கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Why do we need the Old Pension Scheme?

 


ஏன் வேண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்? 


Why do we need the Old Pension Scheme?


பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும் என்கிற முதன்மைக் கோரிக்கைக்காகத் தமிழ்நாடு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண் 309 இல் ‘அரசு ஊழியர், ஆசிரியர்களுக்குப் புதிய ஓய்வூதியம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்’ எனத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியம் கொண்டுவரப் பரிசீலிக்கப்படும் என்றோ கமிட்டி அமைக்கப்படும் என்றோ அதில் சொல்லவில்லை. ஆனால், தற்போது இவ்விஷயத்தில் திமுக அரசு ஏன் இவ்வளவு தடுமாறுகிறது எனத் தெரியவில்லை.



​சாத்​தியம் உண்டு: உண்மை​யில், பழைய ஓய்வூ​தியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்​படுத்து​வதில் தமிழ்நாடு அரசுக்குப் பெரிய சிரமம் ஒன்றும் இல்லை. இப்போது பணியில் இருக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர்களில் 2.29 லட்சம் பேர் பழைய ஓய்வூதியத் திட்டத்​தி​லும், 6.14 லட்சம் பேர் புதிய ஓய்வூ​தியத் திட்டத்​திலும் உள்ளனர்.


ஊழியர்​களின் தொகை ரூ.73,974 கோடியை ஆயுள் காப்பீட்டு ஓய்வூதிய நிதியில் அரசு சேமித்து வைத்துள்ளது. இதில் பாதித் தொகையான ரூ.37,000 கோடியை அரசு ஓய்வூதிய நிதியமாக வைத்துக்​கொண்டு, ஓய்வு பெறுவோரின் ஓய்வூ​தியச் செலவை அதன் வட்டியி​லிருந்து ஈடுகட்​டலாம். 7% வட்டி என்றால், ரூ.2,590 கோடி கிடைக்​கும். மீதி ரூ.37,000 கோடியை அவரவர் வருங்கால வைப்பு நிதியில் செலுத்த வேண்டும்.



இன்றைய நிலவரப்படி, ஏற்கெனவே ஓய்வு பெற்றுப் பழைய ஓய்வூ​தியம் பெறுவோர் 6.97 லட்சம் பேர். இவர்களுக்கான ஓய்வூ​தியச் செலவு 2024-25இல் ரூ.37,663 கோடி. இது அரசின் மொத்தச் செலவான ரூ.3.48 லட்சம் கோடியில் 10 சதவீதம்​தான். புதிய ஓய்வூ​தியத் திட்டத்தில் உள்ளவர்​களில் 7,738 பேர் 2023-24இல் ஓய்வு​பெற்று​விட்​டனர். சராசரியாக 8,000 பேர் ஓய்வு பெறுவர் என்றால், பழைய ஓய்வூ​தி​ய​தா​ரர்​களில் இது ஒரு சதவீதம்​தான். ஓய்வூ​தியச் செலவான ரூ.37,763 கோடியிலும் இது ஒரு சதவீதம்​தான்.




ஏன் வேண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்?

By ஆர்.இளங்கோவன்Modified: 03 Mar, 25 06:37 am



பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும் என்கிற முதன்மைக் கோரிக்கைக்காகத் தமிழக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண் 309 இல் ‘அரசு ஊழியர், ஆசிரியர்களுக்குப் புதிய ஓய்வூதியம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்’ எனத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியம் கொண்டுவரப் பரிசீலிக்கப்படும் என்றோ கமிட்டி அமைக்கப்படும் என்றோ அதில் சொல்லவில்லை. ஆனால், தற்போது இவ்விஷயத்தில் திமுக அரசு ஏன் இவ்வளவு தடுமாறுகிறது எனத் தெரியவில்லை.



​சாத்​தியம் உண்டு: உண்மை​யில், பழைய ஓய்வூ​தியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்​படுத்து​வதில் தமிழக அரசுக்குப் பெரிய சிரமம் ஒன்றும் இல்லை. இப்போது பணியில் இருக்கும் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்​களில் 2.29 லட்சம் பேர் பழைய ஓய்வூ​தியத் திட்டத்​தி​லும், 6.14 லட்சம் பேர் புதிய ஓய்வூ​தியத் திட்டத்​திலும் உள்ளனர்.


ஊழியர்​களின் தொகை ரூ.73,974 கோடியை ஆயுள் காப்பீட்டு ஓய்வூதிய நிதியில் அரசு சேமித்து வைத்துள்ளது. இதில் பாதித் தொகையான ரூ.37,000 கோடியை அரசு ஓய்வூதிய நிதியமாக வைத்துக்​கொண்டு, ஓய்வு பெறுவோரின் ஓய்வூ​தியச் செலவை அதன் வட்டியி​லிருந்து ஈடுகட்​டலாம். 7% வட்டி என்றால், ரூ.2,590 கோடி கிடைக்​கும். மீதி ரூ.37,000 கோடியை அவரவர் வருங்கால வைப்பு நிதியில் செலுத்த வேண்டும்.



அதாவது ரூ.376 கோடிதான் கூடுதல் செலவாகும். இதனை அரசு கையிலிருக்கும் நிதிய வட்டியான ரூ.2,590 கோடியி​லிருந்து ஈடுகட்​டலாம். ஆனால், அதைச் செய்யாமல் பழைய ஓய்வூ​தியத் திட்டம், மத்திய அரசின் ஒருங்​கிணைந்த ஓய்வூ​தியத் திட்டம் ஆகியவை குறித்து ஆராய்​வதற்குக் குழு அமைக்​கப்​படுவதை, வெந்த புண்ணில் வேல் பாய்ச்​சுவதுபோல ஊழியர்கள் உணர்கின்றனர். மேலும், அறிக்கை தர அந்தக் குழுவுக்கு 9 மாதங்கள் அவகாசம் கொடுத்​திருப்​பதும் அதிருப்தியை ஏற்படுத்​தி​யிருக்​கிறது.



தமிழ்நாடு அரசு செய்யும் தவறு: மத்திய அரசு ஊழியர்​களுக்கு இருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தையும் தமிழ்நாடு அரசு நடைமுறைப்​படுத்​தவில்லை. மத்திய அரசு ஊழியர் மறைந்​தால், அவரது குடும்பத்​துக்குப் பழைய ஓய்வூதிய விதிகளில் உள்ள குடும்ப ஓய்வூ​தி​ய​மும், இறப்புப் பணிக்​கொடையும் வழங்கப்​படு​கின்றன. ஊனமுற்று விருப்ப ஓய்வில் சென்றால் பழைய ஓய்வூதிய விதிகளில், ‘இன்வேலிட்’ ஓய்வூ​தி​யமும் பணிக்​கொடையும் கிடைக்​கின்றன.


ஓய்வு​பெறு​பவருக்குப் பணிக்​கொடையும் ‘ஆனுவிட்டி’ (ஆண்டுத் தொகை) வடிவில் மாதந்​தோறும் உத்தர​வாதம் இல்லா​விட்டாலும் ஓர் ஓய்வூ​தியம் கிடைக்​கிறது. அரசுப் பங்களிப்பு 14% கிடைக்​கிறது. ஓய்வு​பெற்றால் 60% எடுத்​துக்​கொள்​ளலாம். 40% ஆனுவிட்​டியில் போட்டு, இறந்தபின் அந்த 40% குடும்பத்​துக்குத் திரும்பக் கிடைக்​கும். தமிழ்நாடு அரசு இதில் எதையும் செய்யாமல் மொத்தத் தொகையையும் கொடுத்து அனுப்புகிறது.



கடந்த 2024 மே மாதம் வரை ஓய்வு, இறப்பு ஆகிய காரணங்​களால் 38,129 பேர் பணியில் இல்லை. மாதந்​தோறும் ஒரு தொகை கிடைக்காத​போது, அதைப் பங்களிப்பு ஓய்வூ​தியம் என்று சொல்வதில் அர்த்​தமில்லை. பணிக்​கொடைச் சட்டப்படி அனைவருக்கும் பணிக்கொடை தந்தாக வேண்டும்.


பழைய ஓய்வூ​தியப் பலன்கள்: ஆனாலும் புதிய ஓய்வூ​தியம் பழைய ஓய்வூ​தி​யத்​துக்கு ஈடாகாது. பழைய திட்டத்தில் 10 ஆண்டுகள் பணிக்கு மத்திய அரசிலும், 30 ஆண்டுகள் பணிக்கு மாநிலத்​திலும் 50% சம்பளம் உத்தரவாத ஓய்வூ​தி​ய​மாகக் கிடைக்​கிறது. கம்யூட்​டேஷன், குடும்ப ஓய்வூ​தி​யமும் கிடைக்கிறது. குறைந்தபட்ச ஓய்வூ​தியமாக மத்திய அரசில் ரூ.9,000, மாநிலத்தில் ரூ.7,850 கிடைக்​கிறது. 80 வயதுக்கு மேல் 100 வயதுவரை கிடைக்கும் கூடுதல் ஓய்வூ​தியம், ஊதியக் குழு வரும்போது ஓய்வூதிய உயர்வு, அகவிலைப்படி போன்றவை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருப்பவை. புதிய திட்டத்தில் இல்லை.



இதற்காக நடத்தப்பட்ட பலகட்டப் போராட்​டங்களுக்குப் பிறகு, உத்தர​வாதமான 50% ஓய்வூ​தியம்; அதில் 60% குடும்ப ஓய்வூ​தியம்; குறைந்தபட்ச ஓய்வூ​தியம் ரூ.10,000; அகவிலைப்​படியும் உண்டு எனக் கூறி ஒருங்கிணைந்த ஓய்வூ​தியத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு​வந்தது. அது ஓய்வூதிய முறையின் நோக்கத்தையே கேள்விக்கு உள்ளாக்கு​கிறது. ஒருங்கிணைந்த ஓய்வூ​தியத் திட்டத்​தில், ஊழியரின் 10 சதவீதத்தோடு அரசும் 10% தரும். இரண்டும் சேர்ந்து ‘தனிநபர் கார்பஸ்’ ஆகும். அரசு போடும் 8.5% ‘பூல் கார்பஸ்’ எனப்படும். தனிநபர் கார்பஸ் சந்தையில் முதலீடு செய்யப்​படும். இந்த முதலீட்டுத் தொகைக்கு உத்தர​வாதமில்லை.


ஓய்வு பெறும்போது ஊழியரின் தனிநபர் கார்பஸ் முழுமையாக இருக்க வேண்டும். நடுவில் பணம் எடுக்​காமல், ஒழுங்கான நேரத்தில் கட்டி, சந்தை நிலையாக இருந்தால் உங்கள் கார்பஸ் என்னவாக இருக்குமோ அதற்கு ‘பெஞ்ச்​மார்க் கார்பஸ்’ என்று பெயர். இதனை பி.எஃப்​.ஆர்​.டி.ஏ.தான் தீர்மானிக்​கும். அதற்கு ஒரு வரையறையும் இல்லை என்பது கவனிக்​கத்​தக்கது.


ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள்: ஓய்வு பெறும்போது பணிக் காலம் 25 ஆண்டுகள் இருந்​தால், நேராக 12 மாத சராசரி சம்பளத்தின் 50% ஓய்வூ​தி​ய​மாகக் கிடைக்​காது. தனிநபர் கார்பஸ், பெஞ்ச்​மார்க் கார்பஸுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். தனிநபர் கார்பஸ் முழுவதையும் அரசின் பூல் கார்பஸுக்குத் தாரை வார்க்க வேண்டும். அது திரும்பக் கிடைக்​காது. அப்போதுதான் 50% ஓய்வூ​தியம் கிடைக்​கும். தனிநபர் கார்பஸ் குறைந்​தால், அதே விகிதத்தில் ஓய்வூ​தி​யமும் குறையும். தனிநபர் கார்பஸ் சந்தையில் வீழ்ந்து​விட்டால் உங்கள் ஓய்வூ​தி​யமும் வீழ்ந்து​விடும் அபாயம் உண்டு.


ஓய்வு பெறும்போது பணிக்​காலம் 10 ஆண்டுகள் என்றால் சம்பளத்தில் 20%தான் ஓய்வூ​தி​ய​மாகக் கிடைக்​கும். குறைந்தபட்ச ஓய்வூ​தியம் ரூ.10,000 என்பது தனிநபர் கார்பஸ், பெஞ்ச்​மார்க் கார்பஸுக்குக் குறையாமல் இருந்​தால்தான் கிடைக்​கும். தனிநபர் கார்பஸ் குறைந்​தால், குறைந்தபட்ச ஓய்வூ​தியமான 10,000 கிடைக்​காது. தனிநபர் கார்பஸிலிருந்து 60% எடுத்​துக்​கொள்​ளலாம். ஆனால், உங்கள் ஓய்வூ​தியம் 60% குறைந்து​விடும். அதாவது, ஓய்வூ​தியம் ரூ.10,000 என்றால் அதில் 60% குறைந்து, ரூ.4,000தான் ஓய்வூ​தி​ய​மாகக் கிடைக்​கும்.


