கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயிர்வாழ் சான்று லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உயிர்வாழ் சான்று லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Kalanjiyam App மூலம் Pensioners வீட்டில் இருந்தபடியே Life Certificate அளிக்கும் வழிமுறை


களஞ்சியம் செயலி மூலம் ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே வாழ்நாள் சான்று அளிக்கும் வழிமுறை


Procedure for Pensioners to provide Life Certificate from home through Kalanjiyam Mobile App


 ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே வாழ்நாள் சான்று அளிக்க தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியுள்ள பாராட்டுக்குரிய வசதி களஞ்சியம் என்ற  Mobile App  மூலம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நான் இன்று எனது வாழ்நாள் சான்று அளித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி கருவூலம் ஆணையரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

       நாம் செய்ய வேண்டியது play store  சென்று களஞ்சியம் என்ற mobile app ஐ பதிவிறக்க வேண்டும்.

https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam


 தங்கள் PPO  போன்ற விபரங்களை உள்ளீடு செய்து நான்கு இலக்க PIN ஐ save செய்து உள்ளே சென்று Mustering என்ற option ஐ தெரிவு செய்து அதில் வரும் பச்சை நிற வட்டத்தில் தங்கள் முகத்தை கண்ணாடி இன்றி காண்பித்து இரண்டு அல்லது மூன்று முறை கண்களை சிமிட்டினால் உங்கள் வாழ்நாள் சான்று ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு அடையாளமாக SMS உடனே வந்துவிடும். இந்த முயற்சியை பகலில் மட்டும் செய்ய வேண்டும்.

நன்றி.

ஆ.மீ‌.பார்த்தீபன்

இணை இயக்குநர் ஓய்வு தஞ்சாவூர்.


ஓய்வூதியர்கள் தங்கள் வாழ்நாள் சான்றை (Life Certificate) சமர்ப்பிக்க (For the Year 2021) விலக்களித்து அரசாணை வெளியீடு...



 ஓய்வூதியர்கள் தங்கள் வாழ்நாள் சான்றை (Life Certificate) சமர்ப்பிக்க (For the Year 2021) விலக்களித்து அரசாணை வெளியீடு...


G.O.Ms.No.134, Dated 26thMay 2021.


PENSION/FAMILY PENSION – Furnishing of Life Certificate, Non-employment Certificate and Non-remarriage/Non-marriage Certificate by the Pensioners/Family Pensioners including Digital Life Certificate thro’ Jeevan Pramaan Portal – Exemption from Annual Mustering Process for the year 2021 as a special case due to Covid-19 - Orders – Issued...


>>> Click here to Download G.O.Ms.No.134, Dated: 26-05-2021...



🍁🍁🍁 மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு புதிய வசதி...

மத்திய அரசின் பல லட்சம் ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆயுள் சான்றிதழை அரசு அலுவலகங்களுக்கு சென்று பதிவு செய்வது கட்டாயமாக இருந்தது. அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் நிறுத்தப்படும். இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்காக மின்னணு சான்று வழியாக தாங்கள் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான, ‘ஜீவன் பிரமான்’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

எனினும், பெரும்பாலான மூத்த குடிமக்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. மேலும், பலருக்கு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதில் சிரமம் இருப்பதால் ஆன்லைன் சான்றிதழை நிரப்புவதும், சமர்பிப்பதும் கடினமாக இருந்தது. இதைத் தொடர்ந்து, ஓய்வூதியர்கள் தற்போது வீட்டில் இருந்தபடியே தங்களின் ஆயுள் சான்றிதழை சமர்பிப்பதற்கான புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. தபால்துறையின் போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் இணைந்து இந்த புதிய சேவையை தொடங்கி உள்ளன.

 இந்த புதிய திட்டத்தின் கீழ், ஓய்வூதியதாரர்கள் தங்களின் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை தபால் அலுவலகம் மூலமாக வீட்டில் இருந்தபடியே சமர்பிக்க முடியும். தபால்காரர்கள் வீடு தேடி வருவார்கள். அவர்களிடம் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் கைரேகை ஸ்கேனர் இருக்கும். அதன் மூலமாக, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் அங்கேயே பெற்றுத் தருவார்கள். மேலும், ஓய்வூதியதாரரின் ஆயுள் சான்றிதழ் குறித்த விவரங்கள், ஓய்வூதிய துறையில் தானாகவே பதிவேற்றப்படும். ஓய்வூதியதார்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை. சிரமப்பட வேண்டியதில்லை. ஆனால், இந்த சேவைக்காக ஓய்வூதியதாரர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த சேவையில் 1.36 லட்சம் தபால் நிலையங்கள், 1,89,000 தபால்காரர்கள் ஈடுபடுவார்கள்.

🍁🍁🍁 ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றுகளை எந்தெந்த நாட்களில் சமர்ப்பிக்கலாம் - பாரத ஸ்டேட் வங்கி விளக்கம்...

 ஓய்வூதியர்கள், உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க எந்தெந்த நாட்களில் வர வேண்டும் என்பது குறித்து பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, பாரத ஸ்டேட்வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க, வரும் டிசம்பர் மாதம் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, வங்கிக்கு நேரடியாக வந்து உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கும்போது, கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, தங்களுடைய சேமிப்புக் கணக்கு எண்ணின் கடைசி எண் 1, 2 இருக்கும் வாடிக்கையாளர்கள் திங்கள்கிழமையும், 3, 4 எண் இருக்கும் வாடிக்கையாளர்கள் செவ்வாய் கிழமையும், 5, 6 எண் இருக்கும் வாடிக்கையாளர்கள் புதன்கிழமையும், 7, 8 எண் இருக்கும்வாடிக்கையாளர்கள் வியாழக்கிழமையும், 9, 0 எண் இருக்கும்வாடிக்கையாளர்கள் வெள்ளிக் கிழமையும் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

இந்நாட்களில் வர இயலாதவர்கள் சனிக்கிழமைகளில் வந்து சமர்ப்பிக்கலாம். இதன்மூலம், வங்கிகளில் கூட்டம் சேருவதைத் தவிர்க்கலாம். அதேசமயம், மூத்தகுடிமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தினத்துக்குப் பதிலாக வேறொரு நாளில் சான்றிதழ் சமர்ப்பிக்க வந்தால், அவர்களை வங்கிகள் திருப்பி அனுப்பக் கூடாது.

மேலும், வேறு ஏதேனும் தேவைக்காக வர விரும்பும் மூத்தகுடிமக்கள் எப்போது வேண்டுமானாலும் வங்கிக்கு வரலாம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஊதியம் அல்லாத பிற நிதிகளைப் பெறுவதற்கு IFHRMS ல் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்

 ஊதியம் அல்லாத பிற நிதிகளைப் பெறுவதற்கு IFHRMS ல் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குனரின் ...