கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.3.6 - Updated on 08-01-2026

   

தற்போது TNSED Schools  App-ல் Noonmeal bug fixes and enhancements added  புதிய அப்டேட் வெளியாகியுள்ளது


TNSED Schools App New Version: 0.3.6 - Updated on 08-01-2026 - Noon meal bug fixes and enhancements added


* TNSED Schools App


* What's is new..?


🎯 Noonmeal bug fixes and enhancements added


UPDATED ON  08 January 2026

Version: Now 0.3.6


Link:

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis




Official app for the teachers by State School Education Department, Tamil Nadu

The app will be used by the teachers, Heads of schools, and other administrative staff to enter student, staff and school data and track the same. The app currently has modules for entering students and staff attendance, modules for screening the health of the students and referring them to the doctors, module for identifying and tracking the out of school students and module for teachers to register for teacher training.



>>> ரூ. 20,000-க்கு கீழ் உள்ள சிறந்த மொபைல் போன்கள்... 


பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்க உயிரையும் தியாகம் செய்யத் தயார் - CPS ஒழிப்பு இயக்கம்

 


பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்க உயிரையும் தியாகம் செய்யத் தயார் - CPS ஒழிப்பு இயக்கம் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



CPS ஒழிப்பு இயக்கம்

மாநில மையம்

------------------------------------------------------------


பெறுநர்         நாள்: 10.01.2026

ஆசிரியர் அவர்கள்.


…………………………. நாளிதழ்/ஊடகம்


மதிப்பிற்குரிய ஐயா,


வணக்கம்.


எங்களது அமைப்பின் சார்பாக வழங்கப்படும் கீழ்காணும் பத்திரிக்கை செய்தியினை தங்களது நாளிதழ்/ஊடகத்தில் பிரசுரம்/ஒளிபரப்பு செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


-----------------------------------------------------------

      *_பத்திரிகை செய்தி_*

------------------------------------------------------------

CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சு.ஜெயராஜராஜேஸ்வரன், பி.பிரெடெரிக் எங்கெல்ஸ் மற்றும் மு.செல்வக்குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட பத்திரிகை செய்தி.


**************************************

பச்சை துரோகம் இழைத்துள்ள திமுக அரசு – அரசு ஊழியர், ஆசிரியர்களின் பணம் ரூபாய் ஒரு லட்சம் கோடி கபளீகரம் – CPS ஒழிப்பு இயக்கம் கடும் கண்டனம்

***************************************

திமுக-வின் 2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி எண். 309-ல் புதிய ஓய்வூதியத் திட்டம் இரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் மாறாக அரசாணை வெளியிட்டு பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தையே மீண்டும் அறிவித்து துரோகம் இழைத்திருக்கிறது.


தமிழக அரசு. மாதம் தோறும் ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்கின்ற ரூபாய் ஒரு லட்சம் கோடியை இந்த அரசாணை மூலம் கபளீகரம் செய்திருக்கிறது தமிழக அரசு.


ஓய்வு பெறும் போது ஊழியர்களிடம் பிடித்தம் செய்யும் தொகையை தரமறுத்திருக்கிறது இந்த அரசாணை எண்.7. இது அரசு ஊழியர், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், கோபத்தையும் உருவாக்கி இருக்கிறது.


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ஒழிப்பேன் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, தனது தேர்தல் வாக்குறுதிக்கு நேர் எதிராக இந்த அறிவிப்பை செய்திருக்கிறது. அதுவும் 01.01.2026-க்கு முன்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு இத்திட்டம் விருப்பத் தேர்வு எனவும், 01.01.2026-க்கு பின்னர் கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளது.


மேலும், தற்போது CPS திட்டத்தில் உள்ளவர்கள் தனது விருப்பத்தை ஓய்வு பெறுவதற்கு முன்னர் தெரிவித்தால் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதன் மூலம் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நிலைக்கு அரசு ஊழியர், ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டுள்ளனர்.


தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணை CPS-யை ஒழிக்க வேண்டும் என போராடி வரும் அரசு ஊழியர், ஆசிரியர்கள் வாயாலேயே CPS-யே எங்களுக்கு போதும் என சொல்ல வைக்கும் நடவடிக்கையாகவும், நியாயமான போராட்டங்களை முடக்க நினைக்கும் செயலாகவுமே நாங்கள் பார்க்கிறோம்.


உண்மையில் சொல்வதென்றால் அரசு ஊழியர், ஆசிரியர்களின் சேமிப்பான ரூபாய் ஒரு லட்சம் கோடியை கபளீகரம் செய்யப் போவதை உறுதி செய்துள்ளது இந்த அரசாணை. 


இது அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு ஆளும் திமுக அரசு இழைத்திருக்கும் பச்சை துரோகம். இந்த அரசாணை எண்.7 CPS திட்டத்தில் பணிபுரியும்  அரசு ஊழியர், ஆசிரியர் மத்தியில் நீரு பூத்த நெருப்பாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் இதற்கான விலையை, விளைவை ஆட்சியாளர்கள் எதிர்கொள்ள நேரிடும்.


எனவே, தனக்கு துதிபாடும் அமைப்புகளின் பெரும்பாலான தலைவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் நீடிக்கும் நிலையில் அவர்களின் ஆதரவு என்பது ஒட்டு மொத்த அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஆதரவு எனும் மாயையிலிருந்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் வெளிவந்து, அவர்களின் 2021 சட்ட மன்றத் தேர்தல் வாக்குறுதி எண்.309-ன்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 


அவ்வாறு காலதாமதம் ஏற்படும் சூழலில் வருகின்ற 03.02.2026 முதல் அரசு ஊழியர், ஆசிரியர்களை இணைத்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்குச் செல்ல உள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். 


இந்திய சுதந்திரப் போரில் நாட்டிற்காக தன் இன்னுயிரை ஈந்த தியாகிகள் திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன், குதிராம்போஸ்,  பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போல், தமிழகத்தில்  1960-களின் துவக்கத்தில் மொழிப் போரில் தன் இன்னுயிரை ஈந்த தியாகிகள்  வைரமாலி சண்முகம், கோவை தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி, மற்றும் அய்யம்பாளையம் வீரப்பன் ஆகியோரைப் போல், தமிழ் ஈழத்திற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த முத்துக்குமாரைப் போல், நிரபராதியை விடுதலை செய் என்ற முழக்கத்தோடு தீக்குளித்து மாண்ட சகோதரி செங்கொடியைப் போல், சமீபத்தில் விவசாய வேளாண் சட்டத்திற்கு எதிராக களமாடி 800 உயிர்களை தியாகம் செய்த விவசாயப் போராளிகளைப் போல், தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களின் எதிர்கால வாழ்வை இருட்டாக்கி, வாழ்நாள் சேமிப்பை கபளீகரம் செய்ய நினைக்கும் தமிழக அரசின் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசாணையை இரத்து செய்து, எதிர்கால தலைமுறையின் சமூகபாதுகாப்புத் திட்டமான பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுக்க எங்கள் உயிரையும் தியாகம் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதையும் சுட்டிக்காட்ட விழைகிறோம்.


நன்மதிப்புகளுடன்


மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்

மாநில மையம்.


TAPS சாதகம் பாதகம் குறித்து வெளியிடப்பட்டுள்ள காணொளி

 

Video released on the pros and cons of Tamilnadu Assured Pension Scheme


TAPS சாதகம் பாதகம் பற்றி வெளியிடப்பட்டுள்ள காணொளி - அவசியம் பாருங்கள் உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம்


Advantages and Disadvantages of TAPS



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 





>>> தரம் மற்றும் வசதிகளுடன் கூடிய சில சிறந்த Neckband (Bluetooth Earphones) மாடல்களின் விவரம்...




