பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு Special TET நடத்த தமிழ்நாடு அரசு G.O. வெளியீடு


பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை (நிலை) எண் : 231, நாள் : 13-10-2025 வெளியீடு


Special TET 


Tamil Nadu Government Order G.O.(Ms) No. 231, Dated: 13-10-2025 Released to conduct special eligibility test for in-service teachers



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

TTSE 2025 - Question Paper


தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 2025 - வினாத்தாள்


 TTSE 2025 - Question Paper



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற 200 ஆர்வலர்களுக்கு 6 மாதங்கள் முழு நேர கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு



போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற 200 ஆர்வலர்களுக்கு 6 மாதங்கள் முழு நேர கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு


6 months of full-time free coaching classes for 200 aspirants to succeed in competitive exams - Tamil Nadu Government Press Release



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


ஆழம் அறியாமல் காலை விடாதே : இன்று ஒரு சிறு கதை



ஆழம் அறியாமல் காலை விடாதே : இன்று ஒரு சிறு கதை 


Look before you leap


இன்றைய சிறுகதை (Today's Short Story)


ஒரு நாள் விமானத்தை சுத்தம் செய்யும் பணியாள் ஒருவர், விமான ஓட்டியின் அறையை (Cockpit) சுத்தம் செய்யும்போது, "விமானம் ஓட்டுவது எப்படி - முதல் தொகுதி" என்ற புத்தகத்தை கண்டார்.


அவர் அந்த புத்தகத்தை பிரித்தார். முதல் பக்கத்தில், "இஞ்சினை ஸ்டார்ட் செய்ய சிகப்பு கலர் 🔴 பட்டனை அழுத்துக" என எழுதி இருந்தது. அவர் விமானியின் இருக்கையில் அமர்ந்து சிகப்பு கலர் பட்டனை அழுத்தினார், இஞ்சின் ஸ்டார்ட் ஆகி விட்டது !


அவருக்கு ஒரே குஷியாகி விட்டது.


இரண்டாவது பக்கத்தை புரட்டினார். "விமானத்தை நகர்த்துவதற்கு நீல நிற 🔵 பட்டனை அழுத்துக" என எழுதி இருந்தது. அவரும் அப்படியே செய்தார். விமானம் நகர ஆரம்பித்து வேகமாக ஓட துவங்கியது.


இப்போது அவருக்கு பறக்கும் ஆசை வந்தது. மூன்றாவது பக்கத்தை பிரித்தார். "விமானம் உயரே பறப்பதற்கு பச்சை கலர் 🟢 பட்டனை அழுத்தவும்" என்று இருந்தது.


அவரும் பச்சை கலர் பட்டனை அழுத்தினார். விமானம் மேலெழும்பி பறக்க ஆரம்பித்தது. அவரும் மிகவும் உற்சாகமாக 20 நிமிடங்கள் வானத்தில் பறந்தார்.


அவர் மிகவும் திருப்தி அடைந்தவராக விமானத்தை கீழே இறக்க முடிவு செய்து புத்தகத்தின் 4 வது பக்கத்தை பிரித்தார்.


அவ்வளவுதான், அவருக்கு மயக்கம் வந்து கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன.


காரணம், 4வது பக்கத்தில் எழுதி இருந்தது, "விமானத்தை எப்படி கீழே இறக்குவது என்பதை கற்றுக்கொள்ள இந்த புத்தகத்தின் இரண்டாவது தொகுதியை அருகிலுள்ள புத்தகக்கடையில் வாங்கி படியுங்கள்"!!!!


நீதி:


ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அதில் இறங்காதீர்கள்.


சிந்தைக்கு இனியோர்க்குச் சிறக்கட்டும் இந்நாள் 🙏

மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பதிவுசெய்துள்ள இளைஞர்களுக்கு ரூ.1000 வரை உதவித்தொகை

 


வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் உதவித்தொகை


மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ள இளைஞர்களுக்கு ரூ.1000 வரை உதவித்தொகை


Scholarship of up to Rs. 1000 for youth registered at the District Employment Office


கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவுசெய்து ஐந்தாண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ளவர்கள் அனைவரும் https://tnvelaivaaippu.gov.in/ வலைத்தளம் வழியாக உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.



மருத்துவம் சார்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவ / மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்



 மருத்துவம் சார்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவ / மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்


The District Collector informed that students who are interested in enrolling in one-year medical certificate courses can apply.


கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள மருத்துவம் சார்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவ / மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



அனைத்து மாவட்ட மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவம் சார்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது.

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-10-2025

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-10-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 13.10.2025

கிழமை:- திங்கட்கிழமை

 

திருக்குறள்:

குறள் 782:

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு      

விளக்க உரை:

அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.


பழமொழி :
Teamwork makes the dream work.   

குழு முயற்சி தான் கனவுகளை நிறைவேற்றும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1.உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்

2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.


பொன்மொழி :

எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல, சிறப்பான ஆற்றலும் இருக்கத்தான் செய்யும்- கர்மவீரர் காமராஜர்


பொது அறிவு :

01.பெங்களூர் நகரை

வடிவமைத்தவர் யார்?

கெம்பே கவுடா (1526–1574)

Kempe Gowda  (1526-1574)

02.இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளின் தலைநகரம் எது?

            கவரட்டி - Kavaratti


English words :

Allowed -permitted

Aloud- clearly heard


Grammar Tips:

வன் தொடர் குற்றியலுகரம்/ மென் தொடர் குற்றியலுகரம் – ஒற்றெழுத்து மிகுதல் வேறுபாடு
எ.கா
எடுத்துச் சென்றான், எழுந்து சென்றான். இந்த எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள். இவை இரண்டும் வினைச்சொற்கள். எடுத்து-க்கு வலிமிகுந்தது. எழுந்து-க்கு வலி மிகவில்லை.

இலக்கணத்தில் குற்றியலுகரம் பற்றி அறிந்திருப்போம். எடுத்து, எழுந்து ஆகியன உகரத்தில் (து) முடிவதால் இவை குற்றியலுகரச் சொற்கள்.

எடுத்து என்பதில் கடைசி எழுத்துக்கு முன்னுள்ள எழுத்து வல்லின மெய் என்பதால், அது வன்தொடர்க் குற்றியலுகரம். எழுந்து என்பதில் கடைசிக்கு முன்னெழுத்து மெல்லின மெய் என்பதால் மென்தொடர்க் குற்றியலுகரம்.

வன் தொடர்க் குற்றியலுகரத்திற்கு வலிமிகும். 'எடுத்துச் சென்றான்' என்று வந்தது. மென் தொடர்க் குற்றியலுகரத்திற்கு வலிமிகாது.

'எழுந்து சென்றான்' என்றானது.


