கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு D.A Hike

 

 மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு


Dearness allowance hike for central government employees


மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு D.A.Hike


ஊழியர்களுக்கு தற்போதைய அகவிலைப்படி 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக உயர்வு


- மத்திய அமைச்சரவை ஒப்புதல்



ஜாக்டோ ஜியோ போராட்டம் - தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்



தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


*✍️. தீர்மானம்.1*


இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்:


நாடு முழுவதும் உள்ள வக்பு சொத்துகளைப் பதிவு செய்து வெளிப்படை தன்மையுடன் நிர்வகிப்பது என்ற காரணத்தைக் கூறி. வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திடீரெனக் கொண்டு வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கூட்டுக் குழு ஆய்வுக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது. இக்குழுவில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை விட, ஆளும் கூட்டணி உறுப்பினர்களின் ஆதரவு பலமாக இருந்த காரணத்தினால் புதிய திருத்தங்களைக் கூட்டுக்குழு ஏற்றுக்கொண்டது.


இதையடுத்து, கூட்டுக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள், வக்பு சட்டத் திருத்த மசோதாவில் சேர்க்கப்பட்டன. இதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய நிபந்தனைகளை உருவாக்கி, இஸ்லாமிய மக்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையிலும், இதுவரை அவர்கள் பயன்படுத்தி வந்த உரிமைகளை நசுக்கும் வகையிலும் கொண்டு வரப்பட்ட வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு வலியுறுத்துகிறது


வக்பு சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில அரசுகள் சட்டசபைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன. இந்த விவகாரத்தில் மாநில அரசுகளின் கோரிக்கைகளையும் ஒன்றிய அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். வக்பு சட்டத் திருத்த மசோதா வழியாகச் சிறுபான்மை மக்களை அச்சத்தில் ஆழ்த்தக் கூடாது என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது


*✍️. தீர்மானம் 2.*


மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்


தமிழக மீனவர்களை எப்போதும் மதித்துப் போற்றும் இயக்கம், தமிழக வெற்றிக் கழகம். நம் வெற்றித் தலைவர் அவர்களும், தான் எப்போதும் மீனவர்களின் பக்கம் நிற்கும் மீனவ நண்பன் என்றே தன் செயல்பாடுகளால் நிரூபித்து வருகிறார். அந்த உணர்வுடன் மீனவர்களுக்காக எத்தகைய எல்லைக்கும் தமிழக வெற்றிக் கழகம் செல்லும் என்பதையும் இப்பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது.


கடந்த 40 ஆண்டுகளாக, இதுவரை 800க்கும் அதிகமான தமிழக மீனவர்கள். இலங்கைக் கடற்படையால் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளனர். இப்போது வரை அது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தற்போதும் கூட, தாங்கொணாக் கொடுமைக்கு ஆளாகி உள்ள நம் தமிழக மீனவர்கள் கண்ணீருடனும் கண்டனக் குரலுடனும் போராட்டக் களத்திற்கு வந்துள்ளனர். ஆனாலும் மீனவர்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்து நிறுத்தக்கூடிய நிரந்தரத் தீர்வு பற்றி. ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் இதுவரை யோசித்ததே இல்லை என்பது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது.


குஜராத் மற்றும் இதர மாநில மீனவர்களைப் போலவே, ஒன்றிய அரசின் பிரதமர். தமிழக மீனவர்களையும் சமமாகக் கருதித் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.


*✍️. தீர்மானம்-3.*


பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது:


காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில், புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துப் போராடும் பொதுமக்களையும் விவசாயப் பெருங்குடி மக்களையும் நம் தமிழக வெற்றிக் கழத்தின் வெற்றித் தலைவர் சந்தித்த மறுநாளே, மக்கள் பாதிக்காத வண்ணம் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் சார்பாக ஒரு விளக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.


அதில், மக்கள் பாதிக்காத வண்ணம் என்றால் எப்படி என்கிற விளக்கம் இல்லவே இல்லை. விவசாயிகள் நலனுக்கெனத் தனி பட்ஜெட் போடுகிறோம் என்று மார்தட்டும் வெற்று அரசு. 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று தெரிவித்திருப்பது முழுக்க முழுக்க மக்கள் நலன் மற்றும் விவசாயிகள் நலனுக்கு எதிரான துரோகச் செயலே ஆகும்.


