த பின்னரே* SUMMARY REPORT பதிவிறக்கம் செய்ய வேண்டும். 


SUMMARY REPORT-இல் குறிப்பிடப்பட்ட தொகையினை IFHRMS E-Challan முறையில் இணையவழியில் செலுத்த வேண்டும். பின்னர் கீழ்க்கண்ட ஆவணங்களை *அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில்* ஒப்படைக்க வேண்டும்.


*ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள்:*

1.HM/Principal Covering Letter

2.Applications

3.Summary Report with HM/Principal Attestation

3.E-Challan Payment Success Copy with HM/Principal Attestation


*விண்ணப்பிக்க கடைசி நாள் (தட்கல்):*

+2 – 31.05.2025

+1 – 06.06.2025

10th – 06.06.2025


*SUMMARY REPORT பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்:*

+2 – 02.06.2025

+1 – 07.06.2025

10th – 07.06.2025


*மேற்கண்ட ஆவணங்கள் ஒப்படைக்க கடைசி நாள்:*

+2 – 03.06.2025

+1 – 09.06.2025

10th – 09.06.2025


முகக்கவசம் அணிவது அவசியம் - தமிழ்நாடு சுகாதாரத்துறை


முகக்கவசம் அணிவது அவசியம் - தமிழ்நாடு சுகாதாரத்துறை


நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிய மக்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.



பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


கொரோனா தொற்று பரவி வருவதால், மாவட்ட சுகாதார அதிகாரிகள், தினமும் பாதிக்கப்படுவோர் குறித்த தரவுகளை சேகரித்து, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பை உறுதி செய்ய வேண்டும். போதிய எண்ணிக்கையில் படுக்கை வசதிகளுடன் காய்ச்சல் வார்டுகளை ஏற்படுத்த வேண்டும்.


நோய் பரவலை தடுப்பது குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.


கைகளை சுத்தமாக கழுவுதல், நெரிசல் மிக்க இடங்களில் செல்லும்போது முகக்கவசம் அணிதல், இருமும்போதும், தும்மும்போதும், வாய், மூக்கு பகுதிகளை முழுமையாக மூடிக் கொள்ளுதல், தனிநபர் இடைவெளி ஆகியவற்றை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.



4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடக்கம்



 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


4 New Government Arts and Science Colleges to be inaugurated - Chief Minister M.K. Stalin's announcement


தமிழகத்தில் மேலும் 4 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.


கிராமப்புற மாணவர்கள் அதிகம் உள்ள இடங்களில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படுவதாக அறிவிப்பு.


உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), கே. வி. குப்பம் (வேலூர்), துறையூர் (திருச்சி), செங்கம் (திருவண்ணாமலை) ஆகிய 4 இடங்களில் 2025-26 கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.


புதிய முயற்சிகளை ஊக்குவிக்க அரசின் சார்பாக ஆண்டுக்கு 380 ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் - அரசாணை (நிலை) எண்: 125, நாள் : 21-05-2025 வெளியீடு

 

G.O. (Ms) No. 125, Dated: 21-05-2025


அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் புதிய முயற்சிகளுக்கு அரசின் சார்பாக ஆண்டுக்கு 380 ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்க அனுமதியளித்து அரசாணை (நிலை) எண்: 125, நாள் : 21-05-2025 வெளியீடு


Government Order G.O. (Ms) No. 125, Dated: 21-05-2025, issued on behalf of the government, authorizing the issuance of certificates of appreciation to 380 teachers per year for the new initiatives of teachers working in government schools.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

SLAS - 2025 Report Card வெளியீடு



SLAS - 2025 Report Card Tamilnadu - Class 3, 5 & 8 - State State Level Achievement Survey


 மாநில அடைவு ஆய்வுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

👇👇👇


https://slas.tnschools.gov.in/#/school-report 



>>> SLAS 2025 - State Report Card - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு





அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


Extension of deadline for applying for admission to government arts and science colleges


அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு மே 30ஆம் தேதி வரை நீட்டிப்பு. 


விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாள் நேற்றுடன் முடிந்த நிலையில் மே 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு. 


அரசு கல்லூரிகளில் இதுவரை 2,25,705 பேர் விண்ணப்பம். 1,82,762 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர்.


2025-2026 - Schools Opening - DSE & DEE Proceedings

  

 

பள்ளிக்கல்வி - 2025-2026 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறத்தல் - ஆய்வு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக DSE & DEE Proceedings 


2025-26ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறத்தல் - அறிவுரைகள் வழங்குதல் - இக்கல்வியாண்டில் செயல்படுத்த வேண்டிய கல்வி செயல்பாடுகள், கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்வி சாராச் செயல்பாடுகள் சார்ந்து பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வி & தொடக்கக்கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள், நாள் : 26-05-2025


Opening of schools in the academic year 2025-26 - Joint proceedings of the Directors of School Education & Elementary Education regarding the educational activities to be implemented in this academic year, the procedures to be followed regarding co-curricular activities, extra-curricular activities and non-academic activities, Dated: 26-05-2025


2025-2026 - Schools Re-Opening - DSE & DEE Joint Proceedings


School Education - Opening of schools in the academic year 2025-26 - Instructions to the Inspectors - DSE & DEE Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


TANUVAS UG ADMISSION 2025-2026 - FEE STRUCTURE - For B.V.Sc & AH, B.Tech courses



 TANUVAS UG ADMISSION 2025-2026 - FEE STRUCTURE - For B.V.Sc & AH, B.Tech courses (Food Technology / Poultry Technology / Dairy Technology)


கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் 

மாணவர் சேர்க்கை 2025-2026 

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் 

கட்டண அமைப்பு - பி.வி.எஸ்சி & ஏ.எச். - 5½ ஆண்டுகள் (4½ ஆண்டுகள் + 1 வருட இன்டர்ன்ஷிப்) எம்.எஸ்.வி.இ விதிமுறைகள் 2016 இன் படி & கட்டண அமைப்பு - பி.டெக் படிப்புகளுக்கு (உணவு தொழில்நுட்பம் / கோழிப்பண்ணை தொழில்நுட்பம் / பால் தொழில்நுட்பம்) - ஒவ்வொரு பாடத்திற்கும் தொழில்துறை பயிற்சி உட்பட 8 செமஸ்டர்கள்



TANUVAS UG ADMISSION 2025-2026

TAMIL NADU VETERINARY AND ANIMAL SCIENCES UNIVERSITY

FEE STRUCTURE - For B.V.Sc & AH – 5½ years (4½ years + 1 year Internship) as per MSVE Regulations 2016 & FEE STRUCTURE- For B.Tech courses (Food Technology / Poultry Technology / Dairy Technology) – 8 Semesters including industrial training for each course



>>> Click Here to Download...


தந்தை பெரியாரின் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் - UPSC தேர்வில் சர்ச்சை கேள்வி



யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயருக்கு பின் ஜாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்டுள்ளதால் சர்ச்சை


சாதியை ஒழிக்க பாடுபட்ட தந்தை பெரியாரின் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் - அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது UPSCன் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி


IAS, IPS உள்ளிட்ட நாட்டை முன்னேற்றும் பொறுப்புள்ள பணியில் ஈடுபட வேண்டியவர்களை தேர்ந்தெடுக்க நடத்தப்படும் UPSC தேர்வில் சாதிய சர்ச்சையை உள்ளடக்கிய விஷமத்தனமான கேள்வி கேட்கப்பட்டுள்ளது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


நாடு முழுவதும் நடைபெற்ற யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.


மத்திய அரசின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.






இந்நிலையில் யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வில் பெரியார் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இதன்படி யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியவர் யார்..? என கேட்கப்பட்டுள்ள கேள்வியில் 4 விடைகளில் ஒன்றாக பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என சாதிப் பெயருடன் குறிப்பிடப்பட்டுள்ளது


முன்னதாக கடந்த 1929 ஆம் ஆண்டு நடைபெற்ற செங்கல்பட்டு மாநாட்டில் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி பெயரை நீக்குவதாக பெரியார் அறிவித்திருந்தார். சாதி ஒழிப்புக்காக போராடிய பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் பெயருக்கு பின்னால் சாதி பெயர் குறிப்பிடப்பட்டு கேள்வி கேட்கப்பட்டது தேர்வர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


மேலும் யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில், ஒரு மசோதாவை கவர்னர் எவ்வளவு நாள் வைத்துக் கொள்ளலாம், அதை ஜனாதிபதிக்கு அனுப்பக்கூடிய விவகாரம் தொடர்பாகவும் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. மேலும் நீதிமன்றம் கவர்னரை கேள்வி கேட்க அதிகாரம் உள்ளதா என்ற சர்ச்சை கேள்வியும் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

 


பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த பெண் காவலர் அபிநயா (29) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.


நேற்றிரவு பணிக்கு வந்த நிலையில், காலையில் தற்கொலை; மன உளைச்சலா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறை விசாரணை.


தற்கொலை தீர்வல்ல... 

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம்: 104 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவும்.


மயிலாடுதுறை மாவட்டம் மணகுடி பகுதியைச் சேர்ந்தவர் அபிநயா (29). இவர் நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் பெண் போலீஸாக பணியாற்றி வருகிறார்.


திருமணம் ஆன இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவகாரத்து பெற்று விட்டதாக சொல்லப்படுகிறது. அபிநயா நாகை ஆயுதப்படை குடியிருப்பில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளார்.


நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கருவூலத்தில் அபிநயா, துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.



சுழற்சி முறையில் இந்த பணியை செய்து வந்ததாக சொல்கிறார்கள். இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் மாவட்ட கருவூலத்தில் அபிநயாவும், மற்றொரு பெண் காவலரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்று காலை சுமார் 6 மணியளவில் அபிநயா தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.


 மற்றொரு பெண் காவலர் துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்துள்ளார். இதில் அபிநயா இடது கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறியுள்ளார்.


பின்னர், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே, ஆயுதப்படை டி.எஸ்.பி, நாகூர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.


மேலும் அபிநயா உடலை நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகப்பட்டினம் எஸ்.பி அருண் கபிலன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டார். அபிநயா குறித்து பணியில் இருந்த மற்றொரு பெண் காவலரிடம் கேட்டுள்ளனர்.


மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து கூறப்படுவது, "அபிநயா பணியை சிறப்பாக செய்யக்கூடியவர். இதற்காக உயர் அதிகாரிகளிடம் பாராட்டு சான்றிதழ் வாங்கியுள்ளார். ஆயுதப்படையில் பணியாற்றிய ஆண் காவலர் ஒருவரும், அபிநயாவும்  பழகியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மே 1ஆம் தேதி அந்த ஆண் காவலர் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் அபிநயா.