அறிவியல் களஞ்சியம் :

பல நறுமணம் வீசும் மலர்கள், பழங்களின் வாசனையுடன் இன்று பல பன்னாட்டு நிறுவனங்கள் சோப்புகளை உற்பத்தி செய்கின்றன. இந்த வாசனை சோப்புகளைப் பயன்படுத்தும் மனிதர்களிடம் அதே போன்ற வாசனை வீசுகிறது. இரத்தம் குடிக்காமல் அதை ஈடு செய்ய அவதிப்படும் கொசுக்கள் அதற்கு ஈடாக இந்த நறுமணத்தை அறிந்து தேன் கிடைக்கும் என்று கருதி வாசனையுடன் இருக்கும் மனிதர்களைக் கடிக்கின்றன என்று வெர்ஜீனியா பாலிடெக்னிக் கழகம் மற்றும் ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளரும், ஆய்வுக்குழுவின் தலைவருமான க்ளெமெண்ட் வினோஜர் (Clement Vinauger) கூறுகிறார்.


அக்டோபர் 13

1884 – அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக இலண்டனில் உள்ள கிரீன்விச் (Greenwich) தெரிவு செய்யப்பட்டது.


நீதிக்கதை

நாளைய உணவு

சில வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும் தன் குட்டிகளுடன் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது செம்மறி ஆட்டுக்குட்டிகள் நுனிக் கொழுந்துகளாகப் பார்த்து மேய்ந்து கொண்டிருந்தன. அதைக்கண்ட வெள்ளாடு, என் அருமை செம்மறிக்குட்டிகளே, இப்படி நுனிக்கொழுந்தாக மேய்ந்தால் நாளை நமக்கு உணவு கிடைக்காது. அதனால் கூடுமானவரை, நுனிக்கொழுந்தைக் கடிக்காதீர்கள். இன்று ஒருவருக்கு மட்டுமே உணவாகும் அது, தழைத்து வளர்ந்தால் நாளை நம் அனைவருக்கும் உணவாகும் என்றது.

அதைக்கேட்ட செம்மறி ஆடு, நீ உன் வேலையைப்பார். என் குட்டிகளுக்கு எது இஷ்டமோ, அதைத்தான் உண்ணும். நீ ஒன்றும் அதைச்சாப்பிடு, இதைச்சாப்பிடாதே என கட்டளையிட வேண்டாம் என்றது காட்டமாய். ஆனால் வெள்ளாடு, தன் குட்டிகள் நுனிக் கொழுந்தை கடிக்கவிடாமல் கவனமாய் பார்த்துக்கொண்டது.

சில நாட்கள் சென்றன. செம்மறி ஆடுகள் மேய்ந்த இடத்தில் ஒரு இலை தழைக்கூட காணவில்லை. நுனிக்கொழுந்து கடிபட்ட செடிகள் தழைக்க நாளாகும் அல்லவா? ஆனால், வெள்ளாடுகள் மேய்ந்த இடங்களில் பசுமை தெரிந்தது. நுனிக்கொழுந்துகள் காக்கப்பட்டதால், இப்பொழுது அவைகள் சாப்பிடும் பக்குவத்தில் தழைத்து வளர்ந்திருந்தன. வெள்ளாடுகள் வழக்கம்போல் எந்தத் தடையுமியின்றி மேயத்தொடங்கின. ஆனால், செம்மறி ஆடுகள் செய்வது அறியாது திகைத்து நின்றன.

அடுத்தவர் பேச்சைக் கேட்பதா...? என நினைத்த செம்மறி ஆடுகள், தங்களுடைய அடங்காத குணத்தால் இப்பொழுது திண்டாடுவதை உணர்ந்தன. அருகில் கிடைத்த உணவை பாதுகாக்கத் தெரியாததால், அவைகள் வேறு இடம் தேடிச் சென்றன. இன்றைக்கு நிறைய உணவு கிடைக்கிறது என்பதற்காக, அவற்றை வீணாக்கக் கூடாது. அது நம்முடைய நாளைய உணவாகக் கூட இருக்கலாம் என்பதை செம்மறி ஆடுகள் உணர்ந்து கொண்டன.

நீதி :

சேமிக்க பழக வேண்டும்.


இன்றைய செய்திகள்

13.10.2025

⭐பள்ளிகளில் யு.பி.ஐ. மூலம் கல்வி கட்டணம் வசூல்- மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

⭐குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காலை உணவு திட்டம்- முதலமைச்சர் பெருமிதம்.

⭐அமெரிக்கா - எகிப்து இணைந்து நடந்தும் காசா போர் நிறுத்த உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 80 ரன் குவிப்பு: இரண்டு முக்கிய சாதனைகள் நிகழ்த்திய ஸ்மிரிதி மந்தனா. ஒரே வருடத்தில் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.மேலும், இந்தப் போட்டியில் அவர் 58 ரன்களைக் கடந்த போது, மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 5000 ரன்களைக் கடந்த ஐந்தாவது வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். அதிலும், 5000 ரன்களை குறைந்த போட்டிகளில் எட்டிய வீராங்கனை என்ற உலக சாதனை படைத்தார்.


Today's Headlines

TODAY'S HEADLINES*

⭐Collection of tuition fees through UPI in schools - Central Government instructs states

⭐Breakfast program to improve children's health - Chief Minister is proud.

⭐US-Egypt joint summit to ceasefire Gaza war invites PM Modi to participate in that  summit.

*SPORTS NEWS*

🏀 Smriti Mandhana scores 80 runs against Australia. She made two important achievements

* She crossed 1000 runs with 58 runs she crossed 5000 runs


கருணை அடிப்படையிலான பணி நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு புதிய மாற்றம்


பணியின் பொழுது உயிரிழக்கும் ஊழியர் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனம்  தொடர்பாக தமிழ்நாடு அரசு புதிய மாற்றம்


தமிழ்நாட்டில் பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் கருணை அடிப்படையிலான பணி நியமனம் (Compassionate Appointment) தொடர்பான விதிகளில், மாநில அரசு ஒரு முக்கிய மற்றும் மனிதாபிமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.


கருணை என்பது ஒரு கடமை, பிச்சை அல்ல" என்ற உயர் நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று, இந்த விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள், வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் வேலைவாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.


புதிய மாற்றங்கள் என்ன?


மனிதவள மேலாண்மை துறையால் வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணிகள் (கருணை அடிப்படையில் நியமனம்) விதிகள், 2023-இல் பல முக்கியத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.


திருமணமான மகள் மற்றும் மருமகனுக்கும் வாய்ப்பு: இதுவே இந்த திருத்தத்தின் மிக முக்கியமான அம்சமாகும். இதுவரை, திருமணமான மகள்கள் கருணை அடிப்படையில் வேலை பெற தகுதியற்றவர்களாக இருந்தனர். இனி, உயிரிழந்த அரசு ஊழியரின் திருமணமான மகளும், தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன், பெற்றோரை சார்ந்தே வாழ்ந்து வந்தார் என்பதை நிரூபித்தால், அவரும் கருணை அடிப்படையில் வேலை கோரலாம். ஒருவேளை, திருமணமான மகள் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருந்தால், அவரது கணவர் (அரசு ஊழியரின் மருமகன்) கூட வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இது ஒரு புரட்சிகரமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.