NMMS Exam 2025-2026 SAT Question Paper

 

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு 2025-2026 - படிப்பறிவுத் திறன் பகுதித் தேர்வு வினாத்தாள் 


National Means cum Merit Scholarship Examination - Scholastic Aptitude Test


NMMS Exam 2025-2026 SAT Question Paper 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



>>> தரம் மற்றும் வசதிகளுடன் கூடிய சில சிறந்த Neckband (Bluetooth Earphones) மாடல்களின் விவரம்...



NMMS Exam 2025-2026 MAT Question Paper

 


தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு 2025-2026 மனத்திறன் தேர்வு வினாத்தாள் 


National Means cum Merit Scholarship Examination - Mental Ability Test


NMMS Exam 2025-2026 MAT Question Paper 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



>>> தரம் மற்றும் வசதிகளுடன் கூடிய சில சிறந்த Neckband (Bluetooth Earphones) மாடல்களின் விவரம்...



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-01-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-01-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 12.01.2026

கிழமை:- திங்கள்


 

திருக்குறள்: 

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.

விளக்கம் –

நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.


பழமொழி :
Success is built on repeated actions.      

மீண்டும் மீண்டும் செய்யும் செயல்களில் தான் வெற்றி உருவாகிறது.


இரண்டொழுக்க பண்புகள் :

1. படுத்தே இருந்தால் படுக்கையும் பகையாகும்.

2. எழுந்து முயற்சி செய் உலகே உனது வசமாகும்.


பொன்மொழி :

நான் இன்று வாழ்வதற்கு என் தந்தைக்கு கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால்,  நான் நன்றாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கு கடமைப்பட்டிருக்கிறேன் . - மாவீரன் அலெக்சாண்டர்


பொது அறிவு :

01.ஐக்கிய நாடுகள் சபை எந்த நாளை சர்வதேச கல்வி நாளாக கொண்டாடுகிறது?

      ஜனவரி 24-January 24

02.பூமி கோள வடிவம் கொண்டது என்ற கருத்துக்கு முதன்முதலில் அடித்தளமிட்டவர் யார்?

பித்தாகரஸ் -Pythagoras


English words :

ledge-ridge

preening -grooming


தமிழ் இலக்கணம்:

*சுவற்றில்* விளம்பரம் செய்யாதீர். சுவற்றில் என்பது தவறு. ஏன்? எப்படி? என்று பார்ப்போம்
கிணறு + இல் = கிணற்றில்
கயிறு + இல் = கயிற்றில்
வயிறு + இல் = வயிற்றில்
கிணறு,கயிறு, வயிறு போன்ற வார்த்தைகளுடன் *இல்* (ஐந்தாம் வேற்றுமை உருபு) சேரும் போது கடைசி சொல் மிகுந்து இணையும்.
ஆனால் *சுவறு* என்று நாம் தவறாக புரிந்து கொண்டதன் விளைவு தான் *சுவற்றில்*.
சுவர் + இல்= சுவரில் என்பதே சரி


அறிவியல் களஞ்சியம் :

ஹீலியமும் புவியீர்ப்புக்கு எதிராகவும் செயல்பட முடியும்

தீவிர வெப்பநிலைக்கு பிறகு ஹீலியம் ஆனது ஒரு சூப்பர்ஃப்ளூயிட் ஆக மாறும். அந்த நிலையில் ஹீலியத்தால் புவியீர்ப்புக்கு எதிராக செயல்பட முடியும்!


