கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-11-2025

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-11-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 28.11.2025

கிழமை:- வெள்ளிக்கிழமை


 *திருக்குறள்:*

பால்:- பொருட்பால்

இயல்:- அரசியல்

அதிகாரம்:- இடன் அறிதல்


*குறள் 494:*


எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து 

துன்னியார் துன்னிச் செயின்.                                                                     


*விளக்க உரை:*


தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.


*பழமொழி :*


Effort is the bridge between dreams and reality.   


முயற்சி தான் கனவு மற்றும் நிஜம் இடையேயான பாலம்.


*இரண்டொழுக்க பண்புகள் :*



1.கல்வி கற்பது பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல, அறிவை வளர்க்கவும் தான்.


2.எனவே படித்து எனது அறிவை வளர்த்துக் கொள்வேன்.


*பொன்மொழி :*


அன்பே சொர்க்கத்தின் நுழைவாயில். அன்புடன் பெருந்தன்மையான செயல்கள் புரியும்போது கடவுள் நம்மிடம் இருக்கிறார்- லூகி லார்கம்


*பொது அறிவு :* 


01.இந்தியத் திரையுலகின் மிக உயரிய விருதுஎது?


 தாதாசாகேப் பால்கே விருது 


  Dadasaheb Phalke Award


02. இந்தியாவின் ""டெக்கான் ராணி"" என்று அழைக்கப்படும் நகரம் எது 


                பூனே - Pune 


*English words :*


slip-fall because the ground is slippery,trip-fall because foot hit something


*தமிழ் இலக்கணம்:*


 வழூஉசொற்கள்/ திருத்தம் 

1. அடமழை –அடைமழை

2. கோடாலி –கோடாரி

3. கருவேப்பிலை –கறிவேப்பிலை

4. அருவாமனை –அரிவாள்மனை

5. துவக்கப் பள்ளி –தொடக்கப்பள்ளி

6.


*அறிவியல் களஞ்சியம் :*


 இதயத்தின் வேலை என்பது, இரண்டு காரணிகளால் நடைபெறுகிறது.


இதயத் தசைகளில் ஏற்படும் மின் தூண்டுதல்கள்


இந்த மின் தூண்டலினால் இதய அறைகளில் இருந்து இரத்தம் பீய்ச்சி அடிக்கப்படுவது.


*நீதிக்கதை*


 *துளையிட்ட காசு*


அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். 


ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், அதிஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன் என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான். 


அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. எல்லாம் காசு கிடைத்த நேரம் என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசைத் தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான். 


சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன. பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போல் உள்ளது என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி!


அந்தக் காசில் துளையே இல்லை. என்ன ஆயிற்று? என்று குழப்பத்துடன் பார்த்தான். 


அவன் மனைவி சொன்னாள், என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன் என்றாள். 


இது எப்போது நடந்தது? என்று கேட்டான். 


அந்தக் காசு கிடைத்த மறுநாளே என்றாள்.


அவன் அமைதியாக சிந்தித்தான். உண்மையில் அதிஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான் என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்... !


*இன்றைய செய்திகள்*


28.11.2025


⭐தமிழகத்தில் தற்போது பருவமழை காரணமாகக் குளிர்ச்சி நிலவி வரும் நிலையில், சுவாசப் பாதிப்புகள் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால் குழந்தைகளும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் பாதுகாப்புடன் இருக்கும் படி சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.


⭐ஓசோனை சேதப்படுத்தும் ஆபத்தான ரசாயனங்கள் தடை செய்யப்பட்டதால் ஓசோன் துளையின் அளவு குறைந்துள்ளதாக நாசா (NASA) மற்றும் என்ஓஏஏ (NOAA) விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.


⭐ தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவானது.

* வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து ஒரு சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளது.


*🏀 விளையாட்டுச் செய்திகள்*


🏀 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மகளிர் பிரிமீயர் லீக் தொடர் தொடங்கும் தேதி மற்றும் போட்டிக்கான இடங்கள் அறிவிப்பு.

மகளிர் பிரிமீயர் லீக் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி தொடங்குகிறது.