வறுமையான சூழல்: முன்பு, இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு சொந்தமாக வீடு இருந்தாலோ அல்லது கணிசமான ஓய்வூதியம் கிடைத்தாலோ, அவர்கள் வறுமையில் இல்லை என கருதி வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது. புதிய விதிகளின்படி, ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அவர்கள் வறுமையான சூழலில் உள்ளதாகக் கருதப்படுவார்கள். இது, தகுதியான பல குடும்பங்கள் பயன்பெற வழிவகுக்கும்.


உறவினர்களின் பட்டியல்: புதிய விதிகளின்படி, இறந்த அரசு ஊழியரை சார்ந்த உறவினர்களின் தகுதி பட்டியல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சட்டப்பூர்வமாகத் திருமணம் ஆன மனைவி அல்லது கணவர், மகன் அல்லது மகள், திருமணமாகாத, விவாகரத்தான அல்லது கணவரை இழந்த ஊழியர்களின் பெற்றோர், திருமணமாகாத ஊழியரின் சகோதரன் அல்லது சகோதரி.


விண்ணப்பத்திற்கான கால அவகாசம்: கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், ஊழியர் இறந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும் என்பது தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்புகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இறந்தவரின் மனைவி/கணவர் அல்லது பெற்றோர் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். மகன், மகள், சகோதரன் அல்லது சகோதரி 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.


மாற்றத்திற்கான காரணம்


கருணை அடிப்படையிலான பணி நியமனம் என்பது வெறும் சலுகை அல்ல, அது அரசின் கடமை என்பதை சென்னை உயர் நீதிமன்றம் பலமுறை வலியுறுத்தியுள்ளது. வேலைக்கு விண்ணப்பிக்கும் குடும்பங்கள், அதிகாரிகளால் தேவையற்ற அலைக்கழிப்புக்கு உள்ளாக்கப்படுவதாகவும், விதிகள் கடுமையாக பின்பற்றப்படுவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. இந்த வழிகாட்டுதல்களை தொடர்ந்து, அரசு இந்த மனிதாபிமான மாற்றங்களை செய்துள்ளது தமிழ்நாடு அரசு. இந்த புதிய விதிகள், உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஒரு உண்மையான நிதிப் பாதுகாப்பை வழங்கி, அவர்களின் துயரத்தில் பங்கெடுக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.



கருணை அடிப்படையிலான பணி நியமனம் - தமிழ்நாடு குடிமைப் பணி விதிகளில் திருத்தங்கள் மேற்கொண்டு அரசாணை வெளியீடு


G.O. Ms. No. 41 , Dated : 04-08-2025 - Compassionate Grounds Appointment 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது

 6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது 


செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது


அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 7,091 மையங்களில் நடைபெற்ற இம்முகாமில் 7.88 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு.



அனைத்து பள்ளிகளிலும் சேர்க்கை மற்றும் தேர்வுக் கட்டணங்களை வசூலிக்க UPI, நெட் பேங்கிங் மற்றும் மொபைல் வாலட்கள் போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பயன்படுத்த உத்தரவு

 

Department of School Education & Literacy, Ministry of Education, is shifting towards digital payment systems for school fees, ensuring a seamless, secure and convenient experience for parents and school students alike.


All States and Union Territories are being encouraged to offer digital payment options such as UPI, net banking and mobile wallets for collection of admission and examination fees across schools.


By adopting digital transactions, the education ecosystem will enhance financial literacy moving towards #ViksitBharat2047.


கல்வி அமைச்சின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, பள்ளிக் கட்டணங்களுக்கான டிஜிட்டல் கட்டண முறைகளுக்கு மாறுகிறது, இது பெற்றோர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் தடையற்ற, பாதுகாப்பான மற்றும் வசதியான அனுபவத்தை உறுதி செய்கிறது. 


அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் பள்ளிகளில் சேர்க்கை மற்றும் தேர்வுக் கட்டணங்களை வசூலிக்க UPI, நெட் பேங்கிங் மற்றும் மொபைல் வாலட்கள் போன்ற டிஜிட்டல் கட்டண விருப்பங்களை வழங்க ஊக்குவிக்கப்படுகின்றன. 


டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், கல்விச் சூழல் #ViksitBharat2047 ஐ நோக்கி நகரும் நிதி எழுத்தறிவை மேம்படுத்தும்.




2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கலைமாமணி விருது பெற்றவர்கள்



 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கலைமாமணி விருது பெற்றவர்கள் பட்டியல் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு


 List of Kalaimamani Awardees for the years 2021, 2022 and 2023 - Tamil Nadu Government Press Release



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



பிரான்ஸ் நாட்டிற்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் 52 ஆசிரியர்கள்


பிரான்ஸ் நாட்டிற்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் 52 ஆசிரியர்கள்


 கனவு ஆசிரியர்களுக்கு சர்வதேச கல்விச் சுற்றுலா




Nobel Prize winners 2025

 


2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் பெற்றவர்கள் பட்டியல் 


List of Nobel Prize winners for 2025


1. அமைதிக்கான நோபல் பரிசு (வெனிசுலாவில் ஜனநாயக இயக்கம்) - மரியா கொரினா மச்சாடோ


2. இலக்கியத்திற்கான நோபல் பரிசு - லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய் (ஹங்கேரிய நாவலாசிரியர்)


3. இயற்பியலுக்கான நோபல் பரிசு (குவாண்டம் இயற்பியல்) - ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட், ஜான் எம். மார்டினிஸ்.


4. வேதியியலுக்கான நோபல் பரிசு (மூலக்கூறு கட்டிடக்கலை) - சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன், ஒமர் எம். யாகி.


5. உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு (நோய் எதிர்ப்பு அமைப்பு) - மேரி இ. பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல், ஷிமோன் சகாகுச்சி.


TN TET Paper 1 Syllabus

 



ஆசிரியர் தகுதித் தேர்வு - தாள் 1 - பாடத்திட்டம்


TN TET Paper I Syllabus 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



GOVERNMENT OF TAMIL NADU

TEACHERS RECRUITMENT BOARD

TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) – 2022

In the Notification it is mentioned that the questions in the TNTET 

Paper I will be based on the topics of the prescribed syllabus of the State for Classes I to V with their difficulty level as well as linkages up to the Secondary Stage. Now Teachers Recruitment Board releases the detailed 

syllabus for Paper I (Classes 1 – 5).