அதேபோல் குடும்ப ஓய்வூ​தியம் 60% என்ற கணக்கின்படி ஓய்வூ​தியம் ரூ.4,000 என்றால், அதில் 60% ரூ.2,400தான் கிடைக்​கும். குடும்ப ஓய்வூ​தி​யத்​துக்குக் குறைந்த​பட்சம் ரூ.10,000 என்கிற உத்தர​வாதம் கிடையாது. எனவேதான், மத்திய அரசு இதனை ஓய்வூதியம் என்று குறிப்​பி​டாமல் ‘பே அவுட்’ என்கிறது.


விருப்ப ஓய்வு: விருப்ப ஓய்வு விவகாரத்தில் விநோதமான விதிமுறை சேர்க்​கப்​பட்​டுள்ளது. அதாவது, 21 வயதில் பணிக்கு வரும் ஒருவர் 25 ஆண்டுகள் பணி செய்திருந்​தால்​தான், விருப்ப ஓய்வில் செல்ல முடியும். இதன்படி, அவர் தனது 46 வயதில் விருப்ப ஓய்வில் சென்றால், அவருக்கு எப்போது ஓய்வு வயது 60 ஆகிறதோ அப்போது​தான். அதாவது, 14 ஆண்டுகள் கழித்துதான் ‘பே அவுட்’ கிடைக்கும். இப்படி ஒரு விநோத விதிமுறை ஊழியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


மத்திய அரசு ஊழியர்​களுக்கு அறிவிக்​கப்​படும் அதே சதவீதத்தில் அகவிலைப்படி கிடைக்​காது. 1.4.2025-க்குப் பின் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கு​வார்கள். அகவிலைப்​படியை மத்திய ஆவணப் பாதுகாப்பு முகமைதான் அறிவிக்கும் (central record keeping agency), மத்திய அரசல்ல பழைய ஓய்வூ​தியத் திட்டத்தில் இருப்​பதில் என்னவெல்லாம் புதிய ஓய்வூ​தி​யத்தில் இல்லை என்று ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறோமோ அவை எதுவும் ஒருங்​கிணைந்த ஓய்வூ​தியத் திட்டத்​திலும் கிடையாது. எனவேதான் மாநில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூ​தியத் திட்டத்தைத் தொடர்ந்து வலியுறுத்து​கிறார்கள். அரசு இதில் உரிய முடிவை எடுக்க வேண்டும்!


நன்றி : இந்து தமிழ் திசை நாளிதழ் 03.03.2025



Why another plan to have alternate to the Old Pension Scheme?


பழைய ஓய்வூதியத் திட்டம் இருக்க வேறு திட்டம் எதற்கு?


Why another plan to have alternate to the Old Pension Scheme?


தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் பொருளாதார புள்ளிவிவர கணிப்பின்படி, 2031 இல் முதியோா்களின் எண்ணிக்கை 19.4 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, முதுமை காரணமாகப் பிறரைச் சாா்ந்திருப்போா் எண்ணிக்கை 2031-இல் இது 20.1 % ஆக அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.


இக் காலக்கட்டத்தில், 60 வயதைக் கடந்த பணி நிறைவு பெறும் மூத்த குடிமக்கள் மீது அரசு கவனம் அளிப்பது அவசியமாகிறது. ஆனால் அரசோ, அத்தகையோா் பாதிக்கப்படும் வகையில் தொன்றுதொட்டு வழக்கத்தில் உள்ள ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி அமைத்திருப்பது என்பது மிகவும் வருந்தத்தக்கது. முறைசாா்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கே பழையபடி ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காதபோது பிறர் நிலையை எண்ணிப் பார்க்கவே அச்சமாக உள்ளது. அது குறித்து இங்கு விரிவாகக் காண்போம்.



ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme) என்பது ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு விரிவான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய முறையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டமாகும். இத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் 1, 2025 அன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. அதற்கான அரசாணையை இந்திய நிதி அமைச்சகம் சனவரி 25, 2025 அன்று வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், இனிமேல் ஒன்றிய அரசுப் பணியில் சேரும் அரசு ஊழியர்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டம் அல்லது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ள வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஒன்றிய அரசு ஊழியர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறினால், புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஏற்கெனவே உள்ள தொகை, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டக் கணக்கிற்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.



1.4.2025 முதல் நடைமுறைக்கு வரும் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒன்றிய அரசின் பங்களிப்பு நிதி 14%_லிருந்து 18.5 விழுக்காடாக அதிகரிக்கும். இத்திட்டத்தின் கீழ் இரண்டு கட்டமைப்பு நிதிகள் (Corpus Funds) உருவாக்கப்படும் என்றும் தனிநபர் கட்டமைப்பு நிதிக்கு அரசு ஊழியர்கள் பெறும் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியிலிருந்து 10% பங்களிப்பை வழங்குவதற்கு ஈடாக அரசும் அதற்கு சமமாக பங்களித்து வருவது அறியத்தக்கது. இது தவிர, அரசு கூடுதலாக 8.5% பங்களிப்புத் தொகை இதற்கு வழங்குகிறது. இவ்விரு நிதிகளை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) நிர்வகிக்கும்.


2004 ஆம் ஆண்டு முதல் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களும், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருவார்கள். ஒன்றிய அரசு ஊழியர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஒருமுறை தேர்வு செய்த பின் அதனை மாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.



ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமானது (UPS) தேசிய ஓய்வூதிய அமைப்பின் (NPS) கீழ் செயல்படும் மாற்றுத் திட்டமாகும். பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றின் முக்கிய நடைமுறை சிக்கல்களைக் களைந்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்றிய அரசின் ஓய்வூதியர்களுக்கு நிதி நிலைத்தன்மை மற்றும் நிதிப் பாதுகாப்பை வழங்கும் நோக்கத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது எண்ணத்தக்கது.


இதன் தகுதிகளாக, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் மற்றும் விருப்ப ஓய்வு (VRS) பெறுபவர்கள் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள் ஆவர். பணிநீக்கம் செய்யப்பட்ட அல்லது பணியில் இருந்து தானாக விலகியவர்களுக்கு இந்த ஓய்வூதியம் பெற இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.


அதேபோல், குறைந்த பட்சம் 25 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணி முடித்து பணி ஓய்வு பெறுபவர்களுக்கு, அவர்கள் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களின் சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% இந்த உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியமும், 25 ஆண்டுகளுக்குக் குறைவான காலத்திற்குப் பணி செய்து பணி ஓய்வு பெறுபவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று இதில் கூறப்பட்டுள்ளது. 10 அல்லது அதற்கும் குறைவான ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறுபவர்கள் குறைந்தபட்சம் மாதம் ரூபாய் 10,000 ஓய்வூதியம் மட்டுமே கிடைக்கப் பெறுவார்கள்.



தவிர, இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர் இறந்த பிறகு, அவரது மனைவி/கணவருக்கு அவர் ஏற்கனவே பெற்று வந்த உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியம் கிடைக்கவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத்துடன் வழக்கமான அகவிலைப்படி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது எண்ணத்தக்கது. 


இதனைப் பின்பற்றி தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு கொண்டு வரும் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதித்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இவையனைத்தும் தேன் தடவிய சுரண்டல் வார்த்தைகள் ஆகும் என்பதை மறந்து விடக்கூடாது. பணி செய்யும் காலத்தில் ஊழியர்களின் உழைப்பின் பலனை மாதந்தோறும் முழுதாகக் கிடைக்கச் செய்யாமல் அதன் ஒரு பகுதியை வேண்டுமென்றே சுரண்டி, அதற்கு சமமாக பங்களிப்பு செய்வதும் குறைந்த வட்டி அளிப்பதும் மக்கள் நலன் சார்ந்த அரசு செய்யும் நற்காரியம் ஆகாது. 


பணியின்போது மாத ஊதியமும், பணிநிறைவின்போது ஓய்வூதியமும் பெறுவதென்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அடிப்படை உரிமைகள் ஆகும். இதில், 'நீ நெல் கொண்டு வா!; நான் உமியுடன் கொஞ்சம் நொய்யும் தருகிறேன்' என்பதெல்லாம் சரியானதாக இருக்க முடியாது. ஒன்றிய அரசு ஏற்கெனவே நடைமுறைபடுத்தி வரும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் காணப்படும் பங்களிப்பு ஓய்வூதியத்தில் வழங்கப்படும் பணிக்கொடையின் பலனை தமிழ்நாட்டில் திரிசங்கு நிலையில் உள்ள 1.4.2003 இல் பணிநியமனம் பெற்று பணி ஓய்வு பெற்றவர்கள் யாரும் அனுபவித்தது இல்லை என்பது தான் முழு உண்மை. இது சாமி கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத கதையை என்னவென்பது?



மாநில அரசின் புதிய பங்களிப்பு ஓய்வூதியமானது பணியாளர் அகவிலைப்படியுடன் கூடிய அடிப்படை ஊதியத்தில் கட்டாயம் பிடித்தம் செய்யப்படும் 10% பங்களிப்பு நிதியுதவியுடன் அரசு செலுத்தும் 10% கூடுதல் பங்களிப்பு நிதியுதவியுடன் அவ்வக்கால வட்டியுடன் கணக்கீடு செய்யப்பட்ட மொத்தத் தொகையும் ஒரேயடியாக வழங்கப்பட்டு வருவதை அறிவது இன்றியமையாதது. 


இவற்றுடன் எஞ்சிய ஈட்டிய மற்றும் ஈட்டா விடுப்புகளை ஒப்படைப்பு செய்து காசாக்கிக் கொள்ளும் நடைமுறை இருப்பதும் அறியத்தக்கது. மற்றபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவாறு தற்போது 25 இலட்சம் அளவிலான பணிக்கொடை மற்றும் திரும்பச் செலுத்தும் வகையிலான ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெறும் நடைமுறைகள் ஏதும் இதில் இல்லை. தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்திருந்தால் கூட பணிக்கொடை பெறும் நல்வாய்ப்பு கிட்டியிருக்கும். இவைதவிர, பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இறந்தோர் நிதியாக ரூபாய் 5 இலட்சம் வழங்கப்படுகிறது.


இந்த நிலையில் ஒன்றிய அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திருத்தியமைத்து மேலே குறிப்பிடப்பட்ட ஒருங்கிணைந்த அல்லது உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் முழுப் பலனையும் ஊழியர்கள் அனுபவிக்க அனுமதியளிக்குமா என்பது மிகப்பெரும் கேள்விக்குறியாகும். அதற்குரிய பயனாளிகளும் அரசின் மீது முழு நம்பிக்கை எண்ணம் கொண்டு இப்பொழுதே பட்டு வேட்டி கனவில் மிதந்திட எண்ணுதல் கூடாது.


தொழிலாளர் நலனுக்கு எதிரான, அடிப்படை உரிமையை நசுக்கும் எத்தகைய முன்மொழிவையும் சிந்தித்து ஆராயாமல் நுனிப்புல் மேய்ந்து புளகாங்கிதம் அடைவது என்பது பேதைமையாகும். இது முதலாளித்துவம் விரிக்கும் மோச வலை எனலாம். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொணராதிருக்க ஆயிரமாயிரம் காரணங்கள் இனியும் தேவையில்லை. 


ஒன்றுக்கும் உதவாத குழு எதற்கு? கால விரயம் எதற்கு? அதற்காக பண விரயம் எதற்கு? பல்லாயிரப் பக்க அறிக்கை எதற்கு? இவை எல்லாவற்றிற்கும் ஈடாக அதனைச் செம்மையாக நிறைவேற்றிட ஊழியர்கள் மீதான கொஞ்சம் கருணையும் ஒரு துளி மையும் மட்டும் போதுமே? 


காலம் கடத்தும் தாமதம் கூட ஒருவகையில் அநீதியே ஆகும். சமூக ஊடகங்கள் வாயிலாகப் பகிரப்படும் பகடிப் பேச்சுகளும் கேலிச்சித்திரங்களும் கேலிப் படங்களும் அரசின் மீதான அவநம்பிக்கை மற்றும் அதிருப்தி ஆகியவை ஊழியர்களின் ஏமாற்றத்திற்கு உள்ளான மனவெளிப்பாடுகளாக இருப்பதை எளிதில் புறந்தள்ளவோ, கடந்து போகவோ முடியாது. இஃது எதிரிகளுக்குச் சாதகமாக அமைந்து விடக்கூடும். 