இதையடுத்து 15 நாட்கள் விடுமுறை எடுத்துச் சென்றவர், கடந்த 5 நாட்களுக்கு முன்பு மீண்டும் பணிக்கு வந்துள்ளார். அவருக்கு தொடர்ந்து இரவுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இதுவும் அவருக்கு அழுத்தத்தை தந்துள்ளது. இந்த நிலையில் தான் அபிநயா தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதற்கான காரணம் விசாரணை முடிவில் தெரிய வரும்" என்றனர்.


நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் அபிநயா உடல், உடற்கூறாய்விற்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தற்கொலை தீர்வல்ல... 

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம்: 104 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவும்.


1-5th Std - Time Table

 


எண்ணும் எழுத்தும் - 1-5 ஆம் வகுப்புகள் - கால அட்டவணை 


1-3ஆம் வகுப்புகள் - கால அட்டவணை (Colour / Black & White)


4-5ஆம் வகுப்புகள் - கால அட்டவணை (Colour / Black & White)



 Ennum Ezhuthum - 1-5th Standard - Time Table 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு - TANUVAS Press Release


கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு - TANUVAS பத்திரிகை செய்திக் குறிப்பு Press Release 


 கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பிற்கு நாளை 26-05-2025 முதல் விண்ணப்பிக்கலாம்



>>> பத்திரிகை செய்திக் குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



TAMIL NADU VETERINARY AND ANIMAL SCIENCES UNIVERSITY

PRESS MESSAGE

Tamil Nadu Veterinary and Animal Sciences University invites applications for undergraduate courses (BVSc & AH / B.Tech) from the candidates of Tamil Nadu State through online (https://adm.tanuvas.ac.in) from 26.05.2025,10.00 AM to 20.06.2025, 5.00 PM.

For online applications, guidelines, number of seats reserved for NRIs (Non-Resident Indians) / Wards of NRIs / NRI Sponsored and Foreign National Quota, please visit https://adm.tanuvas.ac.in.

Chairman, Admission Committee (UG),

TANUVAS, Chennai-600 051.



https://chat.whatsapp.com/DDqsauWKkln1IUdqOq9BnA


பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை: கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம்


கால்நடை மருத்துவ படிப்புகள், கால்நடை சார்ந்த பி.டெக். படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிப்பது நாளை தொடங்குகிறது.


பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு (பிவிஎஸ்சி - ஏஹெச்) படிப்புக்கு 660 இடங்கள் உள்ளன. இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன. இதுபோக, தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன. சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி கடந்த 1903-ல் தொடங்கப்பட்டது. 122 ஆண்டுகளை கடந்த பாரம்பரிய கல்லூரியாக திகழ்கிறது.


பி.டெக். படிப்புகள்: திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு, பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் வழங்கப்படும் பி.டெக் படிப்பில் உணவு தொழில்நுட்பம் பிரிவில் 40 இடங்கள், பால்வள தொழில்நுட்பம் பிரிவில் 20 இடங்கள் உள்ளன. இதில் இருந்து முறையே 6 இடங்களும், 3 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மை கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.


மேற்கண்ட பிவிஎஸ்சி - ஏஹெச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு 2025-26-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (https://adm.tanuvas.ac.in) ஆன்லைனில் விண்ணப்பிப்பது நாளை தொடங்குகிறது.


பிவிஎஸ்சி - ஏஹெச் படிப்பில் சேர, பிளஸ் 2 மதிப்பெண் போதும். உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். நீட் மதிப்பெண்கள் தேவையில்லை. ஆனால், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடத்தில் சேர்வதற்கு, நீட் மதிப்பெண் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.


எம்பிபிஎஸ் போன்றே, இந்த படிப்பும் ஐந்தரை ஆண்டுகள் கொண்டது. ஓராண்டு உள்ளிருப்பு பயிற்சியை உள்ளடக்கியது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதம் இடங்கள் இந்திய கால்நடை மருத்துவ குழுமம் மூலமாக நிரப்பப்படுகிறது. எஞ்சிய இடங்கள், தமிழ்நாடு மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 45 இடங்கள் கிடைக்கும்


பி.டெக் படிப்புகள் 4 ஆண்டுகள் கொண்டது. இதில் சேர, பிளஸ் 2 வகுப்பில் கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும். இதில் 7.5 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உணவு தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள், பால்வள தொழில்நுட்ப படிப்பில் 2 இடங்கள், கோழியின தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் என 8 இடங்கள் கிடைக்கும்.


பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கால்நடை மருத்துவம் அல்லது கால்நடை சார்ந்த பி.டெக். படிப்புகள் படித்தால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்பை பெற்று முன்னேற வாய்ப்புகள் உள்ளன என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.



கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல் - பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை



கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல் - பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை


கேரளா அருகே கடலில் மூழ்கிய கப்பல் - ரசாயனம் பரவும் அபாயம்


திருவனந்தபுரம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி நோக்கி புறப்பட்ட சரக்குக் கப்பல் மூழ்கியது.


 கப்பலில்  25 பேர் இருந்த நிலையில் லைஃப் ஜாக்கெட் உதவியுடன் 9 பேர் கடலில் குதித்து தப்பித்தனர். 


கப்பலில் சிக்கிய 16 பேரை மீட்கும் பணி தீவிரம்.


கப்பலில் இருந்த கண்டெய்னர்களில் 367 மெட்ரிக் டன்  கந்தக எரிபொருள் உள்ளதால், அதனால் ஏதும் ஆபத்து நிகழலாம் என எச்சரிக்கை.


 கண்டெய்னர்கள் எங்காவது கரை ஒதுங்கும் போது மக்கள் யாரும் அருகே செல்ல வேண்டாம் என கேரள பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை.