மேலும் இது, சொல்வது ஒன்று. செய்வது ஒன்றாக இருக்கும் இந்த அரசின் இரட்டை வேடக் கபடதாரிப் போக்கையே காட்டுகிறது. தமிழக மக்கள் பக்கம் எப்போதும் நிற்கும் தமிழக வெற்றிக் கழகம், அரசின் இந்தக் கபட நாடகச் செயலை மிகக் கடுமையாக எதிர்க்கிறது. மேலும், புதிய விமான நிலையத்தை யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லாத வண்ணம், விவசாய நிலங்களை, நீர்நிலைகளை, இயற்கைச் சூழல்களை அழிக்காமல், வேறு இடத்தில்தான் அமைக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசையும் தமிழ்நாடு அரசையும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு வலியுறுத்துகிறது


*✍️. தீர்மானம்-4.*


இருமொழிக் கொள்கையில் உறுதி:


அனைத்து மொழிகளையும் மதிப்போம். தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும், எந்தப் பள்ளியிலும் படிக்கலாம், எந்த மொழியையும் கற்கலாம். அது அவரவரின் தனிப்பட்ட உரிமை என்பதில் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக உள்ளது. ஆனால், கூட்டாட்சி உரிமையை மீறி, மாநில சுயாட்சி உரிமைக்கு எதிராக ஒரு மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையைக் கேள்விக் குறியாக்கி, வேற்று மொழியை வலுக்கட்டாயமாக அரசியல் ரீதியாகத் திணிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. முரட்டுப் பிடிவாதத்துடன் மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயலும் ஒன்றிய அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், தமிழ்நாட்டுக்கு எப்போதும் இருமொழிக் கொள்கை தான் என்பதை இப்பொதுக்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது


*✍️. தீர்மானம் -5.*


நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை:


நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு செய்யும் போது வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயரும் என்றும், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை சரியும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, ஒன்றிய அரசின் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் சிறப்பாகக் கடைப்பிடித்ததற்கான தண்டனை என்றே தமிழக மக்கள் கருதுகிறார்கள்.


மாநிலங்களிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும் தொகுதி மறுசீரமைப்பு தேவையற்றது. இப்போது இருக்கும் தொகுதிகளான 543 என்ற எண்ணிக்கையே காலவரையின்றி தொடர வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும். எனவே தொகுதி மறுசீரமைப்பு முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.



*✍️. தீர்மானம் – 6.*


மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்:


ஒன்றியப் பிரதமர் அவர்கள் மாநில முதல்வராக இருந்த போது, மாநில வளர்ச்சிக் கூட்டத்தில் பங்கேற்று அந்த மாநில நலனுக்காகக் குரல் கொடுத்தார். ஆனால் தற்போது அவரே பிரதமராக இருக்கக் கூடிய ஒன்றிய அரசானது, பிற மாநிலங்களின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் பாராளுமன்றப் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டு, ஒன்றிய அரசின் அதிகாரத்தை மையப்படுத்தி, மாநில அரசின் அதிகாரத்தை மட்டுப்படுத்தி, மாநில சுயாட்சியை முடக்கும் வேலையைச் செய்து வருகிறது.


ஜி.எஸ்.டி. மூலம் நிதி அதிகாரத்தையும், நீட் மூலம் கல்வி அதிகாரத்தையும், மும்மொழித் திணிப்பின் மூலம் மொழி அதிகாரத்தையும், தொகுதி மறுசீரமைப்பு என்ற முறையில் மாநில அரசுகளிடையே பிளவினை ஏற்படுத்த முயல்வதையும், வேளாண் சட்டங்கள் மூலம் வேளாண் கொள்கைகளை மாநில அரசிடமிருந்து ஒன்றிய அரசு பறிப்பதையும் இப்பொதுக் குழு கண்டிக்கிறது. அதிகாரம் ஒன்றிய அரசிடம் குவியாமல், மாநில அரசுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.


