தேசிய நல்லாசிரியர் விருது NTA 2026 - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு



தேசிய நல்லாசிரியர் விருது National Teachers' Awards 2026 - விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு


தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை - 6


ந.க. எண். 035316/ஐ/இ1/2026, நாள். 13.07.2026


பிறப்பிப்பவர்: முனைவர் ச.கண்ணப்பன்


பொருள்


பள்ளிக் கல்வி விண்ணப்பங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய கால தேசிய நல்லாசிரியர் விருது 2026 அவகாசம் நீடித்து வழங்குதல் - தொடர்பாக


பார்வை


1. Joint Secretary (Inst. & Trng.), Ministry of Education, Department of School Education & Literacy New Delhi, D.O.No.1-13/2026-NAT, Dated.15.06.2026


2. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் 035316/9/1/2026, न. 18.06.2026.


3. Director, Government of India, Ministry of Education, Department of School Education and Literacy, New Delhi, Lr.No.1-3/2026-NAT, Dated 10.07.2026


பார்வை 1 மற்றும் 2-ல் காணும் கடிதத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கான விண்ணப்பத்தினை http://nationalawardstoteachers.education.gov.in ஆசிரியர்களின் என்ற  இணையதளம் வாயிலாக 13.07.2026க்குள் முழுமையாக பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டிருந்தது மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களும் மாவட்டத் தேர்வுக் குழுவினை அமைத்து 21.07.2026க்குள் இணையதளம் வாயிலாக உரிய விதிமுறைகளை பின்பற்ற ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியினை முடித்திட தெரிவிக்கப்பட்டிருந்தது.


தற்போது பார்வை 3-ல் கண்ட அரசுக் கடிதத்தில் 2026ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு ஆசிரியர்களின் விண்ணப்பத்தினை இணையதளம் வாயிலாக முழுமையாக பதிவேற்றம் செய்ய 17.07.2026ம் தேதிவரையும், மாவட்ட அளவில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் மாவட்டத் தேர்வுக் குழுவினை அமைத்து இணையதளம் வாயிலாக உரிய விதிமுறைகளை பின்பற்ற ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியினை 21.07.2026 முதல் 26.07.2026க்குள் முடிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது, எனவே இதனை பயன்படுத்தி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் பணியினை துரிதப்படுத்துமாறும், குறிப்பாக கன்னியாகுமரி. நாமக்கல், பெரம்பலூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து ஒரு ஆசிரியர் கூட முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்பதால் இம்மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் இதன்மீது தனிக்கவனம் செலுத்தி ஆசிரியர்கள் முழுமையாக விண்ணப்பிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அரியலூர், தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களில் முழுமையான அளவில் விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கையினை உயர்த்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தெரிவிப்பதுடன், பிற மாவட்டங்களில் பகுதியாக விண்ணப்பப் பதிவேற்றம் செய்துள்ள ஆசிரியர்களை முழுமையான அளவில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், மேலும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தேர்வுக்குழு ஆசிரியர்களைத் தேர்வு செய்து மாநிலத் தேர்வுக்குழுவிற்கு அனுப்பும் பணியினை 26.07.2026 மாலை 5.00 மணிக்குள் முடித்திடுமாறும் தெரிவிக்கப்படுகிறது.


இணைப்பு - பார்வை 3-ல் காணும் கடித நகல்


பள்ளிக்கல்வி இயக்குநர்


பெறுநர்: அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்



மாவட்ட வாரியாக விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களின் விவரம்


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.