இரண்டாம் கட்ட தேர்தல் பணி பயிற்சி நடைபெறும் 15-04-2026 புதன்கிழமை அன்று தேர்தல் பயிற்சியிலிருந்து முறையாக விலக்கு பெற்றவர்கள் மட்டும் பள்ளிக்கு சென்று பணியாற்றிட மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் தகவல்
தேர்தல் செய்தி -- மதுரை CEO
இரண்டாம் கட்ட தேர்தல் பணி பயிற்சி 15.04.2026 புதன்கிழமை அன்று நடைபெறுதல் சார்ந்து.
அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள்/ மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ வட்டார கல்வி அலுவலர்கள்/ தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இரண்டாம் கட்ட தேர்தல் பணி பயிற்சி 15-04-2026 புதன்கிழமை அன்று நடைபெற உள்ளதால் அப்பயிற்சியில் அனைத்து அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பெரும்பான்மையான ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ளதால் மேலும் மாணவர்களுக்கு தேர்வுகள் இல்லை என்பதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை எனவும், தேர்தல் பணி ஆணை கிடைக்கப்பெற்ற அனைவரும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் எனவும், தேர்தல் பயிற்சியிலிருந்து முறையாக விலக்கு பெற்றவர்கள் மட்டும் பள்ளிக்கு சென்று பணியாற்றிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.