22-12-2025 அன்று நடைபெற்ற அமைச்சர் குழு உடனான பேச்சுவார்த்தை - ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொறுப்பாளரின் தகவல்




22-12-2025 அன்று நடைபெற்ற அமைச்சர் குழு உடனான பேச்சுவார்த்தை - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவரின் தகவல்


 இன்றைய (22-12-2025) அமைச்சர் குழு உடனான பேச்சுவார்த்தை ஏமாற்றம் அளிக்கிறது.


கோரிக்கைகள் நிறைவேற்றம் குறித்த எந்த வித உத்திரவாதமும் இல்லை


எனவே திட்டமிட்டபடி ஜாக்டோ ஜியோவின் போராட்டம் தொடரும்


அன்பார்ந்த தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில, மாவட்ட, வட்டார பொறுப்பாளர்களின் கவனத்திற்கு,


இன்று நடைபெற்ற அரசின் உடனான பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை


 முதற்கண் இதனை பேச்சுவார்த்தை என்று சொல்ல இயலாது 


ஒரு ஆலோசனை கூட்டம் போன்றே நடைபெற்றது


 மீண்டும் ஒருமுறை அனைத்து சங்க பிரதிநிதிகளையும்  கோரிக்கை குறித்து கருத்துகளைக் கூற அழைத்தார்கள்


அதிலும் குறிப்பாக 70-க்கும் மேற்பட்ட சங்கங்கள் கலந்து கொண்ட நிலையில்  38 சங்கங்களே பேச அழைக்கப்பட்டன


முக்கிய சங்கங்களை கருத்து கூற அழைக்கவில்லை


இறுதியில் பேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், போதிய நிதி நிலையை கருத்தில் கொண்டு தாங்கள் கூறிய கருத்துக்களை முதல்வர் அவர்களுக்கு கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். பொங்கலுக்கு முன்பாக அறிவிப்பை வெளியிடுவார் என்று நம்புவோம் என முடித்துக் கொண்டார்


நமது இயக்கம் சார்பில் மாநிலத்தலைவர் கே.பி. ரக்‌ஷித் அவர்கள் பேசியபோது


 1. இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களையவேண்டும்

2. பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்து பழைய ஓய்வூதியதிட்டம் அமலாக்கம்

3.  5400 தர ஊதியம் 

4. பி.லிட்., பி.எட்., பி.காம். பி.எட்., உள்ளிட்ட தணிக்கை தடைநிவர்த்தி செய்யவேண்டும்

5. Special TET  தேர்வை உடனே நடத்த வேண்டும்

6. அரசாணை 243ஐ முழுமையாக ரத்து செய்யவேண்டும்.

7. 2003 முதல் 2005 வரையிலான தொகுப்பூதிய காலத்தை பணிவரண்முறைப்படுத்த வேண்டும்

8. பகுதிநேர தொகுப்பூதிய ஆசிரியர்களை நிரந்தரம் செய்யவேண்டும்

9. 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் உடனே வழங்கவேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்


இறுதி முடிவாக


*இன்றைய அரசின் உடனான பேச்சுவார்த்தை ஏமாற்றம் அளிக்கிறது.*


*கோரிக்கைகள் நிறைவேற்றம் குறித்த எந்த வித உத்திரவாதமும் இல்லை*


*எனவே திட்டமிட்டபடி ஜாக்டோ ஜியோவின் போராட்டம் தொடரும்*


மிக எழுச்சியாக போராட்ட களத்தில் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறது



கே.பி.ரக்‌ஷித்

மாநிலத்தலைவர்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.



Xiaomi Power Bank 4i 20000mAh 33W Super Fast Charging PD |Smart 12 Layer Protection|Type C Input & Output|Triple Output Ports|Supports Android,Apple, Tablets, Earbuds,Watch(MI Powerbank),Black


https://amzn.to/3NdXTd2



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.