கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

செயல்முறைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செயல்முறைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பயிற்சி முடித்த நேரடி நியமன மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு - செயல்முறைகள் வெளியீடு

 



Allocation of posting places for directly recruited District Educational Officers upon completion of training – DSE Proceedings


தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் (மு.கூ.பொ) செயல்முறைகள், சென்னை-06.


முன்னிலை திருமதி.ந.லதா


ந.க.எண்.052548/அ1/இ1/2020, நாள்.31.08.2026.


பொருள்:


தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - 2014-17 ஆம் ஆண்டிற்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயத்தினால் தேர்வு செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணையின் அடிப்படையில் (W.P.Nos.19622 of 2020 & 169, 170, 3398, 25424 & 3402 of 2021,  தீர்ப்பாணை நாள். 29.04.2024) தெரிவுப்பட்டியலின்படி மறு வரையறை செய்யப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலராக நேரடி நியமனம் செய்யப்பட்டவர்கள் பயிற்சி முடித்து முறையான மாவட்டக்கல்வி அலுவலராக நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டது பணியிடம் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்குதல் சார்பு.


பார்வை:


1. மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் திரு.எஸ்.நிர்மல்குமார் உள்ளிட்டவர்களால் தொடரப்பட்ட வழக்கு எண். (W.P.Nos.19622 of 2020 & 169, 170, 3398, 25424 & 3402 of 2021 I. இன் மீதான தீர்ப்பாணை நாள்.  29.04.2024


2. அரசாணை (3டி) எண்.01. பள்ளிக்கல்வித் (ப.க.1(1)) துறை, நாள்.11.02.2026.


3. சென்னை -06, தமிழ்நாடு செயல்முறைகள்.  பள்ளிக்கல்வி இயக்குநரின் ந.க.எண்.052548/அ1/இ1/2020, நாள் .19.02.2026.


4. அரசாணை (நிலை) எண். 146, பள்ளிக்கல்வித் (ப.க.1(1)) துறை, நாள் 25.08.2026. 


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 2014-17 ஆம் ஆண்டிற்கு மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பணிநாடுநர்களின் தெரிவுப் பட்டியல் சார்ந்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணையின் அடிப்படையில் (W.P.Nos.19622 of 2020 & 169, 170, 3398, 25424 & 3402 of 2021, தீர்ப்பாணை நாள்.29.04.2024) மறுவரையறை செய்யப்பட்ட தெரிவுப்பட்டியலை ஏற்பளிப்பு செய்தும், அப்பட்டியலின்படி (1) திரு.S.நிர்மல்குமார், (2)திரு.Z.சூசைமரியநாதன், (3) திருமதி.S.இளையராணி, ஆகிய "03" அலுவலர்களை 06 மாதகால நிருவாக பயிற்சிக்கு மாற்றுப்பணியில் நியமனம் செய்தும், நிருவாக பயிற்சியினை மேற்கொள்ளயேதுவாக 03 மிகைப்பணியிடங்களை தோற்றுவித்தும், பார்வை-2 இல் காணும் அரசாணையின்படி அரசளவில் ஆணைகள் வழங்கப்பட்டது.


2. இதன்தொடர்ச்சியாக சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தங்களது நிருவாக பயிற்சியினை நிறைவுசெய்ததையடுத்து, அன்னார் மாவட்டக்கல்வி அலுவலராக பயிற்சியில் சேர்ந்த நாள் முதல், தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி சிறப்பு விதிகளில் வகுப்பு IV கீழ் வரும் மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்தில் முறையான நியமனம் வழங்கியும், அவரவர் பெயருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிலமர்த்தியும் இதன் வழி ஆணையிடப்படுகிறது.



>>> செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


PM YASASVI கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக ஆணையரின் செயல்முறைகள்




OBC, EBC & DNT இன மாணவர்களுக்கான PM YASASVI கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை ஆணையரின் செயல்முறைகள்


Proceedings of the Commissioner of Backward Classes and Denotified Communities Welfare regarding applications for the PM YASASVI scholarship for students belonging to OBC, EBC, and DNT categories.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


SMC Reconstitution 2026 | Budget & Phase wise school list | SPD Proceedings



2026-2028ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் மறுகட்டமைப்பு - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் உத்தேச செலவினங்களுக்கான நிதி விடுவித்தல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


 SPD Proceedings for the SMC Reconstitution 2026 - Including Budget & Phase wise school list



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



மாநிலத் திட்ட இயக்ககம், சென்னை-600 006


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி


அனுப்புநர்


மாநிலத் திட்ட இயக்குநர். 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, 

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்

நுங்கம்பாக்கம், சென்னை-06.


பெறுநர் 

முதன்மைக் கல்வி அலுவலர்.

அனைத்து மாவட்டங்கள்.


ந.க.எண்:1338/A11/பமேகு/ஒபக/2026, நாள் : 24.08.2026


பொருள்: பள்ளிக் கல்வித் துறை - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2026-2028ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் மறுகட்டமைப்பு - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் உத்தேச செலவினங்களுக்கான நிதி விடுவித்தல் சார்பு


பார்வை 1) அரசாணை (நிலை) எண். 144. பள்ளிக் கல்வித் (அகஇ.2) துறை நாள்: 28.06.2024,


2) அரசாணை (நிலை) எண். 143, பள்ளிக் கல்வித் (அக.இ2) துறை நாள்: 19.08.2026.


3) ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குதிரின் செயல்முறைகள் நகஎண்: 1338/A11/பமேகு/ஓபக/2026, நாள். 24/08/2026


பார்வை-1இல் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி குழந்தைகளின் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம். 2009 மற்றும் தமிழ்நாடு குழந்தைகளின் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகள். 2011 அடிப்படையில் அனைத்து வகை அரசு தொடக்கநிலை. நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2024ஆம் ஆண்டில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போதைய உறுப்பினர்களின் பதவிக் காலம் 2026 ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் நிலையில் பார்வை-2இல் கண்டுள்ள


அரசாணையில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாவட்டங்களில் உண்டு உறைவிடப் பள்ளிகள் (NSCBAV/KGBV/பழங்குடியினர் நலத்துறைப் பள்ளிகள் வனத்துறைப் பள்ளிகள் தவிர ஏனைய அனைத்துவகை அரசுப் பள்ளிகளிலும் 2026ஆம் ஆண்டு செப்டெம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் 2026-2028ஆம் ஆண்டுகளுக்கனப் பள்ளி மேலாண்மைக் குழுவானது புதிய உறுப்பினர்களைக் கொண்டு மறுகட்டமைப்பு செய்யப்படவுள்ளது.


(அ) பெற்றோர்கள் விழிப்புணர்வுக் கூட்டத்திற்கான வழிகாட்டுதல்கள்:


பார்வை-2இன்படி முதற்கட்டமாக மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு சார்ந்து பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டம் 29.08.2026, சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை அனைத்துவகை அரசுப் பள்ளிகளிலும் நடத்தப்பட வேண்டும்.


இதன்படி, பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துவது தொடர்பாக பார்வை 2இல் கண்டுள்ள அரசாணை பக்கம் 22 முதல் 25 வரை கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கூட்டத்திற்கான அழைப்பிதழை பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு 27.08.2026 வியாழக்கிழமைக்குள் மாணவர்கள் மூலம், புலனக் குழுச் (வாட்சப்) செய்திகள், துண்டுப் பிரசுரங்கள் மூலமாக தலைமையாசிரியர்கள் அனுப்பி வைக்கவேண்டும்.


மேலும், பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டத்தை பள்ளியின் தலைமையாசிரியர் தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழுவின் தற்போதைய உறுப்பினர்கள். பள்ளி ஆசிரியர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள். வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்திட வேண்டும்.


ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளில் தலைமையாசிரியர் இல்லாத நேர்வுகளில் அப்பள்ளிகளில் பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் மற்றும் மறுகட்டமைப்பு நிகழ்வுகள் பார்வை-3இல் கண்டுள்ள மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகளில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மேற்கொள்ள வேண்டும்.


இந்த விழிப்புணர்வு கூட்டதில் பங்கேற்கும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரது வருகை பதிவு விவரத்தினை பெற்றோர் கூட்டம்


நடைபெறும் 29.08.2026 அன்று பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி தலைமையாசிரியர் தவறாது பதிவு செய்ய வேண்டும்.


Login to School Login https://emis.tnschools.gov.in


Select "School" Tab


Select "SMC Reconstitution 2026-2028" Module


Select Meeting Type "Parents Awareness meeting attendance"


விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்கும் ஆண் மற்றும் பெண் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை பதிவிட வேண்டும்.


விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்றவர்களின் குழு புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.


இறுதியாக Submit Attendance தேர்வு செய்தவுடன் பதிவு செய்யப்பட்ட ஆண் மற்றும் பெண் பங்கேறப்பாளர்களின் எண்ணிக்கையுடன் மொத்த பங்கேறப்பாளர்கள் எண்ணிக்கை காண்பிக்கப்படும். அதனை சரிபார்த்து சரியாக இருப்பின் மீண்டும் Submit தேர்வு செய்தவுடன் தங்கள் பள்ளியின் பள்ளிமேலாண்மைக் குழு விழிப்புணர்வு கூட்டதில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உறுதிசெய்யப்படும்.


பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைத்துவகை அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்களுடைய பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்பதை உறுதிசெய்திட அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (ஆ) பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நிகழ்வு பின்பற்ற வேண்டிய அட்டவணை


பார்வை-2இல் கண்டுள்ள அரசாணையின்படி மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வினை அரசாணை வழிகாட்டு நெறிமுறைகள் பக்கம் 4, பத்தி x இல் உள்ள முன்மொழியப்பட்ட கால அட்டவணையில் உள்ளவாறு நடத்திட அனைத்து வகைப் அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (CEO) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்


Reconstitution of SMCs for 2026-2028 : Guidelines for conducting a parent awareness meeting on 29.08.2026 (Saturday) – SPD Proceedings




 2026-2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள் - பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துதல் 29.08.2026 (சனிக்கிழமை) வழிகாட்டுதல்கள் வழங்குதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


Reconstitution of School Management Committees for the years 2026–2028 : Guidelines for conducting a parent awareness meeting on 29.08.2026 (Saturday) – Proceedings of the State Project Director


மாநிலத் திட்ட இயக்ககம், சென்னை-600 006 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி


மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


ந.க. எண். : 1338/A11/பமேகு/ஒபக/2026, நாள். 24/08/2026


பொருள்:


பள்ளிக் கல்வி - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, 2026-2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள் - பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துதல் 29.08.2026 (சனிக்கிழமை) வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு.


பார்வை:


(1) அரசாணை (நிலை) எண்.144, நாள்: 28.06.2024, பள்ளிக் கல்வித் (அகஇ2) துறை.


(2) அரசாணை (நிலை) எண். 143, நாள்: 19.08.2026, பள்ளிக் கல்வித் (அகஇ2) துறை.


பார்வை-1இல் காணும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி 2024-2026 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுவானது கடந்த 2024 ஆகஸட் மாதம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு உறுப்பினர்களின் பதவிக் காலம் 2026 ஆகஸ்ட் மாதம் நிறைவடைகிறது. இந்நிலையில அனைத்துவகை அரசுப் பள்ளிகளிலும் 2026-2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுவானது புதிய உறுப்பினர்களைக் கொண்டு மறுகட்டமைப்பு செய்யப்படவுள்ளது.


பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம்


பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகளில் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் முழுமையாகப் பங்கேற்பை உறுதிசெய்யும் வகையில் 2026-2028ஆம் ஆண்டுகளுக்கானப் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள் சார்ந்து பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் 29.08.2026, சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும்


1


பார்வை-2இல் காணும் அரசாணையில் பக்கம்-22இல் கண்டுள்ள "மறுகட்டமைப்பு நாளுக்கு முன்னதாக செய்ய வேண்டியவை" தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்திடவும்,


மேலும், பார்வை-2இல் கண்டுள்ள அரசாணையின்படி மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வினை அரசாணை வழிகாட்டு நெறிமுறைகள் பக்கம் 9-இல் உள்ள கால அட்டவணைக்கு மாற்றாக, பக்கம் 4, பத்தி x.-இல் உள்ள முன்மொழியப்பட்ட கால அட்டவணையில் உள்ளவாறு நடத்திட அனைத்து வகைப் அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (CEO) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



>>> செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 





boAt Wave Call 3 Smartwatch 1.83” HD Display with Animated Watch Faces; BT Calling, Functional Crown, Multiple Sports Modes, IP68, HR, SpO2 Monitor, Smart Watches for Men & Women (Timber Brown)


https://link.amazon/B0c7XR0xj

Aided School Staff Fixation | DEE Proceedings



அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2026-2027ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் - இயக்குநரின் செயல்முறைகள்


Aided School Staff Fixation | DEE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 





Xiaomi Power Bank 4i 20000mAh 33W Super Fast Charging PD 


https://link.amazon/B0ik5kVpv




//பணியாளர் நிர்ணயம்//


//சுற்றறிக்கை//


தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06


ந.க.எண் 012581/ஜி/எச்/2026 , நாள். 21.08.2026


பொருள் :-


தொடக்கக் கல்வி- உதவி பெறும் பள்ளிகள்-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரத்தின்படி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்திட அறிவுரை வழங்கப்பட்டது-பணியாளர் நிர்ணய ஆணைகள் வழங்கப்பட்ட விவரங்கள் கோருதல்-சார்ந்து


பார்வை 1


தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குப்படுத்தும்) சட்டம்-1973 மற்றும் விதிகள் 1974


2- குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- 2009, விதிகள் -2011


3:- தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குப்படுத்தும்) சட்டம்-2018, விதிகள்-2023.


4 அரசாணை (நிலை) எண் 231 பள்ளிக் கல்வித்துறை நாள்.11.08.2010


5- மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பாணை WA.(MD) No's 76 of 2019, etc., batches.


6-அரசாணை (நிலை) எண் 139 பள்ளிக் கல்வித்துறை , நாள்-19.06.2024


7:- மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பாணை W.P. (MD) No. 3824 of 2026 நாள்.03.07.2026


8:- இவ்வியக்கக இதே எண்ணிட்ட செயல்முறைகள் நாள்.13.07.2026


9: மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இடைக்கால தீர்ப்பாணை W.P.(MD) No's. 5419,5489,17747,23963 of 2025 நாள்.18.08.2026


தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 பிரிவு -25 ன்படியும். இச்சட்டத்தின் அடிப்படையில் பிறப்பிக்கப்பெற்ற அரசாணை (நிலை) எண் 231 பள்ளிக் கல்வித்துறை , நாள்.11.08.2010 ன்படியும், மேற்படி பள்ளிகளில் ஆகஸ்டு 1 ஆம் தேதியில் EMIS - ல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையினைக் கணக்கில் கொண்டு, ஆண்டுதோறும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களால் (தொடக்கக் கல்வி) ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.


மேலும், பார்வை 4 இல் காணும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குப்படுத்தும்) விதிகள்-2023, 32(A) -ல் பணியாளர் நிர்ணயம் தொடர்பாகவும், 32 (B) -ல் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது தொடர்பாகவும் கால வரையறை நிர்ணயம் செய்யப்பட்டு மேற்குறிபிட்ட கால வரையறைக்குள் மேற்படி பணியாளர் நிர்ணயப் பணிகளை (Staff Fixation) முடித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில், பணிநிரவல் (Deployment) தொடர்பாக மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பாணை W.P(MD) No. 3824 of 2026, நாள். 03.07.2026 இல் கீழ்க்காணுமாறு ஆணையிடப்பட்டது.


