Old Pension Scheme அரசுக்கு செலவைக் குறைக்குமா?

 



பழைய ஓய்வூதியத் திட்டம் அரசுக்கு செலவைக் குறைக்குமா.?


Will the Old Pension Scheme reduce costs for the government?

  

👍👍👍👍👍👍👍👍👍


*_கேள்வி:_*

பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கும், இதர ஓய்வூதியத் திட்டத்திற்கும் அடிப்படையான வேறுபாடு என்ன.?


*_பதில்:_*

ஓய்வூதியத்திற்காக ஊழியர்களிடம் சந்தா பிடிக்காத திட்டமே பழைய ஓய்வூதியத் திட்டம்.


இதர ஓய்வூதியத் திட்டங்களான, 

புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS),

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS),

உத்திரவாத ஓய்வூதியத் திட்டம் (GPS),

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS),

தமிழ்நாடு அரசு உறுதியளிக்கும் ஓய்வூதியத் திட்டம் (TAPS ))

போன்ற இதர திட்டங்கள் அனைத்திலும் ஊழியர்களிடம் சந்தா பிடிக்கப்படும்.


நாம் கேட்பது சந்தா பிடிக்காத பழைய ஓய்வூதியத் திட்டமே.!


👍👍👍👍👍👍👍👍👍



*_கேள்வி:_*

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திய ராஜஸ்தான், ஜார்கண்ட் சட்டீஸ்கர், இமாச்சல் பிரதேசம் போன்ற மாநிலங்கள் சந்தித்த சவால்கள் என்ன.?


*_பதில்:_*


புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்திய தேதி முதல் ரத்து செய்த தேதி வரை பிடித்தம் செய்த பங்கீட்டுத் தொகையை

மேற்கண்ட நான்கு மாநிலங்களும் ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மேம்பாட்டு ஆணையத்தில் (PFRDA) செலுத்தின.


NPS..ஐ ரத்து செய்து OPS திட்டத்தை அமல்படுத்திய பின்பு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் செலுத்திய பணத்தை 

( 10% + 10% )திருப்பித் தர PFRDA மறுத்து விட்டது.


இன்று வரை திருப்பித் தர வில்லை.


இருப்பினும் சம்பந்தபட்ட மாநில அரசுகள் கொள்கை ரீதியாக  OPS திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.


👍👍👍👍👍👍👍👍👍


*_கேள்வி:_*

CPS திட்டத்தை ரத்து செய்தால் தமிழக அரசும் மேற்கண்ட பிரச்சனையை சந்திக்க வேண்டுமா.?


*_பதில்:_*

அப்படி ஒரு பிரச்சனையே எழாது.


தமிழக அரசு PFRDA வுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யாததால்

CPS திட்டத்தில் பிடித்தம் செய்த பங்கீட்டுத் தொகையை

 ( 10% + 10% ) PFRDA வில் செலுத்தவில்லை.


CPS ல் பிடித்தம் செய்யப்பட்ட 

ரூ. 1,10,000 கோடி  தமிழக அரசிடமே உள்ளது.


👍👍👍.👍👍👍👍👍👍


*_கேள்வி:_*

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துவதால், தமிழக அரசுக்கு நிதிச் சுமை குறையுமா.?

எப்படி.?


*_பதில்:_*

OPS திட்டத்தை தமிழக அரசு அமுல்படுத்தினால் CPS கணக்கில் உள்ள Rs.1,10,000 கோடி ரூபாயில்

CPS திட்டத்தில் தமிழக அரசு செலுத்திய 10% பங்கீடான 55 ஆயிரம் கோடி ரூபாய் அரசு கணக்கில் திருப்பி வரவு வைக்கப்படும்.


OPS திட்டத்தை அமல்படுத்துவதால் CPS திட்டத்தில் ஒரு வருடம் அரசு செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகை ரூ.6240 கோடி செலவு தவிர்க்கப்படும்.


தொடர்ந்து  மாதாந்திர தொடர் செலவுகளும் தவிர்க்கப்படும்.


CPS திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பங்கீட்டுத் தொகை (10% + 10% ) LIC யில் தமிழக அரசு முதலீடு செய்துள்ளது. முதலீடு செய்த பணத்திற்கு LIC தமிழக அரசுக்கு 6.5% வட்டி வழங்குகிறது.


