கேஸ் சிலிண்டர் e-KYC : ஆகஸ்ட் 31 வரை அவகாசம் நீட்டிப்பு.
வீட்டு உபயோக LPG சிலிண்டர் வாடிக்கையாளர்கள் e-KYC செய்வதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டு, 2026 ஆகஸ்ட் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆகஸ்ட் 23 வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் பலர் e-KYC செய்யாமல் இருப்பதால் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 85% வாடிக்கையாளர்கள் e-KYC முடித்துள்ள நிலையில், 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இன்னும் பதிவு செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
* e-KYC எப்படி செய்வது?
உங்கள் LPG நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலி மூலம் ஆன்லைனில் செய்யலாம்.
ஆதார் அடிப்படையிலான Face Authentication மூலம் சரிபார்ப்பு செய்யலாம்.
ஆன்லைனில் சிரமம் இருந்தால் அருகிலுள்ள LPG விநியோகஸ்தர் அலுவலகத்திற்குச் சென்று e-KYC செய்யலாம்.
நேரில் செல்லும்போது ஆதார் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்வது நல்லது.
ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் e-KYC-ஐ முடித்துக் கொள்ளுமாறு LPG வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.