கொச்சி செல்லவிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடல் அருகே மூழ்கி விபத்துக்குள்ளானது.


கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கப்பலில் லைபீரியா நாட்டின் கொடி இருந்ததாகக் கூறுகின்றனர்.


இந்தக் கப்பல் இன்றிரவு 10 மணிக்கு கொச்சி சென்றடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கொச்சியை தொடர்ந்து, தூத்துக்குடிக்கும் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.


இந்த விபத்தின்போது, கப்பலில் 24 பேர் இருந்ததாகவும், அவர்களில் 9 பேர் பாதுகாப்பு உடைகளின் மூலம் தப்பித்ததாகவும் தகவல் தெரிவிக்கிறது. மீதமுள்ளவர்களை மீட்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தென்மேற்கு பருவமழையின் காரணமாக, கடலில் ஏற்பட்ட பாதகமான நிலைமையால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.


அதுமட்டுமின்றி, கப்பலில் இருந்த கன்டெய்னர்களில் 367 மெட்ரிக் டன் அளவில் கந்தக எரிபொருள் இருந்ததாகக் கூறுகின்றனர். ஆகையால், அவை கரை ஒதுங்கும் சமயத்தில், அதனருகே மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று பேரிடர் மேலாண்மை எச்சரித்துள்ளது.


மேலும், கடற்கரையில் அடையாளம் தெரியாத எந்தப் பொருளையும் அணுக வேண்டாம் என்றும், 112 என்ற அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


அதி கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - தலா 30 வீரர்களை கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைவு

 

அதி கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி, கோவைக்கு தலா 30 வீரர்களை கொண்ட இரண்டு தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைவு



கல்லூரிக் கனவு கையேடு - மே 2025



கல்லூரிக் கனவு கையேடு - மே 2025



Kalloori Kanavu Guide - May 2025 - College Dream Guide



கல்லூரிக் கனவு கையேடு - மே 2025 - தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான உயர்கல்விக்கான  வழிகாட்டி கையேடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பணி நிறைவு பெறும் தலைமை ஆசிரியர்கள் (Retirement HMs), பொறுப்பு ஏற்கும் ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டியவை & தேவையான படிவங்கள்

 


பணி நிறைவு பெறும் தலைமை ஆசிரியர்கள், பொறுப்பு ஏற்கும் ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டியவை & தேவையான பொறுப்பு ஒப்படைப்பு & பொறுப்பு ஏற்கும் படிவங்கள்


Items to be handed over by retired Head Masters to Teachers taking charge & required forms 



>>> பொறுப்பு ஒப்படைப்பு & பொறுப்பு ஏற்கும் படிவங்கள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> மடிக்கணினி ஒப்படைப்பு விவரம் படிவங்கள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



நண்பர்களே வணக்கம் 🙏


31/5/2025 *பணி ஓய்வு* 

தலைமை ஆசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கு *வாழ்த்துகள்* ...


 *பணிக்காலத்தின்* "கடைசி வாரத்தில்" உள்ளீர்கள் 😊


அடுத்த " *சனிக்கிழமை* " ஓய்வு 👍 

தங்களின் மாணவர் நலன் சார்ந்த தொடர் செயல்பாடுகளுக்கு தலை வணங்குகிறோம் 💐💐💐



பொறுப்பு ஒப்படைக்கும்

 தலைமை ஆசிரியர்களின் / பொறுப்பு ஏற்கும் முதுகலை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு...


Charge *handed over taken over form இணைத்துள்ளேன்* ...


சரிபார்த்து ஒப்படைக்க/ வாங்க வேண்டியது...

1) Special fees A/c

2) PTA A/c

3) HM /NSD / Misc / School A/c

4) scholarship A/c ( சில பள்ளிகளில் இன்னும் இருக்கலாம்) ...

5) SNA A/c / SS A/c / Rmsa/SSA A/c (Canara Bank) ( எல்லாம் ஒரே கணக்கு தான்) 

தற்போது SSA/RMSA கணக்குகள் இல்லை 


ஒவ்வொரு கணக்கிற்கும்


நான்கு விஷயங்கள்


1) Bank passbook ( SNA A/c க்கு இருக்காது)

2) cash book

3) Minutes Note ( தீர்மான நோட்)

4) voucher file/ ஒட்டு file


இவைகள் கட்டாயம் சரிபார்த்து ஒப்படைக்க/ வாங்க வேண்டும் 


+ 5) stock register தனியே இருக்கலாம்....


நீங்க பொறுப்பு *ஒப்படைக்கும்/ ஏற்கும்* நாளில் வங்கி கணக்கில் உள்ள தொகை..

Passbook, cashbook tally ஆகிறதா என‌ மட்டும் சரி பார்த்து கொள்ளுங்கள்...


 *Audit* பொறுத்தவரை உங்கள் *period* க்கு மட்டுமே நீங்கள் பொறுப்பு...


உங்கள் *period Audit* முடித்தால் மட்டுமே *NOC* வழங்க இயலும் 🙏 என்பது நீங்க அறிந்ததே...


பகிர்ந்து கொள்ள வேண்டியது....


1) email/ Gmail ID password

2) EMIS ID password

3) CEO DEO phone number

4) SMC/ PTA president Phone no


மற்றபடி...


1) Cycle account (balance male female community wise)

2) laptop ( student laptop இருக்காது) .. CRC laptop/ additional laptop/ PG laptop எண்ணிக்கை சரிபார்த்து கொள்ளுங்கள்

3) உங்கள் மாவட்டத்தில் CUG pH no இருப்பின் அந்த sim....

