கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாலையில் தேசியக் கொடியை இறக்க மறந்தாலும் இனி கவலைப்பட வேண்டாம்

 


மாலையில் தேசியக் கொடியை இறக்க மறந்தாலும் இனி கவலைப்பட வேண்டாம்


நண்பர்களே வணக்கம் 🙏


இன்று சுதந்திர தினம் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி இருப்பீர்கள்...


முன்பு மாலை சூரிய அஸ்தமனம் போது கொடி இறங்க வேண்டும்.. (Flag code 2002...)


தற்போது தேசிய கொடி இரவு பகல் என்று எல்லா நேரங்களிலும் பறக்கலாம்...

(Flag code amendment 2022..)


ஒருவேளை தாங்கள் மாலையில் கொடி இறக்க மறந்தாலும் கவலைப்பட வேண்டாம் 😊


தகவலுக்காக

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி

மோ சுப்புலாபுரம்

மதுரை மாவட்டம்

15/8/25



TET 2025 : முக்கிய தகவல்கள் தொகுப்பு

 

ஆசிரியர் தகுதி தேர்வு Teacher Eligibility Test TET 2025 : முக்கிய தகவல்கள் தொகுப்பு 


📢 TNTET 2025 அறிவிப்பு

அறிவிப்பு எண்: 03/2025

வெளியீடு: 11.08.2025

இணையதளம்: www.trb.tn.gov.in


🗓 முக்கிய தேதிகள்


விண்ணப்பம் தொடக்கம்: 11.08.2025


கடைசி தேதி: 08.09.2025 மாலை 5 மணி


திருத்தம்: 09.09.2025 – 11.09.2025


Paper-I தேர்வு: 01.11.2025 காலை


Paper-II தேர்வு: 02.11.2025 காலை



🎓 தகுதி


Paper-I (1–5 ஆம் வகுப்புகளுக்கு): 12ஆம் வகுப்பு + D.El.Ed / B.El.Ed / D.Ed (Special Education)


Paper-II (6–8ஆம் வகுப்புகளுக்கு): பட்டம் + D.El.Ed / B.Ed / B.El.Ed / B.A.Ed / B.Sc.Ed / B.Ed (Special Education)


வயது: 18+ (மேல் வரம்பு இல்லை)


தளர்வு: SC/ST/BC/MBC/மாற்றுத்திறனாளி – 5%



📝 தேர்வு முறை


150 வினாக்கள் / 150 மதிப்பெண்கள் / 3 மணி நேரம்


Paper-I: குழந்தை வளர்ச்சி, மொழி-I, மொழி-II (ஆங்கிலம்), கணிதம், சுற்றுச்சூழல்


Paper-II: குழந்தை வளர்ச்சி, மொழி-I, மொழி-II (ஆங்கிலம்), கணிதம்+அறிவியல் / சமூக அறிவியல்



✅ தகுதி மதிப்பெண்கள்


OC: 60% (90 மதிப்பெண்கள்)


BC/MBC/SC: 55% (82 மதிப்பெண்கள்)


ST: 40% (60 மதிப்பெண்கள்) – ஒருமுறை சலுகை



💰 கட்டணம்


OC/BC/MBC: ₹600 (ஒவ்வொரு தேர்வுக்கும்)


SC/ST/மாற்றுத்திறனாளி: ₹300 (ஒவ்வொரு தேர்வுக்கும்)



📌 குறிப்பு


ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பிக்கவும்.


TNTET சான்றிதழ் வாழ்நாள் செல்லுபடியாகும்.


தேர்ச்சி பெற்றால் தனி ஆட்சேர்ப்பு தேர்வில் பங்கேற்க வேண்டும்.



🔗 விண்ணப்பிக்க: www.trb.tn.gov.in


Flower Show : Lalbagh garden , Bangaluru


Flower Show : Lalbagh garden , Bangaluru 











கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட பள்ளி மாணவர்கள்


 கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட பள்ளி மாணவர்கள் 


வாணியம்பாடி அடுத்த சி.வி.பட்டறை பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சீருடையுடன் பள்ளி மாணவர்கள் கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்டதால் பரபரப்பு


 பள்ளி வகுப்பறையில் மழைநீர் ஒழுகுவதை சரி செய்த தூய்மை பணியாளருக்கு மாணவர்கள் உதவியதாகவும் , தகவல் அறிந்து மாணவர்களை உடனே வகுப்பறைக்கு அனுப்பி விட்டதாகவும் பள்ளி தலைமை ஆசிரியர் விளக்கம்