இந்த தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில் நடக்கவுள்ளது.


*Today's Headlines*


⭐ The health department has warned senior citizens over the age of 65 and children to stay safe.  So far days with the current monsoon season in Tamilnadu, there has been an increase in respiratory infections and the spread of influenza.


⭐ NASA and NOAA scientists have announced that the size of the ozone hole has decreased due to the ban on dangerous chemicals that damage ozone.


⭐ The prevailing low pressure area over the southwest Bay of Bengal has strengthened into a deep depression. It is likely to move north-northwestwards and intensify further into a cyclonic storm.


 *SPORTS NEWS* 


🏀 The Women's Premier League series of 20-over cricket has been announced with the start date and venues. The Women's Premier League series will start on January 9 next year. The series will be held in Navi Mumbai and Vadodara.



Latest Laptop Models மற்றும் அவற்றின் முக்கிய அம்சங்கள்



 வணக்கம்! இந்தியாவில் தற்போது கிடைக்கும் லேட்டஸ்ட் லேப்டாப் மாடல்கள் மற்றும் அவற்றின் முக்கிய அம்சங்கள் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.


தற்போது சந்தையில் AI (Artificial Intelligence) அம்சங்கள் கொண்ட லேப்டாப்கள் மற்றும் சக்திவாய்ந்த புதிய தலைமுறை பிராசஸர்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன.


💻 சமீபத்திய லேப்டாப்களில் உள்ள முக்கிய அம்சங்கள் (Latest Key Features)

புதிய லேப்டாப்களில் இருக்கும் முக்கியமான சிறப்பம்சங்கள் இவை:

  • AI பிராசஸர்கள் (AI Processors): இன்டெல் கோர் அல்ட்ரா (Intel Core Ultra), AMD ரைசன் AI (AMD Ryzen AI) மற்றும் ஆப்பிள் M4 போன்ற புதிய தலைமுறை பிராசஸர்கள் NPU (Neural Processing Unit) உடன் வருகின்றன. இவை, AI அடிப்படையிலான வேலைகளை (உதாரணமாக, வீடியோ எடிட்டிங், லைவ் கேப்ஷன்கள், இமேஜ் ஜெனரேஷன்) லேப்டாப்பிலேயே வேகமாகச் செய்ய உதவுகின்றன.

  • OLED / QHD+ / 3K டிஸ்பிளேக்கள்: துல்லியமான வண்ணங்கள், ஆழமான கருப்பு நிறங்கள் மற்றும் மிருதுவான படங்களுக்காக OLED டிஸ்பிளேக்கள் மற்றும் உயர் ரெசொலூஷன் (High Resolution) கொண்ட QHD+ அல்லது 3K டிஸ்பிளேக்கள் வந்துள்ளன. அதிக ஹெர்ட்ஸ் (Hz) புதுப்பிப்பு வீதமும் (Refresh Rate) கேமிங் மற்றும் வீடியோ பார்ப்பதற்குச் சிறப்பாக உள்ளன.

  • அதிக பேட்டரி ஆயுள்: புதிய செயல்திறன் மிகுந்த பிராசஸர்கள் காரணமாக, ஒரு சில மாடல்களில் 20 மணிநேரம் முதல் 32 மணிநேரம் வரை கூட பேட்டரி ஆயுள் கிடைக்கிறது.

  • வேகமான ரேம் மற்றும் சேமிப்பகம் (RAM & Storage): அதிவேகமான DDR5 அல்லது LPDDR5X ரேம் மற்றும் PCIe Gen 4 SSD சேமிப்பகம் ஆகியவை லேப்டாப்பின் ஒட்டுமொத்த வேகத்தை மேம்படுத்துகின்றன.

  • AI கேமரா அம்சங்கள்: ஆட்டோ ஃபிரேமிங் (Auto Framing), போர்ட்ரெய்ட் ப்ளர் (Portrait Blur), மற்றும் கண்ணைத் தொடர்பு கொள்ள வைக்கும் (Eye Contact) போன்ற AI அடிப்படையிலான வீடியோ அழைப்பு அம்சங்கள்.