4) office bureau keys...


சரிபார்த்து வாங்கிக் கொள்ளலாம்...


ஜூன் மாதத்தில் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று புதிய தலைமை ஆசிரியர் வந்து விடுவார்கள்....

மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கட்டாயம் இருக்கும்...


எனவே முதுகலை ஆசிரியர்கள் நம்பி charge எடுக்கலாம் 😊


பணி ஓய்வு பெறுபவர் 

"சூழ்நிலைக்கு ஏற்ப" நல்லவராகவோ


அல்லது

 "விமர்சனத்திற்கு உரியவராகவோ" 

இருந்து இருக்கலாம்...


எப்படி இருப்பினும்...

அவர் நமக்காக/ மாணவ செல்வங்களுக்காக/ அரசிற்காக பணி புரிந்து உள்ளார் 💐💐💐...


அவரின் " *ஓய்வு கால கண்ணியம்" காக்க வேண்டியது* நமது கடமை ✋🏻...


உரிய பணப் பலன்களை அரசு விதிகளுக்கு உட்பட்டு கிடைக்கச் செய்வது நமது " *தார்மீக* *கடமை* "... 



தகவலுக்காக

 *க.செல்வக்குமார்* 

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி

மோ சுப்புலாபுரம் 

மதுரை மாவட்டம் 👍



Whether the following the registers have been handed over ( Yes/ No)


1.Register of Assets  - 

2.Amenity and Special Fees Cash book with passbook – 

3.Minutes books for special fees – 

4.Daily Fee Collection Register – 

5.Term Fee Register – 

6.Demand,Collection and Balance Statement- 

7.Arrear Demand Register – 

8.Penal Fee Register – 

9.Money Value forms Stock Register with Stock – 

10.TNTC 70 Register ( Salary and Non Salary ) - 

11.Undisbursed Pay Register  - 

12. C F 51 Cash Book – 

13.Permanent Advance Register _ 

14.Subsidiary Cash Book _ No

15.PTA Cash Book,Pass Book and Minutes Book – 

16.Draft / Cheque Register  - 

17.Stamp Account with Balance – 

18.Challan Register - 

19.English Medium Fees Collection Register – 

20.Scale Register – 

21.Register of Service Books – 

22.Scholarship Pass Book and Acquittance Register – 

23.Sanchayika Cash Book and Pass Book _ 

24.Flag Day Collection Register – 

25.Other Falgs Collection Register –

26.Tools and Plants Register –No

27.Broken Article Register and Auction Register  - 

28.Register of Free Books –

29.Register of Free Note Books – 

30.Register of Free Uniforms – 

31.Register of Free Cycles – 

32.Register of Free Bus Passes – 

33.Building Development Committee Minutes Books,Pass Book and Cash Book – 

34.Inspection Reports of CEO and DEO – 

35.Admission Register – 

36.Consolidated Attendance Register – 

37.Consolidated  Mark  Register – 

38.TC Book – 

39.Register of Unclaimed  SSLC  Certificates  -

40. Register of Unclaimed  HSE  Certificates  -

41.Register of Trophies and Cups – 

42.Log Book – 

43.Supervision Register – 

44.Staff Council Minutes Book - 




Relieved   Officer                                                                                                               Relieving   Officer


பள்ளிகள் திறப்பு – தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள்

 

 பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கின்றன – தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள்


தமிழ்நாட்டில் பள்ளி திறக்கும் நாளில் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குள் நுழைகின்றனர்.



2025-26 கல்வியாண்டிற்கான தமிழக பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி, திங்கட்கிழமை அன்று திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் இந்தத் தேதியில் செயல்படத் தொடங்க உள்ளன.


பள்ளி திறப்பதற்கு முன், பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. இவை மாணவர்களின் பள்ளி வாழ்க்கையை சீராகவும், பயனுள்ளதாகவும் மாற்றும் வகையில் அமைந்துள்ளன.



*1. பாடப்புத்தகங்கள் விநியோகம்*


பள்ளி திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு சமச்சீர் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.


அனைத்து வகுப்புகளுக்கும் தேவையான புத்தகங்கள் ஏற்கனவே மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.


தலைமையாசிரியர்கள், புத்தகங்களை வரிசையாக வகுப்புகளின்படி தயார் செய்து வைக்க வேண்டும்.



*2. பள்ளி வளாக சுத்தம் மற்றும் பராமரிப்பு*


பள்ளி வளாகம் முழுமையாக சுத்தம் செய்யப்பட வேண்டும்.


கழிவுநீர் சேகரிப்பு, கழிப்பறை வசதி, குடிநீர் உபகரணங்கள் ஆகியவை சீரமைக்கப்பட வேண்டும்.


மாணவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.



*3. பாடத்திட்டம், நாட்காட்டி மற்றும் கால அட்டவணை*


புதிய கல்வியாண்டுக்கான பாடத்திட்ட திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.


வாராந்திர கால அட்டவணை மற்றும் ஆண்டு நாட்காட்டி தயார் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.



*4. மாணவர் நலத்திட்டங்கள்*


இலவச நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் போன்றவை சரியாக பதிவு செய்யப்பட்டு, ஒழுங்காக வழங்கப்பட வேண்டும்.


மாணவர்களின் விலாச விவரங்கள், ஆதார் இணைப்பு உள்ளிட்டவை பரிசீலிக்கப்பட வேண்டும்.