*✍️. தீர்மானம் 7*


 பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை:


மாநில அரசுக்குச் சுமார் 50 ஆயிரம் கோடி வருமானம் வரும் டாஸ்மாக் நிறுவனத்தினாலும், கட்டற்ற போதைப் பொருட்களின் புழக்கத்தினாலும் தமிழகத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி வருகிறது. பள்ளிச் சிறார்களே போதைக்கு அடிமையாகி, வளரும் தலைமுறையே போதையால் சீரழிந்து வருகிறது. இந்தப் போதைப் பொருட்களால், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாள்தோறும் அதிகரித்த வண்ணமே உள்ளன.


மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்காமல், போதைப் பொருட்கள் தமிழகத்தில் சரளமாகப் புழங்கும் நிலையை உருவாக்கியுள்ள தி.மு.க. அரசை தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. பெண்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். அதில் முன்னாள் பெண் நீதிபதிகள் மற்றும் முன்னாள் காவல்துறை உயர் அதிகாரிகள் இடம்பெற வேண்டும். குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள். 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


தற்போதைய அரசு இதைச் செய்யத் தவறும் பட்சத்தில், இந்த அரசுக்குத் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் அமையும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தனித்துறை உருவாக்கப்படும் என இப்பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது


*✍️. தீர்மானம் 8.*


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்:


அரசு ஊழியர்கள். ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருடக்கணக்காகப் போராடி வருகின்றது. லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட இப்போராட்டத்தை இந்த வெற்று விளம்பர மாடல் அரசு கண்டுகொள்ளாமல், மறைமுகமாகப் பழிவாங்குவது போல் நடந்துகொள்கிறது. இது முழுக்க முழுக்க ஏமாற்று வேலையே ஆகும்.


தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று போலி வாக்குறுதி அளித்து, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அக்கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டு, மீண்டும் அவர்களைப் போராட்டக் களத்தில் தள்ளியதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம், தன் மனப்பூர்வமான ஆதரவை இப்பொதுக்குழு வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறது


*✍️. தீர்மானம் – 9*


 சட்டம் ஒழுங்கு சீர்கேடு அரசுக்குக் கண்டனம்:


கள்ளம் கபடமற்ற பச்சிளம் சிறுமிகள் முதல் பெண்கள் வரை யாருக்கும் பாதுகாப்பான சூழல் இல்லை. பள்ளிச் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை கொடூர வன்முறைச் செயல்களில் ஈடுபடும் கட்டுப்பாடற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. போதைப் பொருள் புழக்கம், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே தாராளமாகிவிட்டது. வேறு எப்போதும் இல்லாத வகையில் இத்தகைய கொடும் சூழல் மேலும் மேலும் பெருகி வருதலுக்குக் காரணம், சட்டம் ஒழுங்கு சீர்கேடே அன்றி வேறில்லை.


இந்தச் சீர்கேட்டிற்கு ஒரே காரணம், கையாலாகாத தற்போதைய ஆளும் அரசு மட்டுமே. ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆகியும் சட்டம் ஒழுங்கைச் சீர்ப்படுத்த இயலாத அரசு, தன் பொறுப்பற்ற தன்மையை ஒப்புக்கொண்டு, மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். மேலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு வலியுறுத்துகிறது.


*✍️. தீர்மானம் -10*


டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை வேண்டும்:


ஒன்றிய அரசின்கீழ் இயங்கும் அமலாக்கத் துறை, டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்கள் / நபர்கள் சார்ந்த இடங்களில் நடத்திய சோதனையில், பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் கணக்கில் வராத. சட்டத்திற்குப் புறம்பான முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.


ஒன்றிய பா.ஜ.க. அரசும் தமிழ்நாட்டின் அரசும் மறைமுக உறவுக்காரர்கள் என்பதால் இந்த விவகாரத்தில் முறையான, நியாயமான விசாரணை நடக்குமா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. டாஸ்மாக் நிறுவனம் மீது தொடர்ச்சியாக எழுந்துவரும் முறைகேடுகள் மூடி மறைக்கப்பட்டே வருகின்றன. டாஸ்மாக் மட்டுமின்றி, அனைத்து அரசுத் துறைகளிலும் வெளிப்படைத்தன்மை இல்லாது, ஊழலை ஊக்குவிக்கும் வகையிலான அதிகார மையமாகவே அரசு இயந்திரம் செயல்பட்டு வருகிறது.