வாணியம்பாடி சி.வி.பட்டறை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் மேல்தளத்தில், கட்டட பணியில் பள்ளி மாணவர்கள் சீருடையுடன் ஈடுபடும் காட்சிகள் வைரல் ஆகி வருகின்றன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமையாசிரியை , வகுப்பறையில் மழைநீர் ஒழுகுவதால் அதனை சரிசெய்ய, தூய்மை பணியாளர்களுடன் மாணவர்களும் உதவினர் என்றும், தகவல் அறிந்து மாணவர்களை வகுப்புக்கு செல்லும்படி அறிவுறுத்தினோம் என்றும் கூறினார்.

Permission & NOC Application to write TET

 



ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதி & தடையின்மைச் சான்று கோரும் விண்ணப்பப் படிவம்


Permission & NOC Application to write TET


Application form for permission to write the Teacher Eligibility Test & No Objection Certificate



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Agaram அறக்கட்டளையில் Scholarship பெற விண்ணப்பிப்பது எப்படி?

 


நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?


Agaram அறக்கட்டளையில் Scholarship பெற விண்ணப்பிப்பது எப்படி?


கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா. பிரபலமான இந்த நடிகரின் சினிமா பிரபலத்துக்காக அல்ல; இவர் சமூகத்திற்குச் செய்யும் தன்னிகரில்லா சேவை தான் காரணம்.


இவரது தொண்டு நிறுவனமான அகரம் அறக்கட்டளை இதுவரை சுமார் 7000 மாணவர்கள் படிக்க வைத்துள்ளது. இந்த அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி என்று காணலாம்.


சூர்யாவின் ‘அகரம் அறக்கட்டளை’யில் கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி?


கலை மற்றும் அறிவியல் அல்லது டிப்ளமோ படிக்க, ஒரு மாணவருக்கு 3 ஆண்டுகளுக்கு ரூ 2.5 லட்சத்தையும், மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க 4 ஆண்டுகள் முதல் 5.5 ஆண்டுகள் வரை ரூ 4.50 லட்சத்தை அறக்கட்டளை ஏற்கிறது.


அகரம் அறக்கட்டளையில் சேர யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், அவர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.


தமிழ்நாட்டின் ஊரக பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிப்பவர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.


நடப்பு கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுபவராக இருத்தல் வேண்டும்.


தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.


கல்லூரியில் சேர அவர் முதல் பட்டதாரி மாணவராக இருக்க வேண்டியது அவசியம்.


பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி.


அகரம் ஊக்கத்தொகை பெற தேவையான ஆவணங்கள் :


ஆதார் கார்டு


நிரந்தரமான வீட்டு முகவரி சான்று


ரேஷன் அட்டை


ஜாதி சான்றிதழ்


வங்கிக் கணக்கு


10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்


வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பதற்கான சான்றிதழ்


விண்ணப்பிக்கும் முறை :


AGARAM Foundation Application Form



>>> Click Here to Download AGARAM Foundation Application Form



அகரம் அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.agaram.in/ க்கு சென்று அதில் தெரியும் விண்ணப்பத்தில் தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்கள், புகைப்படத்தை அப்லோடு செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.


திட்டத்தில் சேர விரும்பி விண்ணப்பிக்கும் ஒவ்வொரு மாணவரின் மதிப்பெண் பட்டியலும் பொருளாதார தேவையும் கருத்தில் கொண்டே தேர்வு செய்யப்படுவார்கள். மாணவர்கள் விண்ணப்பத்தில் கூறிய தகவல்கள் உண்மை தானா என்பதையும், நிதி நிலைமையையும் சோதனை செய்ய அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் மாணவர்களின் வீட்டுக்கே சென்று ஆராய்ந்து அதன் பின்னரே மாணர்வகள் தேர்வு செய்யப்படுவார்கள்.