  • புதிய கிராபிக்ஸ் கார்டுகள்: NVIDIA GeForce RTX 5000 சீரிஸ் போன்ற லேட்டஸ்ட் கிராபிக்ஸ் கார்டுகள், உயர்நிலை கேமிங் மற்றும் கிராஃபிக்ஸ் வேலைகளுக்கு வருகின்றன.


🌟 இந்தியாவில் கிடைக்கும் சில லேட்டஸ்ட் மாடல்கள் (Latest Models in India)

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் பிரபலமான சில லேப்டாப் மாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

மாடல் பெயர் (Model Name)முக்கிய அம்சங்கள் (Key Features) தோராய   விலை   (Approx.  Price)
Apple MacBook Air 13-inch (M4 Chip)புதிய Apple M4 Chip, சிறந்த செயல்திறன், மிக மெல்லிய வடிவமைப்பு, நீண்ட பேட்டரி ஆயுள், உயர் தரமான டிஸ்பிளே.

16GB Unified Memory+ 256 GB

https://amzn.to/44uSVhR

 ₹99,900  முதல்






Dell 14 Plus / 16 Plus (AI PC)

24GB Unified Memory+ 512 GB

https://amzn.to/3Maokjo




Intel Core Ultra பிராசஸர்கள் (AI திறன்களுடன்), Copilot+ AI ஆதரவு, QHD+ டிஸ்பிளே, அதிக பேட்டரி ஆயுள்.

https://amzn.to/3XhU6NX
 




  ₹96,899 முதல்

HP EliteBook X Flip G1i


Intel Core Ultra (சீரீஸ் 2) பிராசஸர், 48 TOPS NPU, 3K OLED டிஸ்பிளே, 360-டிகிரி கீல் (Flip), உயர்நிலை வணிகப் பயன்பாட்டிற்கு ஏற்றது.

https://amzn.to/485nME3
 ₹1,21,723 முதல்
Asus Vivobook 14 (Snapdragon X)

Qualcomm Snapdragon X ப்ராசஸர், 29 மணிநேரம் வரை பேட்டரி ஆயுள், 14-இன்ச் WUXGA LCD ஸ்க்ரீன், AI அம்சங்கள், மலிவு விலையில் AI PC.

https://amzn.to/3XTrxq9

 ₹65,990  முதல்
Lenovo Legion Pro 7 AI
Intel Core Ultra 9 பிராசஸர், சக்திவாய்ந்த NVIDIA RTX 5070Ti/5080 கிராபிக்ஸ், உயர்நிலை கேமிங்கிற்கு ஏற்றது.

https://amzn.to/3Ks2QOw
 ₹2,56,031 முதல்
Asus Vivobook 15 X1504VAP

Intel Core i5 பிராசஸர், 16GB RAM, 512GB SSD, அன்றாடப் பயன்பாட்டிற்குச் சிறந்தது.

https://amzn.to/4ao64gq


 ₹50,990 முதல்
Dell Inspiron 15 3530
Intel Core i3 (13th Gen), 8GB RAM, 512GB SSD, மாணவர்களுக்கு மற்றும் வீட்டு உபயோகத்திற்கு ஏற்ற மலிவான மாடல்.

https://amzn.to/49JFWN0
  ₹44,990 முதல்


(குறிப்பு: விலைகள் மற்றும் சலுகைகள் மாறுபடலாம். வாங்கும் முன் விற்பனை நிலையங்களில் அல்லது ஆன்லைனில் சரிபார்க்கவும்.)



🛠️ லேப்டாப் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை (Buying Guide)

உங்களுக்கு எந்த லேப்டாப் சிறந்தது என்பதைத் தீர்மானிக்க, பின்வரும் விஷயங்களைக் கவனியுங்கள்:

தேவை (Requirement)பரிந்துரைக்கப்பட்ட அம்சங்கள் (Recommended Features)
அன்றாடப் பயன்பாடு / மாணவர்கள்Intel Core i3 (12th Gen அல்லது அதற்கு மேல்) அல்லது AMD Ryzen 3, 8GB RAM, 512GB SSD.
அலுவலக வேலை / பொதுப் பயன்பாடு
Intel Core i5/i7 அல்லது AMD Ryzen 5/7, 16GB RAM, 512GB/1TB SSD, FHD அல்லது QHD டிஸ்பிளே.
கேமிங் / கிராஃபிக்ஸ் வடிவமைப்பு
Intel Core i7/i9 அல்லது AMD Ryzen 7/9, 16GB/32GB RAM, NVIDIA RTX கிராபிக்ஸ் (RTX 4050 அல்லது அதற்கு மேல்), 120Hz அல்லது 165Hz டிஸ்பிளே.
AI / கிரியேட்டிவ் வேலைகள்
Intel Core Ultra அல்லது AMD Ryzen AI பிராசஸர் (NPU உடன்), 32GB/64GB RAM, OLED டிஸ்பிளே.


உங்களுக்கு எந்த வகையான லேப்டாப் தேவை, அல்லது உங்களின் அதிகபட்ச பட்ஜெட் எவ்வளவு என்பதற்கு ஏற்ற சரியான மாடலைத் தேர்ந்தெடுக்கலாம்


சிறப்பு தீவிர வாக்காளர் (S.I.R) திருத்தப் பட்டியல் முக்கிய அறிவிப்புகள்

 

சிறப்பு தீவிர வாக்காளர் (SIR) திருத்தப் பட்டியல் முக்கிய அறிவிப்புகள்



தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரின் செய்தி வெளியீடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



*1)* கணக்கீட்டுப் படிவங்களை பெற்றுக்கொண்ட வாக்காளர்கள், இறுதி நாளான டிசம்பர் *-4* வரை காத்திருக்காமல்...


படிவங்களை, உடனடியாக பூர்த்தி செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


*2)* கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்துள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களும், வரும் டிசம்பர் *9*-ம் தேதி வெளியிடப்படும் 'வரைவு வாக்காளர் பட்டியலில்' இடம்பெறும்.


*3)* கடந்த *-2002* மற்றும் *-2005* வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர் அல்லது தங்களது உறவினரின் பெயரை கண்டுபிடிக்க முடியாமல்...


தங்களுடைய விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து கொடுக்கும் வாக்காளர் பெயரும், டிசம்பர் *9*-ம் தேதி வெளியிடப்படும் 'வரைவு வாக்காளர் பட்டியலில்'  இடம்பெறும்.


*4)* வரும் டிசம்பர் *4*-ம் தேதிக்குள், கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்து தராத வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.


*5)* *BLO*, *3* முறை வீடு தேடிச் சென்றும் கணக்கீட்டுப் படிவம் பெறாத வாக்காளரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.


*6)* வரும் டிசம்பர் *9*-ம் தேதி வெளியிடப்படும் 'வரைவு வாக்காளர் பட்டியலில்' பெயர் இடம் பெறாதவர்கள்...


டிசம்பர் *9*-ம் தேதி முதல் ஜனவரி *8* -ம் தேதி வரை, படிவம் *6*-உடன் உறுதிமொழிப் வடிவத்தையும் இணைத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதியதாக விண்ணப்பிக்கலாம்.


*7)* தங்கள் பாகத்தில் உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில், ஆட்சேபனைக்குரிய - சம்பந்தமில்லாத வாக்காளர் பெயர் இடம் பெற்றிருந்தால், அந்த பாகத்தில் பட்டியலில் உள்ள வாக்காளர் எதிர்ப்பு தெரிவிக்கலாம்.


*8)* டிசம்பர் *9* -ம் தேதி முதல் ஜனவரி *31*-ம் தேதி வரை *"Notice Period"* காலமாகும்.


இந்த காலகட்டத்தில், வாக்காளரின் தகுதி ஆய்வு செய்யப்பட்டு தேவை ஏற்படின் சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு *BLO* மூலமாக அறிவிப்பு வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்படும்.


*9)* வாக்காளரின் அனைத்து உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலனை செய்யப்பட்டு...


வரும் பிப்ரவரி *7*-ம் தேதி, 'இறுதி வாக்காளர் பட்டியல்' வெளியிடப்படும்.


*- தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பு வெளியீடு!*


டிசம்பர் 4க்குள் SIR படிவம் கொடுக்காவிடில் வரைவு பட்டியலில் பெயர் இருக்காது


3 முறை வீட்டுக்கு வந்தும் படிவம் வழங்க முடியாதவர்களின் பெயர் இடம்பெறாது


வாக்காளர்கள் உரிமை கோரலுக்கு டிசம்பர் 9 - ஜனவரி 8 வரை விண்ணப்பிக்கலாம்


தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு



>>> லேட்டஸ்ட் லேப்டாப் மாடல்கள் மற்றும் அவற்றின் முக்கிய அம்சங்கள்... 


தஞ்சாவூர் அருகே திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை கொலை

 


தஞ்சாவூர் அருகே ஆலங்குடி அரசு தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றும் காவியா, கொலை செய்யப்பட்டார்.


நேற்று காலை பள்ளிக்குச் செல்லும் போது, அஜித்குமார் என்பவர் கொலை செய்துள்ளார். காதல் விவகாரத்தில் இக்கொலை நடந்துள்ளதாக தகவல்


கொலை செய்த அஜித்குமார் காவல் நிலையம் சென்று சரணடைந்துள்ளார். அவரை கைது செய்து விசாரணை


தஞ்சாவூர் அருகே திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை கொலை: காதலன் கைது


தஞ்சாவூர் அருகே திருமணத்துக்கு மறுத்த ஆசிரியையை, காதலன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோயில் அருகே உள்ள மேல களக்குடியைச் சேர்ந்தவர்  காவியா (26). இவர் ஆலங்குடி அரசு தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரும் அதே ஊரில் அவரது சமூகத்தை சேர்ந்த அஜித்குமார் (29) என்பவரும் கடத்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.


இந்த நிலையில் காவியாவின் பெற்றோர் வற்புறுத்தலின்படி, அவரது உறவினருக்கு திருமணம் செய்து வைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். 


தனக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட தகவலையும், அதற்கான போட்டோக்களையும் அஜித்குமாருக்கு காவியா காட்டியதாகவும். இதனால் அஜித் குமார் கோபத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.


இந்த நிலையில் நேற்று (நவம்பர் 27) காலை காவியா பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, மாரியம்மன் கோவில் கொத்தட்டை காலனி ராமகிருஷ்ண மடம் அருகே சென்றபோது அவரை அஜித்குமார் வழி மறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவியாவை குத்தி கொலை செய்துள்ளார்.


காவியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அடுத்து, அங்கு விரைந்து சென்ற அம்மாபேட்டை போலீஸார், காவியாவின் உடலை கைப்பற்றி தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.




12-10-2025 அன்று நடைபெற்ற PGTRB தேர்வு முடிவுகள் வெளியீடு

 

 


கடந்த மாதம் 12-10-2025 அன்று நடைபெற்ற முதுகலை ஆசிரியர் PGTRB தேர்வு முடிவுகள் வெளியீடு - ஆசிரியர் தேர்வு வாரியம் பத்திரிகை செய்தி வெளியீடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



TRB PG 2025 தேர்வு முடிவுகள் வெளியீடு - வலைதள முகவரி...


https://trb.tn.gov.in/more_notification_details.php?id=MN-986




>>> லேட்டஸ்ட் லேப்டாப் மாடல்கள் மற்றும் அவற்றின் முக்கிய அம்சங்கள்... 


அன்பு என்பது என்ன? - இன்றைய சிறுகதை



 அன்பு என்பது என்ன? - இன்று ஒரு சிறு கதை


ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியை மாணவர்களிடம், அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று கூறி நான்கு மாணவிகளை அனுப்பினார்.


திரும்பி வந்த மாணவிகளில் ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் மலர் இருந்தது. மற்றொரு மாணவியிடம் ஒரு சிறு பறவை இருந்தது. நான்கு மாணவிகளில் முதலில் கிளம்பிப்போன மாணவி கடைசியில் வெறும் கையுடன் திரும்பி வந்தாள். ஆசிரியையிடம் "நீ ஏன் எதையும் கொண்டு வரவில்லை" என்று கேட்டார.