ஆகவே. டாஸ்மாக் முறைகேடு குறித்து, முறையான விசாரணை நடத்தி. உண்மையை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி. பாரபட்சமின்றித் தண்டிக்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது


*✍️. தீர்மானம் – 11.*


சமூக நீதியை நிலைநிறுத்த, சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும்:


அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க ஒரே வழியான, உண்மையான சம நீதி. சமத்துவ நீதி, சமூக நீதியை வழங்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு முன்னோட்டமாக, அதற்கான ஆய்வைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசைச் சார்ந்து இருக்காமல், தெலங்கானா போன்ற மாநிலங்களில் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வை அந்தந்த மாநில அரசுகளே தங்களது சொந்தச் செலவில் நடத்தியுள்ளன.


சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல், சமூக நீதி, இடஒதுக்கீடு என்று ஆளும் திமுகவினரும், பாஜகவினரும் மேடைக்கு மேடை பேசி, மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்த விவகாரத்தில் கபட நாடகமாடுவதை நிறுத்திவிட்டு, சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்தும் பணிகளைத் தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.


*✍️. தீர்மானம் 12.*


இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குப் பொது வாக்கெடுப்பே ஒரே தீர்வு:


நம்முடைய தொப்புள்கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள். இதுவரை சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். சொந்த நாட்டிலேயே அடிமைகள் போலச் சுதந்திரம் அற்றவர்களாக இருக்க வேண்டிய நிலைமை. அவர்களுக்குக் காலங்காலமாக இருந்து வருகிறது.


எனவே, இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாகத் தங்கள் நாட்டிலேயே வாழ்வதற்கும். அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்கும் நிரந்தரத் தீர்வு காண, ஐ.நா. சபை மூலம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உலக சமுதாயத்திற்கு இப்பொதுக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.


பொது வாக்கெடுப்பு மட்டுமே இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றக்கூடிய ஒரே வழி என்பதை மீண்டும் மீண்டும் தமிழக வெற்றிக் கழகம் தீர்க்கமாக நம்புகிறது. மேலும், இப்பொது வாக்கெடுப்பை, இந்திய ஒன்றிய அரசும் வலியுறுத்தி, இலங்கைத் தமிழர்கள் பக்கம் நிற்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை என்பதையும். தனது ஏப்ரல் மாத இலங்கைப் பயணத்தின்போது இது குறித்தும் இலங்கை அரசிடம் ஒன்றியப் பிரதமர் உறுதியுடன் வலியுறுத்த வேண்டும் என்பதையும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது


*✍️. தீர்மானம்-13.*


பன்னாட்டு அரங்கிற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டுக:


சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையில், முட்டுக்காடு பகுதியில், தமிழக அரசால் பெரும் பொருட்செலவில், உலகத்தர வசதிகளுடன் அமைக்கப்பட உள்ள பன்னாட்டு அரங்கத்திற்குத் தந்தை பெரியார் அவர்களின் பெயரைச் சூட்டிப் பெருமை சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


*✍️ தீர்மானம் -14*


 கொள்கைத் தலைவர்களின் வழியில் பயணிப்போம்:


தமிழக வெற்றிக் கழகத்தின் ஐம்பெரும் கொள்கைத் தலைவர்கள் தந்தை பெரியார். அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வீரமங்கை வேலு நாச்சியார். மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோர் காட்டிய கொள்கை வழியில் சமரசமின்றி மக்கள் பணியில் ஈடுபடுவதே முக்கியக் கடமையாகும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது


*✍️. தீர்மானம் -15.*


தலைவருக்கே முழு அதிகாரம்:


தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களின் பேராதரவையும், பேரன்பையும் பெற்றுள்ள நம் கழகத் தலைவர் அவர்கள், தன்னுடைய மக்கள் சந்திப்பு மாநாடுகள், பொதுக்கூட்டங்கள். சுற்றுப்பயணங்கள் மற்றும் தேர்தல் சார்ந்த முடிவுகள் எடுக்கும், பரிபூரண அதிகாரத்தையும் உரிமையையும் நம் கழகத் தலைவர் அவர்களுக்கு அளிப்பது என இப்பொதுக்குழு முழு மனதுடன் முடிவெடுக்கிறது


*✍️. தீர்மானம்-16.*


கழகப் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்:

