டிட்டோஜாக் மறியல் போராட்டம் - ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாற்றுப்பணியில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள்
TETOJAC மறியல் போராட்டம் காரணமாக கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியத்திலிருந்து மதுக்கரை ஒன்றியத்திற்கு மாற்றுப்பணியில் செல்லும் ஆசிரியர்கள்
டிட்டோஜாக் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இரண்டு நாள் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியத்தில் பெரும்பாலான ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டதால் பள்ளிகளை நடத்துவதற்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அருகில் உள்ள கிணத்துக்கடவு ஒன்றியத்தில் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் அதிக அளவில் பள்ளிக்குச் செல்லக்கூடிய தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை மதுக்கரை ஒன்றியத்திற்கு மாற்றுப் பணிக்கு செல்ல கிணத்துக்கடவு வட்டார கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
கிணத்துக்கடவு வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.