17.Recording such report, this Court directs the Secretary, Department of School Education, to examine the reasons for issuing the deployment orders in a delayed manner, not only to this petitioner but also to the other 52 surplus teachers. If it is found that the delay was attributable to any lapse or dereliction on the part of the second respondent or any other officer, the sixth respondent shall ensure that appropriate action is taken on the erring officers in accordance with law, including initiation of disciplinary proceedings and recovery of the salary which was paid to all the surplus teachers during this period, from such officer(s). The Secretary shall also ensure that the statutory time line prescribed under Rule 32(B) is strictly complied with.


எனவே, பணியாளர் நிர்ணயம் தொடர்பாகவும், உபரி ஆசிரியர்களை பணிநிரவல்/மாற்றுப்பணி செய்வது தொடர்பாகவும், மேற்படி தனியார் பள்ளி விதி 32 (A) மற்றும் 32(B) இல் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி, முடித்திட உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் பார்வை 9 இல் காணும் இவ்வியக்கக செயல்முறைகளின் வாயிலாக அறிவுறுத்தப்பட்டது.


இந்நிலையில், மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இடைக்கால தீர்ப்பாணை W.P.(MD) No's. 5419,5489,17747,23963 நாள்.18.08.2026 இல் கீழ்க்காணுமாறு ஆணையிடப்பட்டுள்ளது. of 2025


11.Considering the rival submissions made, this Court is of the view that even though Rule 32 of the Tamil Nadu Private Schools (Regulation) Rules 2023 provides a strict timeline, staff fixation has been done in a delayed manner, for the reasons best known to the officers concerned and thereby huge loss has been caused to the government exchequer. Therefore, disciplinary proceedings have to be initiated as against the District Educational Officers /Chief Educational Officers concerned, who have violated Rule 32 and fixed the staff strength belatedly. The CEOs who have to monitor the functions of the DEO, have also failed in their duty. The Government has also been forced to incur expenditure on the teachers, already identified as surplus. Therefore, the salary, if any, paid to the teachers, who were found to be surplus, also has to be recovered from the DEOS/ CEOs concerned.


எனவே, அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரத்தின்படி. 2026-2027 ஆம் ஆண்டிற்கான பணியாளர் நிர்ணயம் தொடர்பாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குப்படுத்தும்) விதிகள் 2023, விதி 32(B) -இல் கீழ்க்காணுமாறு தெரிவிக்கப்பட்டுள்ள காலவரையறைக்குள் மேற்படி பணிகளை முடித்திட மீளவும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.


B. Deployment of surplus staff,-(1) The District Educational Officer concerned in respect of Primary and Middle schools, the Chief Educational Officer concerned in respect of High and Higher Secondary schools and the Joint Director concerned in respect of Anglo-Indian schools shall fix the strength of the staff based on the strength of the pupils updated in the Educational Management Information System (EMIS) as on the 1stday of August of every academic year and shall complete the assessment process on or before the 12th day of August of that academic year.


(2) The staff fixation statement along with the list of surplus staff identified shall be forwarded to the Secretary of the school committee or the management of the school concerned on or before the 15th day of August of that academic year.


மேற்படி பணியாளர் நிர்ணயம் மற்றும் உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் / மாற்றுப்பணி ஆணை வழங்குவது தொடர்பான பணிகளை உரிய கால வரையறைக்குள் முடிக்கத் தவறும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை. மேற்கொள்ளப்படும். மேலும், அதனால் ஏற்படும் நிதியிழப்பை உரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


எனவே, அரசின் நிதி ஆதாரங்கள் முறையாக பயன்படுத்தப்டுவதை உறுதி செய்திடும் வகையிலும், மாணவர்களின் கல்வி நலன் கருதியும், இப்பணியில் சிறப்புக் கவனம் செலுத்தி செயல்படுமாறும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) திட்டவட்டமாக அறிவுறுத்தப்படுகிறது.


தொடக்கக் கல்வி இயக்குநர் கடக்கக் கல்வி


பெறுநர்


அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)


ileke


(மின்னஞ்சல் மூலமாக)


நகல்:


1. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் (மா.க.அ. மூலமாக)


2. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை தலைமைச் செயலகம் தகவலின் பொருட்டு பணிந்தனுப்பலாகிறது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறுவதால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுழற்சி முறையில் பணிபுரிய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு



தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறுவதால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுழற்சி முறையில் பணிபுரிய தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Independence Day Celebration - DSE Proceedings



சுதந்திர தின விழா கொண்டாட்டம் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Independence Day Celebration - DSE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Independence Day Celebration - DEE Proceedings



 சுதந்திர தின விழா கொண்டாட்டம் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Independence Day Celebration - DEE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


On Duty Permission for Census Duty Teachers CEO Proceedings


மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி - 31.08.2026 வரை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் ஆசிரிர்களுக்கு முற்பகல்/பிற்பகல் பிறபணியில் (OD) அனுமதி - தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் 


On Duty Permission for Census Duty Teachers CEO Proceedings




WWF India | Wild Wisdom Global Challenge 2026 | வினாடி வினா (Quiz) போட்டி - இணை இயக்குநரின் செயல்முறைகள்



பள்ளிக் கல்வி இயக்ககம் - WWF India - Wild Wisdom Global Challenge-2026 ஆங்கில வினாடி வினா (English Quiz) போட்டி - பள்ளி மாணவர்கள் பங்கேற்பது சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


சத்துணவு உண்ண விருப்பமுள்ள மாணவர்கள் பெயர் EMIS Portalல் பதிவுசெய்ய 06.08.2026 இறுதி நாள்



சீருடை வழங்க சத்துணவு உண்ண விருப்பமுள்ள மாணவர்கள் பெயர் EMIS Portalல் பதிவுசெய்ய இறுதி நாள் 06.08.2026 - Director Proceedings


தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06.


ந.க. எண். 1593680/கே2/2025, நாள் 04.08.2026.


பொருள்:


தொடக்கக் கல்வி - விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான 1 ஆம் வகுப்பு மற்றும் 2 முதல் 8 ஆம் வகுப்பு வரை புதியதாக சேர்ந்த மாணவ/மாணவிகள் சேர்க்கை அடிப்படையில் சீருடை அளவுகள் எடுப்பதற்கு ஏதுவாக EMIS விவரப்படி மாணவ/மாணவிகளின் விவரங்கள்-சத்துணவு உண்ணும் மாணவ/மாணவிகள் விவரங்களை EMIS portal-ல் உள்ளீடு செய்ய அறிவுறுத்துதல் தொடர்பாக.


பார்வை :


சென்னை-5, சமூக நல இயக்குநரின் ந.க. எண்.1577426/சிதி-3/2025, நாள் 22.07.2026. கடிதம்


பார்வையில் காணும் சமூக நல இயக்குநரின் கடிதத்தில், 2026-27 ஆம் கல்வியாண்டிற்கு புதிய மாணவர்களின் சேர்க்கை நடைபெறும் என்பதால், மாணவர்களுக்கு அளவெடுத்து நான்கு இணை சீருடைகள் தைத்து உரிய காலத்திற்குள் வழங்கப்பட வேண்டும். எனவே சங்க உறுப்பினர்கள் பள்ளிகளுக்கு சென்று புதியதாக சேர்ந்த மாணக்கர்களை அளவெடுப்பதற்கு ஏதுவாக வட்டார வாரியாக (BEO, DEO wise) மற்றும் பள்ளி மற்றும் வகுப்பு வாரியாக மாணாக்கர்களின் விவரம் EMIS portal-ல் பதிவேற்றம் செய்து வழங்கிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், 2026-27 ஆம் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு மற்றும் 2 முதல் 8 ஆம் வகுப்பு ஆகியவற்றில் புதியதாக சேர்க்கப்பட்ட மாணவ/மாணவிகள் விவரங்கள் தனித்தனியாக Hilly/Non-Hilly வாரியாக பிரித்து வழங்கிடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, 2026-27 ஆம் கல்வியாண்டிற்கு 1 ஆம் வகுப்பு மற்றும் 2 முதல் 8 ஆம் வகுப்பு வரை புதியதாக சேர்ந்த மாணவ/மாணவிகள் சேர்க்கையின் அடிப்படையில் சீருடைகள் அளவுகள் எடுப்பதற்கு ஏதுவாக மாணவ/மாணவிகள் விவரங்கள் சமூக நல இயக்ககத்திற்கு அனுப்பும்பொருட்டு, பள்ளிகளில் புதியதாக சேர்ந்த சத்துணவு உண்ண விருப்பமுள்ள மாணவ/மாணவிகள் விவரங்களை EMIS portal-ல் 06.08.2026 அன்று பிற்பகல் 1.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் தெரிவிக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


(தொடக்கக் கல்வி) தொடக்கக் கல்வி இயக்குநர்


பெறுநர்


1. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)- மின்னஞ்சல் மூலமாக.


