G.O. No. 113, Dated : 14.05.2025 - தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கை "சம்பள" கணக்காக மாற்றுதல் - அரசாணை வெளியீடு

 


G.O. Ms. No. 113, Dated : 14-05-2025 - தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கை "ஊதியக்" கணக்காக மாற்றுதல் - அரசாணை வெளியீடு


அரசாணை எண்.113 நிதி (கருவூலம் மற்றும் கணக்குகள் - III), நாள்:14.05.2025


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் பெறும் வங்கிக் சேமிப்பு கணக்கில் இருந்து சம்பள கணக்காக மாற்றுதல் சார்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் அறிவித்தார்.


அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில் தமிழ்நாட்டில் செயல்படும் முன்னோடி வங்கிகளுடன் போடப்பட்டது.


தற்போது தமிழ்நாடு அரசின் ஊழியர்களின் சம்பளம் பெறும் வங்கி சேமிப்பு கணக்கை சம்பள கணக்காக மாற்றுதல் சார்ந்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.


G.O. Ms. No. 113, Dated 14.05.2025

Package for Salary Acount

Package Details

🟢அரசு ஊழியர் விபத்தில் மரணமடைந்தாலோ அல்லது நிரந்தர ஊனம் அடைந்தாலோ 1 கோடி ரூபாய் இழப்பீடு.

🟢விபத்தில் மரணம் அடைந்த அரசு ஊழியர்களின் ஒரு மகளுக்கு 5 லட்சமும் இரண்டு மகள்கள் இருந்தால் தலா ஐந்து லட்சமும் திருமண உதவித்தொகை.

🟢விபத்தில் மரணம் அடைந்த அரசு ஊழியர்களின் மகளின் உயர்கல்விக்கு 10 லட்ச ரூபாய் உதவித்தொகை.

🟢பணியின் போது அரசு ஊழியர் இயற்கை மரணம் அடைந்தால் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு.

🟢அரசு ஊழியர்கள் வாங்கும் தனிநபர் கடன் வீட்டுக் கடன் ஆகியவற்றில் வட்டி சலுகை.

2025-26 FY முதல்

இந்த சலுகைகள் 2025-26  நிதியாண்டு முதல் அமுலுக்கு வரும்.

வங்கிகள் பட்டியல்

1. SBI

2. Indian Bank

3. IOB

4. Axis Bank

5. Union Bank of India

6. Canara Bank

7. Bank of Baroda





 G.O. No. 113 - Finance - Changing Tamilnadu Government Employees Savings Bank Account to Salary Bank Account  - pdf



>>> Click Here to Download 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.