ஜனவரி 12

தேசிய இளைஞர் நாள்

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான சனவரி 12 ஆம் தியதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

1984 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்நாளினை "தேசிய இளைஞர் நாளாக" அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் சனவரி 12-ம் திகதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது



நீதிக்கதை

உள்ளதும் போச்சு

ஒரு முயல் காட்டில் உள்ள ஒரு மரத்தடியில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கே ஒரு சிங்கம் மிகுந்த பசியுடன் வந்தது. அந்த சிங்கம் தூங்கிக் கொண்டிருந்த முயலைக் கொன்று பசியைத் தீர்த்துக் கொள்ள எண்ணியது. அதே நேரத்தில் அந்த வழியாக ஒரு மான் செல்வதைச் சிங்கம் பார்த்துவிட்டு முயலைவிட மான் பெரியது. அதனால் மானை சாப்பிட ஆசைப்பட்டது. அந்தச் சிங்கமானது மானைத் துரத்திப்பிடிக்க ஓடியது. ஓடிய சத்தத்தைக் கேட்டு தூங்கிய முயல் விழித்துக் கொண்டது. தனக்கு உள்ள ஆபத்தைப் புரிந்து கொண்டு ஓடி ஒளிந்து கொண்டது.

சிங்கமானது அந்தக் கலைமானை வெகுதூரம் விரட்டிக்கொண்டு போயும் அதனைப் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தது. சரி முயலையாவது கொன்று தின்னலாம் என்று முயல் தூங்கிய இடத்திற்கு வந்துப் பார்த்தால் அங்கு முயலைக் காணவில்லை. முயலைக் காணாத சிங்கம் ஏமாற்றத்துடன் எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். கைக்கு கிடைத்ததை விட்டு விட்டு பேராசையால் உள்ளதையும் இழந்துவிட்டேனே என்று எண்ணித் தன்னையே நொந்து கொண்டது.

நீதி :

பேராசைப் பட்டால் கிடைப்பதும் கிடைக்காமல் போகும்.


இன்றைய செய்திகள்

12.01.2026

⭐தமிழ்நாட்டில் இன்று தொடங்கி 13 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு.தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் 14ம் தேதி மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.

⭐போகி பண்டிகை: பிளாஸ்டிக், டயர்களை எரிக்க வேண்டாம்-விமான நிலைய ஆணையம் வேண்டுகோள். ஓடுபாதையே தெரியாத அளவு, அடர்த்தியான புகை மூட்டம், பனி மூட்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

⭐ ஈரானில் ஆளும் அரசுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் 12வது நாளாக நீடித்து வரும் நிலையில் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் முழுவதும் இணையதள சேவை முடக்கியுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 நியூசிலாந்தில் இந்திய அணிக்கு எதிராக களமிறங்கும் தமிழ்நாடு வம்சாவளி வீரர் ஆதித்யா அசோக்
2023ல் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதித்யா அசோக் அறிமுகமானார்.
இவர் கடந்தாண்டு CSK அகாடமியில் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.


Today's Headlines

⭐There is a possibility of heavy rain in Tamilnadu starting today and continuing till the 13th. There is a possibility of moderate rain in Tamilnadu, Puducherry and Karaikal on the 14th.

⭐Airport Authority appealed regarding burning plastic, tires and others on Bogi Festival. There is a situation of formation of dense smoke and fog that may make the runway  unrecognizable.

⭐ Students and youth are protesting against the ruling government in Iran. The protests have entered their 12th day and 45 people have died so far. Internet services have been shut down across Iran.

*SPORTS NEWS*

🏀 Tamil Nadu-origin player Aditya Ashok to play against New Zealand India Aditya Ashok made his international debut in 2023. He has been training at the CSK Academy for the past year.



>>> தரம் மற்றும் வசதிகளுடன் கூடிய சில சிறந்த Neckband (Bluetooth Earphones) மாடல்களின் விவரம்...



அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 4 பட்டதாரி ஆசிரியர் நிரந்தரப் பணியிடங்கள்

 

 4 permanent B.T. Assistant (Graduate Teacher) posts in Government aided higher secondary school - Job Notification 


அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 4 பட்டதாரி ஆசிரியர் நிரந்தரப் பணியிடங்கள்


ஆசிரியர்கள் தேவை


அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள கீழ்காணும் நிரந்தர பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


செயலாளர்,


பச்சையப்பா இந்து நாடார் மேல்நிலைப் பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி)


காமாட்சிபுரம் (P.O.), சின்னமனுர் (வழி), உத்தமபாளையமம் (TK), தேனி (DT).-625520



>>> அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> தரம் மற்றும் வசதிகளுடன் கூடிய சில சிறந்த Neckband (Bluetooth Earphones) மாடல்களின் விவரம்...



​ஓய்வூதியத் திட்டங்களின் ஒப்பீடு (Comparison of OPS, NPS, and TAPS)


ஓய்வூதியத் திட்டங்களைப் பொறுத்தவரை, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நிறைகளும் குறைகளும் உள்ளன. உங்கள் கேள்விக்கான விரிவான ஒப்பீடு இதோ:


​ஓய்வூதியத் திட்டங்களின் ஒப்பீடு (Comparison of OPS, NPS, and TAPS)


பங்களிப்பு : 


OPS : ஊழியர் பங்களிப்பு இல்லை. 


NPS : ஊழியர் 10% + அரசு 14%. 


TAPS : ஊழியர் 10% + மீதமுள்ள தொகையை அரசு ஏற்கும்.



ஓய்வூதியத் தொகை 

OPS : கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 50% உறுதி. 


NPS: சந்தை முதலீட்டின் லாபத்தைப் பொறுத்தது (உறுதி இல்லை). 


TAPS : கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 50% உறுதி.


அகவிலைப்படி 

OPS : (DA) உண்டு (ஆண்டுக்கு இருமுறை உயரும்). 

NPS : கிடையாது. 

TAPS : உண்டு (பணியில் இருப்பவர்களுக்கு இணையாக உயரும்).


பணிக்கொடை (Gratuity) 


OPS : ₹25 லட்சம் வரை. 


NPS :  ₹20 லட்சம் வரை. 


TAPS : ₹25 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.


குடும்ப ஓய்வூதிய பாதுகாப்பு உண்டு.



எந்தத் திட்டம் சிறந்தது?


​பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS): 

இதுவே மிகச்சிறந்த திட்டமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இதில் (Old Pension Scheme) ஊழியர்கள் தங்களது சம்பளத்திலிருந்து எந்தப் பணத்தையும் பிடித்தம் செய்ய வேண்டியதில்லை. அரசு முழுமையாகச் செலவை ஏற்றுக்கொண்டு, பணவீக்கத்திற்கு ஏற்ப (DA) ஓய்வூதியத்தை உயர்த்தும். ஆனால், இது தற்போது புதிய பணியாளர்களுக்கு நடைமுறையில் இல்லை.

தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS - 2026):

தமிழ்நாடு அரசு அண்மையில் (ஜனவரி 2026) அறிவித்துள்ள திட்டம் இது (Tamilnadu Assured Pension Scheme) . OPS-க்கும் NPS-க்கும் இடைப்பட்ட ஒரு நடுநிலையான திட்டம்.


சிறப்பு: 

இதில் OPS போன்றே 50% சம்பளம் மற்றும் DA உயர்வு உறுதி செய்யப்படுகிறது.

​குறை: ஊழியர்கள் 10% பங்களிப்புத் தொகையைச் செலுத்த வேண்டும். OPS கிடைக்காத நிலையில், NPS திட்டத்தை விட இது அரசு ஊழியர்களுக்குப் பாதுகாப்பானது.

புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS):

இது பங்குச்சந்தையைச் சார்ந்தது. சந்தை நன்றாக இருந்தால் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புண்டு, ஆனால் ஓய்வூதியத் தொகைக்கு எந்த உறுதியும் இல்லை. இதில் DA உயர்வு கிடையாது என்பது ஒரு பெரிய பின்னடைவு.


