எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக பள்ளிகளில் சார்நிலை அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய செயல்திறன் குறியீடுகள் (KPIs) குறித்த DEE Proceedings

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக பள்ளிகளில் சார்நிலை அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு


Proceedings of the Director of Elementary Education regarding Key Performance Indicators (KPIs) to be inspected by subordinate officers in schools in connection with the Numeracy and Literacy Program Rc. No.: 9111/ F1/ 2025, Date: 01-08-2025



எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக பள்ளிகளில் சார்நிலை அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய செயல்திறன் குறியீடுகள் ( Key Performance Indicators - KPIs) குறித்த தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந. க. எண்: 9111/ எப்1/ 2025, நாள் : 01-08-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


கோட்டை முற்றுகைப் போராட்ட கூட்டங்களில் பங்கேற்கும் TETOJAC மாநில நிர்வாகிகளின் பட்டியல்


கோட்டை முற்றுகைப் போராட்ட மாவட்ட ஆயத்த கூட்டங்களில் பங்கேற்கும் TETOJAC மாநில நிர்வாகிகளின் பட்டியல்


*தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு*

*(டிட்டோஜாக்)* 

*மாநில  உயர்மட்டக்குழு*

*நாள்:01.08.2025*

**********************

*2025 ஆகஸ்ட் 2,3 தேதிகளில் கோட்டை முற்றுகைப் போராட்ட மாவட்ட  ஆயத்தக் கூட்டங்கள்!*


*மாவட்டங்களில் பங்கேற்கும் டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்களின் மாநில நிர்வாகிகளின் பட்டியல்!*

**********************

*23.07.2025 அன்று சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் பேரமைப்பின் மாநிலப் பொதுக்குழு முடிவின்படி 2025 ஆகஸ்ட் 22 அன்று 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெறவுள்ள 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் கோட்டை முற்றுகைப் போராட்டத்தை வலிமையுடன் நடத்திட சரியான திட்டமிடல்களை மேற்கொள்ள ஏதுவாக  02.08.2025, 03.08.2025 ஆகிய இரண்டு நாட்களில் அந்தந்த மாவட்ட டிட்டோஜாக் தீர்மானிக்கும் ஏதாவது ஒரு நாளில் மாவட்ட அளவிலான முற்றுகைப் போராட்ட ஆயத்தக் கூட்டங்களை தவறாது நடத்திட வேண்டும் என முடிவாற்றப்பட்டது.*


*எனவே,அதற்குரிய உடனடி ஏற்பாடுகளையும், கூட்ட அறிவிப்புகளையும் அந்தந்த மாவட்ட டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர்கள் உடனடியாக வெளியிட வேண்டும். அக்கூட்டங்களில் பங்கேற்கும் டிட்டோஜாக்  இணைப்புச் சங்கங்களின் மாநில நிர்வாகிகளின் பெயர்ப்பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.கூட்டத்தை பேரெழுச்சியுடன் நடத்திட டிட்டோஜாக் மாவட்ட  அமைப்புகளை டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*

**********************  

டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு



>>> மாவட்ட ஆயத்த கூட்டங்களில் பங்கேற்கும் TETOJAC மாநில நிர்வாகிகளின் பட்டியல்

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 4,00,000-ஐ கடந்து சாதனை

 


 தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 4,00,000-ஐ எட்டி சாதனை


தமிழ்நாட்டில் நிகழ் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1-ம் தேதி தொடங்கியது. இதுவரை 4,00,364 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 76 ஆயிரம் கூடுதலாகும். இந்தக் கல்வியாண்டில் மழலையர் வகுப்பில் 32,807 பேர், முதலாம் வகுப்பு தமிழ் வழியில்-2,11,563 பேர், ஆங்கில வழியில் 63,896 பேர், 2 முதல் 8-ம் வகுப்பு வரை 92,098 பேர் சேர்ந்துள்ளனர்.


இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: பல்வேறு வசதிகளுடன் கூடிய உள்கட்டமைப்பு, கற்றல் செயல்பாடு உள்ளிட்ட அம்சங்களால் அரசு பள்ளிகள் மீது பெற்றோருக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது. மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள், உயர் கல்வியில் இட ஒதுக்கீடு போன்றவற்றால் சேர்க்கை அதிகரித்துள்ளது.


தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி துறையில் 58 கல்வி மாவட்டங்கள் உள்ளன. முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் தென்காசி கல்வி மாவட்டம் 8,571 மாணவர்கள் எண்ணிக்கையுடன் முதலிடம் பிடித்துள்ளது. மிக குறைந்த அளவாக நீலகிரி கல்வி மாவட்டம் 1,022 மாணவர் சேர்க்கையுடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது.



முதலாம் வகுப்பில் அதிக மாணவர்கள் சேர்ந்துள்ள முதல் 10 கல்வி மாவட்டங்கள் விவரம்: தென்காசி- 8,471, திண்டுக்கல்-8,000, திருச்சி - 7,711, கள்ளக்குறிச்சி - 7,554, திருவண்ணாமலை- 7,386, சிவகாசி- 6,809, திருப்பூர்- 6,777, திருவாரூர்- 6,592, கோயம்புத்தூர்- 6,423, திருப்பத்தூர்- 6,418. 


குறைந்த எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கை செய்த பத்து கல்வி மாவட்டங்கள் விவரம்: நீலகிரி- 1,022, தேனி- 2,207, ஒட்டன்சத்திரம்- 2,480, தாராபுரம்- 2,594, பொள்ளாச்சி- 2,597, அரியலூர்- 2,625, பெரம்பலூர்- 2,636, வள்ளியூர்- 2,748, கரூர் - 3,077, சிவகங்கை- 3,223


தேனிலவு சென்ற தம்பதி உயிரிழப்பு : சுற்றுலா ஏற்பாடு செய்த நிறுவனம் ரூ.1.60 கோடி இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

 தேனிலவு சென்ற தம்பதி உயிரிழப்பு : சுற்றுலா ஏற்பாடு செய்த நிறுவனம் ரூ.1.60 கோடி இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு


இந்தோனேசியாவுக்கு தேனிலவு சென்ற சென்னை மருத்துவர் தம்பதி உயிரிழந்த சம்பவத்தில், சுற்றுலா ஏற்பாடு செய்த நிறுவனம் ரூ.1.60 கோடி இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு


ஏற்கனவே பலமுறை விபத்து நடந்த கடற் பகுதியில், தவறான வழிகாட்டுதலால் மோட்டார் போட்டில் செல்லும் போது விபத்து நடந்துள்ளது என மனுதாரர் தரப்பு வாதம்



TNSED Schools App New Version: 0.3.2 - Updated on 31-07-2025

 


தற்போது TNSED Schools  App-ல் Health and wellbeing - Students health screening module changes பதிவு செய்வதற்கான  புதிய அப்டேட் வெளியாகியுள்ளது

TNSED Schools App New Version: 0.3.1 - Updated on 18-07-2025 - Health and wellbeing - Students health screening module changes



* TNSED Schools App


* What's is new..?


🎯 Health and wellbeing - Students health screening module changes

UPDATED ON  31 July 2025

Version: Now 0.3.2


Link:

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis


Official app for the teachers by State School Education Department, Tamil Nadu

The app will be used by the teachers, Heads of schools, and other administrative staff to enter student, staff and school data and track the same. The app currently has modules for entering students and staff attendance, modules for screening the health of the students and referring them to the doctors, module for identifying and tracking the out of school students and module for teachers to register for teacher training.