ஒரு நல்ல ஆட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்லெண்ணத்தையும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஆழ்ந்த வருத்தத்தையும் உண்டுபண்ணி திருவிழா போல் நடக்கும் தேர்தல் அறுவடையில் நல்ல கண்டுமுதல் கண்டு விடலாம் என்று பகல் கனவு காண்பது நன்மை விளைவிக்காது. ஒவ்வொரு இடங்களிலும் ஊழியர்கள் செய்யும் பணியோ போதிய ஆட்கள் இல்லாமல் இரட்டிப்பாகி உள்ளது. மிகவும் கூடுதலான சுமை. இதுவரையில் இல்லாத வகையில் கண்காணிப்பும் கெடுபிடியும் மிகுதி. மாத ஊதியத்தைத் தவிர இதுவரை நிறுத்தி வைக்கப்பட்ட, திட்டமிட்டு ஒழித்த, வேண்டுமென்றே பறித்த, முழு நம்பிக்கை வைத்து இழந்த சலுகைகள் அனைத்தும் பாழுங்கிணற்றில் போடப்பட்ட பாறாங்கற்களாக மீட்பரின்றி அமிழ்ந்து கிடக்கும் கொடுமையை என்னவென்பது?


தேர்தலில் அளித்த வாக்குறுதிக்கு இணங்க, ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், டில்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக அறிய முடிகிறது. ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட வேறு சில மாநிலங்களில் அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டிப் போராடி வருகின்றனா். 


பணி ஓய்விற்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு ஊழியரும் கண்ணியத்துடனும் சுய மரியாதையுடனும் குடும்பத்துடன் மகிழ்வுடன் வாழ அன்றும் இன்றும் என்றும் தேவைப்படுவது பழைய ஓய்வூதியத் திட்டமே அன்றி வேறில்லை. இதை ஒன்றிய, மாநில அரசுகள் புரிந்து கொள்ளுமா?


எழுத்தாளர் மணி கணேசன்


Lives life in pension

 


ஓய்வூதியத்தில் வாழ்கிறது ஒரு உயிர் - கட்டுரை


Lives life in pension



*"ஓய்வூதியம் மட் டும் இல்லை என்றால், நான் எப்பவோ செத்துப் போயிருப்பேன் தம்பி,"* என்கிறார் முதியோர் இல்லத்தில் தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டி ருக்கும்,*ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரி.


இன்று பெற்ற பிள்ளைகள், உற்றார் உறவினர் கவனிப்பு இல்லாமல், வீட்டின் ஒரு மூலையில் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டு முடங்கி கிடக்கும் முதியவர்கள் ஏராளம்.


முதியோர் இல்லங்களில் லட்சக்கணக்கான முதியவர்கள், மருத்தை விட கசப்பான நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு, கண்ணீருடன் வாழ்ந்து வருகின்றனர்.


தன் பிள்ளைகள் கஷ்டப்படாமல் வாழ வேண்டும் என்பதற்காக, தன் வாழ்நாளில் சம்பாதித்த பணம், சொத்து முழுவதையும் பிள்ளைகளின் படிப்புக்காகவும், வேலைக் காகவும் கொடுத்து விட்டு, அவர்களின் சந்தோஷமே தன் சந்தோஷம் என்று வாழ்ந்த ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரி, எந்த ஆதரவும் இல்லாமல், இப்போது முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வருகிறார்.


*"ஓய்வூதியம் மட் டும் இல்லை என்றால் நான் எப்பவோ செத் துப் போயிருப்பேன் தம்பி,"* என்ற அவர் தொடர்ந்து பேச துவங்கினார்.


நான் சாதாரண கிளார்க்காக அரசு வேலையில் சேர்ந்து, பச்சை இங்கில் கையெழுத்து போடும் அதிகாரியாக ரிடையர் ஆனேன். என் சர்வீஸ் காலத்தில் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கியதில்லை. அதனால் என் கூட வேலை செய்தவர்களுக்கு பிடிக்காது, என் சொந்த பந்தங்களுக்கும், நண்பர்க ளுக்கும் கூட என்னை பிடிக்காது.


நேர்மையாக வாங்கிய சம்பளத்தில்தான், என் இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைத்தேன்.


படிப்புக்காக வட்டிக்கு கடன் வாங்கி, அதை கண்ணியமாக திருப்பி கொடுத்து இருக்கிறேன்.


மகளை நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்தேன். மகன் வெளி நாட்டில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்கிறான். வசதியான இடத்தில் அவனே பெண் பார்த்து கல்யாணம் செய்து கொண்டான்.


"அப்புறம் ஏன் ஹோமில் இருக்கீங்க...?"


"என் மனைவி இருக்கும் வரைக்கும் என் வீட்டில்தான் இருந்தேன். அவள் இறந்ததுக்கு அப்புறம் தனியாக இருந்தேன். நான் இருந்த வீடு, நகரத்தின் மையப்ப குதியில் இருந்ததால், ரூ.80 லட்சத்துக்கு விலைக்கு கேட்டார்கள்.


மகன் வீட்டை விற்று விட்டு, என் கூட ஆஸ்திரேலியாவுக்கு வந்து விடுங்கள் என்றான். சந்தோஷமாக வீட்டை விற்று, மகன் கையில் பணத்தை கொடுத்தேன். அவன் என் கையில் ஐந்து லட்சத்தை கொடுத்து விட்டு, 'இந்த ஹோமில் இருங்கள், நான் இரண்டு மாதத்துக்குள் விசா வாங்கி வந்து உங்களை கூட்டிக்கொண்டு போகிறேன்' என்று போனான்.


இன்றோடு எட்டு வருஷமாகி விட்டது. அவன் வந்து கூட்டிக்கொண்டு போக வில்லை. எப்பவாவது போன் செய்து இரண்டு நிமிஷம் பேசுவான்.


கூட்டி போகாததுக்கு ஏதேதோ காரணங்கள் சொன்னான். பிறகு கொரோனா வந்ததை, இறுதி காரணமாக சொன்னான். அதன் பிறகு போன் கூட செய்வதில்லை. பம்பாயில் இருக்கும் மகள் கூட போக விருப்பம் இல்லை.


அரசு கொடுக்கும் ஓய்வூதியம் மட்டும் இல்லை என்றால், நான் எப்பவோ செத்துப் போயிருப்பேன் தம்பி. ஓய்வூதியத்தில்தான் இந்த உயிர் வாழ்கிறது.


சொல்லி முடித்த முதியவர் *குலுங்கி, குலுங்கி அழ ஆரம்பித்தார்*. அவரை தேற்றும் வழி தெரியாமல்,நாம் விழித்து நின்றோம்.



Essay competitions for 6th to 11th class students - DSE Proceedings

6 முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு  கட்டுரைப் போட்டிகள் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 14-11-2024...


அனைத்துப் பள்ளி 6 முதல் 8 ஆம் வகுப்பு மற்றும் 9 & 11 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு  கட்டுரைப் போட்டிகள் பின்வரும் கீழ்காணும் தலைப்புகளில் நடைபெற உள்ளன.





>>> பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இந்தியா, பாகிஸ்தானை அச்சுறுத்தும் கோனோகார்பஸ் Conocorpus மரங்கள் - தீர்வு என்ன?


இந்தியா, பாகிஸ்தானை அச்சுறுத்தும் கோனோகார்பஸ் மரங்கள் - தீர்வு என்ன?


நாடுகளையும், அரசாங்கங்களையும் கலங்கடித்து, தொடர்ந்து வளர்ந்து வரும் ஒரு செடியின் கதை இது. அதன் பெயர் கோனோகார்பஸ்.


கூம்பு வடிவ பச்சை, அழகான மற்றும் கவர்ச்சிகரமான 'கோனோகார்பஸ்' செடிகள் அல்லது மரங்கள் பெரும்பாலும் சாலைகளில் உள்ள டிவைடர்களில் காணப்படுகின்றன. நகரங்களில் பசுமையை அதிகரிக்க முட்புதர்களில் வளரும் இந்த மரங்களை பல்வேறு நாடுகள் வளர்க்கின்றன.



இந்தியா, பாகிஸ்தான், அரபு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில், இந்த தாவரங்கள் சாலைகள், தோட்டம், சமூகம் மற்றும் பூங்காக்களின் ஒரு பகுதியாக பரவலாக வளர்க்கப்படுகின்றன. ஆனால், இந்த அரசுகள் அதிக நாட்களுக்கு இந்த மரங்களை இப்படி வளர்க்கவில்லை. அவை தத்தமது முடிவில் இருந்து பின்வாங்குவதாகத் தெரிகிறது.


கோனோகார்பஸ் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பிரச்னைகளை ஏற்படுத்துவதாக தாவர மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் கோனோகார்பஸ் மரங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது.




தெலங்கானா அரசு சமீபத்தில் கிராம பஞ்சாயத்துகளால் நடத்தப்படும் 'ஹரிதா வனம்' நர்சரிகளில் கோனோகார்பஸை வளர்க்கக் கூடாது என எழுத்துபூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கடந்த காலங்களில், நகரை அழகுபடுத்தும் பணியின் ஒரு பகுதியாக, ஹைதராபாத் நகர நிர்வாகக் குழுவான 'ஜிஎச்எம்சி' இந்த வகை செடிகளை அதிக அளவில் வளர்த்தது. இப்போது அந்த முடிவு தலைகீழாகி விட்டது.




கோனோகார்பஸ் எங்கிருந்து வந்தது?

கோனோகார்பஸ் என்பது அமெரிக்காவின் கடலோர பகுதிகளைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இது வட அமெரிக்காவின் ஃபுளோரிடாவின் கடலோர பகுதியில் வளரும் ஒரு சதுப்புநில தாவரமாகும். வேகமாகவும், உயரமாகவும், பச்சையாகவும் இது வளரும்.


ஆரம்பத்தில், பாலைவனத்தில் இருந்து வரும் தூசி, மணல் புயல்கள், வேகமாக வீசும் அனல் காற்று போன்றவற்றுக்கு தடையை ஏற்படுத்தும் விதமாக அரபு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த செடிகள் பரவலாக நடப்பட்டன.


"இந்த செடி கூம்பு வடிவில் வளர்வதால், தோட்ட நிபுணர் ஒருவர் இதைப் இந்தியாவுக்கு கொண்டு வந்து அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு இது பல்வேறு நகராட்சி மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வளர்க்கப்பட்டது. இது எங்கள் பகுதியை பூர்விகமாக கொண்டதல்ல, சுற்றுச்சூழல் பக்க விளைவுகளை இது ஏற்படுத்துகிறது. இது தவிர, சுவாச நோய்களுக்கும், பல்வேறு அலர்ஜிகளுக்கும் கோனோகார்பஸ் காரணமாக உள்ளது," என்று பிபிசியிடம் கூறினார் கரீம்நகர் சாதவாகனா பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறை பேராசிரியர் இ நரசிம்ம மூர்த்தி.



தெலங்கானாவை போலவே, மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் கோனோகார்பஸ் பற்றிய விரிவான விவாதம் நடந்தது.


மகாராஷ்டிராவில், புணே நகர மாநகராட்சியால் நடத்தப்படும் பொதுப் பூங்காக்களில் கோனோகார்பஸ் செடிகளை நட வேண்டாம் என்று உள்ளூர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.


தெலங்கானாவில் களத்தை பார்வையிட்டபோது, ​​கிராம பஞ்சாயத்துகளின் நர்சரிகளில் வளர்க்கப்படும் கோனோகார்பஸ் செடிகள், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் ஒரு பகுதியாக அதிகளவில் பயிரிடப்படுவதை அறிய முடிந்தது.


இந்த நிலையில், வெளிநாட்டுத் தாவரங்களால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அரசின் கவனத்திற்கு தகவல் கொண்டு வரப்பட்டது.


தெலங்கானா பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி துறை ஆணையர், சமீபத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர்களிடம், அவற்றின் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டாம் என எழுத்துபூர்வமாக அறிவுறுத்தினார்.


இருப்பினும், பருவமழையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் தெலங்கானாவின் பசுமை திட்டத்துக்காக, அந்தந்த கிராம பஞ்சாயத்துகளின் நர்சரிகளில் இந்த செடிகள் ஏற்கெனவே வளர்க்கபடத் தொடங்கின.


வேகமாக வளர்ந்து அதிக பசுமையுடன் வளரும் இந்த செடிகளை அதிக எண்ணிக்கையில் வளர்க்கும் விதமாக காலனிகள், சாலைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வீடுகளின் முன்புறம் அழகுக்காக பரவலாக இவை வளர்க்கப்பட்டன.


இந்த நிலையில், அரசின் சமீபத்திய உத்தரவால் தங்களுடைய முடிவை கிராம பஞ்சாயத்து தலைவர்கள் தற்போது மறுபரிசீலனை செய்து வருகின்றனர்.


"கடந்த காலங்களில், எங்கள் கிராமத்தில் அதிக அளவில் கோனோகார்பஸ் செடிகள் நடப்பட்டன. தற்போது, ​​300க்கும் மேற்பட்ட செடிகள் எங்கள் கிராம நர்சரியில் நடவு செய்ய தயாராக உள்ளன. ஆனால் சமீபத்திய அரசின் உத்தரவால் நாங்கள் குழப்பமடைந்துள்ளோம். இந்த விஷயத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும் என காத்திருக்கிறோம்," என்று பெத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.