2 அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் (மாவட்டக் கல்வி அலுவலர்கள்


(தொடக்கக் கல்வி) மூலமாக )



>>> செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Inspire Manak Award 2026-2027 New Entries | DSE Proceedings

 


 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதுகளுக்கான புதிய பதிவுகள் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



Inspire Manak Award 2026-2027 New Entries | DSE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,சென்னை 6. 

முன்னிலை - முனைவர். ச. கண்ணப்பன், 


ந.க.எண்.038471/எம்2/இ2/2026 , நாள்: 21.07.2026


பொருள்

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், சென்னை 25 - புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது 2026-2027 ஆம் ஆண்டிற்கான - புதிய பதிவுகள் செய்வது தொடர்பாக


பார்வை

1) Neha Rawat, Project Associate 1, NIF INSPIRE-MANAK. Letter Dated. 14.07.2026


2) செயல் இயக்குநர். தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், சென்னை அவர்களின் கடித எண் 4394/Pl/2020 நாள் 14.07.2026


3) தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். ந.க. எண் 038471/எb2/$2/2026 நாள் 17.07.2026


மாணவர்களை இளம் அறிவியல்பால் ஈர்க்கும் திட்டமே INSPIRE MANAK விருதுத் திட்டமாகும். இத்திட்டம், இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் மூலம் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதுப்பணிகளை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் பள்ளிக் கல்வித் துறையின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றி வருகிறது.


6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் இளம் மாணவர்களில் அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின்கீழ், பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவர்களின் 5 சிறந்த புத்தாக்க கண்டுபிடிப்புகளை பரிந்துரை செய்யலாம். சமுதாயத்திற்கு பயன்மிக்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த, புதுமையான திட்டங்களை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள திட்டங்களைவிட எந்தவகையில் மேம்பட்டது என்பதைத் பொறுத்து தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது ரூ.10,000/-(ரூபாய் பத்தாயிரம் மட்டும்) பரிசுத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த பரிசுத் தொகையைக் கொண்டு மாணவர்கள் தங்கள் திட்ட மாதிரி வடிவங்களை சிறப்புறத் தயாரித்து போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். இத்திட்டத்தின் மூலம் ஏழை எளிய மாணவர்களும் விருதுத் தொகையின் உதவியோடு சிறந்த முறையில் அறிவியல் காட்சிப்பொருட்களைத் தங்கள் அறிவியல் திறனுக்கேற்ப உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாகத் தனது கருத்துருவை விளக்கமாக www.inspireawards


dst.gov.in இணையதளத்தில் பள்ளி மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இப்படித் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள். மாவட்ட அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சிப் போட்டிகளில் கலந்து கொள்வார்கள். 38 மாவட்டங்களிலும் மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்படும். மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் வெற்றி பெறும் 10% மாணவர்கள் மாநில


அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் கலந்து கொள்வார்கள். மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பதக்கங்கள் பரிசாக வழங்கப்படும். மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் வெற்றிபெறும் மாணவர்களில் 10% மாணவர்கள். புதுடெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் கலந்துகொள்வார்கள். மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை. புதுடெல்லி இச்செயல்களுக்கான அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக்கொள்கிறது என்று பார்வை(1) மற்றும் (2)ல் காணும் கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும், பார்வையில் காணும் கடித நகல்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.


2026-2027ஆம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதுகளுக்கான புதிய பதிவுகள் 15.07.2026 முதல் தொடங்கப்பட்டுள்ள விவரம் ஏற்கனவே பார்வை (3)ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இதற்காக பள்ளி மாணவர்கள் கடந்த ஆண்டுகளில் பதிவு செய்ததைப் போலவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பதிவு செய்யலாம். அதாவது மேல்நிலைப் பள்ளியாக இருப்பின் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை 3 மாணவர்களும், 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு அறிவியல் பிரிவில் இருந்து 2 மாணவர்களும் என மொத்தம் 5 மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும். உயர்நிலை பள்ளியாக இருப்பின் 6ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை 5 மாணவர்கள் பதிவு செய்யலாம். நடுநிலைப் பள்ளிகள் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 5 மாணவர்கள் பதிவு செய்யலாம். இதற்காக www.inspirewards-dst.gov.in στοότηοΒαιαπιωχαδιού 15.07.2026 ល់ 15.09.2026 விண்ணப்பிக்க இயலும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


மேற்குறிப்பிட்டஊறு. 2026-2027ஆம் ஆண்டிற்கான Inspire Manak Award-க்கு அதிகப்படியான மாணவர்கள் விண்ணப்பிக்க அனைத்து வகை அரசு /அரசு நிதியுதவிபெறும் / தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு -1) பார்வையில் காணும் கடிதங்களின் நகல்கள்


2) குறிப்புகள்


பெறுநர்


முதன்மைக் கல்வி அலுவலர்.


முதன்மைக் கல்வி அலுவலகம்,


அனைத்து மாவட்டங்கள்


நகல்


Tamilnadu Science and Technology Centre, Gandhi Mandapam Road,


Chennai-25.


NOTE (குறிப்புகள்):


1. பதிவு செய்யும்போது அலைபேசி எண் ஓராண்டு அல்லது இரண்டாண்டுகள் தொடர்புக்கு ஏற்ற வகையில் அமையுமாறு பதிவிட வேண்டும். பள்ளியின் தொலைபேசி எண் இருப்பின் அதை அவசியம் பதிவிட வேண்டும். பள்ளி மாறிச்செல்பவர்கள், ஓய்வு பெற போகும் ஆசிரியர்களின் அலைபேசியைக் கண்டிப்பாகப் பதிவிட வேண்டாம்.


2. INSPIRE MANAK விருதில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்


விரைவுத்துலங்கிக் குறியில் (QR CODE) வழங்கப்பட்டுள்ளது. 3. மின்னஞ்சல் கண்டிப்பாகப் பள்ளி மின்னஞ்சல் மட்டுமே


குறிப்பிடவேண்டும். தனிப்பட்ட மின்னஞ்சல்களைப் பதிய வேண்டாம்.


4. வங்கிக்கணக்கு மாணவரின் பெயரில் மட்டுமே இருக்க வேண்டும் 5. ஏற்கனவே புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது


பெற்றவர்கள் இந்த ஆண்டு மீண்டும் பதிவு செய்யக்கூடாது. 6. மாணவர்களுடைய ஆய்வுகள் புதியதாக சிறப்பாக அமைந்தால் மட்டுமே தேர்ந்தேடுக்கப்பட்டு ரூ.10,000/- வழங்கப்படும்.


7. புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது ஒருங்கிணைப்பாளர்கள் 1. திருமதி கி. கோமதி, கோளரங்கப் பொறியாளர் 94863 41068 2. திரு. கோ.சுடலை, வழிநடத்தும் விரிவுரையார் (தே.நி) 77089 42872


8. School Password தொடர்பான விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் மற்றும் கைபேசி எண்கள் பின்வருமாறு (தொடர்பு கொள்ள வேண்டிய நேரம் காலை 10.00 மணி (முதல் மாலை 05.00 மணி வரை) (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை)


திரு. கோ.சுடலை, வழிநடத்தும் விரிவுரையாளர் (தே.நி) திருமதி ஜெ.துர்காபவானி, அறிவியல் உதவியாளர் நிலை-11 திரு. வி. வினோத்குமார், காட்சிக்கூட போதகர் (தே.நி) திரு.தே.சரவணன், காட்சிக்கூட போதகா திரு. சீ அருண்பிரசாத், NMR


77089 42872 98419 29435 88256 50327 99417 11029 91766 52917 77084 88203


செல்வி. மு. ஹரிணி, NMR



அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் /தனியார் பள்ளி முதல்வர்களுக்கு வணக்கம் 

Inspire Manak Award 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதுகளுக்கான புதிய பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது அனைத்து தலைமை ஆசிரியர்களும் விரைந்து பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

 முதன்மைக் கல்வி அலுவலர்



TAPS Interim Payout / CPS Final Closure குறித்த அரசாணைகள், படிவங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்கள் தொகுப்பு

 


TAPS Interim Payout / CPS Final Closure குறித்த அரசாணைகள், படிவங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்கள் தொகுப்பு


தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களும் ஒரே கோப்பில்


TAPS (Tamilnadu Assured Pension Scheme) all information in one file


நண்பர்களே வணக்கம் 🙏

TAPS 

1.1.26 முதல் CPS retirement employees

Interim monthly payout option கொடுக்கலாம் அல்லது CPS final closure letter கொடுக்கலாம் 👍

நீங்கள் அறிந்ததே


தற்போது interim monthly payout sanction order ( DDO/ SR maintain authority) வழங்கலாம் என அரசாணை வந்துள்ளது 🙏


1) ஓய்வு பெற்ற பணியாளர் செய்ய வேண்டியது

* விண்ணப்பம்/ விருப்ப கடிதம் கடைசியாக பணிபுரிந்த அலுவலகத்தில் வழங்குதல்

* Form 1 வழங்குதல்

* உரிய இணைப்புகள் வழங்குதல்

* எல்லாம் 3 பிரதிநிதிகள்

* காலக்கெடு பணி ஓய்வில் இருந்து 60 நாட்கள்

* 1/1/26 to 31/5/26 வரை ஓய்வு எனில் அரசாணை வந்து 60 நாட்களுக்கு உள்ளே

* அரசாணை 16/6/26 எனவே 16/8/26 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் 


2) தலைமை ஆசிரியர்/ Head of office/ SR maintenance Authority செய்ய வேண்டியது

* 1/1/26க்கு பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு அரசாணை 111 குறித்த தகவல் தெரிவித்தல்

* அவர்கள் இடம் இருந்து விருப்ப கடிதம் விண்ணப்பம் உரிய இணைப்புகள் பெறுதல்

* CPS final closure எனில் option letter வாங்கி தற்போது உள்ள நடைமுறை படி CPS final settlement letter IFHRMS இல் process செய்து சென்னை அனுப்புதல்

* TAPS Interim Monthly payout option எனில் , form 1 attestation, 

* Manual preparation of sanction order

* processing in IFHRMS

* annexure 1 download from IFHRMS ( some technical issues will be rectified soon)

* Fill manually the unfilled details in annexure 1 (download form)

* Process through IFHRMS

* upload necessary attachments

* process steps/flow chart shared by DTA CPS wing Chennai

* Virudhunagar, Salem, The Nilgiri DTOs shared procedure in screenshot refer it

* for further details contact your ST/PAO/District Treasury

* Chennai CPS wing (DTA) department will process it

* DDO should maintain the interim monthly payout register ( model attached)

* easy steps... 

* முதல் முறையாக என்பதால் சில இடங்களில் technical issues வரலாம்.... 

* எல்லாம் விரைவில் சரி செய்யப்படும்..

* பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய பணப் பலன் கிடைக்க அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது...

* பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் மற்றும் சிரமங்களை குறைத்திட வேண்டும் என்ற நோக்கில் அரசு நினைக்கிறது...

* நாமும், ஓய்வு பெற்றவர்களின் கண்ணியம் காத்து. உரிய பலன்களை அவர்கள் சிரமம் இன்றி பெற்றிட உறுதுணையாக இருப்போம்


TAPS சார்ந்த

எனது write up

Model letter, sanction order 

அரசாணைகள்

சுற்றறிக்கைகள்

கடிதங்கள் (1-55 pages)


Vj Sir write-up

IFHRMS flow chart

Salem, Vnr (56-106) 


தனித் தனியே தேட வேண்டாம் என்பதால் எல்லாவற்றையும் மொத்த தொகுப்பாக பகிர்ந்துள்ளேன் 😊


கூடுதல் விவரங்களுக்கு தங்களின் STO/PAO/DTO தொடர்பு கொள்ளுங்கள் 


தகவலுக்காக

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

மதுரை மாவட்டம்

2/8/26



இணைப்புகள்

Retired Employee வழங்க வேண்டியது

1) விண்ணப்பக் கடிதம்

2) Form I

3) SR FIRST TWO PAGE

4) First Appointment order

5) SR Entry Page Xerox

6) Regularization order (01.06.2006)

7) SR Entry Page Xerox

8) Retirement order

9) SR Entry Page Xerox

10) Retirement Reliving Order

11) SR Entry Page Xerox

12) SR Nomination page Xerox

13) Last Pay Slip copy (IFHRMS DOWNLOAD)

14)   Bank PASSBOOK front page (clear copy)

15) Residential Address proof (Aadhar copy)

மேலே உள்ள இணைப்புகளுடன் தலைமை ஆசிரியருக்கு 3 பிரதிகள் தரவேண்டும் 

Other Attachments by the DDO

1) Sanction order (prepared by Head of the office)

2) Annexure 1 (system generated)

3) Interim monthly pay out arrear calculation sheet if applicable  (2026 Jan to July)


தற்போது அரசாணை 152 இன் படி அலுவலகத் தலைவருக்கு விண்ணப்பம் அனுப்பினால் போதும். CEO/JDக்கு அனுப்ப வேண்டாம்.


தலைமை ஆசிரியரே sanction order வழங்கிடலாம்.


 முழுமையான விவரங்களுக்கு அரசாணைகள் /கருவூலத் துறை சுற்றிக்கையினை பார்க்கவும் 




>>> PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



MODEL SANCTION ORDER – editable word document



>>> Word கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Dr. Radhakrishnan Awardக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு



டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



2026 ஆம் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்குவதற்காக  17.07.2026 முதல் 03.08.2026 வரை ஆசிரியர்கள் EMIS வாயிலாக விண்ணப்பிக்கத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் குறைவான அளவிலேயே விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், விண்ணப்பிப்பதற்கான கால அளவை 06.08.2026 வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. எனவே ஆசிரியர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பங்களை முழுமையாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. பகுதியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள (partially completed) விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளதால் அவற்றினை முழுமையான அளவில்(fully completed) பதிவேற்றம் செய்யும் பணியினை துரிதப்படுத்துமாறும் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் மூலம் சார்ந்த ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06 ந.க. எண். 010095/ஐ/இ1/2026, நாள் 31.07.2026


பொருள்:


பள்ளிக் கல்வி - டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது 2026 - EMIS இணைய தளம் மூலம் ஆசிரியர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யத் தெரிவித்தது விண்ணப்பப் பதிவேற்றத்திற்கு கால நீட்டிப்பு வழங்குதல் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் & மாவட்டத் தேர்வுக்குழு அளவில் மதிப்பீடு செய்வதற்கான கால அட்டவணை - தொடர்பாக.


