இன்று 28/01/2026 புதன்கிழமை புதுக்கோட்டை திருவாப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை.
அதனை ஈடு செய்யும் வகையில் 07.02.2026 சனிக்கிழமை வேலை நாளாகும்..
- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஜனவரி 28 (இன்று) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாநகர், திருவப்பூரிலுள்ள முத்துமாரியம்மன் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா இன்று (ஜன. 28- புதன்கிழமை) நடைபெறவுள்ளது.
இதையொட்டி, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மு. அருணா உத்தரவிட்டுள்ளார். இந்த நாளுக்கு மாற்றாக வரும் பிப். 7ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாகவும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும், புதன்கிழமை கருவூலங்கள் மட்டும் குறைந்த எண்ணிக்கைப் பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என்றும், பள்ளி, கல்லூரிகளில் அரசுத் தேர்வுகள் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும் ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.