பதற்றம் வேண்டாம் - பொதுமக்களுக்கு Indian Oil நிறுவனம் வேண்டுகோள்



பதற்றம் வேண்டாம் - பொதுமக்களுக்கு Indian Oil நிறுவனம் வேண்டுகோள்


பெட்ரோல், டீசல் போதுமான அளவில் கிடைக்கிறது; அச்சத்தில் அதிகமாக வாங்க வேண்டாம்: இந்தியன் ஆயில் நிறுவனம் வேண்டுகோள்.


இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Indian Oil) தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கையிருப்பு இருப்பதாகவும், பெட்ரோல் நிலையங்களுக்கு விநியோகம் வழக்கம்போல சீராக நடைபெற்று வருவதாகவும் பொதுமக்களுக்கு உறுதி அளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள இந்தியன் ஆயிலின் அனைத்து பெட்ரோலிய முனையங்களும் மற்றும் விநியோக மையங்களும், வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் இருப்புடன் உள்ளன.


சில இடங்களில் அச்சத்தில் அதிக அளவில் எரிபொருள் வாங்கும் நிலை ஏற்பட்டதால், சில பெட்ரோல் நிலையங்களில் தற்காலிகமாக விநியோகத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது.


எரிபொருள் பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும், திடீர் தேவையால் ஏற்பட்ட இந்த நிலையை சமாளிக்க பாதிக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களுக்கு முன்னுரிமையுடன் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாகவும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களின் இருப்பு நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, எரிபொருள் கிடைப்பதை வழக்க நிலைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


அச்சத்தில் அதிகமாக வாங்குதல் அல்லது தேவையற்ற முறையில் எரிபொருளை சேமித்து வைப்பதை பொதுமக்கள் தவிர்க்குமாறு இந்தியன் ஆயில் நிறுவனம் கேட்டுக் கொள்கிறது, ஏனெனில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கின்றன மற்றும் விநியோகச் சங்கிலி சீராக செயல்பட்டு வருகிறது.


மேலும், பிளாஸ்டிக் கேன்கள், பாட்டில்கள் அல்லது அனுமதி பெறாத பாத்திரங்களில் பெட்ரோலை சேமித்து வைப்பது போன்ற பாதுகாப்பற்ற செயல்களை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் வலியுறுத்துகிறது. இது கடுமையான பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும்.


வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும் எரிபொருள் தடையில்லாமல் கிடைப்பதையும் உறுதி செய்வதில் இந்தியன் ஆயில் நிறுவனம் தொடர்ந்து உறுதியாக செயல்பட்டு வருகிறது, மேலும் தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.


வெளியீடு: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், சென்னை.



 “வதந்திகளை நம்பி, மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம்" - இந்துஸ்தான் பெட்ரோலியம்


* போதுமான அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது - HPCL


* நாடு முழுவதும் உள்ள அனைத்து HPCL பெட்ரோல் பங்குகளும் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. பெட்ரோல், டீசல் மற்றும் பிற எரிபொருள்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது, விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது. வதந்திகளை நம்பி, மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம்.


* பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படுமோ என அஞ்சி மக்கள் பங்குகளில் குவிந்துவரும் நிலையில், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் அறிக்கை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.