இது தொடர்பாக சர்பாஞ்ச் ஆஷ் மல்லேஷ்  விவரித்தார்.


அரபு நாடுகள், இராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அனுபவங்கள்


அரபு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கோனோகார்பஸ், 'டாமன்' என்று அழைக்கப்படுகிறது. அந்த நாடுகளில் பசுமையுடன் கூடிய சீதோஷ்ண நிலையில் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி, பாலைவனச் சூழலில் தூசி, அழுக்கு மற்றும் காற்று வீசும் மணலைத் தடுப்பதால், கோனோகார்பஸ் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது.


இருப்பினும், இப்போது குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள், நர்சரிகளில் அதன் இனப்பெருக்கம் மற்றும் இறக்குமதியைக் கட்டுப்படுத்தியுள்ளன.


கான்க்ரீட் காடுகளுக்கு இடையே பசுமையான சூழலை விரைவாக கொண்டு வர இந்த இடம் உதவுகிறது, இதுவே இந்த மரம் நடும் திட்டத்தை பிற நாடுகள் ஆதரிக்க முக்கிய காரணம் என்கிறார் தாவரவியல் பேராசிரியர் ஈ.நரசிம்ம மூர்த்தி நம்புகிறார்.


சதுப்புநில தாவரங்கள் இயற்கையாகவே வலுவான வேர்களைக் கொண்டவை. இதன் விளைவாக, அவை நிலத்தடியில் ஊடுருவி, நிலத்தடியில் போடப்பட்ட தகவல் தொடர்பு, குடிநீர் மற்றும் வடிகால் குழாய்களை சேதப்படுத்துகின்றன.



சுவர்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் அவற்றின் வேர்களால் சேதமடைந்துள்ளன. அதே வழக்கில், இந்த தாவரத்தின் பழங்கள் மற்றும் பூக்கள் சாப்பிட ஏற்றது அல்ல. குறைந்த பட்சம் இந்த மரம் பறவைகள் கூடு கட்டுவதற்கு ஏற்றதல்ல. அழகும் வசீகரமும் தவிர வேறு பயன்கள் இல்லை. இது நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்துகிறது.


அதனால்தான், தாவரவியலாளர்களாகிய நாங்கள், சிந்தா, வேம்பு, ஆலமரம், போகடா, ஆகாசமல்லே போன்ற நாட்டுச் செடிகளை நடவு செய்ய அரசிடம் கேட்டுக்கொள்கிறோம்,'' என்கிறார் பேராசிரியர் நரசிம்மமூர்த்தி.



இராக்கின் மிசான் மாகாணத்தில் கோனோகார்பஸ் எதிர்கொள்ளும் நிலைமைகள் மற்றும் சேதங்கள் குறித்த 2020 ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் ஒரு ஆய்வுக் கட்டுரையை மிசான் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.


இங்குள்ள மரங்களால் உள்ளூர் குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் குழாய் மற்றும் வடிகால் சேதமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இருப்பினும், இந்த மரங்கள் பசுமைக்கு பங்களிக்கும் என்பதால், வேர்களுக்கு தினசரி நீர்ப்பாசனம் செய்ய வேண்டும், இதனால் அவற்றின் வேர்கள் நிலத்தடியில் ஆழமாக ஊடுருவி கட்டமைப்புகளை சேதப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று இந்த ஆய்வு கட்டுரையில் பரிந்துரைக்கப்படுகிறது.



கராச்சியில் 'காற்றின் தரம்' பாதிப்பு


கடந்த காலங்களில், பாகிஸ்தானில் உள்ள கராச்சி மற்றும் இஸ்லாமாபாத்தின் மூலதன மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இந்த தாவரங்களை அதிக எண்ணிக்கையில் வளர்ப்பது குறித்து உள்ளூர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அரசாங்கத்திடம் தங்கள் கவலையை வெளிப்படுத்தினர்.


கராச்சி பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறையின் கீழ் சுற்றுச்சூழலில் 32 வகையான தாவரங்களுடன் கோனோகார்பஸின் தாக்கம், குறிப்பாக 'காற்றின் தரம்' குறித்து ஏரோபயாலஜிஸ்டுகள் ஆராய்ச்சி நடத்தினர்.


கராச்சியில் ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், அதற்கு இந்த செடிகள் தான் காரணம் என்றும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது. அங்குள்ள தாவரவியலாளர்கள் நாட்டு மரங்களை மட்டுமே வளர்க்க பரிந்துரைத்தனர்.


ஹரிதஹார் போன்ற பெரிய அளவிலான நடவுத் திட்டங்களில் நாட்டுச் செடிகளை நட வேண்டும் என்று தாவரவியலாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.



தாவரங்கள் மனித ஆரோக்கியத்தை பாதிக்குமா?

கரீம்நகரைச் சேர்ந்த சுவாச நோய் நிபுணரான டாக்டர் உடுதா சந்திரசேகர், தாவரவியலாளர்கள் கூறுவது போல் தாவரங்கள் மனித ஆரோக்கியத்தை பாதிக்குமா என்பது குறித்து பிபிசியிடம் பேசினார்.


"அனைத்து வகையான தாவரங்களுக்கும் ஒரே மாதிரியான அனுபவம் இருக்காது. சில வகையான தாவரங்கள் மனிதர்களின் தோல் மற்றும் சுவாச அமைப்புகளை சில வகையான ஆராய்ச்சிகளில் பாதிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, சிலர் மகரந்தத் துகள்களுடன் தொடர்பு கொள்வதால் தோல் ஒவ்வாமை ஏற்படுகிறது. பார்த்தீனியம், சூரியகாந்தி, உம்மெட்டா, சாமந்தி, செம்பருத்தி மற்றும் ரோஜா செடிகளும் இந்த வரிசையில் அடங்கும்.


அவற்றின் வாசனையை அறியாமல் சுவாசித்தாலும், சுவாசக் குழாய் மற்றும் நுரையீரலில் சில ரசாயனங்கள் வெளியேறி, சளி அதிகரித்து, சளி, இருமல், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மருத்துவ மொழியில் இது 'ஒவ்வாமை மூச்சுக்குழாய் அழற்சி', மூச்சுக்குழாய் உயர் வினைத்திறன் என்று அழைக்கப்படுகிறது.


சில வகையான தாவரங்கள் சிலரை பாதிக்கின்றன. ஏற்கெனவே ஆஸ்துமா அல்லது தோல் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு அவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வகை ஒவ்வாமைக்கு சிகிச்சை உள்ளது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது" என்று அவர் விளக்கினார்.


மீண்டும் வருமா பழைய ஓய்வூதியத் திட்டம்? - திரு.வைகைச்செல்வன், முன்னாள் அமைச்சர்...


 மீண்டும் வருமா பழைய ஓய்வூதியத் திட்டம்? - திரு.வைகைச்செல்வன், முன்னாள் அமைச்சர்...


Will the old pension scheme come back? - Mr. Vaigaichelvan, Former Minister...



அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டு காலமாக நீடிக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இருப்பதாகத் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். அது எப்போது என்பதுதான் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கேள்வி.


பழைய ஓய்வூதியத் திட்டம்: பழைய ஓய்வூ​தியத் திட்டத்​தின்படி, ஓர் ஊழியர் கடைசி​யாகப் பெற்ற சம்பளத்தில் 50% ஓய்வூ​தி​ய​மாகத் தரப்படு​கிறது. அதில் 40% தொகை 12 ஆண்டு​களுக்குக் குறிப்​பிட்ட வட்டி சதவீதத்​துடன் கணக்கிடப்​பட்டு, ஊழியர்கள் ஓய்வு பெறும்போது ரொக்கத் தொகையாக வழங்கப்​படு​கிறது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்த 6 பேரை பிளாக் செய்தாலே போதும் - வெற்றி கிடைக்கும்...



இந்த 6 பேரை பிளாக் செய்தாலே போதும்  - வெற்றி கிடைக்கும்...


வெற்றியாளர்களுக்கான சூத்திரங்களை கற்றுத்தரும் நிகழ்ச்சி அது. பலரும் பலவிதமான ஆலோசனைகளை தந்து தன்னம்பிக்கையை விதைத்து கொண்டிருந்தனர். மதிய நேரம் வந்துவிட்டது. அனைவருக்கும் தன்னம்பிக்கை கதைகளை கேட்டு கேட்டு சலித்து விட்டது. எப்போது பார்த்தாலும் மற்றவரின் வெற்றிக் கதைகளை கேட்டுக் கொண்டிருப்பதால் யாருக்கு என்ன பயன்? இதை செய், செய் என்று  சொல்கிறார்களே தவிர இதை செய்யவேண்டாம் என்று யாராவது சொல்கிறார்களா என்றெல்லாம் அந்த வகுப்புக்கு வந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் கிண்டல் அடித்துக் கொண்டிருந்தனர்.


அப்போது  சாதாரண எளிய மனிதர் ஒருவர் வந்தார். அவரைப் பார்த்தால்  பயிற்சியாளர் இல்லை என்பது நன்றாக தெரிந்தது. அவர் அந்த இளைஞர்களின் முன்னின்று இந்த வார்த்தைகளை சொன்னார்.


"இளைஞர்களே கவனியுங்கள். இந்த உலகம் போலி மனிதர்களால் நிறைந்துள்ளது. மக்களை நம்புவது கடினமான ஒன்றாகிறது. சிலர் உங்களிடம் பொய் சொல்கிறார்கள், மற்றவர்கள் உங்களைக் கையாளுகிறார்கள், உங்களை மிதிக்கிறார்கள், உங்களைப் பயன்படுத்துகிறார்கள், உங்களை வெறுக்கிறார்கள். இப்படி இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களை பிளாக் செய்து விட்டு வெற்றியை நோக்கிப் செல்லுங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்."


அந்த இளைஞர்களுக்கு சலிப்பு மறைந்து போய் உற்சாகம் கரைபுரண்டு வெகு நேரம் கரகோஷங்களை எழுப்பினர். ஒரு துடிப்பான இளைஞர் அவரைப் பின் தொடர்ந்து சென்று "ஐயா இவ்வளவு பெரிய அறிவுரை தந்த நீங்கள் யார்? " எனக் கேட்க அவர் "நான் பிளாக் செய்யாத ஒரு நபரால் நம்ப வைத்து ஏமாற்றப் பட்டவன்" அந்த மனிதர் இந்த வார்த்தைகளை உதித்து விட்டுக் காணாமல் போய்விட்டார்.


தற்போது இணையதள நட்புகளில் பிடிக்காதவர்களை பிளாக் செய்வது ஃபேஷன் ஆகிவிட்டது. இதையே மாற்றி யோசிப்போம். நம் வாழ்வில் எதிர்வரும் அனைவரும் நமக்கு விருப்பமானவர்களாக இருப்பதில்லை. நம் வெற்றிக்குத் தடையாகவும் சிலர் இருப்பதுண்டு. எப்படி அவர்களை இனம் காண்பது? யாரை யெல்லாம் நாம் பிளாக் (விலக்க) செய்ய வேண்டும்?


*சுயநலவாதிகள்*


நம்மிடம் ஒரு வேலையை வாங்கிக் கொண்டு நமக்கு ஒரு உதவி என்று வரும்போது விலகிப்போகும் நபர்களை தயங்காமல் பிளாக் செய்யுங்கள்.


*சந்தர்ப்பவாதிகள்*


சூழலுக்கு ஏற்ப மாற்றிப் பேசும் அல்லது நடக்கும் சந்தர்ப்பவாதிகளை நம்பவே நம்பாதீர்கள். இவர்களால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் என்பதால் தாராளமாக இவர்களை பிளாக் செய்யுங்கள்.


*தோல்வியை ஏற்காதவர்கள்*


வாழ்க்கை என்றால் வெற்றி தோல்வி வருவது சகஜம். ஆனால் தோல்வியை ஏற்காமல் சதா அதையே நினைத்து புலம்புபவர்களை பக்கத்தில் சேர்க்காதீர்கள். அந்த எதிர்மறை நமது வெற்றிக்கு தடையாகிவிடும்.


*சோம்பேறிகள்*


வெற்றிக்குத் தடையாக இருப்பதில் முக்கியமானது சோம்பல். எதையும் செய்யத் துணியாமல் சோம்பலாக இருப்பவர்களை அவர்கள் யார் என்றாலும் பிளாக் செய்து விடுங்கள்.


*ஈகோ உள்ளவர்கள்*


தான் என்ற ஈகோ உள்ளவர்கள் உங்களை முன்னேற விடாமல் நிச்சயம் தடுப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு தாங்கள் மட்டுமே முன்னணியில் இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆகவேதான் எனும் ஈகோ உள்ளவரை பிளாக் லிஸ்டில் வையுங்கள்.