பார்வை:


1. அரசாணை (1டி) எண்.220 பள்ளிக் கல்வி (பொது-II) துறை, 05.08.2022.


2. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண். 010095/ஐ/இ1/2026, , 15.07.2026.


பார்வை 1ல் காணும் அரசாணையின் 2026 ஆம் ஆண்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்குவதற்காக பார்வை 20 காணும் செயல்முறைகளின்படி 17.07.2026 முதல் 03.08.2026 வரை ஆசிரியர்கள் EMIS வாயிலாக விண்ணப்பிக்கத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் குறைவான அளவிலேயே விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், விண்ணப்பிப்பதற்கான கால அளவை 06.08.2026 வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. எனவே ஆசிரியர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பங்களை முழுமையாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்துமாறும். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள 31.07.2026 அன்றைய விண்ணப்பங்களின் முன்னேற்ற நிலையினை கருத்தில் கொண்டு, பகுதியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள (partially completed) விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளதால் அவற்றினை முழுமையான அளவில்(fully completed) பதிவேற்றம் செய்யும் பணியினை துரிதப்படுத்துமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


மேலும் ஆசிரியர்களின் விண்ணப்பப் பதிவேற்றம் 06.08.2026 அன்று நிறைவடைந்தவுடன் அடுத்த நிலையாக சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்க/இடைநிலை/தனியார் பள்ளிகள்) 07.08.2026 முதல் 11.08.2026-க்குள் முதற்கட்டமாக ஆசிரியர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து மாவட்டத் தேர்வுக்குழுவிற்கு இணையவழியில் EMIS login வழியாக சமர்ப்பித்திட அறிவுறுத்தப்படுகிறது. கால தாமதத்தினை தவிர்ப்பதற்காக இம்முறை ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் அடுத்த நிலையாக சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரின் EMIS login ல் சமர்ப்பிக்கப்படும் (வட்டாரக் கல்வி அலுவலர் நிலை தவிர்த்து).


மாவட்டக் கல்வி அலுவலர்கள் பார்வை 1ல் காணும் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பங்களை சரிபார்த்து தகுதியுள்ள விண்ணப்பங்களை மாவட்டத் தேர்வுக்குழுவிற்கு இணையவழியில் சமர்ப்பித்திட வேண்டும் (மதிப்பீடு செய்யத் தேவையில்லை).


மாவட்டக் கல்வி அலுவலர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அளவு 11.08.2026 அன்று நிறைவடைந்தவுடன், 12.08.2026 முதல் 17.08.2026 மாலை 5 மணிக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் கீழ்க்கண்டவாறு மாவட்டத்தேர்வுக்குழு அமைக்கப்பட்டு 90 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்யும் பணியானது நிறைவு செய்யப்பட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள எண்ணிக்கைக்கு இரு மடங்கிலான விண்ணப்பங்களை (1:2) மாநிலத் தேர்வுக்குழுவிற்கு இணையவழியில் சமர்ப்பித்திட வேண்டும். விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும் பொழுது பார்வை காணும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கருத்தில் கொள்ளுமாறும். தங்களால் பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் நிலுவையில் இல்லை என்பதை உறுதி செய்து எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


மாவட்டத் தேர்வுக்குழு 


எண்.     பதவி.     குழுவில் பதவி


1 முதன்மைக் கல்வி அலுவலர்

தலைவர்


2 முதல்வர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம்

உறுப்பினர்


3 மாவட்டக் கல்வி அலுவலர்கள்

உறுப்பினர்


4 மேல்நிலைப் பள்ளி முதுநிலை தலைமையாசிரியர்

உறுப்பினர்


5 உயர்நிலைப் பள்ளி முதுநிலை தலைமையாசிரியர்

உறுப்பினர்


6 முதுநிலை வட்டாரக் கல்வி அலுவலர்

உறுப்பினர்


மேலும் மாவட்டத் தேர்வுக்குழு மதிப்பீடு செய்வதற்கான ஆசிரியர் வகை வாரியான மதிப்பெண் விவரக் கையேடு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.


இணைப்பு:-


1. விண்ணப்பங்களின் இன்றைய முன்னேற்ற நிலை


2. மதிப்பெண் விவரக் கையேடு


பெறுநர்


1. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 

2. முதன்மை தொழில்நுட்ப அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி. பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம், செ-06 (உரிய நடவடிக்கைக்காக)


நகல்


1. இயக்குநர். தொடக்கக்கல்வி இயக்ககம், செ-06 (உரிய நடவடிக்கைக்காக) 

2. இயக்குநர். தனியார் பள்ளிகள் இயக்ககம், செ-06 (உரிய நடவடிக்கைக்காக)



விலையில்லா நலத்திட்டங்கள் TNSED Appல் பதிவேற்றம் செய்தல் - இயக்குநரின் செயல்முறைகள்

 


விலையில்லா நலத்திட்டங்கள் TNSED Appல் பதிவேற்றம் செய்தல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



//மிக அவசரம்//


தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -6


ந.க. எண். 067039/இ/இ1/2025 , நாள். 30.07.2026


பொருள்:


பள்ளிக் கல்வி 2026-2027 ஆம் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு மற்றும் 2 முதல் 8 ஆம் வகுப்பு வரை புதிய மாணவ/மாணவிகள் சேர்க்கை TNSED App-பதிவேற்றம் மேற்கொள்ள செய்தல் - தொடர்பாக,


பார்வை


சென்னை -5. சமூக நல இயக்குநரின் கடிதம் ந.க. எண்.577426/சிதி-3/2025, நாள். 22.07.2026.


2026-2027 ஆம் கல்வியாண்டில், பள்ளிக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் வரும் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்திற்காக 1 ஆம் வகுப்பு மற்றும் 2 முதல் 8 ஆம் வகுப்பு வரை புதியதாக சேர்க்கை பெற்ற மாணாக்கர்களில் சத்துணவு உண்ண விருப்பம் தெரிவிக்கும் மாணாக்கர்களின் விவரங்களை EMIS-Portal TNSED App இல் 07.08.2026-க்குள் பதிவேற்றம் மேற்கொள்ளுமாறும், மலைப்பிரதேச பள்ளிகளில் புதியதாக சேர்க்கை பெற்ற 1 ஆம் வகுப்பு மற்றும் 2 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணாக்கர்களின் விவரங்களைம் EMIS-Portal TNSED App இல் பதிவேற்றம் மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.


EMIS-Portal-இல் சீருடைகள் Yes/No என்ற option -இல் பதிவேற்றம் மேற்கொள்ளுமாறும், மாணவ/மாணவிகளின் வகுப்பு/பிரிவு வருகை பதிவேட்டில் உள்ள பெயர் மற்றும் எண்ணிக்கையும் EMIS- செயலியில் உள்ள எண்ணிக்கைக்கும் வித்தியாசம் நிகழா வண்ணம் பதிவுகள் மேற்கொள்ளுமாறும், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுத்தப்படுகிறது.


பள்ளிக் கல்வி இயக்குநர்.


பெறுநர்


அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.


(மின்னஞ்சல் மூலம்)


நகல்: அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள். (மின்னஞ்சல் வழியாக)


பதவி உயர்வுக்கு 01-03-2026ன் படி TET தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் அனுப்ப உத்தரவு

 


Order issued to submit details of those who have passed the TET as of 01-03-2026 for promotion


 உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு 01-03-2026இன் படி TET தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் அனுப்ப ஆதிதிராவிடர் நலஇயக்குனர் உத்தரவு

28.7 2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


SMC ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணித்து பதிவேற்றம் செய்தல் தொடர்பாக இயக்குநரின் செயல்முறைகள்



SMC ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணித்து பதிவேற்றம் செய்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பள்ளிக் கல்வித் துறை சார்ந்த ஆசிரியர் இயக்கங்கள், அமைச்சுப் பணியாளர் சங்கங்களுடன் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பேச்சுவார்த்தை



Negotiations held by the Hon'ble Minister for School Education with teacher associations and ministerial staff unions affiliated with the School Education Department.