6.5 % வட்டியை பெற்றுக் கொண்ட தமிழக அரசு One Time Settlement ல் அரசு ஊழியர்களுக்கு 7.1% வட்டி வழங்குகிறது.


 கிடைத்த வட்டியை விட 0.6% கூடுதலாக தமிழக அரசு செலவு செய்து வருகிறது.


OPS திட்டத்தை அமுல்படுத்தினால் தமிழக அரசுக்கு கூடுதலாக வழங்கும் வட்டி 0.6% மிச்சமாகும்,

செலவும் குறையும்.


தொடர் செலவுகளும் குறையும்.



CPS திட்டத்தில் அரசு செலுத்தும் 10% பங்கு தொகை என்பது

ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு,

ஆண்டு ஊதிய உயர்வு,

தேர்வு நிலை,

சிறப்பு நிலைக்கு இரண்டு ஊதிய உயர்வு வழங்குவதால் 10% அரசின் பங்கீட்டுத் தொகை உயர்ந்து கொண்டே இருக்கும்.


அடுத்த ஊதிய மாற்றம் வரும் போது குறைந்தபட்ச ஊதியம் இரட்டிப்பாக உயரும்.


அரசு பங்களிப்பு தொகையும் இரட்டிப்பாக உயரும்.


வரும் 10 ஆண்டுகளில் அரசின் 10% பங்கீட்டுத்தொகை  எவ்வளவு உயரும் என்பதை கணிக்கக் கூட முடியாது.

👍👍👍👍👍👍👍👍👍



*_கேள்வி:_*

ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 60 ஆக உயர்த்தியது ஏன்.?


*_பதில்:_*


ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்துவதன் மூலம்,


ஓய்வூதியப் பலன்களுக்கு தமிழக அரசு செய்ய வேண்டிய செலவை கொரானா காலத்தில் ஓராண்டு தள்ளி போடுவதற்காக தான் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆகவும், பின்னர் 59 லிருந்து 60 ஆகவும் உயர்த்தப்பட்டது.


அதே Formula வில் CPS திட்டத்தை ரத்து செய்து OPS திட்டத்தை அமுல்படுத்தினால் தமிழக அரசு ஒரு அரசு ஊழியருக்கு ஓய்வூதியத்திற்காக செய்ய வேண்டிய செலவு 30 ஆண்டுகள் தள்ளிப் போகும்.


தற்போது CPS திட்டத்தில் உள்ள 624140 பேர்களும் ஒரே நேரத்தில் ஓய்வு பெறப் போவதில்லை.


மேலும், 60 வயது நிறைவடைந்தவர்கள் மட்டுமே ஓய்வு பெறுவார்கள்.


ஓய்வு பெற்ற பின்புதான் OPS திட்டப்படி அரசு நிதி வழங்கும்.


தற்போது அரசுப் பணியில் உள்ளவர்கள் 30 ஆண்டு பணிபுரிவார்கள்.


 இன்னும் 30 ஆண்டுகள் கழித்து தான் ஓய்வு பெறுவார்கள்.


30 ஆண்டுகளுக்கு பின்னால் ஓய்வு பெறும் ஊழியருக்கு CPS திட்டம்தான் என்றால் மாதாமாதம் தமிழக அரசு பங்கீட்டுத் தொகை வழங்க வேண்டும்.


அதே நேரம் OPS திட்டம் என்றால் தற்போது 30 வயதில் அரசுப் பணி செய்யும் ஊழியர் இன்னும் 30 ஆண்டுகள் கழித்து தான் OPS திட்டப்படி தமிழக அரசு ஓய்வூதியத்திற்கு  நிதி வழங்கும்.


ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் உயர்த்தியதால் அரசுக்கு செலவு இரண்டு ஆண்டுகள் தள்ளிப்போகும் என்றால்,


CPS..ஐ ரத்து செய்து OPS திட்டத்தை கொண்டு வருவதன் மூலம் தமிழக அரசின் செலவு 25 லிருந்து 30 ஆண்டுகள் தள்ளிப் போகும் என்பது தான் உண்மை.


*_பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துவதே, தமிழக அரசுக்கு பெரும் நிதிச் செலவைக் குறைத்து லாபம் தரும் பாதுகாப்பான திட்டமாகும்.!_*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.