*மரியாதை இல்லாதவர்கள்*


சுயமரியாதை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் முக்கியம். மரியாதை இன்றி பேசுபவர்கள் மற்றும் மரியாதை தராத நபர்களையும் பிளாக் செய்ய தயங்காதீர்கள்.


அண்டை நாட்டு அரசியல் - வங்கதேசம்...



  தினமணி - தலையங்கம்

   ****************************

அண்டை நாட்டு அரசியல் - வங்கதேசம்... 


இந்தியா வெளியே; சீனா உள்ளே!


விதியின் விளையாட்டு விசித்திரமானது. 


தனி தேசத்தை உருவாக்கிய தலைவரின் மகள், அதே நாட்டில் ராணுவ சா்வாதிகாரத்தை எதிா்த்துப் போராடுவது; சிறையில் அடைக்கப்படுவது; தோ்தலில் வெற்றிபெற்று ஒருமுறை அல்ல, ஐந்து முறை பிரதமராவது; கடைசியில் தனது 76-ஆவது வயதில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தப்பியோடி அண்டை நாட்டில் அடைக்கலம் தேடுவது - இதுதான் ஷேக் ஹசீனாவின் வாழ்க்கைப் பயணம்.


வங்கதேசமாக மாறிய கிழக்கு பாகிஸ்தானில் போராட்டங்களைத் தொடா்ந்து ஆட்சி மாற்றம் நிகழ்வது என்பது புதிதொன்றுமல்ல.


 பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டத்தில் உருவானதுதான் வங்கதேசம்.


ஷேக் முஜிபுா் ரஹ்மான் தலைமையில் அமைந்த அவாமி லீக் கட்சியின் ஆட்சியில் வங்கதேசத்தின் இஸ்லாமிய மதவாத கட்சியினா் தடை செய்யப்பட்டனா்.


 ஜனநாயகம், சோஷலிஸம், மதச்சாா்பின்மை, தேசியம் என்கிற அடிப்படையில் அரசமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டது. 


அது முதலே அடிப்படைவாத அமைப்புகளுக்கும், தேசியவாத கட்சிகளுக்கும் இடையேயான போராட்டம் இப்போது வரையில் வங்கதேசத்தில் தொடா்கிறது.


1975-இல் அடிப்படைவாத சக்திகள் ஷேக் முஜிபுா் ரஹ்மானையும், அவரது குடும்பத்தினரையும் படுகொலை செய்தன.


 அப்போது ஐரோப்பாவில் இருந்த ஹசீனா உயிா் தப்பினாா். அதற்குப் பிறகு இரண்டு ராணுவ புரட்சிகள் நடந்து ஜெனரல் ஜியாவுா் ரஹ்மான் தலைமையில் ராணுவ ஆட்சி நிறுவப்பட்டது. 


1981-இல் அவரும் படுகொலை செய்யப்பட்டாா்.


1982-இல் ஜெனரல் எா்ஷாத் தலைமையில் நடந்த ராணுவ புரட்சியைத் தொடா்ந்து புதிய ஆட்சி அமைந்தது.


 எா்ஷாதின் ஆட்சியை மத அடிப்படைவாதிகள் ஆதரித்தனா். இஸ்லாம் வங்கதேசத்தின் அதிகாரபூா்வ மதமாக அறிவிக்கப்பட்டது.


அவருக்கு எதிராக சிறையில் அடைக்கப்பட்டிருந்த முஜிபுா் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனாவும், ஜியாவுா் ரஹ்மானின் மனைவி கலீதா ஜியாவும் போராட்டத்துக்குத் தலைமை தாங்கினாா்கள்.


 ஜெனரல் எா்ஷாதின் ராணுவ ஆட்சி அகற்றப்பட்டது.


அது முதல் வங்கதேச அரசியல் ஷேக் ஹசீனா, பேகம் கலீதா ஜியா என்ற இருவரைச் சுற்றி வலம் வந்தது. 2009 தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து மூன்று முறை ஆட்சி அமைத்து நான்காவது முறையும் ஷேக் ஹசீனா வெற்றிபெற்ற நிலையில்தான் இப்போது போராட்டக்காரா்களை எதிா்கொள்ள முடியாமல் வெளியேறி இருக்கிறாா்.


ஷேக் ஹசீனாவின் கடந்த 15 ஆண்டு கால ஆட்சியில் வங்கதேசம் எத்தனையோ முன்னேற்றங்களைக் கண்டது. வங்கதேசத்து அரசியலில் மதவாதத்தை அகற்றி நிறுத்தி, மதச்சாா்பின்மையை அடிப்படைக் கொள்கையாக அறிவித்தவா் ஷேக் ஹசீனா.


 மிகவும் பின்தங்கியிருந்த வங்கதேசப் பொருளாதாரத்தை, வளா்ச்சி அடையும் பொருளாதாரமாக மாற்றிக் காட்டினாா். அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம், சா்வதேச தரத்திலான நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் என்று அந்த நாட்டின் கட்டமைப்பையே மாற்றியது ஷேக் ஹசீனா ஆட்சி.


அப்படியிருந்தும் ஹசீனாவுக்கு எதிராக புரட்சி வெடிக்கக் காரணம் என்ன என்று கேட்கலாம்.


 எதிா்க்கட்சிகளை மட்டுமல்ல, விமா்சனம் செய்பவா்களையும் தண்டிக்கும் சா்வாதிகாரப் போக்கின் விளைவுதான் மக்கள் மத்தியில் அதிகரித்த அதிருப்திக்கு காரணம்.


 ஜனநாயகமும், கருத்துச் சுதந்திரமும் இல்லாமல் போனாதால், ஆட்சியின் தவறுகள் வெளியில் தெரியவில்லை. அதுவே புரட்சிக்கு காரணம் எனலாம்.


போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் தேச விரோதிகள் அல்லா். அவா்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கொதித்து எழுந்தவுடன் ஹசீனா அரசு உயா்நீதிமன்ற உத்தரவை நிராகரிப்பதாகவும், நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்திருந்தாலே போதும்; நிலைமை கை மீறி போயிருக்காது.


மாணவா்களைத் தூண்டிவிடும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற மத அடிப்படைவாதக் கட்சிகளுக்கு எதிராக ஷேக் ஹசீனா தெரிவித்த ‘துரோகிகள்’ என்கிற கருத்து, மாணவா்களுக்கு எதிராகத் தெரிவிக்கப்பட்டது என்று பரப்புரை செய்யப்பட்டதில் தொடங்குகிறது ஹசீனாவின் பின்னடைவு.


இந்தியாவைப் பொறுத்தவரை நட்புறவு என்பதைக் கடந்து இரு நாடுகளுக்கு இடையே சுமாா் 12.90 பில்லியன் டாலா் (ரூ.1.08 லட்சம் கோடி) அளவில் 2023-24 நிதியாண்டில் வா்த்தகத் தொடா்பு காணப்படுகிறது.


 கடந்த நிதியாண்டில் வங்கதேசத்துக்கான இந்தியாவின் ஏற்றுமதி 11 பில்லியன் டாலா் (ரூ.92,331 கோடி). அதேபோல காய்கறிகள், உணவு தானியம் போன்றவற்றுக்கு வங்கதேசம் இந்தியாவைத்தான் சாா்ந்திருக்கிறது.


வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ஷேக் ஹசீனாவின் சீன விஜயத்தின்போதே ஐயப்பாடு எழுந்தது. 2016-இல் மிகப் பெரிய அளவில் வங்கதேசத்துக்கு உதவிகளை அறிவித்த சீன அதிபா் ஷி ஜின்பிங், இந்த முறை அவரைச் சந்திக்கவில்லை, எந்தவித உதவியும் அறிவிக்கவில்லை என்றபோதே அவா் மீதான சீனாவின் அதிருப்தி வெளிப்பட்டது. ஒரு நாள் முன்னதாகவே தனது பயணத்தை முடித்துக்கொண்டு ஹசீனா டாக்காவுக்குத் திரும்பிவிட்டாா்.


வங்க தேசத்தில் நடந்திருக்கும் ஆட்சி மாற்றத்தையும், ஷேக் ஹசீனாவின் வெளியேற்றத்தையும் எப்படி புரிந்துகொள்வது ?


 சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் - இந்தியா வெளியே, சீனா உள்ளே.


அதற்கு உதவியாக இருந்தது பாகிஸ்தானின் உளவு அமைப்பும், வங்க தேசத்தில் இயங்கும் இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிகளும்!


மதத்தின் அடிப்படையில் உருவான பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் பிரிந்ததற்கு மொழிசாா்ந்த இன வாதம் காரணம் என்றால், இப்போது மொழியைப் பின்னுக்குத் தள்ளி மதவாதம் உயா்ந்திருக்கிறது என்பதுதான் வங்கதேசப் பிரச்னையின் அடிநாதம்.


மாணவர்களுக்குக் கேடு விளைவிக்கும் அரசாணையால் அதிகரிக்கும் ஆளற்ற வகுப்பறைகள்...

 


#மாணவர்களுக்குக்கேடு_விளைவிக்கும்_அரசாணையால்_அதிகரிக்கும்_ஆளற்ற_வகுப்பறைகள்!


தோழர் மணி கணேசன் பதிவு


பல் இருப்பவர்கள் பட்டாணி தின்ற கதை போல் ஆகிவிட்டது. தற்போது வரை கூவிக்கூவி நடந்து கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் ஒன்றிரண்டு ஆசிரியர்களுக்கு. பதவி உயர்வுகளற்ற பொது மாறுதல் என்பது குக்கிராமங்களில், மலை கிராமங்களில், தீவு போன்ற வசதிகளற்ற ஊர்களில் படிக்கும் ஏழை, எளிய, அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலை குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியே ஆகும். 


சபிக்கப்பட்ட வரமாக விளங்கும் 243 எனும் ஒற்றை அரசாணையினால் ஒட்டுமொத்த வக்கற்ற நிலையில் வேறுவழியின்றி அரசுப் பள்ளிகளில் தஞ்சம் புகுந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. 


தொடக்கக்கல்வி வரலாற்றில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஆசிரியர்களும் எந்தவொரு சேதாரமும் இல்லாமல் கூண்டோடு அதுநாள்வரை தாங்கள் பணிபுரிந்து வந்த பள்ளியையும் அப்பள்ளியை நம்பி வந்த அப்பாவிக் குழந்தைகளையும் அம்போவென்று அநாதையாகக் கைவிட்டு, தமக்கு எல்லா வகையிலும் வசதியான பள்ளிகளுக்குப் பறந்த கதை கொடுமையானது. 


நகர ஈட்டுப்படி மற்றும் வீட்டு வாடகைப்படி அதிகமுள்ள பெருநகரங்களில் உள்ள பள்ளிகளை இந்த பொது மாறுதலில் ஆசிரியர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு மொய்த்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும். இதனால் முக்கியமான நகரங்களில் உள்ள முக்கியமான பள்ளிகளில் இருந்த பணி நிறைவு, இறப்பு, விருப்ப ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் அனைத்தும் இப்போது நிரம்பி வழிகின்றன. 


அதேவேளையில், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளற்ற குக்கிராமப்புற பள்ளிகளில் உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா என்பது போல இதுவே தக்க தருணம் என்று பலரும் ஓடிவிட்டனர். இனி தரமான கல்வி மட்டுமல்ல சமத்துவமான கல்வி கிடைப்பதும் இப்பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு அரிதாகி விடும். இந்த அவலநிலை அடுத்து நிரப்பப்படும் புதிய பணியிடங்கள் மற்றும் கடந்த ஓராண்டாக கானல் நீர் போல் காணப்படும் பதவி உயர்வுகள் ஆகியவற்றால் மட்டுமே போக்கப்படும். பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக ஏற்பாடாக, கடந்த கல்வியாண்டு போலவே நியமிக்கப்படும் தன்னார்வ தொகுப்பூதிய ஆசிரியர்களால் பள்ளிப் பிள்ளைகளுக்குக் கல்வி கிடைக்கும். நிரந்தர ஆசிரியர்களால் மட்டுமே நல்ல தரமான கல்வி தொடர்ந்து கிடைக்கும் என்பதுதான் உண்மை.


பதவி உயர்வுகளற்ற இந்த அசாதாரண சூழலில் பொது மாறுதல் கலந்தாய்வு என்பதே தேவையற்றது. இதில் விடுபட்டவர்களுக்கும் ஏற்கனவே கலந்தாய்வில் கலந்து கொள்ளாதவர்களுக்கும் மீண்டும் மற்றுமொரு கலந்தாய்வு என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதற்கு ஈடானதாக உள்ளது. மாவட்டத்திற்கு ஐந்து விழுக்காட்டினர் மட்டுமே தம் சொந்த விருப்பத்தின் பேரில் பிற மாவட்டங்களில் பணி நியமனமும் பதவி உயர்வும் பெற்று ஒரு சில அசௌகரியங்களுடன் பணிபுரிந்து வருகின்றனர். 


