கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு Special TET நடத்த தமிழ்நாடு அரசு G.O. வெளியீடு


பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை (நிலை) எண் : 231, நாள் : 13-10-2025 வெளியீடு


Special TET 


Tamil Nadu Government Order G.O.(Ms) No. 231, Dated: 13-10-2025 Released to conduct special eligibility test for in-service teachers



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

TTSE 2025 - Question Paper


தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 2025 - வினாத்தாள்


 TTSE 2025 - Question Paper



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற 200 ஆர்வலர்களுக்கு 6 மாதங்கள் முழு நேர கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு



போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற 200 ஆர்வலர்களுக்கு 6 மாதங்கள் முழு நேர கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு


6 months of full-time free coaching classes for 200 aspirants to succeed in competitive exams - Tamil Nadu Government Press Release



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


ஆழம் அறியாமல் காலை விடாதே : இன்று ஒரு சிறு கதை



ஆழம் அறியாமல் காலை விடாதே : இன்று ஒரு சிறு கதை 


Look before you leap


இன்றைய சிறுகதை (Today's Short Story)


ஒரு நாள் விமானத்தை சுத்தம் செய்யும் பணியாள் ஒருவர், விமான ஓட்டியின் அறையை (Cockpit) சுத்தம் செய்யும்போது, "விமானம் ஓட்டுவது எப்படி - முதல் தொகுதி" என்ற புத்தகத்தை கண்டார்.


அவர் அந்த புத்தகத்தை பிரித்தார். முதல் பக்கத்தில், "இஞ்சினை ஸ்டார்ட் செய்ய சிகப்பு கலர் 🔴 பட்டனை அழுத்துக" என எழுதி இருந்தது. அவர் விமானியின் இருக்கையில் அமர்ந்து சிகப்பு கலர் பட்டனை அழுத்தினார், இஞ்சின் ஸ்டார்ட் ஆகி விட்டது !


அவருக்கு ஒரே குஷியாகி விட்டது.


இரண்டாவது பக்கத்தை புரட்டினார். "விமானத்தை நகர்த்துவதற்கு நீல நிற 🔵 பட்டனை அழுத்துக" என எழுதி இருந்தது. அவரும் அப்படியே செய்தார். விமானம் நகர ஆரம்பித்து வேகமாக ஓட துவங்கியது.


இப்போது அவருக்கு பறக்கும் ஆசை வந்தது. மூன்றாவது பக்கத்தை பிரித்தார். "விமானம் உயரே பறப்பதற்கு பச்சை கலர் 🟢 பட்டனை அழுத்தவும்" என்று இருந்தது.


அவரும் பச்சை கலர் பட்டனை அழுத்தினார். விமானம் மேலெழும்பி பறக்க ஆரம்பித்தது. அவரும் மிகவும் உற்சாகமாக 20 நிமிடங்கள் வானத்தில் பறந்தார்.


அவர் மிகவும் திருப்தி அடைந்தவராக விமானத்தை கீழே இறக்க முடிவு செய்து புத்தகத்தின் 4 வது பக்கத்தை பிரித்தார்.


அவ்வளவுதான், அவருக்கு மயக்கம் வந்து கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன.


காரணம், 4வது பக்கத்தில் எழுதி இருந்தது, "விமானத்தை எப்படி கீழே இறக்குவது என்பதை கற்றுக்கொள்ள இந்த புத்தகத்தின் இரண்டாவது தொகுதியை அருகிலுள்ள புத்தகக்கடையில் வாங்கி படியுங்கள்"!!!!


நீதி:


ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அதில் இறங்காதீர்கள்.


சிந்தைக்கு இனியோர்க்குச் சிறக்கட்டும் இந்நாள் 🙏

மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பதிவுசெய்துள்ள இளைஞர்களுக்கு ரூ.1000 வரை உதவித்தொகை

 


வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் உதவித்தொகை


மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ள இளைஞர்களுக்கு ரூ.1000 வரை உதவித்தொகை


Scholarship of up to Rs. 1000 for youth registered at the District Employment Office


கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவுசெய்து ஐந்தாண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ளவர்கள் அனைவரும் https://tnvelaivaaippu.gov.in/ வலைத்தளம் வழியாக உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.



மருத்துவம் சார்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவ / மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்



 மருத்துவம் சார்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவ / மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்


The District Collector informed that students who are interested in enrolling in one-year medical certificate courses can apply.


கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள மருத்துவம் சார்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவ / மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



அனைத்து மாவட்ட மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவம் சார்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது.

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-10-2025

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-10-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 13.10.2025

கிழமை:- திங்கட்கிழமை

 

திருக்குறள்:

குறள் 782:

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு      

விளக்க உரை:

அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.


பழமொழி :
Teamwork makes the dream work.   

குழு முயற்சி தான் கனவுகளை நிறைவேற்றும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1.உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்

2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.


பொன்மொழி :

எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல, சிறப்பான ஆற்றலும் இருக்கத்தான் செய்யும்- கர்மவீரர் காமராஜர்


பொது அறிவு :

01.பெங்களூர் நகரை

வடிவமைத்தவர் யார்?

கெம்பே கவுடா (1526–1574)

Kempe Gowda  (1526-1574)

02.இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளின் தலைநகரம் எது?

            கவரட்டி - Kavaratti


English words :

Allowed -permitted

Aloud- clearly heard


Grammar Tips:

வன் தொடர் குற்றியலுகரம்/ மென் தொடர் குற்றியலுகரம் – ஒற்றெழுத்து மிகுதல் வேறுபாடு
எ.கா
எடுத்துச் சென்றான், எழுந்து சென்றான். இந்த எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள். இவை இரண்டும் வினைச்சொற்கள். எடுத்து-க்கு வலிமிகுந்தது. எழுந்து-க்கு வலி மிகவில்லை.

இலக்கணத்தில் குற்றியலுகரம் பற்றி அறிந்திருப்போம். எடுத்து, எழுந்து ஆகியன உகரத்தில் (து) முடிவதால் இவை குற்றியலுகரச் சொற்கள்.

எடுத்து என்பதில் கடைசி எழுத்துக்கு முன்னுள்ள எழுத்து வல்லின மெய் என்பதால், அது வன்தொடர்க் குற்றியலுகரம். எழுந்து என்பதில் கடைசிக்கு முன்னெழுத்து மெல்லின மெய் என்பதால் மென்தொடர்க் குற்றியலுகரம்.

வன் தொடர்க் குற்றியலுகரத்திற்கு வலிமிகும். 'எடுத்துச் சென்றான்' என்று வந்தது. மென் தொடர்க் குற்றியலுகரத்திற்கு வலிமிகாது.

'எழுந்து சென்றான்' என்றானது.


அறிவியல் களஞ்சியம் :

பல நறுமணம் வீசும் மலர்கள், பழங்களின் வாசனையுடன் இன்று பல பன்னாட்டு நிறுவனங்கள் சோப்புகளை உற்பத்தி செய்கின்றன. இந்த வாசனை சோப்புகளைப் பயன்படுத்தும் மனிதர்களிடம் அதே போன்ற வாசனை வீசுகிறது. இரத்தம் குடிக்காமல் அதை ஈடு செய்ய அவதிப்படும் கொசுக்கள் அதற்கு ஈடாக இந்த நறுமணத்தை அறிந்து தேன் கிடைக்கும் என்று கருதி வாசனையுடன் இருக்கும் மனிதர்களைக் கடிக்கின்றன என்று வெர்ஜீனியா பாலிடெக்னிக் கழகம் மற்றும் ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளரும், ஆய்வுக்குழுவின் தலைவருமான க்ளெமெண்ட் வினோஜர் (Clement Vinauger) கூறுகிறார்.


அக்டோபர் 13

1884 – அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக இலண்டனில் உள்ள கிரீன்விச் (Greenwich) தெரிவு செய்யப்பட்டது.


நீதிக்கதை

நாளைய உணவு

சில வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும் தன் குட்டிகளுடன் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது செம்மறி ஆட்டுக்குட்டிகள் நுனிக் கொழுந்துகளாகப் பார்த்து மேய்ந்து கொண்டிருந்தன. அதைக்கண்ட வெள்ளாடு, என் அருமை செம்மறிக்குட்டிகளே, இப்படி நுனிக்கொழுந்தாக மேய்ந்தால் நாளை நமக்கு உணவு கிடைக்காது. அதனால் கூடுமானவரை, நுனிக்கொழுந்தைக் கடிக்காதீர்கள். இன்று ஒருவருக்கு மட்டுமே உணவாகும் அது, தழைத்து வளர்ந்தால் நாளை நம் அனைவருக்கும் உணவாகும் என்றது.

