கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DVAC இயக்குநர் பணியிட மாற்றம்



 ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் இ.ஆ.ப . பணியிட மாற்றம்


Director, Vigilance and Anti-Corruption Department, transferred


லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. மகேஸ்வரி, இயக்குநர் பொறுப்பை கூடுதலாக சேர்த்து கவனிப்பார் என அறிவிப்பு


காவல்துறை அகாடமி ஏடிஜிபி ஆக அருண் நியமனம்


Today's (13-07-2026) Wordle

 


Today's (13-07-2026) Wordle Puzzle 


                            

Wordle விளையாடும் முறை: 


ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.


பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,

 

மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 


சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  


 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.


தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.


 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.


 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 



Wordle Game Link: 


>>> Click Here...



Yesterday's (12-07-2026) Wordle Answer: YOUTH



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



NHIS 2026 - குடும்ப உறுப்பினர்களை IFHRMSல் பதிவேற்றம் செய்தல் தொடர்பான வழிகாட்டுதல்

 


NHIS 2026 - குடும்ப உறுப்பினர்களை IFHRMSல் பதிவேற்றம் செய்தல் தொடர்பான வழிகாட்டுதல்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Census 2027 பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் விவரம் - DSE Proceedings



மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் விவரம் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்


மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர் அல்லாத அரசு ஊழியர்களை பயன்படுத்த விபரங்கள் கேட்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள், சென்னை -06


ந.க.எண். 040696/அ3/இ1/2026 , நாள். 10.07.2026


பொருள் :


மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 - ஆசிரியரல்லாத பணியாளர்கள் - மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் விவரம் கோருதல் - தொடர்பாக.


பார்வை :


அரசாணை (நிலை) எண். 450 பொது (சட்ட அலுவலர்) துறை , நாள். 09.07.2026


2027 ஆம் ஆண்டிற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் / பணியாளர்களுக்கு மாறுதல் அளிப்பதில் கட்டுப்பாடுகள் விதித்து அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.


எனவே, பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் வரும் அனைத்து அலுவலகங்கள், DIET's. அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் ஆசிரியரல்லாத பணியாளர்களில் 2027 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் பணியாளர்கள் விவரங்களை இணைப்பில் காணும் படிவங்களில் தயார் செய்து இன்று 10.07.2026 மாலை 05.00 மணிக்குள் பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பிவைக்க முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மேற்காண் பணியில் எவரும் ஈடுபடுவோர் எவரும் இல்லையெனில் இதே படிவங்களில் இன்மை அறிக்கையினை அளிக்க முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Form - 1 (PA to DEO's, Superintendent's and Desk Superintendent's)


a3sec.tndse@gmail.com


Form - 2 (Assistant's, Junior Asst's, Typist's, Steno Typist's)


cosea4sec@gmail.com


Form-3


(Lab Asst's, Record Clerk's, Record Asst's and other Categories)


a5sectndse@gmail.com


இணைப்பு - மாதிரி படிவங்கள் 3


இணை இயக்குநர் இயக்குநர் (பணியாளர் தொகுதி)


பெறுநர்

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள். (மின்னஞ்சல் வழியாக)


நகல்:


1. மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை 06


2. உறுப்பினர் செயலர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை 06


3. இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை 06


4. இயக்குநர். தனியார் பள்ளிகள் இயக்ககம், சென்னை 06


5. இயக்குநர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்பயிற்சிநிறுவனம், சென்னை 06


6. இயக்குநர், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம், சென்னை 06


முதன்மை உடற்கல்வி ஆய்வாளர், முதன்மை


7. உடற்கல்விஆய்வாளர் அலுவலகம், சென்னை 06


8. இவ்வியக்கக அ2, அ4, அ5 பிரிவிற்கு


9. தகவல் பலகைக்கு


தங்கள் அலுவலகப் பணியாளர்கள் சார்பாக விவரங்களை அளிக்கும் பொருட்டு பணிந்தனுப்படுகிறது


அரசியல், பிரிவினைவாத மற்றும் கல்வி நோக்கமற்ற நிகழ்ச்சிகள் நடத்த பள்ளி வளாகத்தைப் பயன்படுத்த கூடாது - பள்ளிக் கல்வித் துறையின் விரிவான அறிவுரைகள் வெளியீடு



பள்ளிகளில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகள் மட்டுமே நடைபெற வேண்டும் - பள்ளிக் கல்வித் துறையின் விரிவான அறிவுரைகள் வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள், சென்னை-6.


