கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>உணவு வீணாக்குவதை தடுக்க சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு பாடம்

உணவின் முக்கியத்துவத்தையும், அதன் மகத்துவத்தையும் விளக்கும் வகையில் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தர திட்டமிடப்பட்டுள்ளது.
பட்டினியால் வாடும் குழந்தைகள் பற்றி அரசு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேசிய அளவிலான ஆய்வில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 42 சதவிகிதம் பேர் எடைக் குறைவாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. மேலும், 5 வயதுக்கு கீழான 58% குழந்தைகள் சத்துக்குறைவுடன் காணப்படுவதாகவும் அதில் கண்டறியப்பட்டது.
இந்தப் புள்ளிவிவரங்களை சி.பி.எஸ்.இ மாணவர்களுக்குத் தெரிவிப்பதுடன், உணவை வீணடிப்பதை தடுக்கவும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ. இயக்குனர் (பயிற்சி மற்றும் கல்வி) சாதனா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மாணவர்களுக்கு உணவை வீணடிப்பதால் ஏற்படும் நஷ்டங்கள் பற்றியும், பள்ளிக்கு கொண்டு வரும் உணவு மீதமானால் அதனைத் தயக்கமின்றி திருப்பி எடுத்துச் செல்ல வலியுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-04-2025

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-04-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் இயல்:குடியியல் அதிகார...