தேர்தல் தொடர்பாக கல்வித்துறை சார்பில் வெளியான சுற்றறிக்கை



தேர்தல் தொடர்பாக கல்வித்துறை சார்பில் வெளியான  சுற்றறிக்கை - வாட்ஸ்அப் பகிர்வு 


கல்வித்துறை சார்பில் வந்த  சுற்றறிக்கை

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி, இடைநிலை மற்றும் தனியார் பள்ளிகள்) கவனத்திற்கு


தேர்தல் - முக்கியம்


மிகக்கவனம்


தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் அனைத்து வகை பள்ளிகளிலும் உள்ள அரசியல் தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டு இருக்க வேண்டும் அல்லது மூடப்பட்டிருக்க வேண்டும். மேலும் வகுப்பறை சுவர்களிலோ அல்லது சுற்றுச்சுவர்களிலோ அரசியல் தலைவர்கள் பெயரில் கொண்ட கல்வெட்டுகள் இருந்தால் அதுவும் மூடப்பட்டிருக்க வேண்டும் மேலும் வகுப்பறை சுவர்கள் மற்றும் சுற்றுச் சுவர்களில் உள்ள அரசியல் கட்சி சார்ந்த சின்னங்களோ அல்லது பெயர்களோ இருந்தால் மறைக்கப்பட்டு இருக்க வேண்டும். எந்த காரணத்தை முன்னிட்டும் பள்ளி வளாகத்தில் எந்த வகையிலும்  அரசியல் சார்ந்த பெயர்களோ படங்களோ இல்லாது பார்த்துக் கொள்ள வேண்டும் . இவை அனைத்தையும் நாளை மதியத்திற்குள் செய்து முடிக்க அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாளை மதியம் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும்  தங்களுடைய ஆளுகைக்கு உட்பட்ட  அனைத்துப் பள்ளிகளிலும்  100% முற்றிலுமாக மேற்காணும் இனங்கள் மறைக்கப்பட்டுள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன என்கின்ற உறுதிமொழி சான்றினை முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது நன்றி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.