*5. வாகன பாதுகாப்பு பரிசோதனை*


பள்ளி வாகனங்கள் அனைத்தும் RTO சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.


அனுமதி சான்றுகள், வாகனப் பராமரிப்பு, டிரைவர் தகவல்கள் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட வேண்டும்.



*6. தொடர்பு முறைமைகள் மற்றும் பெற்றோர் தொடர்பு*


மாணவர்களின் பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்புகள், கால அட்டவணை, விழாக்கள் பற்றிய தகவல்களை SMS / வாட்ஸ்அப் வாயிலாக தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.


பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்கள் குறித்து திட்டமிடப்பட வேண்டும்.



*7. வெப்ப அலை / மழை முன்னெச்சரிக்கை*


இந்நேரத்தில் வெப்ப அலை / மழை காரணமாக முன்னெச்சரிக்கைகள் அவசியம்.


தேவையான இடங்களில் கூடுதல் குடிநீர் வசதிகள் மற்றும் நிழலிடங்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். 


மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு - தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியை வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு - Maternity Leave Case


 மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு - தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியை வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு - Maternity Leave Case


மகப்பேறு விடுப்பு அரசியலமைப்பு சட்டம் அளித்த உத்தரவாதம் - தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியை வழக்கில் Supreme Court Judgment - Maternity Leave Case


மகப்பேறு விடுப்பு என்பது மகப்பேறு சலுகைகளில் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்றும் இது பெண்களுக்கு அரசியலமைப்பு சட்டம் அளித்த உத்தரவாதம் என்றும் தமிழ்நாடு பெண் அரசு ஊழியர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.


தமிழ்நாட்டை சேர்ந்த ஆசிரியை ஒருவர் அரசு பணியில் சேருவதற்கு முன்பு முதலாவது திருமணத்தின் மூலம் இரண்டு குழந்தைகளின் தாயாக இருந்தார். முதல் திருமணத்தில் பிறந்த குழந்தைகள் இருவரும் முதல் கணவரிடம் உள்ளனர். இந்த நிலையில் அரசு பள்ளியில் ஆசிரியை பணியில் சேர்ந்த பின்னர் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அவர், கருவுற்றிருந்தார்.


இதற்காக அவர் தமது பள்ளிக்கல்வித்துறையின் வாயிலாக பிரசவ கால விடுமுறைக்காக விண்ணப்பித்த போது, ஏற்கனவே அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக அவருக்கு பிறக்க உள்ள குழந்தைக்கு பிரசவ கால விடுமுறை அளிக்க இயலாது என கூறப்பட்டது. 


இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு நபர் நீதிபதி அமர்வில் வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி பார்த்திபன், "ஆசிரியைக்கு 2021ஆம் ஆண்டு அக்டோபர் 11 முதல் 2022ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி வரை ஒரு ஆண்டு காலத்துக்கு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது," என்று உத்தரவிட்டார்.


இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் இருநபர் நீதிபதி கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து தீர்ப்பளித்த நீதிபதிகள், "திருமணம் ஆன அரசு பணியில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு என்பது சட்டப்பூர்வமானதுதான். ஆனால், அடிப்படை உரிமை அல்ல," என்று கூறியது. எனவே, ஒரு நபர் நீதிபதி அளித்த உத்தரவுக்கு தடை விதித்தது.


இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆசிரியை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரின் மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, உஜ்ஜல் புயான் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "மகப்பேறு சலுகைச் சட்டம் என்பது பெண்களில் மகப்பேறு விடுமுறை உரிமையை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஒரு தாயாகவும், அரசு ஊழியராகவும் சுதந்திரமான வாழ்க்கை வாழ்வதற்கான சாத்தியங்கள் போன்ற நெகிழ்வு தன்மைகளை பெண்களுக்கு அளிக்கிறது,” என்றனர்.


மேலும் கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், “பெண் ஆசிரியைக்கு முந்தைய திருமணத்தின் மூலம் இரண்டு குழந்தைகள் பிறந்திருந்த போதிலும், இப்போதைய குழந்தைக்கும் அவருக்கு மகப்பேறு உரிமை உள்ளது. பெண் ஆசிரியை அரசு பணியில் சேருவதற்கு முன்பு முதல் இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். அரசு வேலையில் சேர்ந்த பின்னர், அவர் இரண்டாவது திருமணம் மூலம் குழந்தை பெற்றிருக்கிறார். எனவே, அரசு பணியில் சேர்ந்த பிறகு அவருக்கு குழந்தை பிறந்ததை முதல் குழந்தையாக கருத வேண்டும். மேலும் முதல் திருமணம் மூலம் பிறந்த இரு குழந்தைகள் அவரிடம் இல்லை. முதலாவது கணவரிடம் அதாவது குழந்தைகள் அவரது தந்தையுடன் வசிக்கின்றனர்.


எனவே, மகப்பேறு கால விடுமுறை என்பது மகப்பேறு கால பலன்களோடு இணைந்ததாகும். உடல் நல உரிமை, தனியுரிமை, சம உரிமை, பாகுபாடு காட்டாமை மற்றும் கண்ணியத்திற்கான உரிமை உள்ளிட்டவை போல சர்வதேச மனித உரிமை சட்டம் உள்ளிட்டவற்றில் இனப்பெருக்க உரிமைகள் இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளன.