இவர்களுள் ஒன்று அல்லது இரண்டு விழுக்காட்டினர் மட்டுமே இதன் முழுப்பலனை அனுபவித்துள்ளனர். மீதமுள்ளோர் தெரிந்த பேய்களிடமிருந்து தப்பித்து முன்பின் தெரியாத பிசாசுகளிடம் அகப்பட்டு உள்ளனர். அவர்களுள் சிலர் உரிய உகந்த உன்னத இடம் கிடைக்கப்பெறாமல் ஏமாந்து போய் நொந்துள்ளதையும் கூர்ந்து கவனிப்பது நல்லது.

ஆகா! எழுந்தது பார் ஒரு யுகப் புரட்சி என்று வெற்றுக் கூச்சலும் போலியான குதூகலமும் அப்பாவி ஆசிரியர்கள் மத்தியில் பேராசை கிளப்பும் வீணான குழப்பமும் ஏற்படுத்துவதில் ஒரு பயனும் இல்லை. இஃது ஏதோ யாரையோ யாருக்கோ ஓர் உள்நோக்கத்திற்காகக் கைப்பிடித்து, கால்பிடித்துப் பின் காக்காப் பிடிப்பது போலிருக்கிறது. 


குண்டடிப்பட்டு, குதிரை கொண்டு ஏவிய குண்டாந்தடி அடிபட்டு, சிறை அகப்பட்டு, குருதி சிந்தி உயிரை விட்டு, உதித்த போதே ஆசிரியர்கள் நலனுக்காகப் போராட்டத்தில் குதித்த, இன்றைய ஆட்சியாளர்களுக்கு அனுசரனையானவர்கள் என்று கடந்த ஆட்சிக் காலத்தில் பணியிலிருந்து ஒட்டுமொத்தமாக விரட்டி அடிக்கப்பட்டுப் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான, இப்போதும் திருடனுக்குத் தேள் கொட்டியது போல் செய்வதறியாமல் திருதிருவென முழித்துக் கொண்டிருக்கும் பழம் பெருமை வாய்ந்த அரை நூற்றாண்டுகளைக் கடக்கும் தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களைச் சிதைத்து சீர்குலைத்திடும் கருப்பு அரசாணையாகவே இந்த 243 இருப்பது குறிப்பிடத்தக்கது.


மாநில முன்னுரிமை என்னும் தேன் தடவிய நஞ்சால் தற்போது முதலில் பாதிக்கப்பட்ட சமூகமாக மாணவ சமுதாயம் ஆட்பட்டுள்ளது வேதனைக்குரியது. 


இதன் அடிப்படையில் பதவி உயர்வு என்று வரும்போது தான் ஆசிரியர்கள் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் எத்தகைய கொடும் இன்னல்களுக்கு ஆளாகப் போகின்றார்கள் என்று தெரியவில்லை. பள்ளிக் கல்வித்துறையில் இது நடக்கவில்லையா என்று பலர் வினவுவது புரியாமல் இல்லை. 


பள்ளிக்கல்வியின் கீழ் செயல்படும் உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகளோடு தொடக்கக்கல்வித்துறையில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை ஒருபோதும் ஒப்பிட முடியாது. வாகனப் புகை படியாத எளிதில் போக முடியாத எத்தனையோ இருண்டு கிடக்கும் குக்கிராமங்களில் தொடக்கப்பள்ளிகளே சிமிழி வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றன என்பது நினைவுகூரத்தக்கது. 


பண்டைத் தமிழ்ச் சமூகம் பாகுபடுத்தி வைத்திருக்கும் ஐவகை நிலங்களில் எல்லோரும் தம்மைப் புதிய சூழலுக்குத் தகவமைத்துக் கொண்டு வாழ்வது என்பதும் உழைப்பது என்பதும் அவ்வளவு எளிதான செயலல்ல. 


இவற்றையெல்லாம் புரிந்து வைத்துக்கொண்டு தான் முன்னோர்கள் படித்த, தகுதிவாய்ந்த அந்தந்த மண்ணின் மைந்தர்களை அந்தந்த பகுதிப் பள்ளிகளில் முடிந்தவரை பணியமர்த்தி வந்துள்ளது எண்ணத்தக்கது.


ஒன்றிய முன்னுரிமை என்பது இந்த அடிப்படையில்தான் கொண்டு வரப்பட்டது. சொந்த வட்டார வழக்கில் தம்முடன் மிக அணுக்கமாகவும் இணக்கமாகவும் மொழியளவிலும் கருத்தளவிலும் தொடர்பு கொள்பவர்களைக் கூட மனத்தளவில் பகுதியளவு மட்டுமே தம் இரண்டாம் பெற்றோராக ஆசிரியர்களைக் குழந்தைகள் ஏற்கத் துணிவது அறியத்தக்கது. வளர்ப்பு விலங்குகளிடம் காணப்படும் மனிதர்கள் மீதான பயமற்ற தன்மை இன்றளவும் மனிதர்கள் கொஞ்சி வளர்க்கும் பறவைகளிடத்தில் காண்பது அரிது. அவை மனிதர்களை மனிதர்களாகத் தான் உற்றுநோக்கி வருகின்றன. 


குழந்தைகளும் அவ்வாறே என்பதை குழந்தை உளவியல் வழி உணரவியலும். மொழி அளவில் வேறுபடுபவர்கள் அனைவரும் அவர்களைப் பொறுத்தவரை வேற்றுக் கிரகவாசிகளாகவே நினைக்கப்படுவர். வேற்று மாவட்ட ஆசிரியர்களின் பேச்சு வழக்குகள் அனைத்தும் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளூர புரிந்தவை கேலிப் பொருளாகவும் புரியாதவை வெறுப்பு உணர்ச்சியாகவும் சிறுவர் சிறுமியரிடம் வெளிப்படுவது இயல்பு. 


முதலில் ஆசிரியர்கள் தம்மை இத்தகைய சூழலுக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொள்வதென்பது மிகவும் சிக்கலான, சிரமமான காரியமாகும். குறிப்பாக, நுகத்தடி மாந்தர்களாகப் பழக்கப்படுத்தப்பட்ட இந்நாள் மற்றும் எதிர்கால இல்லத்தரசிகள் குடும்பத்தையும் குழந்தைகள் வளர்ப்பையும் பெற்றோர்கள் கவனிப்பையும் சுகமான சும்மாடாகத் தலையில் தூக்கிச் சுமக்கும் பெண் ஆசிரியர்கள் மாவட்டம் கடந்த பதவி உயர்வுகளை எந்த அளவிற்கு வரவேற்று புன்முறுவலுடன் ஏற்கப் போகின்றார்கள் என்று தெரியவில்லை. ஏனெனில், இப்போதுதான் அதற்கான இக்கட்டான சூழல் நேர்ந்திருக்கிறது. 


ஒரு கடற்கரைவாசி திடீரென்று மலைவாசியாகவோ, ஒரு மலைவாசி நொடிப்பொழுதில் சமவெளிவாசியாகவோ, ஒரு சமவெளிவாசி எல்லாவற்றையும் கணப்பொழுதில் இழந்து வறண்ட நிலவாசியாகவோ ஒப்பற்ற ஓர் அரசாணை மூலம் நிர்வாக மாறுதல் மற்றும் பதவி உயர்வு காரணங்களால் எந்த அளவிற்கு இமைக்கும் பொழுதில் உருமாற முடியும் என்று விளங்கிக்கொள்ள முடியவில்லை. இதன் உள் மற்றும் நுண் அரசியலைச் சற்றும் புரிந்துகொள்ள விரும்பாத நுனிப்புல் மேய்ந்து ஆன்ம திருப்தி கொள்பவர்கள் ஒன்றை உணர்வது நல்லது. 


இந்த அரசாணையால் அனைத்து முட்டுக்கட்டைகளும் அகற்றப்பட்டு விட்டன. இனி அரசின் இரும்புக் கரங்கள் யாரை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் உபரிகள் என்றோ உதிரிகள் என்றோ அரசுக்கு எதிரானவர்கள் என்றோ தண்ணீரில்லாத காட்டுக்கு மட்டுமல்ல முன்பின் பழக்கமில்லாத மேட்டுக்கும் நிர்வாகம் சார்பில் தூக்கி எறியலாம். இது நடக்காது என்று இப்போது மார்தட்டிக் கொண்டிருக்கும் குய்யோ முறையோ சாலராக்கள் உறுதிபட சொல்ல முடியுமா என்பது கேள்விக்குறி. இந்தப் புதுச் செருப்பு மிகவும் வித்தியாசமானது. புதிதில் கடிக்காது. போகப்போகத் தான் தம் கோர முட்களைக் காட்டப் போகின்றது.


இதனால் மூத்தோர் இளையோர் ஒப்பீட்டு ஊதிய முரண்பாடு களைதல், பதவி இறக்கம் இல்லாமல் பணியிட மாறுதல் நிகழ்தல், முன்னுரிமை இழக்காதத் தன்மை, விரும்பியவாறு விரும்பும் இடத்திற்கு இடம் பெயர்தல் முதலான நன்மைகள் இல்லாமல் இல்லை. இவையனைத்தும் விதிவிலக்குகள். இதனைப் பொதுமைப்படுத்துதல் ஒருபோதும் இயலாது.


இருக்கின்ற பள்ளியில் இருக்கின்ற பணிகளை முடிக்கவே நேரம் கிடைக்காத நிலையில் தலைமையாசிரியர் இல்லாத பள்ளிகளையும் அவற்றின் நிதி மேலாண்மைகளையும் கவனித்துக் கொள்ளும்படி கூடுதல் பொறுப்பை வழங்குவது என்பது பணிச்சுமையேயாகும். மாணவர் பாதுகாப்பை அதிகம் வலியுறுத்தும் இந்தக் காலகட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் குறைந்த தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட இருக்கும் தற்காலிக ஆசிரியர்களின் கவனக்குறைவால் ஏற்படும் நிகழ்வுகளுக்கும் இழப்புகளுக்கும் பொறுப்பு ஏற்பது யார்? 


ஒரு நிரந்தர ஆசிரியரை இதுகுறித்து தண்டிக்க ஏராளமான வழிவகைகள் உள்ளன. அவர்களது அத்தனைக் குடுமியும் அரசின் கையில் உள்ளது. வெறும் கல்வித் தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு நிரந்தர ஆசிரியருக்கு கல்வித் துறையால் திட்டமிட்டு வழங்கப்படும் பணியிடைப் பயிற்சிகள் ஏதும் வழங்கிட சாத்தியம் இல்லாத நிலையில் தரமான கல்வி கிடைக்கச் செய்வது என்பது முயற்கொம்பே ஆகும். 


தலைமையாசிரியரே இல்லாத பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் மட்டும் இருக்கும் பள்ளிகளின் கல்வி பயிலும் பச்சிளம் குழந்தைகளின் நிலைமையை எண்ணிப்பார்க்கவே மிகவும் வேதனையாக உள்ளது. அதற்காக அத்தகையோர் மோசமானவர்கள் என்று வாதிடுவது இங்கு நோக்கமல்ல. 


அசாதாரண சூழலில் நிகழும் அசாதாரண நிகழ்வுகளுக்கும் பள்ளித் தளவாடங்கள் மற்றும் குழந்தைகளுக்கும் பொறுப்பேற்பது யார் என்பதுதான் இங்கு கேள்வி.

 650 க்கும் மேற்பட்ட மேனிலைப் பள்ளிகள், 425 க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகள், 1900 க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகள் மற்றும் 1000 க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகள் உள்ளிட்ட  அரசுப் பள்ளிகள் இப்போது தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கிக் கொண்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் வழி அறிய முடிகிறது. 


இதுதவிர, தொடக்கக்கல்வித் துறையில் மட்டும் 1850 க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் 4450 க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் பல்வேறு காரணங்களால் காலியாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இத்தகைய பள்ளிகளில் படிக்கும் பத்து, பதினோராம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ளோர், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தேர்வில் கலந்து கொள்வோர், எண்ணும் எழுத்தும் திட்டத்தில் உள்ள 1 - 5 வகுப்பு குழந்தைகள் நிலை குறித்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இங்குள்ள அனைவருக்கும் உள்ளது.

பதவி உயர்வுகள் வழியும் புதிய பணியிடங்கள் நிரப்புதல் வழியும் அனைத்தும் சரியாகி விடும் என்று பரப்புரை செய்யவும் அச்சமாக இருக்கிறது. ஏனெனில், கடந்த 2014 க்குப் பின்னர் முறையான பணி நியமனம் தோற்றுவிக்கப்படவில்லை. 


