ஏப்ரல் 1 முதல் ATM விதிகளில் மாற்றம்
இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் ஏ.டி.எம். பயன்படுத்தும் விதிகளில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளது.
புதிய விதிகளின்படி, ஏ.டி.எம்.மில் UPI மூலம் பணம் எடுத்தாலும் அது மாதாந்திர இலவச பரிவர்த்தனை வரம்பில் சேர்க்கப்படும். இதற்கு முன்பு இது தனியாக கருதப்பட்ட நிலையில், இனி எல்லா பரிவர்த்தனைகளும் ஒரே வரம்பில் கணக்கிடப்படும்.
மாதாந்திர இலவச வரம்பை மீறினால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ₹23 (வரி தவிர) கட்டணம் வசூலிக்கப்படும். மெட்ரோ நகரங்களில் 3 முறை, மற்ற நகரங்களில் 5 முறை மட்டுமே பிற வங்கிகளின் ஏ.டி.எம். பயன்பாடு இலவசமாக அனுமதிக்கப்படும்.
மேலும், சில டெபிட் கார்டுகளுக்கான தினசரி பணம் எடுக்கும் வரம்பும் குறைக்கப்பட்டுள்ளது. முன்பு ₹1 லட்சம் வரை பணம் எடுக்க முடிந்த நிலையில், தற்போது ₹50,000 முதல் ₹75,000 வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
இதற்கிடையில், QR குறியீடு மூலம் (UPI) பணம் எடுக்கும் புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கத்திலும், பணப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.