தமிழ்நாட்டில் 90 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது



தமிழ்நாட்டில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு என்பது வெறும் வதந்தி; 90 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது- தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம்.


நாடு முழுவதும் 90 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது.


பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தப்படுவதாக பரவும் தகவல் வதந்தி.


கேன், பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வாங்க வேண்டாம்; அது மிகவும் ஆபத்தானது.


எவ்வளவு கேட்டாலும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் தருகின்றன.


சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள 7000 பெட்ரோல் பங்குகளிலும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கின்றது.


டீலர்களுக்கு கடன் கொடுப்பதை மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன.


வதந்தியால் மக்கள் தேவைக்கு அதிகமாக பெட்ரோல், டீசல் வாங்கினால் விரைவில் காலியாகி செயற்கை தட்டுப்பாடு ஏற்படும்-தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்க மாநிலத் தலைவர் முரளி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.