தொடக்கக்கல்வித்துறை, பள்ளிக் கல்வித் துறை சார்ந்த ஆசிரியர் இயக்கங்கள், அமைச்சுப் பணியாளர் சங்கங்களுடன் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் நாளை 28.07.2026  காலை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பேச்சுவார்த்தை நடத்திட அழைப்பு விடுத்துள்ளார்


சங்கத்திற்கு இரண்டு பிரதிநிதிகள் வீதம் பங்கேற்க தெரிவிக்கப்பட்டுள்ளது


​பள்ளிக் கல்வித் துறை - கலந்தாலோசனைக் கூட்ட அறிவிப்பு.


​தேதி: 28.07.2026 (செவ்வாய்க்கிழமை)


நேரம்: காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை


இடம்: அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம், கோட்டூர்புரம், சென்னை.


தலைமை: மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள்


​கூட்டத்தின் முக்கிய விவரங்கள்:

​பொருள்: ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் மேம்பாடு குறித்தான கலந்தாலோசனை.


​பங்கேற்பாளர்கள்: அங்கீகரிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர் சங்கங்களின் மாநிலத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள்.


​குறிப்பு: கூட்டத்தில் பங்கேற்கும் சங்க நிர்வாகிகள் குறித்த நேரத்தில் வருகை தந்து தங்களது கருத்துக்களையும் கோரிக்கைகளையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Uploading students' Aadhaar and Post Office Savings Bank account details in EMIS | DEO Proceedings



மாணவர்களின் ஆதார் மற்றும் அஞ்சலக சேமிப்பு வங்கிக் கணக்கு  விவரங்களை EMIS இல் பதிவேற்றம் செய்ய மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக் கல்வி) செயல்முறைகள் வெளியீடு


Proceedings of the District Educational Officer (Elementary Education) regarding the uploading of students' Aadhaar and Post Office Savings Bank account details to EMIS.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


 

காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக் கல்வி) செயல்முறைகள்


ந.க.எண்.2198/ஆ5/2026 , நாள். 22.07.2026


பொருள்: தொடக்கக் கல்வி - கல்வி உதவித் தொகை - காஞ்சிபுரம் மாவட்டம் -மாணாக்கர்கள் கல்வி உதவித்தொகை வழங்கப்பெறும் பொருட்டு ஆதார் புதுப்பித்தல் மற்றும் அஞ்சலக சேமிப்பு வங்கிக் கணக்கு துவங்குதல் EMIS இல் இவ்விவரங்களை சரியாக பதிவேற்றம் செய்யக் கோருதல்-சார்ந்து.


பார்வை: காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் கடிதம் நே.மு.க.ந.க.எண்.1758/அ4/2025, நாள். .07.2026.


பார்வையில் காணும் கடிதத்தின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், தொடக்கக் கல்வியின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து விதமான கல்வி உதவித் தொகைகளும் EMIS வலைதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட மாணவர்களின் வங்கிக் கணக்கு எண்ணிற்கு அந்தந்த நலத்தறை வாயிலாக நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளி மாணாக்கர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்துவதற்கு கீழ்க்காணுமாறு EMIS வளைதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் இப்பணிக்கென ஒரு Nodal Officer-ஐ உடனடியாக நியமித்து, மாணாக்கர்களின் ஆதார் எண், வங்கிகணக்கு எண், சாதி மற்றும் ஆண்டு வருமானம் உள்ளிட்ட விவரங்களை சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் சரிபார்த்து EMIS தளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும். மேலும், பதிவேற்றம் செய்பவருடன் ஒரு பொறுப்பாசிரியரை நியமித்து இப்பணியை கண்காணிக்க அறிவுறுத்த வேண்டும். மாணாக்கர்களின் செயல்பாடற்ற வங்கி கணக்கினை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர தக்க நடவடிக்கை மேற்கொள்ள பள்ளித் தலைமையாசிரியருக்கு அறிவுறுத்துமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


எனவே, வட்டாரக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளில் EMIS தளத்தில் மாணாக்கர்களது விவரங்கள் அனைத்தும் எவ்வித காலதாமதமும் இன்றி 100% முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டு முடிக்கப்பட்டமைக்கான அறிக்கையினை (Compliance Report) 27.07.2026 முற்பகல் 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மாவட்டக் கல்வி அலுவலர், (தொடக்கக் கல்வி) காஞ்சிபுரம்.


பெறுநர்-


அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்


காஞ்சிபுரம் / வாலாஜாபாத் / உத்திரமேரூர்/ ஸ்ரீபெரும்புதூர் / குன்றத்தூர்.


SMC மூலம் நியமிக்கப்படும் Temporary Teachersன் பணி நியமனம் மற்றும் செயல்பாடுகளை கண்காணிக்க TNSED Parents செயலியில் மின்னணு கண்காணிப்பு அமைப்பு உருவாக்கம்



Creation of an electronic monitoring system within the TNSED Parents app to oversee the appointment and functioning of temporary teachers recruited through the SMC - DEE Proceedings


SMC மூலம் நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியர்களின் பணி நியமனம் மற்றும் செயல்பாடுகளை கண்காணிக்க TNSED Parents செயலியில் மின்னணு கண்காணிப்பு அமைப்பு உருவாக்கம்


தமிழ்நாடு தொடக்கக் கல்வி - பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் மற்றும் செயல்பாடுகளை கண்காணித்து பதிவேற்றம் செய்ய TNSED பெற்றோர் செயலியில் (Parents App) மின்னணு கண்காணிப்பு அமைப்பு உருவாக்குதல் முன் மொழிவு பெறப்பட்டது - சரியான பயன்பாடு மற்றும் மேம்படுத்துதலையும் உறுதி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொருட்டு அனுப்புதல் - தொடர்பாக தொடக்கக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் சங்க உறுப்பினர் செயலரின் கடிதம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் (நிர்வாகம்) செயல்முறைகள், சென்னை-06


ந.க. எண்:007242/டி1/2026, நாள்: .07.2026


பொருள்:


தமிழ்நாடு தொடக்கக் கல்வி - பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் மற்றும் செயல்பாடுகளை கண்காணித்து பதிவேற்றம் செய்ய TNSED பெற்றோர் செயலியில் (Parent App) மின்னணு கண்காணிப்பு அமைப்பு உருவாக்குதல் முன் மொழிவு பெறப்பட்டது சரியான பயன்பாடு மற்றும் மேம்படுத்துதலையும் உறுதி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொருட்டு அனுப்புதல் - தொடர்பாக


பார்வை:


1. அரசாணை(நிலை) எண்.07, பள்ளிக்கல்வித் (5(2)) துறை. நாள்.01.01.2023


2. சென்னை-06, தமிழ்நாடு மாதிரிப்பள்ளிகள் சங்க உறுப்பினர் செயலரின் கடித ந.க.எண்.1338/எஸ்1/எஸ்.எம்.சி/எம்2/2026, நாள் : 19.06.2026


பார்வை (1)-பள்ளி காணும் அரசாணை வழிமுறைகளின்படி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நியமனங்களில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் கண்காணிப்பு மேலும் வலுப்படுத்தும் நோக்கில் TNSED பெற்றோர் செயலியில் (Parent App) முன்மொழியப்பட்டுள்ள மின்னணு கண்காணிப்பு அமைப்பு பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்படும் ஆசிரியர்களின் விவரங்களை எளிமையாகக் கண்காணிக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், பயனுள்ள கண்காணிப்பை மேற்கொள்ளவும் உதவும், சரியான பயன்பாடு மற்றும் மேம்படுத்துதலையும் உறுதி செய்திட மாவட்ட, வட்டார ஆய்வு அலுவலர்களுக்கு அறிவுறுத்திட பார்வை (2)-இல் காணும் தமிழ்நாடு மாதிரிப்பள்ளிகள் சங்க உறுப்பினர் செயலரின் கடித நகல் உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொருட்டு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்படுகிறது.

