கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மனிதன் நுழைய முடியாத இடத்திலும் செயல்படும் ஆளில்லாத விமானம்

மேலூர் பகுதியில் குவாரிகள் முறைகேடு குறித்த ஆய்விற்கு, அண்ணா பல்கலை மாணவர்கள் உதவியுடன், கேமராவில் படம் பிடிக்கும் ஆளில்லாத விமானம் வரவழைக்கப்பட்டது. சென்னை அண்ணா பல்கலை பேராசிரியர் செந்தில்குமார் தலைமையில், 4 ஆராய்ச்சி மாணவர்கள் இதை உருவாகக்கியுளளனர்.
இந்த விமானம் குறித்து பேராசிரியர் செந்தில்குமார் கூறியதாவது: மனிதன் நுழைய முடியாத இடத்திற்குள், செயல்படும் ஆளில்லாத விமானத்தின் பெயர் "தக்ஷா'. முதல் முறையாக தற்போது தான், முழுமையாக செயல்படுத்தப்படுகிறது. 1.8 கி.கி., எடையுள்ள இதை, எளிதில் தூக்கி சென்று, பயன்படுத்த முடியும். இதில் கேமரா மற்றும் ஜி.பி.எஸ்., இணைக்கப்பட்டுள்ளது. ரிமோட் மூலம் இயக்கப்படும் இந்த விமானம், அனுப்பும் வீடியோ படத்தை லேப்-டாப்பில் பார்க்கலாம். 5 கி.மீ., சுற்றளவிற்கு பறக்கும் தக்ஷா, 1 கி.மீ., உயரம் பறக்கும் தன்மை கொண்டது. மணிக்கு 25 கி.மீ., வேகத்தில் பறக்கும்.

இந்த ஆள் இல்லா விமானம் 11/2 அடி உயரம், 2 அடி அகலத்தில் உள்ளது. மொத்த எடை 1.8 கிலோ. இதில் 4 இறக்கைகள் உள்ளன. இவற்றில் தலா 2 விசிறிகள் மூலம் மொத்தம் 8 விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. "ரேடரை' பொருத்தினால், பூமிக்கு கீழே பதுக்கப்பட்டுள்ளவை, கனிம வளங்கள் குறித்தும் அறியலாம். என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Advertisement for the self-enumeration census on Aavin milk packets

  ஆவின் பால் பாக்கெட்டுகளில் மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு விளம்பரம் Advertisement for the self-enumeration census on Aavin milk packets * சு...