சுருக்கமாக:

​பணம் கட்டாமல் பலன் பெற: OPS சிறந்தது (கிடைத்தால்).

​பணம் கட்டினாலும் நிலையான ஓய்வூதியம் பெற: TAPS சிறந்தது.

​சந்தையின் அபாயத்தை ஏற்கத் தயார் என்றால்: NPS (பொதுவாக அரசு ஊழியர்கள் இதை விரும்புவதில்லை).

​தற்போதுள்ள சூழலில், OPS-க்கு அடுத்தபடியாக TAPS திட்டம் அரசு ஊழியர்களுக்கு அதிகப் பாதுகாப்பை வழங்குகிறது.


இவை மட்டுமின்றி மத்திய அரசின் UPS (Unified Pension Scheme) திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இணைய பெரும்பாலான மத்திய அரசின் பணியாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.




>>> தரம் மற்றும் வசதிகளுடன் கூடிய சில சிறந்த Neckband (Bluetooth Earphones) மாடல்களின் விவரம்...



மக்கள் தொகை கணக்கெடுப்பு - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

 


மக்கள் தொகை கணக்கெடுப்பு - பிரதமருக்கு முதல்வர் கடிதம்


மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக மாநில முதல்வர்கள் கொண்ட ஆலோசனைக்குழு அமைத்திடுக.


மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டதை வரவேற்கிறேன்.


வழிகாட்டுதல்கள் குறித்து விவாதித்து மேம்படுத்த மாநில முதல்வர்கள், பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும்.


மக்கள் தொகை கணக்கெடுப்பு கட்டமைப்பை வடிவமைப்பதில் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும்.


சமூக இயக்கவியல், சாதிய கட்டமைப்பு வேறுபாடுகளை கவனத்தோடு கையாள வேண்டும்.


கவனமாகக் கையாளாவிட்டால், சமூகப் பதற்றத்துக்கான சாத்தியத்தை ஏற்படுத்தும் உணர்வுப்பூர்வமான விஷயம் இது.


கணக்கெடுப்பு கேள்விகள், பிரிவுகள், துணைப்பிரிவுகள் போன்றவை துல்லியமாக இருக்க வேண்டும்


– பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்



>>> தரம் மற்றும் வசதிகளுடன் கூடிய சில சிறந்த Neckband (Bluetooth Earphones) மாடல்களின் விவரம்...




தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வு

 


தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வு: பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவு


மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்குத் தகுதியான பள்ளி தலைமை ஆசிரியர்களின் விவரங்களை அனுப்பி வைக்குமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதற்கு நிகரான பணியிடங்களுக்கு 2026-27-ம் ஆண்டுக்கான உத்தேச காலிப்பணியிடங்கள் குறித்து அரசுக்கு கருத்துருக்கள் அனுப்பப்பட்டு, ஆணைகள் எதிர்நோக்கப்படுகின்றன.


பெயர் பட்டியல் தயாரிப்பு: மேலும், பணி மாறுதல் மூலம் மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்குவதற்கு தகுதியானவர்கள் பெயர்ப் பட்டியலும் தயார் செய்யப்பட உள்ளது. இதற்கான முன்னுரிமைப் பட்டியலில் இருந்து தகுதியான தலைமை ஆசிரியர்களின் விவரங்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள, தங்கள் மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின் விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும்.


வழிகாட்டுதல்கள்: இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும். வருங்காலத்தில் இதில் புகார் ஏதும் பெறப்பட்டால், பரிந்துரை செய்த முதன்மைக் கல்வி அலுவலரே பொறுப்பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



>>> தரம் மற்றும் வசதிகளுடன் கூடிய சில சிறந்த Neckband (Bluetooth Earphones) மாடல்களின் விவரம்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.3.6 - Updated on 08-01-2026

    தற்போது TNSED Schools  App-ல்  Noonmeal bug fixes and enhancements added   புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: ...