கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பெற்றோர்களுக்கு...

 
* பிள்ளைகளை முடிந்தவரை அருகில் உள்ள பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டும். குடியிருப்புப் பகுதிகளில் நான்கு கி.மீ. சுற்றளவுக்குள் ஓர் அரசுப் பள்ளி இருக்க வேண்டும் என்பது விதி. அப்படி இருக்கவும் செய்கிறது. அந்தப் பள்ளியின் தரம் சரியில்லை எனில், அதற்காக நாம் போராட வேண்டுமே ஒழிய, அரசுப் பள்ளிகளைப் புறக்கணிப்பது தீர்வாகாது. ஏனெனில், அரசுப் பள்ளிகள் நம் வரிப் பணத்தில் இயங்குகின்றன. அருகில் உள்ள பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கும்போது இந்த விபத்து, ஆபத்துகளை எளிதாகத் தவிர்க்க முடியும். அத்துடன், உடல் சோர்வு, நச்சுக் காற்று மூலம் ஏற்படும் நோய்கள் போன்றவற்றில் இருந்தும் குழந்தைகளைப் பாதுகாக்கலாம்.

* தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகள் மட்டும் அல்லாது எந்த ஒரு பள்ளி வாகனமும் அதிவேகத்தோடு சென்றால், அந்த வாகனத்தின் பின்புறம் 'புகார் தெரிவிக்க’ என்று எழுதப்பட்டிருக்கும் எண்ணுக்குப் புகார் அளிக்கலாம்.

* ஒவ்வொரு பேருந்திலும் பின்புறம் பயணிகள் ஏறும் இடத்துக்கு அருகில் கடைசியாக எப்போது ஆய்வுக்குச் சென்றது என்ற விவரங்கள் எழுதப்பட்டு இருக்கும். அந்தத் தகவல்கள் மூலமும் அந்த வாகனத்தின் பராமரிப்பைப் பெற்றோரே உறுதி செய்துகொள்ளலாம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

15-04-2026 புதன்கிழமை அன்று தேர்தல் பயிற்சியிலிருந்து விலக்கு பெற்றவர்கள் மட்டும் பள்ளிக்கு சென்று பணியாற்றிட முதன்மைக் கல்வி அலுவலரின் தகவல்

  இரண்டாம் கட்ட தேர்தல் பணி பயிற்சி நடைபெறும் 15-04-2026 புதன்கிழமை அன்று தேர்தல் பயிற்சியிலிருந்து முறையாக விலக்கு பெற்றவர்கள் மட்டும் பள்ள...