ந.க.எண்.5923/அ1/2026, நாள். 10.07.2026.


பொருள்:

பள்ளிக் கல்வி - பள்ளிகளில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகள் மட்டுமே நடைபெற வேண்டும் - பள்ளிகளுக்கு அறிவுரை வழங்குவது தொடர்பாக.


பார்வை: மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் பத்திரிக்கை செய்தி, நாள். 09.07.2026.


தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 57,671 பள்ளிகளில் 1,03,98,748 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இம்மாணவர்கள். பல்வேறு சமூக பொருளாதார நிலைகளில் இருந்து பள்ளிக்கு வருகின்றனர். மாணவர்களிடையே எவ்வித பாகுபாடு எண்ணங்களின்றி ஒற்றுமை உணர்வுடன் மன அழுத்தங்களைத் தவிர்த்து கல்வி கற்று வருகின்றனர். மாணவர்களிடையே பிளவையும். பாகுபாடான எண்ணங்களையும் ஏற்படுத்தாத வகையில் இளம் மனதில் சாதி, மத, அரசியல் சார்புகளின்றி முழுமையான கல்வியை அளிப்பதே கல்விக் கூடங்களின் முதன்மையான நோக்கம் ஆகும்.


தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை விதிகளின்படி அரசியல், வகுப்புவாத, பிரிவினைவாத மற்றும் கல்வி நோக்கமற்ற நிகழ்ச்சிகள், கூட்டங்கள், பிரச்சாரங்கள் ஆகியவற்றை நடத்த பள்ளி வளாகத்தைப் பயன்படுத்த கூடாது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகள் மட்டுமே நடத்துவதன் மூலம் மாணவர்களின் ஒட்டுமொத்த கல்வி வளர்ச்சியினை உறுதி செய்ய இயலும்.


ஆனால், பள்ளிக் கல்வியின் நோக்கத்தை சீர்குலைக்கும் வகையில் சமீப காலங்களில் பள்ளி வளாகத்தை சாதி, மத, அரசியல் ரீதியான அடையாளங்களுடன் சிலர் பயன்படுத்தி வருவதாக தெரிய வருகிறது. இது மாணவர்களின் இளம் மனதில் அரசியல் சார்புகளை ஏற்படுத்தி பிரிவினையைத் தூண்டுவதாகவும். சில நேரங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும். அதன் காரணமாக மாணவர்களை மன அழுத்தத்திற்கு உட்படுத்துவதாகவும் உள்ளது.


எனவே, பள்ளிகளில் சாதி, மத, அரசியல் சார்ந்த நிகழ்வுகளைத் தவிர்ப்பது மாணவர்களின் பாதுகாப்பையும், ஒற்றுமையையும் வலுப்படுத்துவதாகவும் அமையும். எனவே. பின்வரும் செயல்பாடுகளை அனைத்துவகைப் பள்ளிகளிலும் தவறாமல் பின்பற்றுமாறு தெரிவிக்கப்படுகிறது.


1. பள்ளி வளாகங்கள் கல்வியின் முக்கியத்துவத்தை பேணிக்காக்கும் இடமாகவும். இனிமையான கற்றல் கற்பித்தல் சூழ்நிலை கொண்டதாகவும், மாணவர்களின் எதிர்கால இலட்சியங்களை நிறைவேற்றக் கூடிய இடமாகவும் இருக்க வேண்டும்.


2. பள்ளி வளாகங்களை கல்விசாராத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது.


