TETOJAC Bearers Meeting with School Education Minister



மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் TETOJAC மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சந்திப்பு குறித்த தகவல் 


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு

டிட்டோஜாக்

மாநில அமைப்பு

 நாள்:30.06.2026

********************


மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சந்திப்பு


* பல்வேறு முக்கியக் கோரிக்கைகள் குறித்து முறையீடு

*************************

* மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களை தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களான சுழல் முறைத் தலைவர் திரு ச.மயில்,திரு.ஈவேரா,திரு அ.வின்சென்ட் பால்ராஜ், திரு இரா.தாஸ்,திரு சி.சேகர் திரு.மன்றம் சண்முகநாதன்,திரு கோ.காமராஜ், திரு C.அரசு,திரு டி.ஆர்.ஜான் வெஸ்லி மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் துணைப்பொதுச் செயலாளர் திரு. சாந்தகுமார் ஆகியோர் 29.06.2026 அன்று மாலை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து நடைபெறவுள்ள ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான நமது கோரிக்கைகள் தொடர்பாகவும், தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் மிக முக்கியக் கோரிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக எடுத்துரைத்து, கோரிக்கை விண்ணப்பங்களை வழங்கினர்.


* கோரிக்கைகளை மிகவும் கவனமுடன் கேட்டறிந்த மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் பணி நிரவல் கலந்தாய்வை ஒன்றியத்திற்குள் மட்டும் நடத்திடவும், விருப்பமுள்ளவர்களுக்கு வேறு ஒன்றியங்களுக்கு பணிநிரவல் அளித்திடவும், 2026-2027 ஆம் கல்வியாண்டில் ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு(Re-employment)வழங்குவது தொடர்பாக மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன் பேசி ஆவன செய்வதாகவும் தெரிவித்தார்கள். அதற்காக டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.


* மேலும், மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் மிக முக்கியக் கோரிக்கைகள் தொடர்பாகவும், தவறான தணிக்கைத் தடைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாகவும் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.


* மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள்,மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையிலும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களை நேரில் சந்தித்து பேசுவதற்காக தனது அறைக்கு வருகை தந்து மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களிடம் 30 நிமிடங்களுக்கு மேல் கோரிக்கைகளை கேட்டறிந்தது பாராட்டுக்குரிய நிகழ்வாக அமைந்திருந்தது.

********************

 இப்படிக்கு

ச.மயில்

சுழல் முறைத் தலைவர்

டிட்டோஜாக்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.