அதற்கு அந்த மாணவி, "நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன். குஞ்சுப்பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்" என்று பதில் கூறினாள்.


மாணவி கூறிய பதிலைக் கேட்டவுடன் ஆசிரியை அந்த மாணவியை அணைத்துக் கொண்டார்.


"அன்பு என்றால் இது தான். ஒன்றும் கொடுக்க வேண்டாம். எதையும் பறிக்காமல் இருந்தால் அதுவே போதும்" என்றார்.



>>> லேட்டஸ்ட் லேப்டாப் மாடல்கள் மற்றும் அவற்றின் முக்கிய அம்சங்கள்... 

ICT Nodal Teacherன் பணிகள்

 


ICT Nodal Teacherன் பணிகள்


பள்ளியின் அனைத்து தகவல் தொழில்நுட்ப செயல்பாடுகளுக்கும் ஒற்றை தொடர்பு புள்ளி (SPOC). 

பள்ளி வேலை நேரத்தில் இணையத்துடன் டேப்லெட்டுகள், ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் ஹைடெக் ஆய்வகத்தின் சரியான செயல்பாட்டை உறுதி செய்தல். 

ஹைடெக் ஆய்வகம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறையின் 100% பயன்பாட்டிற்காக இயக்குநரகம் வழங்கிய கால அட்டவணையைப் பின்பற்றல். 

SCERT உள்ளடக்கங்களைப் பயன்படுத்தி வகுப்புகள் நடத்தப்படுவதை உறுதி செய்தல். அன்றாட நடவடிக்கைகளில் நிர்வாகி மற்றும் பயிற்றுவிப்பாளருடன் இணைந்து பணியாற்றுதல். 

ஹைடெக் ஆய்வகம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறையைப் பயன்படுத்தும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிறர் பின்பற்றும் பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உறுதி செய்தல். 

ஹைடெக் ஆய்வகம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறை தொடர்பான ஏதேனும் தொழில்நுட்ப சிக்கல்கள் இருந்தால், தீர்வு காணப்படும் வரை CCC உதவி மைய எண் 044 – 4011 6100 / ஆன்லைன் டிக்கெட் அமைப்புடன் பின்தொடர்தல். 

தீ, திருட்டு மற்றும் வெள்ளம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பள்ளி கல்வித் துறையின் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்து, பிரச்சினை சரிசெய்யப்படும் வரை M/s. KELTRON மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்கவும். 

ஹைடெக் ஆய்வகம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறை தொடர்பான வேறு ஏதேனும் செயல்பாடுகள்.


Duties of ICT Nodal Teacher

Single Point of Contact (SPOC) for all ICT activities of the school.

To ensure the proper functioning of Tablets, Smart Classroom and Hi-Tech Lab along with Internet during the school working hours.

Follow the timetable provided from the Directorate for 100% utilization of Hi-Tech Lab and Smart Classroom.

To ensure classes are conducted using the SCERT contents.

Work along with the Administrator-cum-Instructor on day-to-day activities.

To ensure safety policies and guidelines which are followed by students, teachers and others who are utilizing the Hi-Tech Lab and Smart Classroom.

Follow-up with CCC helpdesk number 044 – 4011 6100 / Online ticketing system for any technical issues related to Hi-Tech Lab and Smart Classroom till resolution.

Inform the authorities concerned and the higher officials of the School Education Department in case of fire, theft and flood and coordinate with M/s. KELTRON and Government authorities till closure of issue.

Any other activities related to Hi-Tech Lab and Smart Classroom.



HP 15, 13th Gen Intel Core i3-1315U (12GB DDR4, 512GB SSD) FHD, Anti-Glare, Micro-Edge, 15.6''/39.6cm, Win11, M365 Basic(1yr)* Office24, Silver, 1.59kg, fd0573TU, FHD Camera w/Shutter Laptop


https://amzn.to/3KnyYCO




நவம்பர் 26 ஆம் தேதி அரசியலமைப்பு தினம்

 



1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி அரசியலமைப்புச் சபையில் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ஆம் தேதி அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இது 1950 ஜனவரி 26 முதல் அமலுக்கு வந்தது.