இன்று (01.08.2025) முதல் மாறப்போகும் முக்கிய விசயங்கள்

இன்று (01.08.2025) முதல் மாறப்போகும் முக்கிய விசயங்கள்


ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் மாறப்போகும் சில முக்கிய விசயங்கள் முழு விவரம்


*👉🏿. சிலிண்டர் விலை:-*


➤➤. ஒவ்வொரு மாதமும், முதல் தேதியன்று, எல்பிஜி எரிவாயு நிறுவனங்கள் வீட்டு உபயோக மற்றும் வணிக ரீதியான சிலிண்டர்களின் விலைகளை மதிப்பாய்வு செய்து சில சமயங்களில் அவற்றில் மாற்றங்களை செய்கின்றன. அடுத்த மாதமும், அதாவது ஆகஸ்டு 1 அன்றும் சிலிண்டரின் விலையில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


*👉🏿. யூபிஐ சேவை:-*


➤➤. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), Paytm, PhonePe மற்றும் Google Pay போன்ற UPI அடிப்படையிலான செயலிகளில் கணக்கு இருப்பு சரிபார்ப்பு மற்றும் டிரான்சாக்‌ஷன் வியூ ஆகியவற்றுக்கு வரம்பை நிர்ணயித்துள்ளது. 


➤➤. பேங்க் பேலன்ஸ் சரிபார்ப்புகள் ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே பயன்படுத்த முடியும். 


➤➤. மொபைல் நம்பர் இதன் இணைக்கப்பட்ட அக்கவுண்ட் சரிபார்ப்புகள் ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.


➤➤ தோல்வியுற்ற பரிவர்த்தனை நிலையை ஒரு நாளைக்கு 3 முறை மட்டுமே பார்க்க முடியும்.


➤➤ ஆட்டோபே வழியிலான பணம் செலுத்தும் பரிவர்த்தனைகள் 3 நிலையான நேர இடைவெளிகளில் மட்டுமே அனுமதிக்கப்படும். காலை 10 மணிக்கு முன், மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 9:30 மணிக்குப் பிறகு. 



*👉🏿. மாதம் 15 ஆயிரம்:-*


➤➤. பிரதம மந்திரி விக்ஸித் பாரத் ரோஜ்கர் யோஜனா (PM-VBRY) திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 1 முதல், முதல் முறையாக EPFO-வில் பதிவு செய்த ஊழியர்களுக்கு அரசாங்கம் ரூ.15,000 தொகையை வழங்கும் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


*👉🏿. கேஸ் சிலிண்டர் லாரிகள் வேலை நிறுத்தம்*


➤➤. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கேஸ் சிலிண்டர்கள் நிரப்பும் பிளாண்டுகள் தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 12 இடங்களில் உள்ளது. 


➤➤. இங்கு லோடு ஏற்றி செல்லும் லாரிகளுக்கு ஒப்பந்தப்படி லோடு கொடுப்பதில்லை. மேலும் போக்குவரத்து ஒழுங்கு முறையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொண்டுள்ளதால் அபராதம் விதிக்கப்படுகிறது. 


➤➤. எனவே தமிழ்நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவன பிளாண்டுகளில் இருந்து இயங்கும் சிலிண்டர் லாரிகள் வருகிற 1-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இது சம்பந்தமாக பெருந்துறையில் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளுடன்பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.இந்த பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்படாதால் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது


*✍️ Fastag ரீசார்ஜ் தொல்லை இனி இல்லை - ஆகஸ்டு 15 முதல் நாடு முழுவதும் 1 வருடத்திற்கு 3000 மட்டுமே முழு விவரம்


➤➤. நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்த வருடாந்திர பாஸ் அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.



➤➤. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 3000 செலுத்தி பாஸ் வாங்கினால் 200 முறை சுங்கச்சாவடிகளை கடந்து செல்லலாம். கார், ஜீப், வேன் போன்ற தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.3000 பாஸ் மூலம் சுங்கச்சாவடிகளில் காத்திருக்காமல் எளிதாக செல்ல முடியும் எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.


Level Up Program : Activities for August - DSE Proceedings


அடிப்படை ஆங்கில மொழித் திறன்களை மேம்படுத்தும் Level Up திட்டம் - ஆகஸ்ட் மாதத்திற்கான செயல்பாடுகள் - DSE செயல்முறைகள்


Level Up Program to Improve Basic English Language Skills - Activities for the Month of August - DSE Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


THIRAN : Time Table

 

திறன் வகுப்பு : கால அட்டவணை மாதிரி



THIRAN Class : Time Table Model



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்