Detailed Syllabus for Paper I (Classes 1 -5)

Sl.No. Content (All Compulsory) Syllabus (Page No.) MCQs Marks Medium

i. Child Development and Pedagogy

(relevant to the age group of 6 –11 years)

1-3 30 30 *Tamil/English

ii. Language-I

Tamil/ Telugu/ Malayalam/Kannada/Urdu

(For Telugu, Malayalam, Kannada and Urdu the same pattern will be followed as Tamil)

4-16 30 30

iii. Language II – English 17-68 30 30

iv. Mathematics 69-87 30 30 *Tamil/English

v. Environmental Studies 88-101 30 30 *Tamil/English

Total 150 150

Chairman



TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) – 2022

 

 Syllabus for Paper I (Classes 1 - 5) (All Compulsory)


I. Child Development and Pedagogy (Classes 1 - 5)

Syllabus - (Relevant to Age Group 6 - 11)


Part (A): Child Development 

Unit-I: The Children’s Profile at the Beginning of Primary 

Education—Physical and Cognitive.

Trends in physical growth—Hormonal influences on physical growth—Development of neurons Symbolic thinking and limits of logic—Sensory motor stage-Pre operational stage-Language Development—Influence of home environment, attitude of family members on cognitive development of the child-Identity status and psychological well being. 


Unit-II: The Children’s Profile at the Beginning of Primary 

Education—Social and Emotional.

Self concept and Social Awareness—Sibling relationships—Peer relationship and play—Self awareness—Cultural influence on self-concept-corresponding stages of Erickson’s Psycho-social development Emotional development in a Social context affection- sympathy-laughter-anger, sadness, fear-Parent-child relationship-Emotional well being emotion and health.


Unit-III: Physical & Intellectual Development during Primary School Years (6 to 10 Years)

Physical growth cycles-Body proportions-Muscles and fat-Capacity for attention and concentration-Selective attention-Memory strategies-processing speed and capacity-Thinking skills. Cognitive development. Concrete operational stage-Piaget’s tasks-concept of intelligence as a mental ability. Development of mental/intellectual abilities. Intelligence tests-Creativity in primary school Children.


Unit-IV: Social and Emotional Development during Primary School Years (6 to 10 Years)

Meaning of social development-social expectations-Children’s Friendships-factors in friendship and choices of companions social acceptance-the desire to belong-peer grouping-Effects of schooling on social, emotional, and cultural spheres-Pattern of emotional development-common emotional patterns-the role of maturation and-learning in emotional development how children develop likes and dislikes to subjects, teachers, school, other students-emotional balance impact of media on emotional development.


Unit-V: Moral Development during Primary School Years (6 to 10 Years)

Meaning of moral development-factors in moral training of children-Honesty-Generosity-Children’s heroes and ideals-Meaning of discipline-essentials of discipline-media and their influences on moral development.


Part (B): Learning. 

Unit-I: Learning.

Dynamic internal process-connecting old knowledge to new information-language learning-acquiring learning habits-learning to adapt to diverse situations in life-Nature of learning-learning through interactions.


Unit-II: Types, levels and approaches to Learning.

Types of learning-Learning Hierarchy-signal learning stimulus-response learning-Motor and verbal chain learning-Multiple discriminations concept learning-Learning rules and problem-solving. Learning Levels from imprint to intuition- examples of learning at different levels. Approaches- Behaviourist - cognitivist and constructivist.


Unit-III: Concepts and constructs. 

Concepts and constructs-concept-formation-Use of materials activities, scheme pictures, real life experiences-construct mental representations of external reality-connecting ideas generated by students due to exposure to peers, media and community-concept mapping.


Unit-IV: Factors Contributing to Learning. 

Personal psychological, social, emotional factors and school related factors, Learning style; teaching strategies; media; technology; 

1. Teaching Learning Process 

2. Teacher’s personality traits.


Unit-V: Constructivist Approach to Learning. 

Learners construct knowledge for themselves-constructing meaning is learning-focus on the learner not on the lesson taught- Personal and social construction of meaning-Learning to Learn making meaning Learning, a social activity-ZPD.


Unit-VI: Learning and Knowledge 

Active learner-Nurturing learners’ active and creative activities children’s voices and experiences-integrating their experiences with School Knowledge-Right to learn-Physical and emotional security for learning. Conceptual development-continous process-All children capable of learning-important aspects of learning-various ways of learning-Cognitive readiness for learning-Learning in and outside the school-knowledge and understanding-recreating knowledge-manifesto for learning.



உளவியல், தமிழ், ஆங்கிலம், கணக்கு, சூழ்நிலையியல் அறிவியல், சமூக அறிவியல் பாடங்களின் பாடத்திட்டம் 


Psychology, Tamil, English, Mathematics, Environment Science & Social Science Syllabus 



>>> Click Here to Download 


10 ரூபாய்க்கு 13 லட்சம் - நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்வாய்



10 ரூபாய்க்கு 13 லட்சம் - நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்வாய் - இன்றைய சிறுகதை (Today's Short Story)


இன்று ஒரு சிறு கதை 


ஒரு கடைக்காரர் தனது கடையைத் திறந்தபோது ஒரு பெண் வந்து, "ஐயா, இதோ உங்கள் 10 ரூபாய்" என்றார். 


கடைக்காரர் அந்த ஏழைப் பெண்ணை கேள்விக் கண்களுடன், "நான் எப்போது உங்களுக்கு 10 ரூபாய் கொடுத்தேன்?" என்று கேட்பது போல் பார்த்தார். 😳


அந்தப் பெண், "நேற்று மாலை நான் சில பொருட்களை வாங்கினேன். நான் உங்களுக்கு ₹100 கொடுத்தேன், ₹70 மதிப்புள்ள பொருட்களை வாங்கினேன், நீங்கள் ₹30க்கு பதிலாக ₹40 திருப்பிக் கொடுத்தீர்கள்" என்று பதிலளித்தார். 


கடைக்காரர் 10 ரூபாயை நெற்றியில் தொட்டு, பணப் பெட்டியில் வைத்து, “ஒரு விஷயம் சொல்லுங்க அக்கா. நீங்க பொருட்களை வாங்கும்போது நிறைய பேரம் பேசினீங்க, ₹5க்கு கூட. இப்போ ₹10 திருப்பிக் கொடுக்க வந்திருக்கீங்களா?” என்று கேட்டார். 🤔


அந்தப் பெண், “பேரம் பேசுவது என் உரிமை. ஆனால் விலை நிர்ணயிக்கப்பட்ட பின்னர், குறைவாகக் கொடுப்பது பாவம்” என்றார். 😳


கடைக்காரர், “ஆனால் நீங்கள் குறைவாகக் கொடுக்கவில்லை. நீங்கள் முழுத் தொகையையும் செலுத்தினீர்கள். இந்த ₹10 என் தவறுதலாக உங்களிடம் வந்துவிட்டது. நீங்கள் அதை வைத்திருந்தால், அது எனக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தியிருக்காது.