Kalai Thiruvizha 2025-2026 : Colouring Pictures




 கலைத்திருவிழா 2025-2026 : பசுமையும் பாரம்பரியமும் : வண்ணம் தீட்டுதல் ஓவியங்கள்


Kalai Thiruvizha 2025-2026 : Pasumaiyum Parambariyamum : Colouring Pictures 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-08-2025

  


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-08-2025 : School Morning Prayer Activities


அனைவருக்கும் இனிய 79வது சுதந்திர தின வாழ்த்துகள் 



திருக்குறள்: 


குறள் 215: 


ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் 

பேரறி வாளன் திரு.     


விளக்கம்: 


பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.


பழமொழி :

Face fear with action. 


பயத்தை செயலால் எதிர்கொள்.


இரண்டொழுக்க பண்புகள் :


1.உண்மை பேசுவதே உயர்ந்த பண்பு.



2.எனவே எப்போதும் உண்மையை மட்டுமே பேசுவேன்.


பொன்மொழி :


என்ன நடந்தாலும் எதை இழந்தாலும் நான் சோர்ந்து போக மாட்டேன் ஏனென்றால் நான் 100 வெற்றிகளைப் பார்த்தவன் அல்ல . ஆயிரம் தோல்விகளை பார்த்தவன். 


- தாமஸ் ஆல்வா எடிசன்


பொது அறிவு : 


01."சுதந்திரம் எனது பிறப்புரிமை" என்று முழங்கியவர் யார்?



பால கங்காதர திலகர்

Bal Gangadhar Tilak


02."இந்தியாவின் கிராண்ட் ஓல்ட் மேன்" (Grand old man of India)என்று அழைக்கப்பட்டவர் யார்?


தாதாபாய் நௌரோஜி

Dadabai Naoroji

English words :


revival –the act of becoming or making something strong or popular again.புத்தெழுச்சி. மறக்கப்பட்ட ஒன்று மீண்டும் வலிமை பெறுதல்


Grammar Tips: 


Tips to write Your and You're without confusion 

Your vs. You're:

"Your" is possessive 

e.g., "your book" is on the table. "You're" is a contraction of "you are". 

Ex: I hope you're also coming to the independence day function 

அறிவியல் களஞ்சியம் :


 மூளையின் அடிப் பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி தான் உடல் வளர்ச்சியையும், பாலின தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு சிறு பட்டாணி அளவே உள்ள இது, உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது.


ஆகஸ்ட் 15


இந்திய விடுதலை நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.


இந்த நாளில் இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.


ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.

நீதிக்கதை


 உருவத்தை பார்த்து பழகாதே




ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. மீன் குஞ்சுகள் எப்பொழுதும் கரையோரம் கூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதில் சோமு சிண்டு என்ற மீன்கள் ஒரு நாள் விளையாடி கொண்டிருக்கும்போது ஏய் சிண்டு... என்னைப்பிடி பார்க்கலாம் என்றான். என்கிட்டேயே சவால் விடறியா இப்ப பாரு, ஒரு நொடியில் பிடிக்கறேன் என்று சொல்லி விளையாடி கொண்டிருந்தது.




அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்து ஏய் சோமு, அங்கே பார் அவன் எவ்வளவு கருப்பாக இருக்கிறான். அவன் குரலை நீ கேட்டிருக்கிறாயா? அருவருப்பாக இருக்கும். அவனை பார்த்தால் பயமாக இருக்கிறது வா போய்டலாம் என்று சிண்டு சொன்னதும், எல்லா மீன்களும் குளத்துக்குள் வேகமாகச் சென்றன. அவசர அவசரமாக மீன்கள் உள்ளே சென்றபோது, பசங்களா? ஏன் இப்படி ஓடி வர்றீங்க? என ஒரு பெரிய மீன் கேட்டது கரையில் காகம் இருக்கு. அதனோட நிறமும் குரலும் பயமா இருக்கு? அதான்...




ஓ....! காகமா, காகத்தினால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை. உருவத்தை மட்டுமே வைத்து ஒருவரைப் பற்றி தப்பாக நினைக்கக் கூடாது என்று, அந்த பெரிய மீன் சொல்ல, மற்ற மீன்குஞ்சுகள் இந்த தாத்தாவுக்கு வேற வேலை இல்லை. எப்பவும் உபதேசம் தான். வாங்க போகலாம். என கூறி சென்றது. அடுத்த நாள் வந்தது. குளத்தின் கரையில் கொக்கு ஒன்று அமர்ந்து இருந்தது. அதை பார்த்த மீன் குஞ்சுகள், ஏய் அங்கே பாரு வெள்ளையா... அட! என்ன பறவை அது? வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கு! அலகும் நீளமா இருக்கு. அடடே! அதனோட நடையைப் பாரேன். மீன் குஞ்சுகள் பேசும் சத்தம் கேட்டு குளத்தை நெருங்கியது கொக்கு.




