கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

 

 

கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது


மாணவிக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது


பாலியல் தொல்லை கொடுத்​த​தாக அரசு உதவி​பெறும் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்​டார். திருச்சி மேல​கல்​கண்​டார் கோட்டை மாருதி நகரைச் சேர்ந்​தவர் எஸ்​.​வில்லி​யம் பால்​ராஜ்(52). இவர், புதுக்​கோட்டை மாவட்​டம் விராலிமலை அருகே குன்னத்தூரில் உள்ள அரசு உதவி​பெறும் பள்ளி​யில் முது​நிலை கணித ஆசிரிய​ராகப் பணிபுரிந்து வந்​தார்.


இந்​நிலை​யில், அங்கு பயிலும் ஒரு மாணவிக்கு கடந்த ஓராண்​டாக பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட குழந்​தைகள் பாது​காப்பு அலு​வல​கத்​துக்கு புகார் தெரிவிக்​கப்​பட்​டது. மாவட்ட குழந்​தைகள் பாது​காப்பு அலு​வலர் வசந்​தகு​மார் முதல்​கட்ட விசா​ரணைக்​குப் பிறகு, கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.


இது தொடர்​பாக ஆசிரியர் வில்​லி​யம் பால்ராஜ் மீது போக்சோ உள்​ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்​குப் பதிவு செய்​து, அவரை கைது செய்​தனர். பின்​னர், புதுக்​கோட்டை மகளிர் நீதி​மன்​றத்தில் ஆஜர்படுத்​தி, சிறை​யில்​ அடைத்தனர்​.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.