அந்தப் பெண், “அது உங்களுக்கு ஒரு பொருட்டாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அது என் மனசாட்சியைப் பாதிக்கும். உன் பணத்தை நான் தெரிஞ்சுதான் வச்சிருக்கேன்னு எனக்குத் தெரியும். அதனாலதான் நேத்து ராத்திரி நான் அதைத் திருப்பிக் கொடுக்க வந்தேன், ஆனா உங்கள் கடை மூடி இருந்தது.” 😳


கடைக்காரர் ஆச்சரியமாக் கேட்டார், “நீங்க எங்க வசிக்கிறீங்க?” அந்த பெண், “கண்ணனூர்”னு பதில் சொன்னார். 😳


கடைக்காரரின்  “நீங்க ₹10 திருப்பிக் கொடுக்க 7 கிலோமீட்டர் தூரம் வந்தீங்க, இது உங்க இரண்டாவது வருகையா?” 😳


அந்தப் பெண் அமைதியாக, “ஆமாம், இது என் இரண்டாவது வருகை. மன அமைதி வேணும்னா, நாம் இது மாதிரி விஷயங்களைச் செய்யணும். என் கணவர் இப்போ இந்த உலகத்துல இல்லை, ஆனா அவர் எனக்கு ஒரு விஷயத்தைக் கற்றுக் கொடுத்தாரு: ‘வேற ஒருத்தருக்குச் சொந்தமான ஒரு பைசா கூட எடுக்காதீங்க.’ 🤫


ஏனென்றால் ஒருவர் அமைதியாக இருக்கலாம், ஆனால் மேலே இருப்பவர் எப்போது வேண்டுமானாலும் கணக்கு கேட்கலாம். அந்தக் கணக்கிற்கான தண்டனை என் குழந்தைகள் மீது விழக்கூடும்.” 😳


இதைச் சொல்லிவிட்டு அந்தப் பெண் அங்கிருந்து வெளியேறினார்.


கடைக்காரர் உடனடியாக பணப் பெட்டியிலிருந்து ₹300 எடுத்து, தனது ஸ்கூட்டரில் ஏறி, தனது உதவியாளரிடம், “கடையைப் பார்த்துக்கொள். நான் விரைவில் திரும்பி வருவேன்” என்றார்.


அவர் சந்தையில் உள்ள மற்றொரு கடைக்குச் சென்று பிரகாஷ் என்ற கடைக்காரரிடம் ₹300 கொடுத்தார். “இதோ, உன் ₹300 ஐ எடுத்துக்கொள். நேற்று, நீ பொருட்கள் வாங்க வந்தபோது, ​​நான் உன்னிடம் அதிக கட்டணம் வசூலித்தேன்.” 😳


பிரகாஷ் சிரித்துக் கொண்டே, “நீ அதிக கட்டணம் வசூலித்திருந்தால், நான் திரும்ப பொருள் வாங்க வரும்போது அதைத் திருப்பிக் கொடுத்திருக்கலாம். ஏன் இவ்வளவு அதிகாலையில் வந்தாய்?” என்றார்.


கடைக்காரர் பதிலளித்தார், "நீ திரும்பி வருவதற்குள் நான் இறந்துவிட்டால் என்ன செய்வது? நான் உனக்கு ₹300 கடன் பட்டிருக்கிறேன் என்பது கூட உனக்குத் தெரியாது. அதனால்தான் நான் அதைத் திருப்பித் தர வேண்டியிருந்தது. மேலே உள்ளவர் எப்போது கணக்கு கேட்பார் என்று யாருக்குத் தெரியும்? தண்டனை என் குழந்தைகள் மீது வரக்கூடும்." 😳


கடைக்காரர் வெளியேறினார், ஆனால் பிரகாஷ் மிகவும் வருத்தப்பட்டார்.


பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அவர் ஒரு நண்பரிடமிருந்து ₹3 லட்சம் கடன் வாங்கினார். ஆனால் மறுநாளே, நண்பர் இறந்துவிட்டார். 😳


நண்பனின் குடும்பத்தினருக்குப் பணம் பற்றித் தெரியாது, அதனால் யாரும் அதைக் கேட்கவில்லை. பேராசையால் தூண்டப்பட்ட பிரகாஷ், அதைத் திருப்பித் தர ஒருபோதும் முன்முயற்சி எடுக்கவில்லை.


இன்று, அந்த நண்பரின் குடும்பம் வறுமையில் வாடுகிறது. அவரது விதவை மனைவி தனது குழந்தைகளை வளர்க்க பல கூலி வேலைகளை செய்தார். ஆனாலும் பிரகாஷ் அந்த பணத்தை வைத்திருந்தார். 😳


கடைக்காரரின் வார்த்தைகள் - "மேலே உள்ளவர் எப்போது கணக்கு கேட்பார் என்று யாருக்குத் தெரியும்? என் குழந்தைகள் மீது தண்டனை வரக்கூடும்" - பிரகாஷை வேட்டையாடியது. 😳


இரண்டு அல்லது மூன்று நாட்கள் மனக் கொந்தளிப்புக்குப் பிறகு, அவரது மனசாட்சி விழித்துக் கொண்டது. அவர் வங்கியில் இருந்து ₹13 லட்சத்தை எடுத்துக்கொண்டு 10 ஆண்டுகளுக்கு முன் பணம் கொடுத்த தனது நண்பரின் வீட்டிற்குச் சென்றார்.


நண்பரின் விதவை மனைவி வீட்டில், தனது குழந்தைகளுடன் இருந்தார். பிரகாஷ் அவரது காலில் விழுந்தார். ஒவ்வொரு ரூபாய்க்கும் போராடும் ஒரு பெண்ணுக்கு, ₹13 லட்சங்கள் ஒரு பெரிய தொகை. அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. பிரகாஷின் நேர்மைக்காக அவள் ஆசீர்வதித்தாள். 🙏


😳🤫 கடைக்காரரிடம் ₹10 திருப்பித் தர இரண்டு முறை சென்ற அந்த பெண் அவள்தான். 😳🤫


கடின உழைப்பாலும் நேர்மையாலும் வாழ்பவர்கள் கடவுளால் சோதிக்கப்படுகிறார்கள், ஆனால் இறைவன் அவர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை.



நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்வாய் (As you sow, so you reap)

பல்வேறு முக்கியப் படிப்புகளுக்கு இணைத்தன்மை (Equivalence) வழங்கி அரசாணை G.O.(Ms).No.232 , Dated: 06.10.2025 வெளியீடு


பல்வேறு முக்கியப் படிப்புகளுக்கு இணைத்தன்மை (Equivalence) வழங்கி அரசாணை G.O.(Ms).No.232 , Dated: 06.10.2025 வெளியீடு


Public Services - Equivalence of Degrees - Equivalence of Degrees offered by various Universities / Educational Institutions to the similar Degrees Recommendations of 35th Equivalence Committee - Approved -Orders - Issued.