அதைக்கேட்ட செம்மறி ஆடு, நீ உன் வேலையைப்பார். என் குட்டிகளுக்கு எது இஷ்டமோ, அதைத்தான் உண்ணும். நீ ஒன்றும் அதைச்சாப்பிடு, இதைச்சாப்பிடாதே என கட்டளையிட வேண்டாம் என்றது காட்டமாய். ஆனால் வெள்ளாடு, தன் குட்டிகள் நுனிக் கொழுந்தை கடிக்கவிடாமல் கவனமாய் பார்த்துக்கொண்டது.

சில நாட்கள் சென்றன. செம்மறி ஆடுகள் மேய்ந்த இடத்தில் ஒரு இலை தழைக்கூட காணவில்லை. நுனிக்கொழுந்து கடிபட்ட செடிகள் தழைக்க நாளாகும் அல்லவா? ஆனால், வெள்ளாடுகள் மேய்ந்த இடங்களில் பசுமை தெரிந்தது. நுனிக்கொழுந்துகள் காக்கப்பட்டதால், இப்பொழுது அவைகள் சாப்பிடும் பக்குவத்தில் தழைத்து வளர்ந்திருந்தன. வெள்ளாடுகள் வழக்கம்போல் எந்தத் தடையுமியின்றி மேயத்தொடங்கின. ஆனால், செம்மறி ஆடுகள் செய்வது அறியாது திகைத்து நின்றன.

அடுத்தவர் பேச்சைக் கேட்பதா...? என நினைத்த செம்மறி ஆடுகள், தங்களுடைய அடங்காத குணத்தால் இப்பொழுது திண்டாடுவதை உணர்ந்தன. அருகில் கிடைத்த உணவை பாதுகாக்கத் தெரியாததால், அவைகள் வேறு இடம் தேடிச் சென்றன. இன்றைக்கு நிறைய உணவு கிடைக்கிறது என்பதற்காக, அவற்றை வீணாக்கக் கூடாது. அது நம்முடைய நாளைய உணவாகக் கூட இருக்கலாம் என்பதை செம்மறி ஆடுகள் உணர்ந்து கொண்டன.

நீதி :

சேமிக்க பழக வேண்டும்.


இன்றைய செய்திகள்

13.10.2025

⭐பள்ளிகளில் யு.பி.ஐ. மூலம் கல்வி கட்டணம் வசூல்- மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

⭐குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காலை உணவு திட்டம்- முதலமைச்சர் பெருமிதம்.

⭐அமெரிக்கா - எகிப்து இணைந்து நடந்தும் காசா போர் நிறுத்த உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 80 ரன் குவிப்பு: இரண்டு முக்கிய சாதனைகள் நிகழ்த்திய ஸ்மிரிதி மந்தனா. ஒரே வருடத்தில் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.மேலும், இந்தப் போட்டியில் அவர் 58 ரன்களைக் கடந்த போது, மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 5000 ரன்களைக் கடந்த ஐந்தாவது வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். அதிலும், 5000 ரன்களை குறைந்த போட்டிகளில் எட்டிய வீராங்கனை என்ற உலக சாதனை படைத்தார்.


Today's Headlines

TODAY'S HEADLINES*

⭐Collection of tuition fees through UPI in schools - Central Government instructs states

⭐Breakfast program to improve children's health - Chief Minister is proud.

⭐US-Egypt joint summit to ceasefire Gaza war invites PM Modi to participate in that  summit.

*SPORTS NEWS*

🏀 Smriti Mandhana scores 80 runs against Australia. She made two important achievements

* She crossed 1000 runs with 58 runs she crossed 5000 runs


Term 2 - Unit 2 - October 2nd Week - Lesson Plan - 1, 2 & 3rd Std - Ennum Ezhuthum

 

 

1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 2 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - அலகு 2 – அக்டோபர் இரண்டாவது வாரம் (Term 2 - Unit 2 - October 2nd Week - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


Term 2 - Unit 2 - October 2nd Week - Lesson Plan - Ennum Ezhuthum - 4 & 5th Std

 

 

4 & 5ஆம் வகுப்பு - பருவம் 2 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - அலகு 2 – அக்டோபர் இரண்டாவது வாரம் (Term 2 - Unit 2 - October 2nd Week - Lesson Plan - Ennum Ezhuthum - 4 & 5th Standard)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


கருணை அடிப்படையிலான பணி நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு புதிய மாற்றம்


பணியின் பொழுது உயிரிழக்கும் ஊழியர் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனம்  தொடர்பாக தமிழ்நாடு அரசு புதிய மாற்றம்


தமிழ்நாட்டில் பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் கருணை அடிப்படையிலான பணி நியமனம் (Compassionate Appointment) தொடர்பான விதிகளில், மாநில அரசு ஒரு முக்கிய மற்றும் மனிதாபிமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.


கருணை என்பது ஒரு கடமை, பிச்சை அல்ல" என்ற உயர் நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று, இந்த விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள், வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் வேலைவாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.


புதிய மாற்றங்கள் என்ன?


மனிதவள மேலாண்மை துறையால் வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணிகள் (கருணை அடிப்படையில் நியமனம்) விதிகள், 2023-இல் பல முக்கியத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.


திருமணமான மகள் மற்றும் மருமகனுக்கும் வாய்ப்பு: இதுவே இந்த திருத்தத்தின் மிக முக்கியமான அம்சமாகும். இதுவரை, திருமணமான மகள்கள் கருணை அடிப்படையில் வேலை பெற தகுதியற்றவர்களாக இருந்தனர். இனி, உயிரிழந்த அரசு ஊழியரின் திருமணமான மகளும், தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன், பெற்றோரை சார்ந்தே வாழ்ந்து வந்தார் என்பதை நிரூபித்தால், அவரும் கருணை அடிப்படையில் வேலை கோரலாம். ஒருவேளை, திருமணமான மகள் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருந்தால், அவரது கணவர் (அரசு ஊழியரின் மருமகன்) கூட வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இது ஒரு புரட்சிகரமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.


வறுமையான சூழல்: முன்பு, இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு சொந்தமாக வீடு இருந்தாலோ அல்லது கணிசமான ஓய்வூதியம் கிடைத்தாலோ, அவர்கள் வறுமையில் இல்லை என கருதி வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது. புதிய விதிகளின்படி, ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அவர்கள் வறுமையான சூழலில் உள்ளதாகக் கருதப்படுவார்கள். இது, தகுதியான பல குடும்பங்கள் பயன்பெற வழிவகுக்கும்.


உறவினர்களின் பட்டியல்: புதிய விதிகளின்படி, இறந்த அரசு ஊழியரை சார்ந்த உறவினர்களின் தகுதி பட்டியல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சட்டப்பூர்வமாகத் திருமணம் ஆன மனைவி அல்லது கணவர், மகன் அல்லது மகள், திருமணமாகாத, விவாகரத்தான அல்லது கணவரை இழந்த ஊழியர்களின் பெற்றோர், திருமணமாகாத ஊழியரின் சகோதரன் அல்லது சகோதரி.


விண்ணப்பத்திற்கான கால அவகாசம்: கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், ஊழியர் இறந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும் என்பது தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்புகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இறந்தவரின் மனைவி/கணவர் அல்லது பெற்றோர் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். மகன், மகள், சகோதரன் அல்லது சகோதரி 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.


மாற்றத்திற்கான காரணம்


கருணை அடிப்படையிலான பணி நியமனம் என்பது வெறும் சலுகை அல்ல, அது அரசின் கடமை என்பதை சென்னை உயர் நீதிமன்றம் பலமுறை வலியுறுத்தியுள்ளது. வேலைக்கு விண்ணப்பிக்கும் குடும்பங்கள், அதிகாரிகளால் தேவையற்ற அலைக்கழிப்புக்கு உள்ளாக்கப்படுவதாகவும், விதிகள் கடுமையாக பின்பற்றப்படுவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. இந்த வழிகாட்டுதல்களை தொடர்ந்து, அரசு இந்த மனிதாபிமான மாற்றங்களை செய்துள்ளது தமிழ்நாடு அரசு. இந்த புதிய விதிகள், உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஒரு உண்மையான நிதிப் பாதுகாப்பை வழங்கி, அவர்களின் துயரத்தில் பங்கெடுக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.



கருணை அடிப்படையிலான பணி நியமனம் - தமிழ்நாடு குடிமைப் பணி விதிகளில் திருத்தங்கள் மேற்கொண்டு அரசாணை வெளியீடு


G.O. Ms. No. 41 , Dated : 04-08-2025 - Compassionate Grounds Appointment 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு Special TET நடத்த தமிழ்நாடு அரசு G.O. வெளியீடு

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை (நிலை) எண் : 231, நாள் : 13-10-2025 வெளியீடு Special TET  Ta...