மத்திய அரசு 60% நிதியை ஒதுக்காததால் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த இயலவில்லை - தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்
RTE - இணையதளப் பக்கம் திறக்காதது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்காக இணையதள பக்கத்தை திறக்காதது ஏன்?
RTE-ன் கீழ் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளியில் சேர்க்கை வழங்குவது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி
மத்திய அரசு 60% நிதியை ஒதுக்காததால் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த இயலவில்லை - தமிழ்நாடு அரசு
மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு இணையதள பக்கத்தை திறக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்காக இணையதளப் பக்கத்தைத் திறக்காதது ஏன் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
Right to Education Act | கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்த நிதி ஒதுக்கீடு பிரச்சினை காரணமாக இணையதளப் பக்கம் திறக்காததை சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசிடம் கேள்வி எழுப்பியது.
RTE மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்காக இணையதளப் பக்கத்தைத் திறக்காதது ஏன்? - ஐகோர்ட் கேள்வி
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை எனக் கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கல்வி உரிமைச் சட்டத்தின்படி மத்திய அரசு உரிய நிதியை தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்க வேண்டும் எனவும் , மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைக்கவில்லை எனக் கூறாமல் தனியார் பள்ளிகளுக்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன், தனியார் பள்ளிகள் இயக்குனர் குப்புசாமி ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் தனியார் பள்ளிகள் இயக்குநர் தாக்கல் செய்த பதில் மனுவில், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மறுத்ததால், மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்றும் மாநில அரசு தனது பங்காக 40 சதவீத நிதியை ஒதுக்க தயாராக உள்ள போதும், மத்திய அரசு 60 சதவீத நிதியை ஒதுக்காததால் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த இயலவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயர் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கவில்லை என்றும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும் சம பொறுப்பு உள்ள போதிலும் மாநில அரசுக்கு எதிராக மட்டுமே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் அந்த வழக்கு செப்டம்பர் ஏழாம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
கல்வியாண்டு துவங்கி இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான இணையதளப் பக்கத்தை இன்னும் திறக்காமல் இருப்பது ஏன் எனவும், மத்திய மாநில அரசுகளுக்கு இடையில் நிதி ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை காரணமாக மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, இணையதளப் பக்கத்தைத் திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக் கொண்டனர்.
இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், தமிழ்நாடு அரசு மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளதாகவும், தமிழ்நாடு அரசுக்கு பிரச்சனையும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணையை நீதிபதிகள், செப்டம்பர் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.