HIGHER EDUCATION (J1) DEPARTMENT

G.O.(Ms).No.232 , Dated: 06.10.2025

Read:

1. G.O.(Ms) No.93, Higher Education (K2) Department, Dated 30.05.2019.2. G.O.(Ms).No. 33, Higher Education (K1) Department, Dated 15.02.2021.3." G.O.(Ms).No. 111, Higher Education (K1) Department, Dated 24.06.2024.4. From the Member-Secretary, Tamil Nadu State Council for Higher Education, Chennai, Letter Rc. No. 3072/ 2025 A, Dated 18.09.2025.

ORDER:-

In the letter, third read above, the Member Secretary, Tamil Nadu State Council for Higher Educaticn, has forwarded the resolutions passed in the 35th Equivalence Committee meeting held on 16.09.2025 under the Chairmanship of the Secretary to Government, Higher Education Department, on the Equivalence of Degrees offered by various Universities / Educational institutions to the similar Degrees for the purpose of employment in Public Services.

2. The Government, after careful consideration, approve the following resolutions passed in the 35 Equivalence Committee meeting held on 16.09.2025,under the Chairmanship of the Secretary to Government, Higher Education Department and direct that the following degrees offered by various Universities /Educational Institutions be equivalent to the similar degrees mentioned therein from the date of issuance of such degrees:-



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத 35 அரசு அலுவலர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்த மாவட்ட ஆட்சியர்




பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத 35 அரசு அலுவலர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்த மாவட்ட ஆட்சியர் - நாளிதழ் செய்தி 


காஜியாபாத் கலெக்டர் அதிரடி நடவடிக்கையாக, மக்களின் புகார் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய அரசு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்துள்ளார். இந்த நடவடிக்கை, பொதுமக்களின் குறைகளை உரிய நேரத்தில் தீர்க்காத அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளது. 

அதிகாரிகள் மீது நடவடிக்கை: பொதுமக்கள் அளித்த புகார் மனுக்களுக்கு தாமதமாக அல்லது அலட்சியமாக பதிலளித்த அரசு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய காஜியாபாத் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

காரணம்: பொதுமக்களின் குறைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காதது மற்றும் அலட்சியமாக நடந்துகொண்டதே இந்த நடவடிக்கைக்கான காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

நோக்கம்: பொதுமக்களின் குறைகளுக்கு விரைவாக தீர்வு காண்பதற்கும், அரசு அதிகாரிகளின் பொறுப்புணர்வை அதிகரிப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



Survey for people with disabilities



மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு - மாவட்டங்கள் வாரியாக திட்டப் பணியாளர்களின் தொடர்பு எண் விவரங்கள்


Survey for Persons with Differently Abilities (Disabilities) - District-wise contact number details of project staff



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


TRB PG Examination - 2025 : District Liaison Officer's Contact Details



ஆசிரியர் தேர்வு வாரியம் - முதுகலை ஆசிரியர் தேர்வு - 2025 : மாவட்ட தொடர்பு அலுவலரின் அலைபேசி விவரங்கள்


 TRB PG Examination - 2025 : District Liaison Officer's Contact Details



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


1996 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு 12.10.2025 அன்று தேர்வு நடைபெறுதல் - ஆசிரியர் தேர்வு வாரியம் பத்திரிகைச் செய்தி


1996 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு  12.10.2025 (ஞாயிற்றுக் கிழமை) அன்று தேர்வு நடைபெறுதல் - ஆசிரியர் தேர்வு வாரியம் பத்திரிகைச் செய்தி 


Direct Recruitment for PG Assistant / Physical Director Grade – I / Computer Instructor Grade – I (02/2025) - TRB Press News



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


TTSEக்கு வழங்கப்படும் உதவித்தொகை : DGE செய்திக் குறிப்பு



TTSE தேர்வுக்கு வழங்கப்படும் உதவித்தொகை : DGE செய்திக் குறிப்பு


தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கு TTSE  வழங்கப்படும் உதவித்தொகை குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் DGE செய்திக் குறிப்பு


Directorate of Government Examinations (DGE) Press Release regarding the scholarship provided by Government for Tamil Language Literary Talent Search Examination (TTSE)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


"ஏன்? எதற்கு? எப்படி?" என்ற தலைப்பில் 8 பிரிவுகளில் விழிப்புணர்வுப் போட்டிகள்

"ஏன்? எதற்கு? எப்படி?" என்ற தலைப்பில் 8 பிரிவுகளில்  விழிப்புணர்வுப் போட்டிகள் 


 சமூக வலைத்தளங்களில் புற்றீசல்போல் பரவி சமூகத்தைப் புற்றுநோய்போல் சீரழித்து வரும் வதந்திகளையும், அதன் வாயிலாக உருவாக்கப்படும் வெறுப்புப் பரப்புரைகள், மூட நம்பிக்கைகள், அறிவியலுக்குப் புறம்பான தகவலைப் பகுத்தறிந்து தெளிவை ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையத்துடன் இணைந்து, தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம், "ஏன்? எதற்கு? எப்படி?" என்ற தலைப்பில் 8 பிரிவுகளில் பல்வேறு தலைப்புகளின் கீழ் விழிப்புணர்வுப் போட்டிகளை நடத்தவுள்ளது.


பின்வரும் கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து போட்டி குறித்த முழு விபரத்தை அறிந்து கொள்ளலாம். அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 31.10.2025



ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு

 

ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு


கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு 


கர்நாடக மாநில அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்


Paid Menstrual Leave 


Karnataka to grant one day of paid menstrual leave per month to female employees working in government and private institutions 


Karnataka Cabinet approves


TET தமிழ்நாடு அரசு சீராய்வு மனு Diary No 56647/2025


TET தமிழ்நாடு அரசு சீராய்வு மனு Review Petition Diary No 56647/2025


ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதற்கு Diary No 56647/2025 கொடுக்கப்பட்டுள்ளது




TNPSC மூலம் பள்ளிக் கல்வித்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 167 பேருக்கு பணிநியமன ஆணைகள்

TNPSC மூலம் பள்ளிக் கல்வித்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 167 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்கள்


 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 167 பணிநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வழங்கி, வாழ்த்தினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்கள்




பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-10-2025

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-10-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 10.10.2025

கிழமை:- வெள்ளிக்கிழமை

 


*திருக்குறள்:*


பால்:- பொருட்பால்

இயல்:- நட்பியல்

அதிகாரம்:- நட்பு


*குறள் : 781* 


செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் 

வினைக்கரிய யாவுள காப்பு. 


*விளக்க உரை:*


நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன.


*பழமொழி :*


One good deed teaches more than a hundred words. 


ஒரு நல்ல செயல் நூறு வார்த்தைகளை விட அதிகம் கற்பிக்கும்.