தமிழ்நாடு அரசின் கொள்கையின்படி மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நிச்சயமாக பாராட்டத்தக்க நோக்கமாகும், மேலும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு சலுகைகளை வழங்குவதன் நோக்கமும் அதைப் போன்றதுதான். நாட்டில் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இரண்டு குழந்தைகள் விதிமுறை என்ற நோக்கமும், தற்போதைய வழக்கு சூழ்நிலைகளில் மகப்பேறு விடுப்பு உட்பட பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு சலுகைகளை வழங்குவதும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை அல்ல. சமூக நோக்கத்தை அடைய, இரண்டும் ஒரு நோக்கமாக மற்றும் பகுத்தறிவு முறையில் இணக்கமாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.


சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 15,672 மாணவர்கள் சேர்க்கை



 சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 15,672 மாணவர்கள் சேர்க்கை


சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த 2 மாதங்களில் 15,672 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.


சென்னை மாநகராட்சி கல்வி துறையின் கீழ், 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலை, 46 உயர்நிலை, 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் இயங்கி வருகின்றன.


இந்த பள்ளிகளில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.


சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 2025-26-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் 15,672 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.


இதுதொடர்பாக மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சிப் பள்ளிகளில் ஆண்டுதோறும் 1.12 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் மார்ச் மாதத்துக்குப் பிறகு மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த ஆண்டு மே 23-ம் தேதிக்குள் 15,672 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மழலையர் வகுப்புகளில் மட்டும் 8 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 2 மாதங்களில் இவ்வளவு மாணவர்கள் சேர்ந்துள்ளது இதுவே முதல்முறை. விஜயதசமி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும்.


இந்த ஆண்டு 33 ஆயிரம் மாணவர்களைச் சேர்க்க ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். இதற்காக மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான சலுகைகள் குறித்தும், கல்வி தரம் மேம்பட்டிருப்பது குறித்தும், 45 ஆட்டோக்கள் வாயிலாக பொதுமக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


மழலையர் வகுப்புகளில் காற்றோட்டமான வகுப்பறைகள், பச்சை வண்ணப் பலகைகள், ஸ்மார்ட் போர்டு, விளையாட்டுடன் கல்வியில் ஆர்வத்தைத் தூண்டும் வண்ணமயமான புத்தகங்கள் உள்ளிட்டவை உள்ளன. புத்தகப் பைகள், காலணிகள், அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. பள்ளி சீருடைகள், எழுது பொருட்கள், பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், காலை சிற்றுண்டி, பள்ளிக்கு 100 சதவீதம் வருகை தந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, மாலை சிற்றுண்டியுடன், மாலைநேர சிறப்பு வகுப்புகள் உள்ளிட்டவை ஏற்படுத்தி தரப்படுகிறது.


மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், கல்வித் தரத்தை மேம்படுத்தவும், விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. போட்டித் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களை கல்வி சுற்றுலாவுக்கும் அழைத்து செல்கிறோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


Off-road jeep safariயின் பொழுது நூலிழையில் யானைகளிடமிருந்து உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்

 


ஆஃப் ரோடு ஜீப் சஃபாரியின் பொழுது நூலிழையில் யானைகளிடமிருந்து உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்


Tourists narrowly escape from elephants during off-road jeep safari




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


மைசூர் அரச குடும்பத்திற்கு ரூபாய் 3400 கோடி இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

 


மைசூர் அரச குடும்பத்திற்கு ரூபாய் 3400 கோடி இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு


கர்நாடக மாநிலம், பெங்களூரின் பல்லாரி சாலை மற்றும் ஜெயமஹால் சாலை பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி மிக அதிகமாக உள்ளது.


இதற்கு தீர்வு காணும் நோக்கில், பல்லாரி சாலை, ஜெயமஹால் சாலையை அகலப்படுத்த, மாநில அரசு திட்டமிட்டது.


இப்பணிகளுக்காக, பெங்களூரு அரண்மனை மைதானத்தை சேர்ந்த 15.39 ஏக்கர் நிலத்தை, மாநில அரசு 2023ல் கையகப்படுத்தியது.


இதற்கு மைசூரு அரச குடும்பத்தினர் ஆட்சேபம் தெரிவித்தனர். நிலத்துக்கான நிவாரணம் வழங்கும்படி வலியுறுத்தினர். ஆனால், அரசு மவுனம் சாதித்தது.


இதுகுறித்து, உச்ச நீதிமன்றத்தில், அரச குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர். விசாரணை நடத்திய நீதிமன்றம், அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு ஏக்கருக்கு 220 கோடி ரூபாய் வீதம், 3,400 கோடி ரூபாய் டி.டி.ஆர்., எனும் மாற்றக்கூடிய மேம்பாட்டு உரிமை தொகையாக அளிக்க வேண்டும் என, கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.



இந்த தொகையை உச்ச நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யும்படியும் உத்தரவிட்டது. இதன்படி, கர்நாடக அரசும் உச்ச நீதிமன்ற பதிவாளர் பெயரில் 3,400 கோடியை டிபாசிட் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர்.


மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், அரவிந்த்குமார் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.


மன்னர் குடும்பத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 3,400 கோடி ரூபாயை உடனடியாக, அரச குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டனர்.