Constitution Day is celebrated on 26th November every year to commemorate the adoption of the Constitution of India in the Constituent Assembly on 26th November 1949. This came into effect from 26th January 1950.


#TNFCU #Importantdays #Secularism #Fakenews #Hatespeech


HP 15, 13th Gen Intel Core i3-1315U (12GB DDR4, 512GB SSD) FHD, Anti-Glare, Micro-Edge, 15.6''/39.6cm, Win11, M365 Basic(1yr)* Office24, Silver, 1.59kg, fd0573TU, FHD Camera w/Shutter Laptop


https://amzn.to/3KnyYCO




International Day for the Elimination of Violence Against Women



பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - உலகளவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கவும், அவற்றை நிவர்த்தி செய்யவும் அவசரத் தேவையை எடுத்துக்காட்டும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 25 ஆம் தேதியை அனுசரிக்கிறது.

* விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்


* குரல் கொடுங்கள்


* ஆதரவை வழங்குங்கள


 International Day for the Elimination of Violence Against Women - The United Nations observes 25 November to highlight the urgent need to prevent and address violence against women and girls worldwide. 


* Create awareness

* Voice out

* Offer support


#TNFCU #HateSpeech #ImportantDays


HP 15, 13th Gen Intel Core i3-1315U (12GB DDR4, 512GB SSD) FHD, Anti-Glare, Micro-Edge, 15.6''/39.6cm, Win11, M365 Basic(1yr)* Office24, Silver, 1.59kg, fd0573TU, FHD Camera w/Shutter Laptop


https://amzn.to/3KnyYCO





பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-11-2025

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-11-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 27.11.2025

கிழமை:- வியாழன்


 *திருக்குறள்:*

பால்:- பொருட்பால்

இயல்:- அரசியல் 

அதிகாரம்:- உடன் அறிதல்


*குறள் 492:*


முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் 

ஆக்கம் பலவுந் தரும். 


*விளக்க உரை:*


மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்.


*பழமொழி :*


Hard path leads to beautiful destinations. 


கடினமான பாதைகள் அழகான இடங்களுக்குக் கொண்டு செல்லும்.



*இரண்டொழுக்க பண்புகள் :*


1.கல்வி கற்பது பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல, அறிவை வளர்க்கவும் தான்.


2.எனவே படித்து எனது அறிவை வளர்த்துக் கொள்வேன்.


*பொன்மொழி :*


அசாதாரணமான வாய்ப்புகளுக்காக காத்திருக்க வேண்டாம். பொதுவான சந்தர்ப்பங்களை கைப்பற்றி அவற்றை சிறந்ததாக மாற்றுங்கள்


   ஒரிசன் ஸ்வெட் மார்டின்


*பொது அறிவு :*


01. பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் இசைக்கலைஞர் யார்?


 எம். எஸ். சுப்புலட்சுமி-1998 


M. S. Subbulakshmi-1998


2.தமிழ்நாட்டின் தாகூர் என்று அழைக்கப்படுபவர் யார்?


     கவிஞர் வாணிதாசன்


 Poet Vanidasan


*English words :*


mourning -grieving


famished-extremely hungry


*தமிழ் இலக்கணம்:*


 வழூஉச் சொற்கள் என்பவை எழுத்துக்களின் தவறான உச்சரிப்பால் அல்லது பேச்சுவழக்கில் ஏற்படும் பிழைகளால் உருவாகும் சொல்லாகும். இவை சரியான, தூய்மையான தமிழ் சொல்லுக்குப் பதிலாக, மக்கள் பேச்சுவழக்கில் பயன்படுத்துகின்ற தவறான சொற்கள் ஆகும். இனி வரும் நாட்களில் நாம் . வழூஉச் சொற்கள் சிலவற்றையும்  அதற்கு சரியான சொற்களையும் காண்போம். 