நம் கழகத் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர். கொள்கைப் பரப்புச் செயலாளர், செய்தித் தொடர்பாளர்கள், சமூக ஊடகப் பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள். கழக விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கழக விதிகளின்படி கழகத் தலைவர் அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் என அனைத்து நிர்வாகிகளுக்கும் இப்பொதுக்குழு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது


*✍️. தீர்மானம் 17.*


கழகத்திற்காக அயராது பாடுபட்டு மறைந்த கழகச் செயல்வீரர்களுக்கு இரங்கல்:


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மீதும், கழகத்தின் மீதும் அளவற்ற அன்பு கொண்டிருந்த, கழகச் செயல்வீரர்கள். திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. சஜி (எ) B.அந்தோணி சேவியர் மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மதுரை மாநகர் தெற்கு மாவட்ட மாணவரணித் தலைவர் திரு. U.P.M.ஆனந்த் ஆகியோரின் மறைவுக்கு இப்பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.


1- 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு? - பள்ளிக்கல்வி அமைச்சர் பதில்



 1- 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு? - பள்ளிக்கல்வி அமைச்சர் பதில்


1- 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?


"வெயில் அதிகமாக உள்ள காரணத்தால் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்த பரிசீலனை"


மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்

- பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்



JACTTO GEO மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் அறிவிப்பு

 

ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் அறிவிப்பு


JACTTO GEO State Coordinators Meeting Announcement


ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம், 08.04.2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், சென்னை திருவல்லிக்கேணி கட்டிடத்தில் நடைபெற உள்ளது - ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் (சீனிவாசன்)



இனி ஆசிரியர்களை நியமிக்கப் போவதில்லை என தமிழ்நாடு அரசு தீர்மானித்து விட்டதா?

 

ஆசிரியர் தகுதித்தேர்வு இல்லை - இனி ஆசிரியர்களை நியமிக்கப் போவதில்லை  என தமிழ்நாடு அரசு தீர்மானித்து விட்டதா?  - மருத்துவர் இராமதாசு அவர்கள் அறிக்கை 


2025ஆம் ஆண்டு நடத்தப்படவிருக்கும் போட்டித்தேர்வுகள் மற்றும் தகுதித்தேர்வுகளின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கிறது. திசம்பர் மாத இறுதியிலேயே வெளியிடப்பட்டிருக்க வேண்டிய ஆண்டுத் திட்டத்தை 3 மாதங்கள் தாமதமாக இப்போது தான் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கிறது என்றாலும் கூட, அது ஆசிரியர் பணிக்காக காத்திருப்போரை ஏமாற்றியிருக்கிறது என்பது தான் உண்மையாகும்.


தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் குறித்த விவரங்கள் அதற்கு முந்தைய ஆண்டின் இறுதியில் வெளியிடப்படுவது வழக்கம். நடப்பாண்டில் என்னென்ன பணிக்கு எவ்வளவு பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர் என்பது குறித்த விவரங்களை ஆசிரியர்  தேர்வு வாரியம் வெளியிடாததை குறை கூறி, கடந்த 5ஆம் தேதி நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து தான் ஆண்டுத் திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டிருக்கிறது.


2025ஆம் ஆண்டில் மொத்தம் 9 வகையான தேர்வுகளை நடத்தப்போவதாக ஆசிரியர் தேர்வு வாரியம்  வெளியிட்டுள்ளது. அவற்றில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட 3 தேர்வுகள் கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டிருந்தவை. அவற்றில் இரு போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்ப நடைமுறைகளும் தொடங்கி விட்டன. கல்லூரி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு அறிவிக்கை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தாலும், அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகள் அண்ணா பல்கலைக்கழகத்தாலும் ஏற்கனவே அறிவிக்கை  செய்யப்பட்டவை.


1915 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 1205 பட்டதாரி ஆசிரியர்கள், 51 வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆகிய 3 வகை பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் மட்டும் தான் புதிதாக அறிவிக்கப்பட்டவையாகும். 2023ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் நாள் அறிவிக்கை செய்யப்பட்ட 3192 பட்டதாரி ஆசிரியர்களையும், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கை செய்யப்பட்ட 2768 இடைநிலை ஆசிரியர்களையும்  தேர்வு செய்யும் பணிகள் ஒன்றரை ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவடையவில்லை. இத்தகைய சூழலில்  புதிய ஆள்தேர்வு அறிவிப்புகள் திட்டமிட்டபடி செயல்வடிவம் பெறுமா? என்பதே பெரும் வினா தான்.


ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து அனைவரும் எதிர்பார்த்தது ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கையைத் தான். தமிழ்நாட்டில் கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டு அந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பின் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டு, 2024 மார்ச் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன்படி நடக்கவில்லை. அதன்பின், கடந்த ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதுவும் நடக்கவில்லை. 2025ஆம் ஆண்டிலாவது தகுதித் தேர்வுகள் அறிவிக்கப்படும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களின் நம்பிக்கை சிதைக்கப்பட்டுள்ளது.


2022-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரை 3 ஆண்டுகளில் லட்சக்கணக்கான பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகள் ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி பெற்று வெளிவந்துள்ளனர்.  ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாததால் அவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற முடியவில்லை. அடுத்த சில மாதங்களில் நடப்பாண்டிற்கான தேர்வுகள் முடிவடைந்து லட்சக்கணக்கான மாணவர்கள்  ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதியைப் பெற்றிருப்பார்கள். அவர்களும் தகுதித்தேர்வில் பங்கேற்கும் வகையில் ஜூன் மாதத்தில் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், அதை தேர்வு வாரியம் செய்யவில்லை.


மத்திய அரசின் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட வேண்டும். ஆசிரியர் படிப்பு படித்து முடிக்கும் மாணவர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணியில் உடனடியாக சேர வேண்டும் என்பதற்காகவே இந்த விதி கொண்டு வரப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கூட ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுவதில்லை. ஆசிரியர் பணியில் சேர விரும்பும் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகள் நலனில் தமிழக அரசு காட்டும் அக்கறை அவ்வளவு தான். இது அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும்.


தமிழ்நாட்டில் கடந்த 12 ஆண்டுகளில் ஒரே ஒரு இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கூட நியமிக்கப்படவில்லை. கடந்த ஆண்டில் நடத்தப்பட்டத் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் இன்னும் பணி வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் இனியும் ஆசிரியர்களை நியமிக்கப் போவதில்லை என்பதால் எதற்காக தகுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என நினைத்து விட்டதால் தான் நான்காவது ஆண்டாக நடப்பாண்டிலும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளை திமுக அரசு நடத்தவில்லையோ? என எண்ணத் தோன்றுகிறது.


கடந்த காலங்களில் இல்லாத வகையில் நடப்பு ஆட்சிக்காலத்தில் தான் கல்வித்துறை மிகவும் மோசமான சீரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆசிரியர்களையே நியமிக்காமல் அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்? எனத் தெரியவில்லை. தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக அரசு பள்ளிகளை சீரழிக்கும் போக்கைக் கைவிட்டு அரசு பள்ளிகளுக்கு போதிய அளவில்  ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; ஆண்டுக்கு இருமுறை தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.


பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள்


ஆசிரியர்கள் பணி நிரந்தரம் - கோரிக்கை நிராகரிப்பு

 



பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் - கோரிக்கை நிராகரிப்பு


Permanent employment of part-time teachers - request rejected


தமிழ்நாட்டில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தர கோரிக்கை நிராகரிப்பு 


முதல்வர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பிய நிலையில் அரசு சார்பில் குறுஞ்செய்தி மூலம் பதில்


அரசு பள்ளிகளில் 14 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்களை, காலமுறை ஊதியத்தின் கீழ் பணி நியமனம் செய்ய முடியாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


"பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை நிராகரிப்பு - ஏமாற்றம்". "பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது". கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு. பணி நிரந்தரம்  தொடர்பாக முதல்வர் அலுவலகம், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை கடிதங்களை அனுப்பி இருந்தனர் பகுதி நேர ஆசிரியர்கள். கோரிக்கை கடிதங்களை அனுப்பியவர்களுக்கு தமிழ்நாடு அரசு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பிய அதிர்ச்சி தகவல் "பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக குறுஞ்செய்தியில் அறிவிப்பு". 12000 பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சி.



அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் & ஓய்வூதியர்களுக்கு மார்ச் மாத ஊதியம் வரவு வைக்கப்படும் தேதி அறிவிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு



 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மார்ச் மாத ஊதியம் - ஏப்ரல் 2ஆம் தேதி வரவு வைக்கப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு


March salary for government employees, teachers and pensioners - will be credited on April 2nd - Tamil Nadu Government Press Release





Salary and pension / family pension for approximately 9.30 lakh Tamil Nadu Government Employees / Teachers and 7.05 lakh pensioners / family pensioners for the month of March 2025 will be credited to their bank accounts on April 2, 2025, since April 1 is a holiday for Banks in view of Annual Accounts Closing.


ஏப்ரல் 1 ஆம் தேதி வருடாந்திர கணக்குகள் முடிவடைவதைக் கருத்தில் கொண்டு வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், மார்ச் 2025 ஆம் ஆண்டிற்கான சுமார் 9.30 லட்சம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் மற்றும் 7.05 லட்சம் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் ஏப்ரல் 2, 2025 அன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.






தேர்வு வினாத்தாள் கசிந்தால் ஒழுங்கு நடவடிக்கை - கல்வித்துறை எச்சரிக்கை

 

 

 ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள் கசிந்தால் ஒழுங்கு நடவடிக்கை - கல்வித்துறை எச்சரிக்கை


Disciplinary action will be taken if the annual exam question paper is leaked - Education Department warns


ஆண்டு இறுதித்தேர்வின்போது வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தால் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்கள் உட்பட்டோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடக்கக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: 

தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 8 முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது.


இதற்கிடையே நடப்பு கல்வியாண்டில் (2024-25) கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற 2-ம் பருவத் தேர்வின்போது சில மாவட்டங்களில் வினாத்தாள்கள் தேர்வு நடைபெறுவதற்கு முன்பாகவே விடைக் குறிப்புகளுடன் சமூக ஊடகங்களில் ஆசிரியர்களின் வழியாக பொது வெளியில் பரவியது கண்டறியப்பட்டு அவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


இதையடுத்து ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆண்டு இறுதி தேர்வுகளின் போது தேர்வுக்குரிய வினாத்தாள்களை எமிஸ் தளத்தில் பதிவிறக்கம் செய்து பிரதிகள் எடுக்கும்போதும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பாக வெளியாகாதபடி முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.


அதேநேரம் வரும் காலங்களில் வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்தால் வெளியிடப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர், பிற ஆசிரியர்கள் அந்த ஒன்றியத்தின் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே தேர்வுப் பணிகளில் சுணக்கம் இன்றி கவனமாக செயல்பட வேண்டும். மேலும், ஆண்டு இறுதித் தேர்வை எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காதவாறு முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு அறையில் 6 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஆசிரியர் கைது

 

 

தேர்வு அறையில் 6 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஆசிரியர் கைது


Teacher arrested for sexually assaulting 6 students in exam room


திருப்பூரில் பிளஸ் 2 பொதுத்தேர்வு அறையில் பிட் சோதனை என்ற பெயரில், 6 மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தனியார் பள்ளி ஆசிரியரான சம்பத் குமார் என்பவர் POCSO சட்டத்தில் கைது


மாணவிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதை அடுத்து, ஆசிரியர் சம்பத் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்


ஜூன் மாதம் முதல் அறிமுகம் - யுபிஐ, ஏடிஎம் மூலம் பிஎப் பணம் எடுக்கலாம் - ஒரே நேரத்தில் ரூ.1 லட்சம் வரை எடுக்க அனுமதி



ஜூன் மாதம் முதல் அறிமுகம் - யுபிஐ, ஏடிஎம் மூலம் பிஎப் பணம் எடுக்கலாம் - ஒரே நேரத்தில் ரூ.1 லட்சம் வரை எடுக்க அனுமதி


UPI - EPFO - ATM - PF


ஜூன் மாதம் முதல் யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் பிஎப் பணத்தை எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தொழிலாளர்கள் நலனுக்காக இபிஎப்ஓ 3.0 என்ற புதிய வரைவு கொள்கை வரையறுக்கப்பட்டு உள்ளது. இந்த வரைவு கொள்கை வரும் ஜூன் மாதம் அமலுக்கு வருகிறது. தற்போது பிஎப் பணத்தை எடுக்கும் நடைமுறை மிகவும் கடினமாக இருப்பதாக பலரும் புகார் தெரிவித்துள்ளதால், வங்கிகளை போன்று ஏடிஎம் மையங்களில் பிஎப் பணத்தை எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.


