கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மாணவர்களுக்கு செப்டம்பர் 21ல் திறனறிதல் தேர்வு

தனியார் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு, வரும் 21ம் தேதி திறனறிதல் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் ஆங்கில வழி கல்வி கற்பிக்கும் பள்ளிகளில், தற்போது அரசுப் பள்ளிகளைப் போல், 9, 10 வகுப்பு மாணவர்களுக்கும் திறனறிதல் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்வு கொள்குறி வகையில் (அப்ஜெக்டிவ் டைப்) இருக்கும்.
தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களில், ஆசிரியர்கள் நடத்திய பாடத்தில் இருந்து, மிகவும் அடிப்படையான கேள்விகள் இருக்கும். இம்மாதம் 21ம் தேதி தேர்வு நடக்கிறது. இதனடிப்படையில், கற்பித்தில் திறனை மேம்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

6-8ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்க "திறன்" எனும் புதிய திட்டம் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்க "திறன்" எனும் புதிய திட்டம் விரைவில் தொடங்கப்பட இருக்கிறோம் - பள்ளிக் ...