திராவிட மாடல் விடியல் ஆட்சியின் சாதனைகள்



 திராவிட மாடல் விடியல் ஆட்சியின் சாதனைத் திட்டங்களில் முக்கியமானவை - முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு


Important milestones of the Dravidian model Dawn Regime  (Vidiyal Government) - Chief Minister Stalin's announcement


ஆட்சிப் பொறுப்பேற்றதும் நான் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பயணத்துக்குதான்! இந்தப் பயணங்களால் மாதந்தோறும் 800 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை ஒவ்வொரு மகளிரும் சேமிக்கின்றார்கள். இதன் மூலமாக 2021 மே மாதத்திலிருந்து இப்பொழுது வரை தோராயமாக 60 ஆயிரம் ரூபாய் வரை சேமித்திருக்கின்றார்கள். பெண்களுக்கான மிகப்பெரிய சமூகப் பொருளாதார பலத்தை இந்தத் திட்டம் வழங்கியிருக்கிறது. மேசையைத் தட்டும் ஒலி)


அடுத்து, கலைஞர் மகளிர் do திட்டம்! 95 கோடியே 31 இலட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குகின்றோம். இந்தத் திட்டத்தில் இதுவரை ஒவ்வொரு மகளிருக்கும் 29 ஆயிரம் ரூபாயை கொடுத்திருக்கின்றோம். அந்தப் பெண்கள் எல்லோரும் எங்கள் அண்ணன் கொடுக்கின்ற மாதாந்திர சீர் என்று பெருமையுடன் சொல்கிறார்கள். (மேசையைத் தட்டும் ஒலி


இந்த ஆண்டு தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு 2 கோடியே 23 இலட்சம் குடும்பங்களுக்கு 3 ஆயிரம் ரூபாயை வழங்கினோம். தமிழ்நாடே மகிழ்ச்சியுடன் பொங்கல் திருநாளை கொண்டாடியது.


தமிழ்நாடு முழுவதும் 20 இலட்சத்து 59 ஆயிரம் பள்ளிக் குழந்தைகள் தினமும் காலையில் சூடான, சத்தான, சுவையான உணவை சாப்பிடுகின்றார்கள். மேசையைத் தட்டும் ஒலி)


நான் முதல்வன் திட்டத்தில் 48 இலட்சத்து 65 ஆயிரம் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. (மேசையைத் தட்டும் ஒலி)


புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் 12 இலட்சம் மாணவ, மாணவியர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள். (மேசையைத் தட்டும் ஒலிடி


2003 முதல் 2021 வரை, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் 6 மாணவர்கள் மட்டுமே பயனடைந்திருக்கின்றார்கள். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தில் 385 மாணவர்களுக்கு 162 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் படிக்கின்றார்கள்.


அரசு ஊழியர்களுடைய 23 ஆண்டுகால கோரிக்கையான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருக்கின்றோம். (மேசையைத் தட்டும் ஒலி) நாம் ஆட்சிக்கு வந்தபோது அரசு அகவிலைப்படியை இப்பொழுது வழங்கியிருக்கோம். ஊழியர்களுக்கு 17 விழுக்காடாக இருந்த விழுக்காடு எனுமளவுக்கு உயர்த்தி 58


2 இலட்சம் விவசாயிகளுக்கு புதிய இலவச மின் இணைப்புகள், மேசையைத் தட்டும் ஒலி)


14 புதிய உழவர் சந்தைகள் தொடக்கம்.


2 கோடியே 56 இலட்சம் பேர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பயன்பெற்றிருக்கிறார்கள். (மேசையைத் தட்டும் ஒலி)


'இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48* திட்டத்தில் சாலை விபத்துக்குள்ளான 5 இலட்சத்துக்கும் அதிகமானோரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு 483 கோடி ரூபாய்க்கு காப்பீடு வழங்கப்பட்டு இருக்கிறது. மேசையைத் தட்டும் ஒலி)


கடந்த 5 ஆண்டுகளில் மகளிர் கய உதவிக் குழுக்களுக்கு 1 இலட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது. (மேசையைத் தட்டும் ஒலி)


2 இலட்சம் பேருக்கு கலைஞர் கனவு இல்லம் வீடுகள். (மேசையைத் தட்டும்


22 இலட்சத்து 71 ஆயிரம் ஏழை, எளிய குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா. (மேசையைத் தட்டும் ஒலி)


4 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு. மெசையைத் தட்டும் ஒலி


மேசையைத் தட்டும் ஒலி)


8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்பு.


மேசையைத் தட்டும் ஒலி)


12 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகள் ஈர்ப்பு.


தாயுமானவர் திட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 27 இலட்சத்து 55 ஆயிரம் பேருக்கு தேடி


ரேஷன் பொருட்கள்


5 ஆயிரத்தி 700 கோடி ரூபாய் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ஒதுக்கீடு.


சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வென்ற


200 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி, மேசையைத் தட்டும் ஒலி)


கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை. (மேசையைத்


தட்டும் ஒலி)


மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்.


சென்னையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்.


திருச்சி பஞ்சப்பூரில் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்.


முதல்வர் படைப்பகங்கள்.


38 மாதிரிப் பள்ளிகள்.


37 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்.


10 இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள்


19 தோழி விடுதிகள்.


141 மினி ஸ்டேடியங்கள்.


பழங்குடியினர் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஆயிரம் கோடி ரூபாயில் தொல்குடி திட்டம்.


ஆயிரம் கோடி ரூபாயில் அயோத்திதாசர் பெயரிலான ஆதிதிராவிடர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்.


6 ஆயிரத்தி 45 கோடி ரூபாயில் வடசென்னை வளர்ச்சித் திட்டம்.


நெடுஞ்சாலைத் துறை மூலமாக, 24 ஆயிரத்தி 774 கிலோமீட்டர் நீள சாலைகள் 180 உயர்மட்டப் பாலங்கள்.


கிராமச் சாலைகள் மேம்பாடு,


20 ஆயிரத்து 484 கிலோ மீட்டர்


தூரத்துக்கு


121 தடுப்பு அணைகள்


101 அணைக்கட்டுகள்


மிக நீளமான, G.D. நாயுடு மேம்பாலம் (மேசையைத் தட்டும் ஒலி)


மிக நீளமான, வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்


87 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம், சுமார் 3 கோடி மக்கள் பயன்பெறும் 75 இலட்சம் வீட்டு இணைப்புகள். (மேசையைத் தட்டும் ஒலி)


விடுதலைப் போராட்ட வீரர்கள் உள்ளிட்ட, முக்கியத் தலைவர்களுக்கு 23 மணிமண்டபங்கள் 70 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. (மேசையைத் தட்டும் ஒலி)


சென்னை வள்ளுவர் கோட்டம் சீரமைப்பு. (மேசையைத் தட்டும் ஒலி)


கேரள மாநிலம் வைக்கத்தில் பெரியார் நினைவகம் சீரமைப்பு. (மேசையைத் தட்டும் ஒலி)


கீழடி அருங்காட்சியகம்.


பொருதை அருங்காட்சியகம். (மேசையைத் தட்டும் ஒலி)


கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம். (மேசையைத் தட்டும் ஒலி)


கலைஞர் நூற்றாண்டு பூங்கா.


கோவையில் செம்மொழிப் பூங்கா. (மேசையைத் தட்டும் ஒலி)


தொல்காப்பிய பூங்கா சீரமைப்பு.


39 கோடி ரூபாயில் சென்னையில் ஹஜ் இல்லம் கட்ட உத்தரவு.


10 கோடி ரூபாயில் தொன்மையான தேவாலயங்கள் புதுப்பிப்பு என்று


சொல்லிக் கொண்டே போகலாம். இன்னும் நிறைய திட்டங்கள் இருக்கிறது. சொல்வதற்கு நேரம்தான் இல்லை.


இந்த அரசைப் சாதனை செய்தால், பொறுத்தவரைக்கும், ஒரு அதை மிஞ்சுவதாக இன்னொரு சாதனை வரும்; அடுத்து அதை விஞ்சவதாக மற்றொரு சாதனை வரும். இப்படி சாதனைக்கு மேல சாதனைகளைப் படைப்பதுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு. மேசையைத் தட்டும் ஒலி


மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் பொறுப்பேற்று, இந்த அரசு பொறுப்பேற்று, இன்றோடு ஆயிரத்து 724 நாட்கள் ஆகிறது. இந்த ஆயிரத்து 724 நாட்களில், 8 ஆயிரத்து 685 நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். 15 ஆயிரத்து 117 அரசு கோப்புகளில் கையெழுத்திட்டு இருக்கிறேன்; சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு 173 முறை பயணம் மேற்கொண்டிருக்கிறேன். அதிலேயும், 71 மாவட்ட மாபெரும் அரசு நலத்திட்ட விழாக்களில் பங்கேற்று, 44 இலட்சத்து 44 ஆயிரத்து 721 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறேன். அதுமட்டுமின்றி, அடிக்கல் நாட்டியது, முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தது என எல்லாவற்றையும் புள்ளிவிவரத்தோடு என்னால் சொல்ல முடியும்.


கடந்த 5 ஆண்டுகளில், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ன செய்தான் என்றால், ஒவ்வொரு நாளும் மக்களுக்காக வாழ்ந்தான்! (மேசையைத் தட்டும் ஒலி) மக்களுக்காக திட்டங்களைத் தீட்டினான்! (மேசையைத் தட்டும் ஒலி) மொத்தமாக தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தான்! (மேசையைத் தட்டும் ஒலி) இவையெல்லாம் வெறும் புகழ்ச்சி இல்லை; எல்லாமே உண்மை! 



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> சிறந்த வாட்டர் ஹீட்டர்கள் விவரம்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.