சலித்து சலித்து எடுக்கப்பட்ட உபரி பணியிடங்களைத் தொடர்ந்து பணிநிரவல் செய்து நிரப்பியது போக எஞ்சியிருக்கும் காலிப்பணியிடங்கள் புள்ளிவிவரங்கள் தாம் மேற்சொன்னவை ஆகும். இதில் அரசு உதவி பெறும் பள்ளிகளும் ஒன்றும் தப்பவில்லை. கடந்த கல்வியாண்டு முதல் இந்த நொடி வரை பதவி உயர்வுகள் எட்டாக் கனியாகவே இருந்து வருவது வேதனைக்குரியது. 


தொடர்ந்து நீதிமன்ற வழக்குகளைக் காரணம் காட்டி கொள்கை முடிவெடுத்து அறிவிக்கும் பல நல்ல வாய்ப்புகள் இருந்தும் ஏனோ நாடு போற்றும் திராவிட மாடல் அரசைப் பற்றி ஆசிரியர்கள் மத்தியில் ஒருவித காழ்ப்புணர்ச்சியும் எதிர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்தும் வகையில் அதிகார வர்க்கம் தவறான வழியில் வழிநடத்தி உரிய காலத்தில் உகந்த தீர்வு எட்டப்படுவதை விரும்பாமல் காலம் கடத்துகிறதோ என்று பலவாறு கருதுவதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டுவதோடு அல்லாமல் பலவகையான போராட்டங்களை முன்னின்று நடத்துவதன் வழி அறிய முடிகிறது. 


இந்த அரசாணையால் குறுகிய காலத்தில் கலந்தாய்வில் கலந்துகொண்டு பலன் அடைந்தவர்களைக் காட்டிலும் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். குறிப்பாக, மாணவர்கள். அனுமார் வால் போன்று நீண்டு கொண்டே செல்லும் பணி மாறுதல் கலந்தாய்வும் கூடவே தள்ளிக்கொண்டே போகும் பதவி உயர்வுகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு சார்ந்த வழக்குகளும் தீர்ப்புகளும் ஒருவழியாக முடிவுக்கு(?)  வரும்போது ஆளற்ற வகுப்பறையில் மாணவர்கள் முதல் பருவம் மற்றும் காலாண்டுத் தேர்வுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கும் கொடுமையை என்னவென்பது?


கடந்த இரண்டு கல்வியாண்டாக தமிழகம் முழுவதும் நிரப்பப்படாமல் குவிந்து கிடந்த காலிப்பணியிடங்களுக்கு, குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையாகப் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் கிடைத்திட்ட அரசாணை 243 அடிப்படையில் நடந்த பொது மாறுதல் கலந்தாய்வை, புதிய ஓய்வூதியத் திட்ட ஒழிப்பை மட்டுமே ஒற்றைக் கோரிக்கையாக முன்னிறுத்தியவர்களும் சம வேலைக்கு சம ஊதியம் அடைந்தே தீருவோம் என்று ஒற்றை முழக்கத்தை ஓங்கி ஒலித்தவர்களும் அரசியல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆஹா ஓஹோ என்று ஆர்ப்பரிப்பதைப் பார்க்கவே வேதனையாக உள்ளது. 


முடிவாக, பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கு வந்த கதையாக அவசர கதியில் அள்ளித் தெளித்த கோலம் அலங்கோலமாக ஆனதுடன் சிறைப்பட்டுச் சின்னாபின்னமாகிக் கிடக்கின்றன...


பள்ளிக்கல்வித்துறை மீது ஆசியர்களுக்கு அதிருப்தி மேல் அதிருப்தி' - பின்னணி என்ன? - விகடன் கட்டுரை...



பள்ளிக்கல்வித்துறை மீது ஆசியர்களுக்கு அதிருப்தி மேல் அதிருப்தி' - பின்னணி என்ன? - விகடன் கட்டுரை...

 

"சமீபத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை 243 ஆசிரியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது" - தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 29-ம் தேதி டிபிஐ வளாகம் முன்பு நடந்த போராட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். 


அப்போது அவர்கள், "பதவி உயர்வில் பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆசிரியர்களை குண்டுக்கட்டாக போலீஸார் தூக்கிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இது குறித்து தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில் பேசுகையில், "போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை. ஆனால் போராட்டத்தை தொடங்கும் முன்பாகவே போலீஸார் எங்களை கைது செய்கிறார்கள். 


இந்த ஜனநாயக விரோத போக்கை கைவிட வேண்டும். தொடர்ச்சியாக ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தை இந்த அரசு செவி கொடுத்து கேட்பதில்லை. கடந்த முறை நாங்கள் போராட்டம் நடத்தியபோது 'எங்களின் 30 அம்ச கோரிக்கைகளில் 12 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என தொடக்கக் கல்வி இயக்குநர் உறுதி அளித்தார்.


ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, பதவி உயர்வில் பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பதையும் சேர்த்து 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கியுள்ளோம். 


இந்த ஒரு அரசாணையால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் ஆசிரியைகள்தான். எனவே, இந்த அரசாணையை உடனே ரத்து செய்வதுடன், மற்ற கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும்" என்றனர்.


இது குறித்து நம்மிடம் பேசிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, "ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமானது. அரசு அவர்களுடன் பேசி குறைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருபக்கம் ஆசிரியர்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். 


மறுபக்கம் அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. இது நியாமான அணுகுமுறை இல்லை. குறிப்பாக சமீபத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை 243- தான் ஆசிரியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது ஒன்றிய அளவில் சீனியாரிட்டி வைத்து டிரான்ஸ்பர் கொடுத்து வருகிறார்கள்.


இந்த அரசாணையின் மூலம் மாநில அளவில் சீனியாரிட்டி வைத்து டிரான்ஸ்பர் கொடுக்கிறார்கள். இதனால் ஒன்றிய அளவில் மூத்தவர்களாக இருக்கும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கான பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. 


பலருக்கு பதவி உயர்வு இல்லாமலேயே ஓய்வு பெறும் சூழல் உருவாகியிருக்கிறது. எனவேதான் பழைய முறையை கொண்டுவர என ஆசிரியர்கள் கேட்கிறார்கள். இது நிர்வாகத்தின் எளிமைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைதான். கல்வி சார்ந்தோ, மாணவர்களின் நலன் சார்ந்தோ, சமூகத்தின் தேவைகளின் அடிப்படையிலோ நடவடிக்கை எடுக்கவில்லை.


எனவே ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். மேலும் ஆசிரியர்களுக்கு கற்றல், கற்பித்தலில் பாதிப்பு ஏற்படுத்தும் வேலைகளை கொடுக்க கூடாது. குறிப்பாக பள்ளியின் அனைத்து செயல்பாடுகளையும் வலைத்தளத்தில் ஏற்றும் வேலையை ஆசிரியர்களுக்கு கொடுக்கிறார்கள். 


அதில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்கிய பாடநூல்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் படத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்கிறார்கள். இவ்வாறு அனைத்து மாணவர்களின் விவரங்களையும் பதிவேற்றம் செய்ய எவ்வளவு காலம் ஆகும். இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்திக்கொண்டு இருந்தால் கற்றல், கற்பித்தலில் எப்படி கவனம் செலுத்த முடியும். எனவே அரசு ஆசிரியர்களை தொந்தரவு செய்யக் கூடாது" என்றார்.


மூளையைத் தின்னும் அமீபா குறித்த மருத்துவரின் கட்டுரை...



மூளையைத் தின்னும் அமீபா குறித்த மருத்துவர் Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா அவர்களின் கட்டுரை...


 கேரளாவின் மலப்புரத்தில் குட்டையில் குளித்த ஐந்து வயது சிறுமி மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு இறந்திருக்கிறாள். 


இறப்பிற்கான காரணமாக இருந்தது 

"நிக்லேரியா ஃபவுலேரி" (Naeglaria fowleri)  எனும் ஒரு செல் உயிரி. 


அமீபா என்று உயிரியலில் படித்திருப்போம் தானே..? 

அந்த வகையைச் சேர்ந்த 

பாக்டீரியாக்களை உணவாக உட்கொள்ளும் ஒரு செல் உயிரி இது. 


இந்த நிக்லேரியா  -  அசுத்தமான குளம் , குட்டை , முறையாக க்ளோரினேற்றம் செய்யப்படாத நீச்சல் குளங்கள் போன்றவற்றில் காணப்படும். 


குறிப்பாக குளிர்ச்சியான நீரை விடவும்  வெப்பமான வெதுவெதுப்பான நீரில் வாழும் தன்மை கொண்டவை. 


இந்த அமீபாக்கள் தேங்கியிருக்கும் நீரின் கீழ்ப்பகுதியில் இருக்கும் சேறு சகதியில் வாழும்.  குளிக்கும் போது கலக்கும் போது மேலே எழும்பி நீரில் கலந்திருக்கும். 


இத்தகைய அமீபாக்கள் வாழும்  நீரில் குளிக்கும் போது மூக்குக்குள் நீர் புகும் நிலை ஏற்படும் போது 


மூக்கினுள் க்ரிப்ரிஃபார்ம் தகடு என்ற எலும்பு உள்ளது. இந்த எலும்பில் சிறு சிறு ஓட்டைகள் இருக்கும். அதன் வழி நம் நுகர்தலுக்குத் தேவையான நரம்பு கிளை பரப்பி நாசியின் சுவர்களுக்குள் படர்ந்திருக்கும். 


இந்த அமீபா இருக்கும் நீரை மூக்குக்குள் உள்ளிளுக்கும் போது

நுகர்தலுக்கான நரம்பில் ஒட்டிக்கொண்டு மேலே மூளை நோக்கி ஏறிச்செல்லும் தன்மை கொண்டது. 


உள்ளே நுழைந்ததில் இருந்து மூன்று முதல்  பத்து நாட்களுக்குள்

நோய்க்கான அறிகுறிகளை வெளிப்படுத்தும். 


முதலில் தீவிர காய்ச்சல் 

அடங்காத தலை வலி 

என்று ஆரம்பித்து பிறகு 


மூளைக்காய்ச்சல் அறிகுறிகளான

பின் கழுத்துப் பகுதி இறுக்கம்

குமட்டல் / வாந்தி 

தலை சுற்றல் 

வலிப்பு ஏற்படுதல் 

பேதலிப்பு நிலை 

மூர்ச்சை நிலை 

கோமா 

இறப்பு ஏற்படக்கூடும் 


இந்த அமீபா - நரம்புகளின் நியூரான்களைத் தின்று உயிர்வாழும் தன்மை கொண்டது என்பதால் மூளையைச் சிறுகச் சிறுக உணவாக உட்கொள்ளும். இதனால் இதற்கு மூளை திண்ணும் அமீபா என்ற பெயரும் உண்டு. 


பெரும்பாலும் நோயின் அறிகுறிகள் ஏற்பட்ட ஒரு வாரத்திற்குள் மரணம் சம்பவிக்கும்


மரணத்திற்கான முக்கிய காரணம் 

இந்த நோயின் அறிகுறிகள் அனைத்தும் 

பாக்டீரியா எனும் மற்றொரு ஒரு செல் உயிரி ஏற்படுத்தும் மூளைக்காய்ச்சல் போன்றே இருக்கும் என்பதாலும்

இந்த அமீபா தொற்று அரிதிலும் அரிதானது என்பதாலும் 


நோய் கண்டறிதலில் தாமதம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. 


இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் - வேனில் காலங்களில் குளம் குட்டைகளில், நீச்சல் குளங்களில் அதிகமானோர் நீராடும் வழக்கம் உள்ளது. 


எனவே கட்டாயம் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு மருத்துவர்களுக்கும் பொது மக்களுக்கும் இருப்பது பல உயிர்களைக் காக்கும். 


இந்தக் கிருமித் தொற்று ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவாது.  


இந்த அமீபா தொற்று - பாக்டீரியா தொற்று போலவே தெரிந்தாலும் 

பாக்டீரியா கொல்லிகள் என்றழைக்கப்படும் ஆண்ட்டிபயாடிக்குகளுக்கு அடங்காது.


இதற்கென பிரத்யேகமான மருந்தாக 

ஆம்ஃபோடெரிசின் - பி என்பது விளங்குகிறது. 

ஆம்... கோவிட் தொற்று ஏற்பட்ட காலத்தில் உப கொள்ளை நோயாக உருவெடுத்த கருப்பு பூஞ்சை ( ம்யூகார் மைகோசிஸ்) தொற்றுக்கு இந்த மருந்து தான் கேட்டது. 


இந்த அமீபா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதை 

சரியான நேரத்தில் கணித்து 

மூளை தண்டு வட நீரில் இருந்து இந்த அமீபாவைக் கண்டறிந்து 

உடனடியாக ஆம்ஃபோடெரிசின்- பி  சிகிச்சை வழங்கிட வேண்டும். 


தமிழ்நாட்டில் நிக்லேரியா தொற்றுக்கு உள்ளான 47 வயது நபர் ஒருவருக்கு சரியான நேரத்தில் நோய் கண்டறியப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டதில் உயிர்பிழைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த அமீபா மூளையின் முக்கிய மண்டலங்களை தின்று முடிப்பதற்குள் விரைவாகக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அத்தனை எளிதல்ல. 