3. வகுப்பறைகள், கலையரங்குகள், விளையாட்டு மைதானங்கள் அல்லது திறந்த வெளியில் மாணவர்களை ஒருங்கிணைத்தோ அல்லது வெளிநபர்களால் துறை சாராமல் நடத்தப்படும் ஒத்திகைகள், அணி வகுப்புகள் அல்லது வகுப்புவாதம் சார்ந்த செய்திகளைப் பரப்புதல் மற்றும் விழா நடத்துதல் போன்றவை பள்ளி வளாகங்களில் கட்டாயம் அனுமதிக்கக் கூடாது.


4. அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் அறிவிக்கப்படும் தலைவர்களின் பிறந்த நாள் விழாக்களுக்கான நடைமுறைகளைத் தவிர பிற தலைவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஏதும் பள்ளி வளாகத்தில் நடத்திடவோ அல்லது அவ்விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லவோ பங்குபெற அனுமதிக்கவோ கூடாது. மேலும், இது சார்ந்த கொண்டாட்டங்கள் தொடர்பாக விளையாட்டுப் போட்டிகள், மருத்துவ முகாம்கள். கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்தவிதமான நிகழ்ச்சிகளையும் எந்த வடிவத்திலும் பள்ளி வளாகத்தில் நடத்தக் கூடாது. மேலும், உணவுப் பொருட்கள். பரிசுப் பொருள்கள் வழங்குவதையும் முற்றிலும் தவிர்த்தல் வேண்டும்.


மேற்கண்ட அறிவுரைகளை எவ்வித சுணக்கமும் இன்றி பின்பற்றுமாறு சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குத் (இடைநிலை). (தொடக்கக் கல்வி), (தனியார் பள்ளிகள்) தெரிவிக்கப்படுகிறது.


தனியார் பள்ளி இயக்குநர்


தொடக்கக் கல்வி இயக்குநர்


பள்ளிக்கல்வி இயக்குநர்



பெறுநர்


அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.


அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள். (இடைநிலை). அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், (தொடக்கக் கல்வி). அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள். (தனியார் பள்ளிகள்).


நகல்


அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளர். பள்ளிக் கல்வித்துறை. தலைமைச் செயலகம். சென்னை - 600 009.


15-07-2026 அன்று அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

 


15.07.2026 அன்று அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 06


ந.க.எண். 34752/எம்-1/இ2/2023, நாள். 08.07.2026.


பொருள்: பள்ளிக் கல்வி - 2026 - 27ஆம் கல்வியாண்டு - முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான 15.07.2026 அன்று அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் - அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு  பேச்சுப்போட்டி,  கட்டுரைப்போட்டி, மாணவர்களுக்கு பரிசு கவிதைப்போட்டி நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவித்தல் - சார்பு.


பார்வை :


அரசாணை (நிலை) எண். 169 பள்ளிக் கல்வி (எக்ஸ்) துறை, நாள் .06.07.2012


பார்வை 1இல் கண்டுள்ள அரசாணையில் தமிழ்நாட்டில் கல்லாமை இருளை நீக்கப் பள்ளிகள் பல திறந்து கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டுக் கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜுலை திங்கள் 15 ஆம் நாளினை " கல்வி வளர்ச்சி நாள்" என அரசு அறிவித்தும் அந்நாளில் காமராஜர் திருவுருவப்படத்தை அலங்கரித்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட அரசால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இவ்வாண்டு அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, ஓவியப்போட்டி போன்ற போட்டிகளை நடத்தி வெற்றிப்பெற்ற மாணவ/ மாணவியருக்கு பரிசு வழங்கி ஊக்குவிக்குமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியருக்கு அறிவுறுத்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தெரிவிக்கப்படுகிறது.


இணை இயக்குநர்


பெறுநர்


அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்,


அனைத்து மாவட்டம்.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-07-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-07-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



திருக்குறள்:

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:45 பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:448

குறள்:

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

பொருள்:

கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.


பழமொழி :

Faith is the force of life.

நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து அளவான வார்த்தைகளைப் பேசுவேன்.

2. தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன்.


பொன்மொழி :

வாய்ப்புக்காக காத்திருக்காதே; வாய்ப்பை உருவாக்கு.


Thought for the Day :

Kindness costs nothing but means everything.


பொது அறிவு :

1.தேசிய கீதம் இல்லாத நாடு எது?

சைப்ரஸ்.

2. நதிகள்  இல்லாத நாடு எது?

வாடிகன்


English words :

Neglect – Ignore, புறக்கணி.    

Conceal - Hide something from sight, மறை.


புவியியலும் சுற்றுசூழலும் :

பூமியின் நிலப்பரப்பு பின்வரும் முக்கிய இயற்கை நில அமைப்புகளாகப் பிரிக்கப்படுகிறது:
கண்டங்கள் (Continents) – பூமியின் மிகப்பெரிய நிலப்பரப்புகள்.
நாடுகள் (Countries) – கண்டங்களுக்குள் அமைந்துள்ள அரசியல் எல்லைகளைக் கொண்ட பகுதிகள்.


NMMS :

SAT - கணிதம்

ஒரு பொருளை ₹850 க்கு விற்றதால் கிடைத்த இலாபமும் , அதே பொருளை ₹570 க்கு விற்றதால் ஏற்பட்ட நட்டமுமம் சமம் எனில் அந்த பொருளின் அடக்க விலை _________________                                                         (1) ₹280.                    

(2)₹ 710.                         

  (3) ₹720.                     

(4) @₹1420.                         

  விடை: (2) ₹710


நீதிக்கதை

"ஒரு சிறிய விதையின் வெற்றி"

ஒரு கிராமத்தில் ஹேமா என்ற சிறுமி வாழ்ந்து வந்தாள். அவள் தினமும் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு வயதான தாத்தா மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

ஒருநாள் ஹேமா கேட்டாள்:

"தாத்தா, நீங்கள் நட்ட இந்த மரங்கள் பெரியதாக வளர பல ஆண்டுகள் ஆகுமே. அப்போது நீங்கள் இருப்பீர்களா?"

தாத்தா சிரித்துக் கொண்டு,

"நான் இல்லாவிட்டாலும், இந்த மரத்தின் நிழலில் ஓய்வெடுப்பவர்கள் இருப்பார்கள். நான் பெற்ற நன்மையைப் போல, மற்றவர்களும் நன்மை பெற வேண்டும் என்பதற்காகத்தான் இதை நடுகிறேன்," என்றார்.

அந்த வார்த்தைகள் யாழினியின் மனதில் பதிந்தன. அன்றே அவளும் வீட்டில் ஒரு மாமரக் கன்றை நட்டாள். தினமும் தண்ணீர் ஊற்றி அன்புடன் பராமரித்தாள்.

சில ஆண்டுகள் கழித்து, அந்த மரம் பெரியதாக வளர்ந்து, அதன் நிழலில் மக்கள் ஓய்வெடுத்தனர். அதன் பழங்களை குழந்தைகள் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டனர்.

அப்போது யாழினி, "ஒரு சிறிய நல்ல செயல் பலருக்கு பெரிய மகிழ்ச்சியைத் தரும்" என்பதை உணர்ந்தாள்.

நீதி:

"நாம் செய்யும் சிறிய நற்செயலும், நாளை பலரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்." 


இன்றைய செய்திகள்
13.07.2026

🗒️ உலகளவில் கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் முதல் 50 நகரங்களின் பட்டியலில் மதுரை 7வது இடமும் சென்னை 49வது இடமும் பிடித்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் 14 இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

🗒️ மாற்றுத்திறனாளிகளுக்கான 4 % இடஒதுக்கீட்டு நடைமுறையை முழுமையாக செயல்படுத்தி வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

🗒️ AI மற்றும் Data
Centre-களின் அதீத வளர்ச்சியால், அதிர்ச்சிகரமான அளவில் அதிகரிக்கும் Microsoft, Amazon, Google நிறுவனங்களின் கார்பன் உமிழ்வு!