இணை இயக்குநர்(நிர்வாகம்).


இணைப்பு: கடித நகல்


பெறுநர்.


அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்(தொடக்கக்


நகல்.


அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள். (உரிய வழியாக)



அனுப்புநர்:

உறுப்பினர் செயலர்,

தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் சங்கம்,

பள்ளிக் கல்வித்துறை.

டி.பி.ஐ. வளாகம், கல்லூரி சாலை,

சென்னை - 600 006.


பெறுநர்:


1 இயக்குநர்.

பள்ளிக் கல்வி இயக்ககம்,


2 இயக்குநர்.

தொடக்கக் கல்வி இயக்ககம்,

சென்னை-600 006.


RC No: 1338/S1/SMC/MS/2026, Date: 19-06-2026


பொருள்: பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (SMCs) மூலம் நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியர்களின் பணி நியமனம் மற்றும் செயல்பாடுகளை கண்காணித்து பதிவேற்றம் செய்ய TNSED பெற்றோர் செயலியில் (Parent App) மின்னணு கண்காணிப்பு அமைப்பு உருவாக்குதல் முன்மொழிவு-தொடர்பாக.


பார்வை: அரசாணை (நிலை) எண். 07, பள்ளிக் கல்வி 5(2) துறை, நாள் 01.01.2023.


அரசாணை (நிலை) எண். 07, பள்ளிக் கல்வித் துறை, நாள் 07.01.2023இல் காண் வழிமுறைகளின்படி, நீண்டகால விடுப்பு, மாற்றுப் பணி, காலிப்பணியிட மாற்றம், மருத்துவ விடுப்பு. மகப்பேறு விடுப்பு அல்லது பிற நிர்வாகக் காரணங்களால் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஏற்படும் பள்ளிகளில் கற்பித்தல் செயல்பாடுகள் தடையின்றி நடைபெறுவதற்காக, பள்ளி மேலாண்மைக் குழு (SMCs) மூலமாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


மேற்கண்ட நியமனங்களில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியர்களின் விவரங்களை முறையாகப் பதிவுசெய்து கண்காணிப்பதற்காக TNSED பெற்றோர் செயலியில் தனித்துவமான மின்னணு தொகுதியை (Digital Module) உருவாக்க இதன்வழியாக முன்மொழியப்படுகிறது.


முன்மொழியப்படும் தொகுதியில் பின்வரும் கூறுகள் இடம்பெறலாம்:


1. பள்ளி வாரியாக தேவைகளை உள்ளீடு செய்தல்


o தற்காலிக ஆசிரியர் நியமனம் தேவைப்படும் காலிப்பணியிட விவரங்களை தலைமையாசிரியர்கள் பதிவேற்றம் செய்யலாம்.


0 காலிப்பணியிடத்திற்கான காரணம், காலஅளவு, பாடம் மற்றும் கற்பிக்க வேண்டிய வகுப்பு விவரங்கள் பதிவு செய்யப்படலாம்.


2. பள்ளி மேலாண்மைக் குழு தீர்மான பதிவேற்றம்


௦ தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்த பள்ளி மேலாண்மைக் குழு தீர்மானத்தை மின்னணு வடிவில் பதிவேற்றம் செய்தல்.


0 பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்ற நாள் மற்றும் தீர்மான எண் பதிவு செய்தல்.


3. ஆசிரியர் விவரப் பதிவு


0 தற்காலிக ஆசிரியரின் பெயர், கல்வித் தகுதி, கைபேசி எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட அடையாள விவரம், பாட நிபுணத்துவம் மற்றும் பணிக்காலம் ஆகியவற்றை பதிவு செய்தல்.


O பணியில் சேர்ந்த நாள் மற்றும் பணிவிடுவிக்கப்பட்ட நாள் ஆகியவற்றை மின்னணு முறையில் பதிவு செய்தல்.


4. வருகைப் பதிவு மற்றும் ஊதிய கண்காணிப்பு


o மாதத்தில் விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை பதிவு செய்தல்


0 அரசின், நடைமுறைகளின்படி வழங்கப்படும் மதிப்பூதியம் / ஊதியம் பெற்று வழங்கப்பட்ட விவரங்களை கண்காணித்தல்


5. மாவட்ட மற்றும் மாநில தகவல் கண்காணிப்பு முகப்புப் பலகை (Dashboard)


பணியில் உள்ள தற்காலிக ஆசிரியர்களின் எண்ணிக்கை, பணிக்காலம், காலிப்பணியிட வகை மற்றும் பள்ளி வாரியான நிலை ஆகியவற்றை நிகழ்நேரத்தில் (Real-time) மாநில மற்றும் மாவட்ட அளவில் (CEO, DEO Ele & Sec, BEO) கண்காணித்தல்.


நீண்டகாலமாக நீடிக்கும் காலிப்பணியிடங்கள் மற்றும் அப்பணியிடத்தில் தற்காலிக


ஆசிரியர் நியமனங்கள் தொடர்பாக முன் அறிவிப்புகள் மாவட்ட அளவில் (CEO/DEO(E) - Login) வழங்குதல்.


6. கொள்கைத் திட்டமிடலுக்கான தரவுக் களஞ்சியம்


0 தற்காலிக ஆசிரியர் பணிநியமனம் மற்றும் காலிப்பணியிட மேலாண்மை தொடர்பான நிர்வாக முடிவெடுப்புகளுக்கு ஆதரவளிக்கும் ஒருங்கிணைந்த தரவுத்தளத்தை மாநில அளவில் (State Login) உருவாக்குதல்.


முன்மொழியப்படும் இவ்வமைப்பு மூலம்:


அரசாணைகளைத் தரப்படுத்தப்பட்ட முறையில் செயல்படுத்துதல்.


பள்ளி மேலாண்மைக் குழு அடிப்படையிலான நியமனங்களில் வெளிப்படைத்தன்மை மேம்படும்.


நீண்டகாலமாக பூர்த்தி செய்யப்படாமல் உள்ள காலிப்பணியிடங்களை கண்டறிய வழி ஏற்படும்.


அங்கீகரிக்கப்படாத நியமனங்கள் தடுக்கப்படும்.


மாவட்ட மற்றும் மாநில அளவிலான அலுவலர்களால் நிகழ்நேர (Real-time)


கண்காணிப்பு மேற்கொள்ள இயலும்.


பள்ளிகளில் கற்பித்தல்-கற்றல் செயல்பாடுகளின் தொடர்ச்சி சிறப்பாக உறுதி செய்யப்படும்.


மேற்கண்ட விவரங்கள் தங்களது கனிவான தகவலுக்காகவும், இயக்கக அளவில்


தேவையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் சமர்ப்பிக்கப்படுகின்றன.


விவரங்களை TNSED பெற்றோர் செயலியில் முன்மொழியப்பட்டுள்ள மின்னணு கண்காணிப்பு அமைப்பு, பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியர்களின் மாவட்டங்கள் முழுவதும் எளிமையாகக் கண்காணிக்கவும். வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும். பயனுள்ள கண்காணிப்பை மேற்கொள்ளவும் உதவும். மேலும், இத்தொகுதியின் சரியான பயன்பாடு மற்றும் மேம்படுத்துதலையும் உறுதிசெய்திட மாவட்ட மற்றும் வட்டார அளவிலான அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.


உறுப்பினர் செயலர்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Dr. Radhakrishnan Award Presentation Ceremony 2026 - DSE Proceedings

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Dr. Radhakrishnan Award Presentation Ceremony – Proceedi...