பேச்சுவழக்கு  சொல் & சரியான சொல்

1. தாவாரம்- தாழ்வாரம்

2. சின்னாபின்னம் - சின்ன பின்னம்

3. சீயக்காய் – சிகைக்காய்

4. சுவற்றில்- சுவரில்

5. சோத்துப்பானை  –சோற்றுப் பானை


*அறிவியல் களஞ்சியம் :*


ஒரு கண்ணாடி ஜாரை மறுசுழற்சி செய்வதன் மூலம் நாம் மூன்று மணி நேரம் தொலைக்காட்சி பயன்படுத்துவதற்காகச் செலவிடும் எனர்ஜியை சேமிக்க முடியும். எனவே மாணவர்களே மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை உபயோகியுங்கள். 


*நவம்பர் 27*


*லீ ஜூன் ஃபேன் புரூஸ் (Lee Jun-fan) (நவம்பர் 27, 1940 – ஜூலை 20 1973)* இவரின் திரைப்படப் பெயரான புரூஸ் லீ என பரவலாக அறியப்படும். இவர்  ஆங்காங் மற்றும் அமெரிக்கத் திரைப்பட நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தற்காப்புக் கலைஞர், தற்காப்புக் கலைகள் பயிற்றுநர், மெய்யியலாளர்கள், ஜீத் குன் தோ எனும் உஷூ அல்லது சீன சண்டைக் கலையைத் தோற்றுவித்தவரும் ஆவார். இவரின் பெற்றோர் கன்தோனிஸ் ஆபரா , லீ ஹோய் சுன். இவர் ஊடகவியலாளார்கள், விளக்கவுரையாளர்கள், விமர்சகர்கள், மற்றும் தற்காப்புக் கலைஞர்களால் அனைத்துக் கால தற்காப்புக் கலைகளில் சக்திவாய்ந்த ஆளுமையாகப் பார்க்கப்படுகிறார். 


*நீதிக்கதை*


 *சுண்டெலி மனிதனாக மாறிய கதை*



ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானியின் முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புன்னியம் உள்ளது என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார். 



இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்து ஞானியின் முன் நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று கேட்டார். என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார். 



சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. 



நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறிவிட்டார் அந்த ஞானி. ஆகையால், உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூணாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும்.


*இன்றைய செய்திகள்*


27.11.2025


⭐ வரும் 29ம் தேதிஅதிகனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாளை காலை 11 மணிக்கு அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.


⭐இந்தியாவில் திடீரென முடங்கிய கூகுள் மீட் சேவை - பயனர்கள் அதிர்ச்சி


⭐ எத்தியோப்பியாவில் ஹேலி குப்பி எரிமலை வெடித்த தால், வானில் 14 கி.மீ உயரம் வரை சாம்பல் மேகங்கள் பறந்தன. இதனால் சர்வதேச விமானப்பாதைகள் குழப்பத்தில் சிக்கியுள்ளன.இந்த சாம்பல் மேகம், விமான இன்ஜின்களுக்கு ஆபத்தானது.


*🏀 விளையாட்டுச் செய்திகள்*


🏀ஒருநாள் பேட்டர் தரவரிசையில் இந்திய அணியின் ரோகித் சர்மா மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.

* முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.


*Today's Headlines*


⭐ Chief Minister will hold an important meeting with officials tomorrow at 11 am regarding  red alert has been issued for heavy rains on the 29th November. 


⭐ Users shocked due to Google Meet service suddenly stopped in India yesterday.


⭐ The eruption of the Haley Cup volcano in Ethiopia sent ash clouds as high as 14 km into the sky. This has disrupted international flights. This ash cloud is dangerous for aircraft engines.


 *SPORTS NEWS* 


🏀 Indian batsman Rohit Sharma has regained the top spot in the ODI batsman rankings. * The New Zealander who was at the top has been relegated to the second spot.


HP 15, 13th Gen Intel Core i3-1315U (12GB DDR4, 512GB SSD) FHD, Anti-Glare, Micro-Edge, 15.6''/39.6cm, Win11, M365 Basic(1yr)* Office24, Silver, 1.59kg, fd0573TU, FHD Camera w/Shutter Laptop


https://amzn.to/3KnyYCO




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-11-2025

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-11-2025 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   🌀🌀🌀...