அதனாலேயே இந்த நோயின் இறப்பு உண்டாக்கும் சதவிகிதம் கிட்டத்தட்ட 100% 


இதுவரை உலகில் ஐநூறுக்கும் குறைவான நோயாளிகளே இந்த அமீபா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக மருத்துவ ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. 


இந்தியாவில் ஐம்பதுக்கும் குறைவான ஆதாரங்களே பதிவாகி உள்ளன. 


எனினும் முறையாகப் ஆவணப்படுத்தப்படாத 

ரிப்போர்ட் செய்யப்படாத

அல்லது தவறுதலாக பாக்டீரியாவினால்/ வைரஸினால் ஏற்படும் மூளைக்காய்ச்சல் என்று ஆவணப்படுத்தப்பட்ட நோயர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். 


இந்தியாவில் இறப்பிற்கான காரணங்களை பிரேதக் கூறாய்வு மூலம் அறிவது மருத்துவ- சட்ட ரீதியான வழக்குகளுக்கு மட்டுமே கட்டாயமாக உள்ளது என்பதால் 

இது போன்ற மூளைக்காய்ச்சல் மரணங்களில் இந்த அமீபா தொற்றின் பங்கு குறித்து நம்மால் சரியான எண்களை அறிய முடியாமல் போகிறது. 


இந்த அமீபா தொற்று  ஏற்படாமல் எப்படி காத்துக் கொள்வது? 


- தேங்கி இருக்கும் குளம் குட்டை கண்மாய் போன்றவற்றின் அடிப்பகுதி சகதியை இயன்றவரை கிளறி விடாமல் குளிப்பது நல்லது


- இத்தகைய தூய்மையற்ற நீரில் மூழ்கிக் குளிப்பதை கட்டாயம் தவிர்த்து விட வேண்டும். இந்த அமீபா மூக்கு துவாரம் வழியாக மட்டுமே மூளையை அடைய முடியும். 


அசுத்தமான தண்ணீரைக் குடிப்பதால் அந்த நோய் ஏற்படுவதில்லை. 


எனவே மூக்குப் பகுதிக்குள் நீர் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 


- நீச்சல் குளங்களில் சரியான முறையில் க்ளோரினேற்றம் செய்யப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். 

நீச்சல் பயிற்சி செய்யும் போது நோஸ் க்ளிப் அணிந்து கொள்வது சிறந்தது. 


- சில நேரங்களில் அசுத்தமான நீரில் 

மூக்கு துவாரங்களைக் கழுவுவதாலும் இந்த தொற்று பரவக்கூடும். இஸ்லாமியர்கள் - தொழுகைக்கு முன்பு செய்யும் ஒளு எனும் தூய்மை செய்யும் முறையில் மூக்கு நாசிக்குள் நீரை உறிஞ்சி சுத்தப்படுத்துவர். அத்தகைய நீர் தூய்மையானதாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். 


 - இது போன்ற குளம் குட்டை கண்மாய்களில் குளித்த பத்து நாட்களுக்குள் காய்ச்சல் / தலைவலி / கழுத்துப் பகுதி இறுக்கம் / வலிப்பு  போன்றவை ஏற்படின் தாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் ஆகி 

மருத்துவரிடம் தாங்கள் எப்போது? எங்கு? குளித்தோம் என்பதை தெளிவுபடுத்திட வேண்டும். 

இது விரைவில் நோயைக் கண்டறிய உதவும். 


குளம், குட்டைகளில் கண்மாய்களில் நீச்சல் குளங்களில் குளிக்கும் அனைவருக்கும் இந்தத் தொற்று ஏற்படுவதில்லை. 


அரிதிலும் அரிதாகவே இந்தத் தொற்று ஏற்படுகிறது. 


அது அவரவர் எதிர்ப்பு சக்தியைப் பொருத்தும் அமைகிறது. 


எனவே இந்தத் தொற்று குறித்த அதீத அச்சம் தேவையற்றது. 

மாறாக நிறைய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. 


வளர்ந்த நாடுகளில் இந்த அமீபா குறித்தும் அமீபா வாழும் நீர்நிலைகள் குறித்தும் விழிப்புணர்வு அதிகம் இருக்கும். 


வெப்ப மண்டல நாடான நமக்கும் அத்தகைய விழிப்புணர்வு தேவை என்பதே இந்தப் பதிவின் நோக்கம். 


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை



>>> மூளையைத் தின்னும் அமீபா - மூன்று பேர் உயிரிழப்பு - தமிழ்நாடு சுகாதாரத்துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு...


தடைகளைத் தகர்த்த தன்னம்பிக்கை...




தடைகளைத் தகர்த்த தன்னம்பிக்கை...


 "பிழைக்கத் தெரியாத முட்டாள்" என்று 18 வயது இளைஞனை அவனது அப்பா திட்டினார்...


தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன் என்று கேலி பேசினார்கள் அவனது நண்பர்கள்.


அந்த இளைஞன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை செய்துக் கொண்டிருப்பார்கள்.

அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியை தனதாக்கிய அந்த மாமனிதன் தான் “சாய்க்கிரோ ஹோண்டா”.


தனது வாழ்க்கை அனுபவத்தை சாறு பிழிந்து எடுப்பது போன்று “வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே” என்று அந்த இளைஞன் சொன்னார்.


Toyoto நிறுவனத்திற்கு piston (உந்துருளி) தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்க வேண்டும் என்பது மாணவர் சாய்க்கிரோ ஹோண்டாவின் கனவு.


யாருக்காகவும் அவன் காத்திருக்கவில்லை. அப்பாவின் திட்டு , சக மாணவர்களின் கேலிகளுக்கு இடையே, மாதிரி உலோகம் உருக்கும் கூடம் ஒன்றை 1928ஆம் ஆண்டு உருவாக்கினார்.


இதற்காக இரவு பகலாக உழைத்தார். ஓராண்டு காலமாக கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய, மாதிரி piston ஐ பெரும் எதிர்பார்ப்புடன் Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.


எங்கள் எதிர்பார்ப்புக்குரிய தரத்தில் உனது piston இல்லை என்று நிராகரித்துவிட்டார்கள் பொறியியளாளர்கள்.


முதலாவது கனவுத் திட்டம் படுதோல்வி அடைந்தது. மனம் பாரமாக இருந்தது. திரட்டி வைத்த முதலீடு மொத்தமும் வீணாகியது. எல்லோரும் தங்களது கேலிகளை பொழிந்தார்கள்.


புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மனப் பக்குவத்தோடு, ஹோண்டா மீண்டும் முயற்சித்தார்.

மேலும் பல மாதங்கள் விடாப்பிடியாக உழைத்து அவர் உருவாக்கிய புதிய piston மாதிரியை Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார். 


அருமை என்று பாராட்டிToyoto நிறுவனம் ஏற்றுக்கொண்டது. தயாரிப்புக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. 


மனதுக்குள் சிறிய வெற்றிக் களிப்பு கொண்ட சாய்க்கிரோ ஹோண்டா பெரிய தொழிற்கூடம் கட்டினால் தான் அவர்கள் கேட்கும் எண்ணிக்கையிலான piston தயாரிக்க முடியும்.

எனவே, கட்டடம் கட்டத் திட்டமிட்டார் ஹோண்டா. 


அப்போது ஜப்பான் நாடு உலகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்ததால், அங்கே வரலாறு காணாத சிமெண்ட் தட்டுப்பாடு.


எவ்வளவோ முயற்சி செய்தபோதும் 10 மூட்டை சிமெண்ட் கூட கிடைக்கவில்லை. 

ஒழுங்காக ஏதாவது வேலையில் போய்ச் சேர்ந்துவிடு என அவரது அப்பா கூறினார், வாழ்க்கை முழுவதும் ரிஸ்க் எடுத்துக்கொண்டே இருப்பாயா என்றார் உயிர் நண்பன்.


இவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காது சிமெண்ட் கலவைக்கு இணையான மாற்றுக்கலவையை உருவாக்கும் முறையை கண்டுபிடித்தார் ஹோண்டா.

ஆங்காங்கு கடன் வாங்கி சில மாதங்களிலேயே பெரிய தொழிற்சாலையை கட்டி முடித்தார்.


தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி piston தயாரிக்கும் தொழிலை அமர்க்களமாகத் தொடங்கினார். கூடவே இரண்டாம் உலகப்போரும் தொடங்கியது.


அமெரிக்கா போட்ட குண்டு, ஹோண்டாவின் தொழிற்சாலையில் பெரும் பகுதியை உடைத்து நாசமாக்கியது.


ஹோண்டாவின் வாழ்க்கை முடிந்தது என்று பேசிக் கொண்டார்கள் நண்பர்கள். ஆனால், தனது மொத்தத் தொழிலாளர்களையும் திரட்டிக்கொண்டு, தானே களமிறங்கி சேதங்களை சீர்செய்து, தொழிற்சாலையை மீண்டும் இயக்கிக் காட்டினார் ஹோண்டா.


ஜப்பான் நாட்டில் நிலநடுக்கங்கள் அதிகம். ஒரு நாள் திடீரெனத் தாக்கிய நிலநடுக்கம் ஹோண்டாவின் தொழிற்சாலையைத் தரைமட்டமாக்கி விட்டது.


மொத்தத் தொழிற்சாலையையும் திருப்பிக்கட்ட முடியாத நிலை. வேறு வழியின்றி உடைந்த கருவிகள், மற்றும் மூலப்பொருட்களைக் கிடைத்த விலைக்கு Toyoto நிறுவனத்திற்கு விற்பனை செய்தார் ஹோண்டா.

இப்படிப்பட்ட நிலைமையில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எண்ணிப்பாருங்கள்.........


ஆனால், அப்போதைய நிலையில் ஹோண்டா கூறிய கருத்து.......


“நான் ஆசைப்பட்ட ஒரு திட்டம் தோல்வி அடைந்தால், துளி கூட கவலைப்பட மாட்டேன்… இருக்கிற நிலைமையை எப்படி மாற்றலாம் என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கிவிடுவேன்.”


இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம் ஜப்பானின் பொருளாதாரம் சாம்பலாக்கப்பட்ட காலக்கட்டம், ஜப்பான் முழுதும் பெட்ரோல் தட்டுப்பாடு. கார்கள் எல்லாம் முடங்கிவிட்டன.


எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிளில் செல்கின்றார்கள். சாய்க்கிரோ ஹோண்டா, வீட்டில் அமர்ந்திருந்தார். 


அருகில் சைக்கிள் நின்றது. சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருந்தது.*


அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி, இந்த சைக்கிளில் இணைத்தால் என்ன என்று ஹோண்டாவுக்கு ஒரு புத்தம் புது ஐடியா தோண்றியது.

அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார் ஹோண்டா. புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து, தனது சைக்கிளில் அவர் பொருத்திய போது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது.


அதை எடுத்துக்கொண்டு ஆனந்தமாக சுற்றி வந்தார் ஹோண்டா. அதேபோன்று எங்களுக்கும் செய்துகொடு என்று மொய்க்கத் தொடங்கினர் மக்கள்.


அவரும் சளைக்காமல் செய்து கொடுத்தார். அதன் விளைவு என்ன ஆயிற்று????


அந்த ஊரில் மோட்டார் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார் ஹோண்டா.


கையில் பணமில்லை, வங்கிகள் கடன் தரத் தயாராகவில்லை. ஹோண்டா துரதிர்ஷ்டக்காரன் என்று எல்லோரும் கூறினார்கள்.


அப்போதும் கலங்கவில்லை ஹோண்டா. தனது தொழில் திட்டத்துக்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்களுக்கு கடிதம் எழுதினார்.


முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்களாக நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார்.*


5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள் முன்வந்து பண உதவி செய்தனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் உதயமானது.*


முதலில் தயாரான மோட்டார் சைக்கிள் குறித்து விமர்சனங்கள் வந்தபோது, தானே உலோகம் உருக்கும் கூடத்தில் அமர்ந்து, அழகான வடிவமைப்புடன் அற்புதமான மோட்டார் சைக்கிள் வகைகளை கொண்டு வந்தார்.


அவமானகரமான தொடர் தோல்விகளுக்குப் பின்னர் பெரும் வெற்றி பெற்றார் சாய்க்கிரோ ஹோண்டா.


இப்போது ஹோண்டா நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 2 கோடி மோட்டார் வாகனங்களை தயாரிக்கிறது.


முயற்சியை மூலதனமாக கொண்டு, தன்னம்பிக்கையை மனதில் வைத்து வைராக்கியத்துடன் உழைக்கும் எவர்க்கும் வெற்றி கைகூடாமல் போனதில்லை நண்பர்களே..


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

06-03-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-03-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: சான்றாண்மை ...