ஆய்வுக்கூட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்களின் பதிவு



 ஆய்வுக்கூட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் பதிவு


பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக மாநாட்டுக் கூட்ட அரங்கில் எனது தலைமையில் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் தொடங்கியது. 


மாவட்டம் வாரியாக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளவுள்ளோம். இன்றும், நாளையும் (23, 24.06.2025) மூன்று அமர்வுகளாக இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.


மாவட்டம் தோறும் கல்வி அலுவலர்கள் மேற்கொண்டுள்ள சாதனைப் பணிகள், மாணவர்களின் இடைநிற்றல், 14417 உதவி எண்ணிற்கு அம்மாவட்டங்களில் இருந்து வந்துள்ள புகார்கள் - கருத்துகள் போன்ற பல்வேறு கூறுகளில் கல்வி அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறோம். கல்வி வளர்ச்சி சார்ந்த அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து வருகிறோம் - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் பதிவு



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.