🗒️ 56-வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா மொத்தம் 5 தங்கம் வென்று சர்வதேச அளவில் பெரும் சாதனை படைத்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

🏀 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ்    இறுதிப்போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசின்  லிண்டா நோஸ்கோவா  முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


Today's Headlines

☘️Madurai has been ranked 7th and Chennai 49th in the list of the world's top 50 cities facing the most extreme heat. A study conducted by researchers at the University of Oxford found that 14 Indian cities feature in the list.

☘️The Chief Minister of Tamil Nadu has directed that the 4% reservation for persons with disabilities be fully implemented to ensure employment opportunities for them.

☘️Due to the rapid growth of Artificial Intelligence (AI) and data centres, the carbon emissions of Microsoft, Amazon, and Google are increasing at an alarming rate.

☘️India has achieved a remarkable feat at the 56th International Physics Olympiad, winning 5 gold medals.

🏀Sports News

In the Wimbledon Championships, one of the four Grand Slam tournaments, Linda Nosková of the Czech Republic won the Women's Singles title for the first time.



Birth Certificate தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரின் பத்திரிகைச் செய்தி

 


பிறப்புச் சான்றிதழ் தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவரின் பத்திரிகைச் செய்தி


Press release by the District Collector regarding birth certificates


குறிப்பு: அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




செ.வெ.எண். 42, நாள். 10.07.2026


பத்திரிகைச் செய்தி


பிறப்புப் பதிவு-குழந்தையின் முதல் உரிமை. பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூர்வ வயது குறித்த ஆதாரம், குடியுரிமைக்கான ஆதாரம் ஆகும். குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்புச் சான்றுதான் முழுமை பெற்ற சான்றிதழ் ஆகும்.


குழந்தையை பள்ளியில் சேர்க்க, வாக்காளர் அடையாள அட்டை பெற, ஓட்டுநர் உரிமம்பெற, அரசுப் பணிகளில் சேர, கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்புச்சான்று இன்றியமையாத ஆவணமாகும்.


ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருந்தால் அப்பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாத காலத்திற்குள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு (ம) இறப்பு பதிவாளரிடம் சமர்ப்பித்து குழந்தையின் பெயரினை தாமத கட்டணமின்றி பதிவுசெய்து கொள்ளலாம்.


12 மாதங்களுக்கு பின் குழந்தையின் பெயரினை 15 வருடத்திற்குள் காலதாமத கட்டணம் ரூ.200 செலுத்தி, உரிய அலுவலரின் அனுமதி பெற்று பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு 15 வருடத்திற்கு மேற்பட்ட மற்றும் 2011-ஆம் ஆண்டுக்கு முன்னர் எப்போது பிறந்திருந்தாலும் குழந்தையின் பெயர் பதிவு செய்யப்படாத பிறப்புகளுக்கு வரும் 26.09.2026 வரை பெயர் பதிவு செய்திட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


குழந்தையின் பெயரினை இதுவரை பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யாதோர் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள பிறப்பு (ம) இறப்பு பதிவாளர் அலுவலகங்களில் விண்ணப்பித்து குழந்தையின் பெயரினை பதிவுசெய்து கொள்ளலாம்.


பிறப்புச் சான்றில் குழந்தையின் பெயரினை ஒருமுறை பதிவு செய்த பின்னர் எக்காரணம் கொண்டும் பெயரினை மாற்றம் செய்ய இயலாது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி 26.09.2026-க்குள் குழந்தையின் பெயரினை பிறப்புச் சான்றில் பதிவுசெய்து பயன்பெறுமாறு மாவட்ட பிறப்பு (ம) இறப்பு பதிவாளர் / மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.ராஜகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.


வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி



Census பணியில் ஈடுபடும் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு 10 முழு நாட்கள் / 20 அரை நாட்கள் சிறப்பு அனுமதி - கேரளா அரசு அரசாணை வெளியீடு



  மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு 10 முழு நாட்கள் அல்லது 20 அரை நாட்கள் சிறப்பு அனுமதி - கேரளா அரசு அரசாணை G.O.(Ms) No.69 வெளியீடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



GOVERNMENT OF KERALA

Abstract


General Administration Department Census 2027 Facilities and concessions to the staff engaged for the census work - Orders issued.


GENERAL ADMINISTRATION (PROTOCOL) DEPARTMENT


G.O.(Ms)No.69/2026/GAD Dated, Thiruvananthapuram, 01-07-2026


Read: 1. Letter F. No. 14/32/M-STATE/2019 dated 02/02/2026 of the Director of Census Operations, Kerala, Thiruvananthapuram.


2. Letter F. No. 35/32/HLB/2019 dated 25/02/2026 of the Director of Census Operations, Kerala, Thiruvananthapuram.


3. Letter No. DGE/9629/2026-SS dated 06/06/2026 of the Director General of Education, Thiruvananthapuram


ORDER


In the circumstances reported by the Director of Census Operations, Kerala, Government are pleased to issue the following orders regarding the facilities and concessions to be given to the staff engaged for the work in connection with the Census 2027.


2. The Village / Local Bodies/Forest Staff/Teachers / Anganwadi Workers / Other category of staff who are appointed as Supervisors/Enumerators/Assistant Enumerators will be allowed the concession of absenting themselves from their institutions/offices on Census duty for half of a day either in the forenoon or in the afternoon on twenty working days from 01.07.2026 to 30.07.2026 or for the full day for ten working days between 01.07.2026 and 30.07.2026 for the phase 1 operations of House listing and Housing Census (HLO). The staff engaged in the Census work will have the option to choose one of the above concessions.


(By order of the Governor)


ARAVIND BS

JOINT SECRETARY & STATE PROTOCOL OFFICER



To:


The Principal Director (LR), Thiruvananthapuram


All Heads of Departments


The Director of Census Operations, Kerala


All District Collectors


The Principal Chief Conservator of Forests, Thiruvananthapuram


The Director of Urban Affairs, Thiruvananthapuram


The Director of Panchayats, Thiruvananthapuram


The Director of General Education, Thiruvananthapuram


The Director of Economics & Statistics, Thiruvananthapuram


All District Planning Officers


All District Informatics Officers


All District Information Officers


All District Project Manager, IT Mission


All Revenue Divisional Officers


All Tahsildars/Additional Tahsildars


All Municipal Corporation Secretaries/Additional Secretaries


All Municipal Secretaries


The Executive Officer, Kannur Cantonment


The State Informatics Officer, Thiruvananthapuram


All Deputy Collectors (General)


All Joint Directors (LSGD)


All Deputy Directors of Education


All Deputy Directors of Economics & Statistics


Staff Officer to Chief Secretary


PA to Secretary, General Administration Department


PA to Special Secretary, General Education Department


The Director, Information and Public Relations (Web and New Media)


Stock File/Office Copy (Pro5A/2/2025-GASD-Part(3)




பணி ஓய்வு - மறு நியமனம் கோரிக்கை தொடர்பாக பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களின் பதிவும், பணி நீட்டிப்பு பெற்ற ஆசிரியரின் பதிவும்

 பணி ஓய்வு - மறு நியமனம் கோரிக்கை தொடர்பாக பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களின் பதிவும், பணி நீட்டிப்பு பெற்ற ஆசிரியரின் பதிவும் 

சமூக வலைதளங்களில் இத்தகவல் டிரெண்ட் ஆன நிலையில் கல்வி அமைச்சர் அமெரிக்காவில் இருந்து உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதின் படி 02/07/2026 அன்று மறு நியமன பணி ஆணை பெற்று பணியில் தொடர்கிறார்.





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DVAC இயக்குநர் பணியிட மாற்றம்

 ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் இ.ஆ.ப . பணியிட மாற்றம் Director, Vigilance and Anti-Corruption Department, tran...