KTM பைக் நிறுவனத்தை வாங்குகிறது Bajaj



கேடிஎம் பைக் நிறுவனத்தை வாங்குகிறது பஜாஜ்


Bajaj to acquire KTM bike company


கேடிஎம் பைக்குகளை தயாரிக்கும் ஆஸ்திரிய நாட்டு நிறுவனத்தை கையகப்படுத்துகிறது பஜாஜ் நிறுவனம்


கேடிஎம் நிறுவனத்தில் ரூ.7,765 கோடி முதலீடு செய்து அதன் 4 பெரும்பான்மை பங்குகளை வாங்குகிறது பஜாஜ்


கேடிஎம்ஐ வாங்குவதன் மூலம் உயர் திறன் மோட்டார் பைக் சந்தையில் பஜாஜ் முக்கிய இடம் பிடிக்கிறது


பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. 2-வீலர்கள் மற்றும் 3-வீலர்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் உதவியுடன் சில ஐரோப்பிய பைக் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles), கேடிஎம் (KTM) மற்றும் ஹஸ்க்வர்னா (Husqvarna) என்பன அந்த சில ஐரோப்பிய பைக் நிறுவனங்கள் ஆகும். இவற்றில் சில நிறுவனங்கள் பஜாஜ் நிறுவனத்தின் மூலமாகவே,  இன்னமும் செயல்பட்டு வருகின்றன. அதாவது, ஐரோப்பிய நிறுவனங்கள் நம் இந்தியாவின் பஜாஜ் மூலமாகவே உயிர்பிப்புடன் உள்ளன.


ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் பஜாஜ் நிறுவனத்தை காட்டிலும் பழமையான பைக் உற்பத்தி நிறுவனம் ஆகும். இரு நண்பர்கள் மூலமாக 1934ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கேடிஎம் நிறுவனம் முதல் 55 வருட கால கட்டத்திற்கு பெரியதாக எந்தவொரு சறுக்கலையும் சந்திக்கவில்லை.


நிறுவனத்தை நிறுவிய நண்பர்கள் இருவரும் இறந்து போனாலும், அவர்களில் ஒருவரது மகன் கேடிஎம் நிறுவனத்தை தூக்கி பிடித்தது மட்டுமின்றி, மெல்ல மெல்ல நிறுவனத்தையும் வளர்க்க ஆரம்பித்தார். இருப்பினும், அவரும் 1989இல் இயற்கை எய்ததை அடுத்து, 1991க்கு பிறகு எந்த பக்கம் செல்வது என தெரியாமல் கேடிஎம் நிறுவனம் தடுமாறியது.


அப்போதுதான், ஆஸ்திரியா நாட்டை தாயகமாக கொண்ட பியரர் மொபிலிட்டி ஏஜி (Pierer Mobility AG) நிறுவனத்தால் கேடிஎம் நிறுவனம் வாங்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் சறுக்கலை சந்தித்துவரும் கேடிஎம் நிறுவனத்தை காப்பாற்றி இருப்பது, பியர் மொபிலிட்டி ஏஜி நிறுவனம் கிடையாது; இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ ஆகும்.


பல்சர் (Pulsar) பைக்குகள் மூலமாக இலாபத்தை சம்பாதிக்க ஆரம்பித்த 2007ஆம் ஆண்டு சமயத்தில் அந்த இலாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை பணத்தை பியர் மொபிலிட்டி ஏஜி நிறுவனத்தின் கேடிஎம் பிராண்டின் பங்கை வாங்க பஜாஜ் பயன்படுத்தியது. அதன்பின் ஒவ்வொரு வருடமாக கேடிஎம் பிராண்ட் மீதான தனது உரிமையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்த பஜாஜ் நிறுவனம், 2012ஆம் ஆண்டில் கேடிஎம் நிறுவனத்தை இந்தியாவிற்கு கொண்டுவந்தது.


இதன் மூலமாக பஜாஜ் ஆட்டோ உடன் இன்னும் நெருக்கமாகியதன் மூலம் 2013இல் கேடிஎம் நிறுவனத்தின் சுமார் 47.97% பங்கை பஜாஜ் பெற்றது. தற்போது, கேடிஎம் நிறுவனம் மீதான பஜாஜ் ஆட்டோவின் பங்கு மதிப்பு 49.9% ஆகும். இந்த நிலையில், கேடிஎம் நிறுவனத்தை பியர் மொபிலிட்டி நிறுவனத்திடம் இருந்து பிரித்து முழுவதுமாக தானே சொந்தமாக்கி கொள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாராகி வருகிறது.


இதன் ஒரு பகுதியாக, தனித்து செயல்பட வேண்டி கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் கேடிஎம் நிறுவனம் சார்பில் ஆஸ்திரியா நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு கேடிஎம் நிறுவனம் சார்பில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், எல்லா காரணங்களும் கேடிஎம் நிறுவனத்தை பெரியதாக்க வேண்டும் என்பதாக தான் இருந்தன. இந்த நிலையில், சுமார் 56.6 கோடி யூரோக்களை (ரூ.5,431 கோடி) பியர் மொபிலிட்டி நிறுவனத்திற்கு பஜாஜ் ஆட்டோ கடனுதவியாக வழங்க உள்ளது.



இதற்கான ஒப்பந்தங்கள் சமீபத்தில்தான் கையெழுத்தாகி முடிந்துள்ளன. கேடிஎம் நிறுவனத்தில் முதலீடுகள் வருகிற மே 23ஆம் தேதியோடு நிறைவடைய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. வழக்கம்போல், கேடிஎம் நிறுவனத்தின் வணிகம் சமீப காலமாக மிகவும் சரிவை சந்தித்து வருகிறது. இத்தகைய நேரத்தில் கடனுதவியை கொடுத்து, கேடிஎம் நிறுவனத்தை வளைத்து போடலாம் என்பதுதான் பஜாஜ் ஆட்டோவின் ராஜ தந்திரமாக உள்ளது.