15 காவல் துறை அலுவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் - செய்தி வெளியீடு
2026-ஆம் ஆண்டின் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிறப்பித்த ஆணை.
செய்தி வெளியீடு எண்: 298 , நாள்: 26.06.2026
செய்தி வெளியீடு
2026ஆம் ஆண்டின் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி (26.06.2026), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிறப்பித்த ஆணை.
மாநிலத்தில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு "போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம்" 2023-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 2026-ம் ஆண்டிற்கான பதக்கங்களை கீழ்கண்ட காவல் அதிகாரிகள்/காவல் ஆளிநர்களுக்கு வழங்க ஆணை பிறப்பித்துள்ளார்கள்:
வ.எண். பெயர். பதவி மற்றும் பணிபுரியும் இடம் திருவாளர்கள்
1. விவேகானந்த சுக்லா, இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர். கடலூர் மாவட்டம்.
2. ஜி. சந்தீஷ், இ.கா.ப.. காவல் கண்காணிப்பாளர். இராமநாதபுரம் மாவட்டம்.
3. ஸ்ரீ. லட்சுமணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர். போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு, சென்னை.
4. வை. மனோஜ்குமார். காவல் உதவி ஆணையாளர், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு. நுண்ணறிவுப் பிரிவு. சென்னை பெருநகர காவல்.
5. மோ.கண்ணன். காவல் ஆய்வாளர், மத்திய நுண்ணறிவுப் பிரிவு. திருச்சி மண்டலம்.
6. பொ. காமராஜ். காவல் ஆய்வாளர். மத்திய நுண்ணறிவுப் பிரிவு, கோயமுத்தூர் மண்டலம்.
7. மு. அருண். காவல் உதவி ஆய்வாளர், குரங்கனி காவல் நிலையம், தேனி மாவட்டம்.
8. கே. ராஜ்குமார். தலைமைக் காவலர் -1868, குமுளி காவல் நிலையம், தேனி மாவட்டம்.
9. க. கார்த்திகேயன். தலைமைக் காவலர் 348, வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையம், நாகப்பட்டினம் மாவட்டம்.
10. அ. குத்புதீன், தலைமைக் காவலர் 1288. கோட்டைப்பட்டினம் காவல் நிலையம், புதுக்கோட்டை மாவட்டம்.
11. க. ராமர், சிறப்பு உதவி ஆய்வாளர் -973, நல்லூர் காவல் நிலையம். திருப்பூர் மாநகரம்.
12. மு. ஐய்யப்பன். தலைமைக் காவலர் 2244. மதுவிலக்கு அமலாக்க பிரிவு, திருநெல்வேலி.
13. ந. பிரேம் குமார், தலைமைக் காவலர் 46983, R-3 அசோக் நகர் காவல் நிலையம். சென்னை பெருநகர காவல்.
14. உ.பி. செந்தில்குமார். சிறப்பு உதவி ஆய்வாளர் -1138, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு. கரூர் மாவட்டம்.
15. ச. ராமகிருஷ்ணன், தலைமைக் காவலர் 2120, போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு, தேனி அலகு.
மேற்கண்ட பதக்கம் பெறுபவர்களின் சிறப்புப் பணிகள் பின்வருமாறு:-
1. திரு. விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் 28.12.2020 அன்று இந்திய காவல் பணியில் சேர்ந்து ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய காலத்தில், போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை ஒழிப்பதில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இவரது வழிகாட்டுதலின்படி, மேற்கொள்ளப்பட்ட நுண்ணறிவு சார்ந்த நடவடிக்கைகள் மூலம், 903 கிலோ கஞ்சா, 575 கிராம் மெத்தாம்பெட்டமைன், 74.5 கிராம் எம்.டி.எம்.ஏ., 55 கிராம் கோகைன் மற்றும் எல்.எஸ்.டி. தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வெளிமாநில மற்றும் அயல் நாட்டை சேர்ந்த குற்றவாளிகள் உட்பட 82 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ச்சியான விசாரணை, தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் திறமையான மேற்பார்வையின் மூலம் மாநிலங்களுக்கு இடையேயும் சர்வதேச அளவிலும் செயல்பட்ட போதைப்பொருள் வலையமைப்புகளை முறியடித்து, பொதுமக்கள் பாதுகாப்பிற்கும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கட்டுப்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.
2. திரு. ஜி. சந்தீஷ், இ.கா.ப 17.12.2018 அன்று இந்திய காவல் பணியில் சேர்ந்தார். 12.01.2024 முதல் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் சட்ட வழிகாட்டுதல் படியும், அறிவுபூர்வமான விசாரணைகள் மற்றும் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரங்களின் மூலமாக, தான் பணியாற்றிய மாவட்டங்களில் போதைப்பொருள் குற்றங்களை கணிசமாகக் குறைத்துள்ளார். 2024-ஆம் ஆண்டு முதல் 347 NDPS வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 640 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், கஞ்சா, மெத்தாம்பெட்டமின் மற்றும் கஞ்சா எண்ணெய் உள்ளிட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முக்கிய குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். 2025 ஆம் ஆண்டில், 542 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், இவரது மேற்பார்வையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய கஞ்சா பறிமுதல் நடவடிக்கையாகும்.








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.