உடனே மீன் குஞ்சுகள், அண்ணே! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க அலகைத் தொட்டுப் பார்க்கலாமா? கொக்குக்கு ஒரே கொண்டாட்டம். ஓ! தொட்டுப் பாரேன். ஒரு மீன் குஞ்சு கொக்கை நெருங்க, கொக்கு மீனை கவ்வியது. நல்லா மாட்டிக்கிட்டியா? என்றது. மாட்டிய மீன் ஆ! என்னை விட்டு விடு! என்று கெஞ்சியது. இதை பார்த்த மற்ற மீன் குஞ்சுகள் ஆபத்து... ஓடுங்க! ஓடுங்க! என்று குளத்திற்குள் சென்றன. அந்த கொக்கு கவ்விய மீனுடன் வானத்தில் சென்று மறைந்தது.




மற்ற மீன் குஞ்சுகள், அந்த தாத்தா மீன் சொன்னது சரியாப் போச்சு. அழகை மட்டும் பார்த்து ஒருத்தரோட பழகக்கூடாது. ஆமாம்! ஆமாம்! என்று உறுதியெடுத்து கொண்டன. அன்று முதல் மற்ற மீன் குஞ்சுகள் கவனமாக இருந்தன. சந்தோஷமாக வாழ்ந்தன.


இன்றைய செய்திகள்


15.08.2025


⭐ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு காரணமாக பயங்கர நிலச்சரிவு 12 பேர் உயிரிழப்பு


⭐ஜனாதிபதி திரவுபதி முர்மு செப்.3ல்

தமிழகம் வருகை: மத்திய பல்கலை விழாவில் பங்கேற்கிறார்


⭐உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புது தில்லியில் உள்ள செங்கோட்டை அருகே சுற்றித் திரிந்த 700 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளது.


⭐ தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள், பேனர்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀அமெரிக்காவின் பைன்ஹர்ஸ்டில் நடைபெற்ற மதிப்புமிக்க அமெரிக்க கிட்ஸ் உலக சாம்பியன்ஷிப்பில், பெங்களூருவைச் சேர்ந்த 9 வயது வேதிகா பன்சாலி, பெண்கள் 9 பிரிவில் வெற்றி பெற்று, முதல் இந்திய வீராங்கனையானார்.


Today's Headlines


*TODAY'S HEADLINES* 


⭐In Jammu and Kashmir, Massive landslide due to cloudburst and 12  people were died  


⭐President Draupadi Murmu to visit Tamil Nadu on September 3: Participates in Central University function .


⭐700 stray dogs have been caught near Red Fort in New Delhi as per the Supreme Court order.


⭐The Madurai bench of the High Court has ordered the removal of flexboards and banners placed in public places without permission across the Tamil Nadu.


 *SPORTS NEWS* 


🏀At the prestigious US Kids World Championships held in Pinehurst, USA, 9-year-old Vedika Bhansali from Bengaluru became the first Indian player to won the women's 9 category.


Covai women ICT_போதிமரம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


79th Independence Day Celebration - Intimation - DSE & DEE Proceedings



சுதந்திர தின விழா கொண்டாடுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



வழக்கமான நெறிமுறைகளைப் (Usual Norms) பின்பற்றி சுதந்திர தின விழாவினை கொண்டாட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு


79th Independence Day Celebration - Intimation - DSE & DEE Proceedings 


இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழாவினை 15.08.2025 ( வெள்ளிக்கிழமை ) அனைத்து வகைப் பள்ளிகளில் கொடி விதிமுறைகளின்படி ( As per Flag code ) சிறப்பாக கொண்டாட இயக்குநர் உத்தரவு.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-08-2025

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-08-2025 : School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாலையில் தேசியக் கொடியை இறக்க மறந்தாலும் இனி கவலைப்பட வேண்டாம்

  மாலையில் தேசியக் கொடியை இறக்க மறந்தாலும் இனி கவலைப்பட வேண்டாம் நண்பர்களே வணக்கம் 🙏 இன்று சுதந்திர தினம் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி...