கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O.Ms.No.147, Dated 25-06-2025 : Education Advance for the children of Government Employees

 

ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு ரூ.1,00,000 வரை கல்வி முன்பணம் வழங்க அரசாணை வெளியீடு


தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு ரூபாய் 1,00,000, கலை அறிவியல் & பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு ரூபாய் 50,000 கல்வி முன்பணம் வழங்க அரசாணை அரசாணை (நிலை) எண்.147, நாள் 25-06-2025 வெளியீடு


FINANCE [Procurement Cell] DEPARTMENT

 G.O.Ms.No.147, Dated 25th June 2025.

(ஆனி-11, திருவள்ளுவராண்டு-2056)

ABSTRACT

Loans and Advances by the State Government - Advance to Government Servants – Education Advance for the children of Government Employees - Increase in the quantum of Advance - Orders - Issued


Read:-

1. G.O.(Ms) No.821, Finance (Salaries) Department, Dated: 13.06.1979.

2. G.O.(Ms) No.968, Finance (Salaries) Department, Dated: 01.12.1988.

3. G.O.(Ms) No.220, Finance (Salaries) Department, Dated: 23.03.1993.

4. G.O.(D) No.274, Finance (Salaries) Department, Dated: 17.07.2018.

5. G.O.(Ms) No.271, Finance (Procurement Cell) Department, Dated: 24.08.2023.

-


ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் குழந்தைகள் பொறியியல், மருத்துவம், வேளாண்மை பயின்றால் ரூபாய் 100000 கடன் PAY DRAWING OFFICER மூலம் வழங்கப்பட உள்ளது.


கலை மற்றும் அறிவியல் கல்லூரி, POLYTECHNIC பயின்றால் ரூபாய் 50000 வழங்கப்பட்ட உள்ளது.


இவை அனைத்தும் 10 தவணைகளில் திரும்ப செலுத்த வேண்டும்


அதற்காக அரசாணை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அரசு ஊழியர்களுக்கு கல்வி முன்பணம் வழங்குவதற்கான விதிகள்


Rules for the grant of Education Advance to Government Servants


1. Scope of the Scheme:

The advance will be sanctioned to all Government servants for education of their children studying in Professional Colleges/Arts and Science Colleges/Polytechnics. The advance shall be called the ‘Education Advance’ to Government Employees.

2. Amount of Advance:

All categories of the Government Employees (Group A, B, C & D) may avail the Education Advance, subject to actual amount (which includes all the fees and other expenses) already paid/to be paid to the Educational Institutions or the Limits suggested below, whichever is lower: -

In the case of those Government employees whose children studying in - Existing (Rs.) - Revised (Rs.)

Professional colleges 50,000/- to 1,00,000/-

Arts and science colleges and Polytechnics25,000/- to 50,000/-


3. Eligibility:

i. Permanent Government Servants and non-permanent Government servants (employed in regular capacity) whose children are studying in colleges/polytechnics will be eligible for the advance.

ii. If the Government servant's wife/husband is also a Government servant, only one of them will be entitled to the advance.

iii. The Government employees shall avail only one advance during an academic year irrespective of the number of children studying in colleges/polytechnics.

iv. The concession of this advance shall be available to the Government employees during every academic year. But no second advance shall be sanctioned while the previous advance is outstanding.

v. The children of the Government servants who are studying degree course through the correspondence course in Universities are not eligible for the grant of educational advance.

vi. The contingent staff paid from contingent fund are not eligible for the education advance.

vii. The wards of Government servants who are studying in other States are also eligible for the grant of education advance provided the institutions outside Tamil Nadu are recognised ones.

viii. The Government Servants, who are on foreign service, are also eligible for the Education Advance. The education advance to the employees on deputation has to be sanctioned by the foreign employer from their funds.

ix. For the physiotherapy course at degree level/diploma level (polytechnics level) the Education Advance of Rs.50,000/- shall be allowed.


4. Procedure for sanction of advance:

i. An application for the advance shall be made in Form I appended to these rules. For applying this advance, Government servant has to produce the certificate/receipt from the authorised authority of the concerned Educational Institution for having paid the fees.

(or)

A Certificate from the authorised authority of the Educational Institutions for the fees to be payable during that academic year as appended as Form III to the Annexure of this Government Order. 

The application in the prescribed form should be submitted by the Government servant to the Head of the office concerned.

ii. A certificate as mentioned in Form II (i.e., Bonafide Certificate obtained from the Educational Institution) appended to this Government Order to be obtained from the Head of the educational institution concerned and to be submitted to the sanctioning authorityconcerned as justified proof before 31st December of the respective academic year.

Failure to submit the Bonafide Certificate shall attract penal interest for which the interest rate will be communicated separately and the balance principal amount shall be recovered from the individual in one lump sum along with interest at General Provident Fund (GPF) rate.

iii. In the case of adopted sons and daughters of Government employees, documents in support of proof of such adoption should also be enclosed to the application form.

iv. No Education advance should be sanctioned or disbursed to a Government employee who is under suspension or against whom serious charges are pending which are likely to result in his / her removal, dismissal or compulsory retirement from the Government service.

v. Head of the office shall be the sanctioning authority for this advance. The Head of office shall, after proper scrutiny of the application, sanction the advance and also arrange for its drawl and disbursement to the Government servant concerned.

vi. The inspection staff should scrutinize each case of Education Advance sanctioned by the Head of the office and ensure that the certificate from the Head of the educational institution appended to the application form is genuine and that the sanction accorded by the Head of the office is in order.


5. Recovery of the Advance:

i. The advance shall be interest free and will be recovered in 10 monthly instalments commencing from the salary of the month succeeding the drawl of advance.

ii. The Head of the office should maintain a register of Education Advances sanctioned by him and watch their monthly recoveries closely.


Ennum Ezhuthum - No need to write numbers for LOs

 

எண்ணும் எழுத்தும் - கற்றல் விளைவுகளுக்கு எண்கள் எழுத தேவையில்லை. ஆசிரியர் கையேட்டில் கொடுத்துள்ளவாறு கற்றல் விளைவுகளை எழுதினால் போதும்.


Ennum Ezhuthum - There is no need to write numbers for the learning outcomes. It is enough to write the learning outcomes as given in the teacher's manual.




பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-07-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-07-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

குறள் 76:

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை  

விளக்கம் : அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது.

 
பழமொழி :
The mind grows when questions bloom.

கேள்விகள் மலரும் போது மனம் வளர்கிறது.


இரண்டொழுக்க பண்புகள் :

1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :

கட்டளையிடும் பதவி வேண்டுமானால் முதலில் கீழ்ப்படியக்  கற்றுக் கொள்ளுங்கள் - விவேகானந்தர்


பொது அறிவு :

01.புகழ் பெற்ற மதுராந்தகம் ஏரி எந்த மாவட்டத்தில் உள்ளது? 

          செங்கல்பட்டு மாவட்டம்

          Chengalpat  district

02. இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்டு வங்காள விரிகுடாவில் எத்தனை தீவுகள் உள்ளன?

           572  தீவுகள்

          572   Islands


English words & Tips :

callous-கடுமையான

heartless- இரக்கமற்ற



Grammar Tips:

There are seven coordinating conjunction which can be easily remembered by a word

FANBOYS

For
And
Nor
But
Or
Yet
So


அறிவியல் களஞ்சியம் :

காகிதத்தின் மீது வேகமாக ஊதும் போது, காகிதத்தின் மேல் பகுதியில் காற்று அதன் கீழ் பகுதியை விட வேகமாக நகரும். இந்த வகையில் காற்றில் ஏற்படும் வேறுபாடு காகிதத்தை மேல்நோக்கி தூக்கச் செல்கிறது. அது போன்றே பறக்கும் பறவையின் மேல் பகுதி, அதன் கீழ் பகுதியை விட வேகமாக நகருகிறது. இந்தக் காற்றின் செயல்பாடே பறவையை மேல்நோக்கி உயரச் செய்து பறக்க வைக்கிறது.


ஜூலை 01

தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day)
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.சமூகம் மற்றும் தனிமனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதே தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day) ஆகும்.



கல்பனா சாவ்லா அவர்களின் பிறந்த நாள்

கல்பானா சாவ்லா ஓர் இந்திய அமெரிக்க விண்ணோடி ஆவார்.விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டினார் கல்பனா சாவ்லா. 41வது வயதில் உலக மக்களின் நட்சத்திரமாகிப் போன ஒரு இந்தியப் பெண் வீராங்கனை


நீதிக்கதை

துன்பம்!

அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர தனிமை.. தனிமை.. தனிமை..!

சன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளி சன்னல் நோயாளியிடம் சொன்னார்..

“உனக்காவது பொழுது போக்க, ஒரு சன்னல் இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை..!” கவலைப்படாதே நண்பா.. நான் சன்னலூடே என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..!

அன்று முதல் சன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார்.. நண்பா.. சன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி.. நடுவில் சிறு தீவு.. ஏரியில் படகுகள் மிதக்கின்றன.. ஏரிக்கரையில் அழகான பூங்கா..! காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!”

எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்.. சன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்..

“ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை.. அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது.. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன. மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்.. மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!”

ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்..

ஒருநாள் சன்னல் நோயாளி செத்துப்போனார்..

மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை சன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது.

இனி எனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே.. தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி சன்னல் வழியே நோக்க. அங்கே பெரிய சுவர்..! வேறு எதுவுமே இல்லை..!

அப்படியானால் சன்னல் நோயாளி சொன்ன கதைகள்?

மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்..செவிலி, எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்..

நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது.. புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டிருந்தார்..!”

நீதி : தன் துன்பங்களை மறைத்துக்கொண்டு மற்றவர்களை உற்சாகப்படுத்தும் மிகச்சில மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அவர்களைப் போற்றாவிட்டாலும் பரவாயில்லை.. குறைகூறாதீர்கள்..!


இன்றைய செய்திகள்

01.07.2025

⭐தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் அமலுக்கு வந்தது 'வாட்டர் பெல்' திட்டம்.

⭐இளம் வயதினருக்கு வரும் புற்றுநோய்க்கு HPV வைரஸ் தொற்றே காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

⭐கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க ரூ.297 கோடி ஒதுக்கீடு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀விம்பிள்டன் ஓபன் டென்னிஸ்  கோலாகல தொடக்கம்: சாம்பியனுக்கு ரூ.35 கோடி பரிசு.

🏀கிரேட் அமெரிக்கன் பால் பார்க்கில் சின்சினாட்டி ரெட்ஸ் அணி சான் டியாகோ பேட்ரெஸை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி பின்தங்கிய நிலையில் வந்தது. 9வது போட்டியில் 2-1 என்ற கணக்கில் பின்தங்கிய ஸ்பென்சர் ஸ்டீர் ஆட்டத்தை சமன் செய்தார்.


Today's Headlines

✏️ The 'Water Bell' scheme was implemented in schools in Tamil Nadu.

✏️ The Tamil Nadu government has announced a special incentive of ₹297 crore for those engaged in sugarcane farming.

✏️ Doctors reported as  HPV virus infection is the cause of cancer in young people

✏️ Central government announces 8.2% interest rate for small savings schemes

*SPORTS NEWS*

🏀Wimbledon Open Tennis: Rs. 35 crore prize money for the champion.

🏀 The Cincinnati Reds came from behind to beat the San Diego Padres 3-2 at Great American Ball Park. Trailing 2-1 in the 9th, Spencer Steer tied the game.


Covai women ICT_போதிமரம்


100 Days Challenge - Appreciation certificate ceremony to the Teachers and HMs of 4552 schools - DEE Proceedings

 

 

100 நாள் வாசிப்பு அறைகூவலில் பங்கேற்ற 4552 பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களால் பாராட்டுச் சான்றிதழ் / விருது வழங்கும் விழா - மாவட்டம் வாரியாக ஆசிரியர்கள் விவரம் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



Appreciation certificate / award ceremony by the Minister of School Education to the Teachers and HeadMasters of 4552 schools who participated in the 100 days reading Challenge - District wise details of teachers - Proceedings of the Director of Elementary Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசு பள்ளி சத்துணவு மையத்தில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு



அரசு பள்ளி சத்துணவு மையத்தில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு


திண்டுக்கல் வேடசந்தூரை அடுத்த பாலப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் சத்துணவு மைய கட்டிடத்தில்  கேஸ் சிலிண்டர் வெடித்தது.


அதிர்ஷ்டவசமாக இந்த சிலிண்டர் வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை


திண்டுக்கல் வேடசந்தூரை அடுத்த பாலப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் சத்துணவு மைய கட்டிடத்தில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்தது. இதுகுறித்து குஜிலியம்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த சிலிண்டர் வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.



திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த பாலப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் சத்துணவு மையக் கட்டிடத்தில் வெள்ளிக்கிழமை திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்தது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.


பாலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு மையக் கட்டிடம் செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல், சத்துணவு தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், திடீரென சத்துணவு மையக் கட்டிடத்தில் கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.


சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டதும், பள்ளி வளாகத்தில் இருந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். சிலிண்டர் வெடித்ததால், சத்துணவு மையக் கட்டிடத்தில் தீ பரவத் தொடங்கியது.


சம்பவம் குறித்து உடனடியாகக் குஜிலியம்பாறை தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும், வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.


தீயணைப்பு வீரர்கள் வேகமாகச் செயல்பட்டு,  சத்துணவு மையக் கட்டிடத்தில் பரவிய தீயை அணைத்தனர். தீ மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டதால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.


இந்தச் சிலிண்டர் வெடிப்பில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. சிலிண்டர் வெடித்த நேரத்தில் மாணவர்கள் யாரும் அருகில் இல்லாததும், சத்துணவு மைய ஊழியர்கள் பாதுகாப்பான தூரத்தில் இருந்ததும் பெரும் விபத்தைத் தவிர்த்தது.


சிலிண்டர் வெடிப்புக்கான காரணம் குறித்து வேடசந்தூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு, சமையல் வாயு அழுத்தத்தில் ஏற்பட்ட கோளாறு அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெடிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.


இந்தச் சம்பவம், பள்ளி சத்துணவு மையங்களில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள் மற்றும் சமையல் உபகரணங்களின் பாதுகாப்புத் தன்மை குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



மின் கட்டண உயர்வு குறித்த செய்தி - மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களின் அறிவிப்பு



மின் கட்டண உயர்வு குறித்த செய்தி - மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களின் அறிவிப்பு


வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை - மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் மீண்டும் திட்டவட்ட  தகவல்



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வாழ்தல் இனிது

 


வாழ்தல் இனிது


பசியறிந்து சோறு போட 

ஒருவர் இருக்கும் வரை..


சாப்பிட்டாயா எனக் கேட்க 

ஒருவர் இருக்கும் வரை..


தாமதமாகும் இரவுகளில் 

எங்கிருக்கிறாய் என விசாரிக்க

ஒருவர் இருக்கும் வரை..


நோய் வந்தால் இரவுகளில் 

கண் விழித்துப் பார்த்துக் கொள்ள 

ஒருவர் இருக்கும் வரை..


குரல் மாறுபாட்டில் மன 

நிலையைக் கணிக்க

ஒருவர் இருக்கும் வரை..


போய்ச் சேர்ந்ததும் கூப்பிடு என 

வழியனுப்ப 

ஒருவர் இருக்கும் வரை..


 எத்தனை படி ஆனாலும் வீட்டில்  கதவைத் திறந்து விட

ஒருவர் இருக்கும் வரை..


தோற்றுப் போய் திரும்புகையில் 

தோள் சாய்த்துக்கொள்ள 

ஒருவர் இருக்கும் வரை..


போ என்றாலும் விட்டுப் போகாது

சண்டை போட்டுக் கொண்டேனும் 

உடனிருக்க 

ஒருவர் இருக்கும் வரை..


மனம் கனக்கும் நினைவுகளைப் பகிர்ந்து 

கொள்ள  ஒருவர் இருக்கும் வரை..


நம் கனவுகளை தம் கனவுகளாகத் 

தோள்களில் தூக்கி சுமக்க 

ஒருவர் இருக்கும் வரை..


எதற்காகவும் எவரிடமும் 

நம்மை விட்டுக் கொடுக்காத

ஒருவர் இருக்கும் வரை..


கூட்டத்தின் நடுவே தனித்துப் போகையில் கரங்கள் பற்றி 

நானிருக்கிறேனென உணர்த்த

ஒருவர் இருக்கும் வரை..


தவறுகளைத் தவறென 

சுட்டிக் காட்டித் திருத்தும் 

ஒருவர் இருக்கும் வரை..


துயர் அழுத்தும் கணங்களில் 

அருகிருந்து கண்ணீர்த் துடைக்க

ஒருவர் இருக்கும் வரை..


மனக் குறைகளைப் புலம்பித் 

தள்ளுகையில் காது கொடுத்துக் கேட்க 

ஒருவர் இருக்கும் வரை



 *வாழ்தல் இனிது.


 *இந்த வாழ்க்கையும் இனிது.

💖💖💖💖💖💖💖💖💖💖


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O.Ms.No.147, Dated 25-06-2025 : Education Advance for the children of Government Employees

  ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு ரூ.1,00,000 வரை கல்வி முன்பணம் வழங்க அரசாணை வெளியீடு தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்கள் , அரசு ...