*இரண்டொழுக்க பண்புகள் :*


1.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமாக உபயோகிப்பேன்.


2.சூரிய சக்தியை பயன்படுத்த முயற்சிப்பேன்.


*பொன்மொழி :*


பயத்தை வெல்ல விரும்பினால், வீட்டில் உட்கார்ந்து கொண்டு அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால் மட்டும் போதாது.வெளியில் வந்து செயலில் இறங்க வேண்டும்- டேல் கார்னகி


*பொது அறிவு :*


01.உலகின் மிகப்பெரிய விதை எது?



இரட்டைத் தேங்காய் double coconut எனப்படும் "கோகோ-டி-மெர்

(Coco de Mer)


02.ஒளியின் செல்லும் வேகத்தை முதன்முதலில் கண்டுப்பிடித்த

விஞ்ஞானி யார்?



ஓலே ரோமர் (Ole Rømer) 


*English words :*


Kind - friendly and helpful.



Music - organised sound.


*தமிழ் இலக்கணம் :*


 இரண்டு பெயர்ச்


சொற்களுக்கிடையில் ஒற்று  பெரும்பாலும் தோன்றும்

எ. கா. தண்ணீர்க் குடம். பள்ளிக் கூடம். இந்த எடுத்துக்காட்டுகளைக் கவனியுங்கள். தண்ணீர், குடம் - இரண்டும் பெயர்ச்சொற்கள். 

பள்ளி, கூடம் - இரண்டும் பெயர்ச்சொற்கள். 

இவை தொடராய் ஆகும்பொழுது இரண்டாம் சொல் எந்த வல்லின மெய்யில் தொடங்குகிறதோ அந்த ஒற்றெழுத்து மிகுந்தது. கூடுதலாய்த் தோன்றியது.


*அறிவியல் களஞ்சியம் :*


 உணவைச் சேகரித்து வைப்பது எறும்பின் வேலைகளில் மிக முக்கியமானது. ஆனால் இப்படி சேகரித்துவைக்கும் உணவு, மழைக்காலத்தில் பூசனம் பூத்து கெட்டுப்போய் விடாமல் இருக்க அவை ஒரு வேதிப்பொருளை பயன்படுத்துகின்றன. அந்த வேதிப்பொருளும், அதன் இயல்பும் தற்போது கண்டறியப்பட்டு மருந்து தயாரிப்பில், அது பயன்படுத்தப்படுகிறது.


*அக்டோபர் 10*


*உலக மனநல நாள்*



உலக மனநல நாள் (World Mental Health Day) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாக கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன. ஆத்திரேலியா போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது.


*நீதிக்கதை*


 *அழகிய ரோஜா செடி*



அது ஒரு வசந்த காலம். பூங்காவில் எண்ணற்ற மரம் செடி கொடிகள் இருந்தன. அதில் ஒரு ரோஜாச் செடியும், கள்ளிச்செடியும், சவுக்கு மரமும் அருகருகே இருந்தன. வசந்த கால காலை நேரம். அந்த ரோஜாச்செடி அழகாகப் பூத்திருந்தது. அதைக் கடந்து சென்ற அனைவரும் ஒரு நொடி நின்று பார்த்து சென்றனர். அந்தச் சவுக்கு மரம் ரோஜாச் செடியிடம் நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய். பூங்காவிற்கு வரும் அனைவரும் உன்னைப் பார்த்து மகிழ்ந்து செல்கின்றனர் என்றது. ரோஜாச் செடி வெட்கத்தில் நாணி அதன் இதழ்கள் மேலும் சிவந்தன. கர்வமும் தலைக்கு ஏற தொடங்கியது.




அருகே இருந்த கள்ளிச்செடியை பார்த்து இவ்வளவு கோரமான தோற்றத்தைக் கொண்ட நீ என்னருகே இருப்பது எனக்கு அவமானமாக உள்ளது என்று கூறி தள்ளிப்போக முயன்றது. ஆனால் ரோஜா செடியால் தள்ளிப்போக முடியவில்லை. இவ்வாறு தினசரி அந்த கள்ளிச்செடியை குறை கூறிக்கொண்டே இருந்தது ரோஜா செடி. ஆனால் இதற்கு அந்த கள்ளிச்செடி எந்த முக சுளிப்பும் கோவமும் படாமல் இருந்தது.


நாட்கள் ஓடின. கோடைக்காலம் சுட்டெரிக்க தொடங்கியது. கோடைக்காலத்தில் வெட்பத்தினால் பூங்காவில் பார்வையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தண்ணீர் பற்றாக்குறையும் வந்தது. பூங்கா நிறுவனத்தினரால் ஒழுங்காகத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க முடியவில்லை. ரோஜா செடியும் வாட தொடங்கியது. ஆனால் கள்ளிச்செடி எப்போதும் போல இருந்தது. குருவிகள் பல வந்து கள்ளிச்செடி மீது அமர்ந்து அதைக் கொற்றி நீர் குடித்தன. இதைக்கண்ட ரோஜா செடி சவுக்கு மரத்திடம் குருவிகள் கொற்றுவதால் கள்ளிச்செடிக்கு வலிக்காதா? என்று கேட்டது. 



சவுக்கு மரமோ கள்ளிச்செடிக்கு வலிக்கத் தான் செய்யும் இருந்தாலும் அதைத் தாங்கி கொண்டு தாகத்தில் தவிக்கும் குருவிகளுக்கு தண்ணீர் கொடுப்பது தனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறது. நீயும் கேட்டுப்பார். கள்ளிச்செடி சம்மதித்தால் குருவிகளின் உதவியினால் உனக்குத் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறியது. கேட்க முகமில்லாமல் ஆனால் உயிர் வாழ நீர் இல்லாததால் அந்த ரோஜா செடி. கள்ளிச்செடியிடம் நீர் கேட்டது. கள்ளிச்செடியும் குருவியின் உதவியால் ரோஜா செடிக்கு நீர் கொடுத்து உதவியது. தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிடக்கூடாது என ரோஜா செடி புரிந்துகொண்டது.


*இன்றைய செய்திகள்*


10.10.2025



⭐இலங்கை சிறையில் இருந்து மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- முதலமைச்சர் வலியுறுத்தல்


⭐ குடியிருப்புகள், தெருக்கள், சாலைகளில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கும் பணிகளை நவம்பர் 11-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


⭐ குழந்தைகளின் மனநலனைக் காக்கும் விதமாக, 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த டென்மார்க் அரசு தடை விதித்துள்ளது.


*🏀 விளையாட்டுச் செய்திகள்*


🏀மதுரையில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் தோனி.

ரூ.325 கோடி செலவில் இந்த ஸ்டேடியம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மைதானத்தில் டி.என்.பி.எல்., ஐ.பி.எல்., ரஞ்சி கிரிக்கெட் போன்ற போட்டிகள் நடக்க வாய்ப்புள்ளது.


