கல்விக் கடன் கோரும் மாணவர்களின் விண்ணப்பங்களை, தொழில்நுட்ப
காரணங்களுக்காக நிராகரிக்க கூடாது என, வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி
அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, சர்வீஸ் ஏரியா எனப்படும் வங்கியின்
செயல்பாட்டு வரையறை எல்லைக்குள் வராத மாணவர்களுக்கு வங்கிக் கடன்
வழங்குவதில் தயக்கம் காட்டக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. கல்விக்கடன் கோரி, நாடு முழுவதும்
ஏராளமான மாணவர்கள், வங்கிகளில் விண்ணப்பிக்கின்றனர். சம்பந்தபட்ட
வங்கியின், "சர்வீஸ் ஏரியா"வுக்குள் வசிக்காத, மாணவர்களின்
விண்ணப்பங்கள், வங்கிகளால் நிராகரிக்கப்படுகின்றன. சில ஆண்டுகளாக, இதுபோல்,
ஏராளமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, புகார்கள்
குவிந்ததை அடுத்து, ரிசர்வ் வங்கி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், தொழில்நுட்ப காரணங்களை காட்டி, மாணவர்களின் கல்வி
கடன் விண்ணப்பங்களை நிராகரிக்க கூடாது. குறிப்பாக, சம்பந்தபட்ட வங்கிகளின்,
"சர்வீஸ் ஏரியா"வுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்காத மாணவர்களுக்கு,
வங்கிகளால், கல்வி கடன் மறுக்கப்படுவது, சரியான நடைமுறை அல்ல. வங்கிகளின்,"சர்வீஸ் ஏரியா"வுக்கு வெளியில் வசிக்கும்
மாணவர்களுக்கும், கல்விக்கடன் வழங்க வேண்டும். வங்கிகளை பொறுத்த வரை,
"சர்வீஸ் ஏரியா" என்பது, அரசு மேற்கொள்ளும் திட்டங்களுக்கு தான்
பொருந்தும்; மாணவர்களின் கல்வி கடன் விஷயத்தில், இந்த நடைமுறையை பின்பற்றக்
கூடாது. இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
4 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை ( 02.12.2025 ) விடுமுறை அறிவிப்பு
கனமழை - 4 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை ( 02.12.2025 ) விடுமுறை அறிவிப்பு கனமழை காரணமாக 💦💦💦💦💦💦💦 * காஞ்சிபுரம் * செங்கல்பட்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.