சிறப்பு சேமநல நிதி திட்டம் 2000 (SPF 2000) குறித்த விழிப்புணர்வு பதிவு
இது ஒரு விழிப்புணர்வு பதிவு அரசு ஊழியர்களே💥
சிறப்பு சேமநல நிதி திட்டம் 2000
Special Provident Fund SPF 2000
இந்த கடந்த 01.10.2000 முதல் தொடங்கி வைக்கப்பட்டது
இத்திட்டத்தை தொடங்கி வைத்த அரசு முன்னாள் முதல்வர் கலைஞர் திரு மு கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது தொடங்கி வைத்த திட்டம்
இந்த திட்டத்தில் கடந்த 2000 ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு ரூபாய் 50 ம்
இத்திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு ரூபாய் 70 ம்
மாதாந்திர சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட வேண்டும்
இது ஒரு சுய விருப்ப திட்டமாகும் அதாவது 2000 ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்கள் இத்திட்டத்தில் சேரலாம் அல்லது சேராமலும் இருக்கலாம் அவரவர் விருப்பம்
ஆனால் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக திட்டத்தில் சேர வேண்டும் என்பது அரசு ஆணை
இத்திட்டம் தொடங்கப்பட்டவுடன் விருப்பம் தெரிவித்தவர்களுக்கு மற்றும் 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பிடித்தம் இனிதே தொடங்கப்பட்டது
இருப்பினும் நமது அரசு பணியாளர்கள் செய்யும் ஒரு பெரிய தவறு என்னவென்றால் தொடர்புடைய அரசு ஊழியர்களுடைய பணி பதிவேட்டில் இத்திட்டத்தில் சேர்ந்தவர்களின் பதிவுகள் இருக்கிறதா என்ற ஆய்வு செய்யப்படாமல் விடுபட்டுள்ள தகவல்கள் சமீபத்தில் கிடைத்துள்ளது
இதனால் என்ன பாதிப்பு என்று கேட்கிறீர்களா?
அதாவது கிட்டத்தட்ட ஓய்வு பெறும் தருவாயில் உள்ள அரசு பணியாளர்களுக்கு இத்திட்டத்தின் முதிர்வு தொகை பெற்று வழங்குவதில் பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது
ஏனெனில் திட்டம் தொடங்கும் போது ஒரு அலுவலகத்திலும்
ஓய்வு பெறும் போது ஒரு அலுவலகத்திலும் இருப்பார்கள்
ஒரே அலுவலகத்தில் இருந்தால் பரவாயில்லை
அம்மாதிரியான சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு
பெரும்பாலான ஊழியர்கள் திட்டம் தொடங்கும் போது பணியாற்றிய அலுவலகத்தில் இருந்து பல்வேறு நிலைகளில் பதவி உயர்வுகள் பெற்று தொலைதூரத்தில் பணியாற்றுவார்கள்
அம் மாதிரியான சமயங்களில் ஓய்வு பெறும் நிலை வந்து விட்டால்
இந்த திட்டத்தின் முதிர்வு தொகையினை வழங்குவதில் சுணக்கம் காட்டுவார்கள்
காரணம் இத்திட்டத்தில் சேர்ந்ததற்கான பதிவுகள்
உரிய பணி பதிவேடுகளில் இல்லை என்பதால்
அந்தப் பதிவுகளை பதிவு செய்யும் பொருட்டு மீண்டும் அந்தப் பணி பதிவேடுகள் கடந்த 2000 ஆண்டு அந்த அரசு பணியாளர் பணியாற்றிய அலுவலகத்துக்கு அனுப்பப்படும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது
அல்லது கடித வழி போக்குவரத்து மூலமாக திட்டத்தில் சேர்ந்ததற்கான ஒரு உறுதித் தன்மை சான்றிதழ் பெறப்படுகிறது
அதற்கு சில காலங்கள் ஆகிறது
அதுவரை ஓய்வு பெற்ற ஊழியர் அத்தொகை கிடைப்பதற்கு காத்திருக்க வேண்டி இருக்கிறது
ஆகையால் இம்மாதிரியான அசாதாரண சூழ்நிலை வந்து விடுவதற்கு நாமே காரணமாக இருக்கக் கூடாது
இத்திட்டத்தில் சேர்ந்தவர்கள் தயவு செய்து ஓய்வு நேரத்தில் நிர்வாகப் பிரிவுக்கு சென்று தங்களுடைய பணி பதிவேட்டை ஒரு முறை ஆய்வு செய்ய கேட்டுக் கொண்டு உரிய பதிவுகள் இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்
ஓய்வு பெறும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நீங்கள் நினைத்தால்
அந்த நேரம் அந்த அலுவலகத்தில் இருப்பீர்களா என்பது சந்தேகம்
குறிப்பாக சமீபத்தில் ஓய்வு பெற இருக்கும் அரசு பணியாளர்கள் அனைவரும் ஒருமுறை தயவு செய்து தங்களுடைய பணி பதிவேடுகளை ஆய்வு செய்து
இத்திட்டத்தில் சேர்ந்ததற்கான பதிவு இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுதல் நலம்
இதை ஏன் சொல்கிறேன் என்றால் நான் கடந்த 31 5 2025 அன்று ஓய்வு பெற்று விட்டேன்
கிட்டத்தட்ட ஓய்வு பெற்று மூன்று மாதங்களைக் கடந்தும்
இன்று வரை தொகை பெற முடியவில்லை
காரணம் இத்திட்டத்தில் நான் சேர்ந்தபோது மதுரை சம்பள கணக்கு அலுவலகத்தில் கணக்கராக பணியாற்றி வந்தேன்
ஆனால் இதில் பதிவு செய்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையை ஓட்டி விட்டேன்
IFHRMS வழியில் பென்ஷன் ப்ரோபோசல் அனுப்பும்போது கூட என்னுடைய பணிப்பதிவேட்டை சரிபார்த்தோம்
இருப்பினும் எப்படியோ இந்த பதிவுகளை செய்து விட்டார்களா என்பதை கண்காணிக்க மறந்து விட்டேன்
தற்பொழுது தலைமை இடத்தில் இது தொடர்பான பதிவுகள் இல்லை என்று எனது பணி பதிவேடு நான் கடைசியாக பணியாற்றிய அலுவலகத்துக்கு திருப்பி விடப்பட்டது
அந்த அலுவலகத்திலிருந்து மீண்டும் கடிதப் வழி போக்குவரத்து மூலம் மதுரை சம்பள கணக்கு அலுவலருக்கு முகவரி இடப்பட்டு
ஒரு உறுதித் தன்மை சான்று கடிதம் பெறப்பட்டது
அதைப் பெற்று நான் கடைசியாக பணியாற்றிய அலுவலகத்தில் எனது பணி பதிவேட்டில் ஒரு பதிவு செய்து
மீண்டும் கருவூல கணக்கு இயக்ககத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
காரணம் உதவி சம்பள கணக்கு அலுவலர் நிலையில் சென்னையில் பணிபுரிவோருக்கு தலைமை இடம் தான் ஒப்பளிப்பு ஆணை பிறப்பிப்பார்கள்
இருப்பினும் இன்று வரையிலும் உரிய ஒப்பளிப்பு ஆணை பெறப்படாத நிலையே தொடர்கிறது
இருப்பினும் இன்னும் பொறுமையுடன் காத்திருக்கிறேன்
ஒப்பளிப்பு ஆணை வந்துவிடும் என்று
இருப்பினும் இதில் கிடைக்கப் போகும் தொகை பெரிய அளவில் இல்லை என்றாலும் ஒரு மன உளைச்சல் இருக்க தானே செய்யும்
ஆகையால் தோழர்களே தோழியர்களே
தயவு செய்து ஒரு முறை ஓய்வு நேரத்தில் உரிய பணி பதிவேட்டில் உரிய பதிவு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்
இந்தப் பதிவு யாரையும் குற்றம் சொல்வதற்காகவோ அல்லது புகார் சொல்வதற்காகவும் அல்ல
தவறு இரண்டு பக்கமே உள்ளது
அதாவது பணிப் பதிவேடு பராமரிப்புக்கு உரிய அரசு பணியாளரும் பொறுப்பு என்பதை இதன் மூலம் உணர முடியும்
நிர்வாகப் பிரிவினரை மட்டும் குற்றம் சொல்வது சரியான கூற்றாக இருக்காது
இப்படிக்கு
SARAVANAKUMAR J R
APAO (Retd)
CHENNAI EAST
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.