*Today's Headlines*



⭐The Chief Minister has urged that steps have to be taken to rescue fishermen from Sri Lankan prisons.


⭐ The Tamil Nadu government has issued an order stating that the removal of caste names from residential areas, streets, and roads is to be completed by November 11th.


⭐ To protect children's mental health, the Danish government has banned children under the age of 15 from using social media.



 *SPORTS NEWS*


🏀Dhoni inaugurated the cricket stadium in Madurai, which was built at a cost of Rs. 325 crores and is likely to host matches like TNPL, IPL, and Ranji cricket.


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


அரசு பள்ளி பெண்கள் கழிவறையில் எழுப்பப்படும் தடுப்புச் சுவர்


அரசு பள்ளி பெண்கள் கழிவறையில் எழுப்பப்படும் தடுப்புச் சுவர் 


தஞ்சாவூர் அரசு பள்ளி பெண்கள் கழிவறையில் தடுப்புச் சுவர் இல்லாமல் இருந்த நிலையில் அது விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது 


அந்த கழிவறையில் தற்போது தடுப்புச் சுவர் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்



அரசுப் பள்ளியில் தடுப்புச் சுவரின்றி சிறுநீர் கழிப்பறை : இருவா் பணியிடை நீக்கம்



ஆடுதுறை அரசுப் பள்ளியில் தடுப்புச் சுவரின்றி சிறுநீர் கழிப்பறை : இருவா் பணியிடை நீக்கம்


தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை பேரூராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிவறைகள் தடுப்புச்சுவா் இன்றி கட்டப்பட்டதால் பேரூராட்சியின் செயல் அலுவலரும், இளநிலைப் பொறியாளரும் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.


தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேம்பாட்டு மானியம் 6-ஆவது நிதிக்குழு சாா்பில் ரூ. 34 லட்சம் மதிப்பில் இருபாலருக்குமான கழிவறைகள் மற்றும் சிறுநீா் கழிப்பிடம் கட்டப்பட்டது. 

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் விமா்சனம் எழுந்தது. இதுகுறித்து அறிந்த மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் உரிய விசாரணை நடத்தி ஆடுதுறை பேரூராட்சி செயல் அலுவலா் கமலக்கண்ணன், இளநிலைப் பொறியாளா் ரமேஷ் ஆகிய இருவரையும் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்தாா்.


இதுகுறித்து பேரூராட்சித் தலைவா் ம.க.ஸ்டாலின் கூறியது: பள்ளி மேம்பாட்டு மானியம் 2022-23, 6-ஆவது நிதிக்குழு மானியம் 2023-24 ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.34 லட்சம் மதிப்பில் கழிவறை, சிறுநீா் கழிப்பறை ஆகியவை பள்ளியில் அரசு விதிகளின் படி கட்டப்பட்டன. கழிவறைகளுக்கு இடையேயான தடுப்புச்சுவா் வைக்க பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கட்டப்பட்டு வருகிறது என்றாா்.


இனிப்பு / காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகள்

 


தீபாவளியையொட்டி இனிப்பு / காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது:


உணவு பொருட்களை வணிகர்களுக்கு விற்பதற்கு முன் பாதுகாப்பு உரிமம், சான்றிதழ் பெறப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்.


உரிமம், சான்றிதழ் இல்லாவிடில் ரூ.10 லட்சம் அபராதம் 6 மாத சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு.


உணவு தயாரிப்புக்கு பொட்டலமிடப்பட்ட தரமான எண்ணெய், நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


உணவை கையாள்வோர் அனைவரும் மருத்துவ தகுதிச்சான்று பெற்றிருக்க வேண்டும்.


புகையிலை, உமிழ்தல் போன்ற செயல்பாடுள்ளோரை உணவு தயாரிப்பு வளாகத்தில் அனுமதிக்க கூடாது.


பணியாளர்கள் அனைவரும் தலையுறை, கையுறை மற்றும் மேலங்கி அணிந்திருக்க வேண்டும்.


உணவு பாதுகாப்பு குறித்து விதிமீறல் இருந்தால் 94440 42322 & TNFSD consumer app மூலமாக தெரிவிக்கலாம்- உணவு பாதுகாப்பு துறை


விடுமுறை முடிந்த பிறகு பணி ஏற்கும் நாளில் CL/ EL /ML எடுக்கலாமா?



 விடுமுறை முடிந்த பிறகு பணி ஏற்கும் நாளில் CL/ EL /ML எடுக்கலாமா?


நண்பர்களே வணக்கம் 🙏


விடுமுறை பணியாளர்களாக ( vacation staff) கருதப்படும் ஆசிரியர்கள்....


விடுமுறை முடிந்த பிறகு பணி ஏற்கும் நாளில் CL/ EL /ML எடுக்கலாமா?


1) விடுமுறை + விடுப்பு = 10 நாள் வரை எனில் CL allowed


2) கடைசி வேலை நாள் (26/9/25)  அன்று பணிக்கு வந்த இருந்தால்

Vacation + EL எடுத்துக் கொள்ளலாம்...

(FR leave rules 12 பார்க்க இணைப்பு)

6, 7 & 8 மூன்று நாட்கள் EL எனில் மூன்று நாட்கள் மட்டும் விடுப்பு ( முன்னர் உள்ள 9 நாட்கள் விடுமுறை அனுமதி) ...


3) மருத்துவ விடுப்பு பொறுத்தவரை...

மருத்துவர் என்று உடல்நலக்குறைவு என சான்று வழங்குகிறாறோ அன்று முதல் விடுப்பு ஆரம்பம்... ( அதற்கு முன் உள்ளவற்றை பார்க்க வேண்டியதில்லை) 


Fitness certificate உடன் விடுப்பு முடிகிறது...

ஒருவேளை fitness date அன்று விடுமுறை எனில்...

அதை பின் இணைப்பாக அனுமதி வழங்கி அடுத்த வேலை நாளன்று பணியில் சேரலாம்...

(1995 அரசுக் கடிதம் இணைத்துள்ளேன்) ...


4) EL இல் prefix ,suffix , prefix and suffix allowed...


But sandwich not allowed...


இதன் பொருள்...

வெள்ளி EL அடுத்த திங்கள் EL எனில் இடைப்பட்ட சனி/ஞாயிறு இரண்டும் EL தான்...

வெள்ளி EL அடுத்த திங்கள் பணியில் சேர்ந்தார் என்றால் மட்டுமே சனி/ஞாயிறு பின் இணைப்பு அனுமதி 🙏


5) ( விடுமுறை + விடுப்பு ) 10 நாட்களுக்கு மிகாமல் என்பது CL க்கு மட்டுமே.  EL/ML க்கு கிடையாது 


தகவலுக்காக...

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி

மோ சுப்புலாபுரம்

மதுரை 625702

8/10/25