ஓய்வூதியக் குழுவின் அறிக்கை குறித்து அமைச்சர்கள் ஆலோசனை : முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு

 



ஓய்வூதியக் குழுவின் அறிக்கை குறித்து அமைச்சர்கள் ஆலோசனை : முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு - நாளிதழ் செய்தி 


ஓய்​வூ​தியக் குழு​வின் இடைக்​கால அறிக்கை தொடர்பாக அமைச்​சர்​கள் எ.வ.வேலு, தங்​கம் தென்​னரசு, அன்​பில் மகேஸ் ஆகியோர் முக்கிய ஆலோ​சனை நடத்​தினர் என கூறப்படுகிறது.


பழைய ஓய்​வூ​தி​யம், பங்​களிப்பு ஓய்​வூ​தி​யம், ஒருங்​கிணைந்த ஓய்​வூ​தி​யம் ஆகிய 3 விதமான ஓய்​வூ​தி​யத் திட்​டங்கள் குறித்து விரிவாக ஆராய ஊரக வளர்ச்​சித் துறை செயலர் ககன்​தீப் சிங் பேடி தலை​மை​யில் தமிழக அரசு கடந்த பிப்​ர​வரி​யில் ஒரு குழு அமைத்​தது.


அரசு ஊழியர், ஆசிரியர் சங்​கங்​களின் நிர்வாகி​களை சந்​தித்து அவர்​களது கருத்துகள், ஆலோ​சனை​களைப் பெற்ற இந்த குழு, கடந்த செப்டம்பர் ​30ஆம் தேதி இடைக்கால அறிக்​கையை அரசிடம் சமர்ப்பித்தது. இறுதி அறிக்​கையை டிசம்​பர் இறு​திக்​குள் சமர்ப்பிக்க குழு​வுக்கு கூடு​தல் அவகாசம் தரப்​பட்​டுள்​ளது.


இதற்​கிடையே, அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்​களின் கூட்​டமைப்​பான ஜாக்​டோ-ஜியோ, திமுக​வின் பிர​தான தேர்தல் வாக்குறுதி​யான பழைய ஓய்​வூ​தி​யத் திட்ட கோரிக்​கையை நிறைவேற்​றக் கோரி ஜனவரி 6 முதல் கால​வரையற்ற வேலை நிறுத்தப் போராட்​டத்​தில் ஈடு​படப்​போவ​தாக அறிவித்துள்​ளது.


இந்தச் சூழலில், ககன்​தீப் சிங் பேடி குழு​வின் இடைக்​கால அறிக்கை பரிந்​துரைகள் தொடர்பாக அமைச்​சர்​கள் எ.வ.வேலு, தங்​கம் தென்​னரசு, அன்​பில் மகேஸ் ஆகியோர் நேற்று முன்தினம் முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர். இதில் பல சில முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரி​கிறது. எனவே, ஓய்வூதிய திட்​டம் தொடர்​பாக விரை​வில் முக்கிய அறி​விப்பு வெளி​யாகலாம் என எதிர்பார்க்​கப்​படுகிறது.


Sweatshirts for Men | Unisex Hoodie | Hoodie |Available in Plus Size 


https://amzn.to/4oYLwPn





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.