கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பிளஸ் 2 உடனடித் தேர்வு: 25% பேர் மட்டுமே தேர்ச்சி

பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், வெறும் 25.91 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஒரு லட்சம் மாணவ, மாணவியர் தோல்வியடைந்தனர். இவர்களுக்கு, சமீபத்தில் உடனடித்தேர்வு நடத்தப்பட்டு, இதன் முடிவுகளை நேற்று தேர்வுத்துறை வெளியிட்டது. மொத்தம் 86,864 மாணவ, மாணவியர் தேர்வெழுதியதில், 22,511 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 25.91.
ஒரு பாடத்தை மட்டும் 40,518 பேர் எழுதியதில், 15,820 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இரு பாடங்களை 28,136 பேர் எழுதியதில், 5,432 பேர் தேர்ச்சி பெற்றனர். மற்ற பாடங்களில் தேர்வெழுதியவர்களும், தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கையும் (அடைப்பு குறிக்குள்) வருமாறு:
மூன்று பாட தேர்வுகள் - 13,120 (1,060)
நான்கு பாட தேர்வுகள் - 3,949 (146)
ஐந்து பாட தேர்வுகள் - 926 (31)
ஆறு பாட தேர்வுகள் - 215 (22)
மொத்தம் தேர்வெழுதியோர்- 86,864
தேர்ச்சி பெற்றோர் - 22,511
தோல்வி அடைந்தோர் - 64,353

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜூலை மாதத்திற்கான சிறார் திரைப்படம் | Where is the Friend's House? | Movie Link

  ஜூலை மாதத்திற்கான சிறார் திரைப்படம் "Where is the Friend's House?" Movie Link  👇👇👇 https://ddx6ukbne05nx.cloudfront.net/d...