மேலும் யுபிஐ மூலமும் பிஎப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். யுபிஐ அல்லது ஏடிஎம் மூலம் ஒரே நேரத்தில் ரூ.1லட்சம் வரை பிஎப் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியும். இந்த பணப்பரிமாற்றங்களுக்கு தங்களுக்கு விருப்பமான வங்கிக் கணக்கைத் தேர்வுசெய்யவும் முடியும்.தற்போது வீடுகட்ட, கல்வி மற்றும் திருமணம், உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களை தெரிவித்து மட்டுமே பிஎப் பணத்தை எடுக்க முடியும். இனி வரும் காலங்களில் காரணங்கள் தெரிவிப்பது எளிதாக்கப்படும். இந்த தகவலை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் சுமிதா தாவ்ரா தெரிவித்தார். அவர் கூறுகையில்,’ இந்த ஆண்டு மே அல்லது ஜூன் இறுதிக்குள் பிஎப் உறுப்பினர்கள் விரைவில் யுபிஐ மற்றும் எடிஎம் மூலம் பணத்தை எடுக்க முடியும்’ என்று தெரிவித்தார்.


புதிய பேருந்து நிலையங்கள் அமையவுள்ள இடங்கள் - நகராட்சி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள்

 


புதிய பேருந்து நிலையங்கள் அமையவுள்ள இடங்கள் உட்பட சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள்


Municipal Administration Department grant request announcements in the Legislative Assembly, including  new bus stands


▪️ புதிய பேருந்து நிலையங்கள்:


கும்பகோணம், அம்பாசமுத்திரம், ஆம்பூர், கள்ளக்குறிச்சி, சாத்தூர், செங்கல்பட்டு, திருக்கோவிலூர், திருச்செந்தூர்


▪️ பேருந்து நிலையங்கள் மேம்பாடு:


கடலூர், தஞ்சாவூர், ஆரணி, உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம், காரமடை, கிருஷ்ணகிரி, குடியாத்தம், கொமாரபாளையம், கோவில்பட்டி, திருவாரூர், துறையூர், தேனி, அல்லிநகரம், பட்டுக்கோட்டை, பல்லடம், பொன்னேரி, முசிறி, விருதுநகர்


▪️ புதிய சந்தைகள்:


தூத்துக்குடி, புதுக்கோட்டை, ஆத்தூர், திருத்துறைப்பூண்டி, தேவகோட்டை, புஞ்சைப் புளியம்பட்டி, பெரியகுளம், திருவாரூர்


▪️ சந்தைகள் புதுப்பித்தல்:


திருச்சி, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், முசிறி, மேட்டூர், கோபி, வாலாஜாப்பேட்டை


▪️ வால்பாறையில் பல்லடுக்கு வாகன நிறுத்தம் மற்றும் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும்


▪️ புதிய நவீன இறைச்சிக்கூடங்கள்:


கடலூர், இராமநாதபுரம், காயல்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவத்திபுரம், பரமக்குடி, விழுப்புரம்


▪️ புதிய நவீன எரிவாயு தகன மேடைகள்:


கடலூர், ஓசூர், தூத்துக்குடி, தாம்பரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், உதகை, மறைமலைநகர், பெரம்பலூர், அரியலூர், திருவத்திபுரம்


▪️ புதிய பாதாள சாக்கடை வசதி:


தென்காசி, இராணிப்பேட்டை


தமிழ்நாட்டில் மே மாதம் உள்ளாட்சி இடைத்தேர்தல்


 தமிழ்நாட்டில் வரும் மே மாதம் உள்ளாட்சி இடைத்தேர்தல்


Local Body by-elections in Tamil Nadu in May


மே மாதம் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடத்த திட்டம்


தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களில் 133 காலி பதவிகள் உள்ளன


நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம், 2027 வரை இருக்கிறது. அதனால், நகர்ப்புற உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தி, நிரப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


இந்தநிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 315 இடங்களுக்கு மே மாதம் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஊரக, நகர்புற உள்ளாட்சி இடைத்தேர்தல் ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. சென்னை மாநகராட்சியில் 4 வார்டு கவுன்சிலர் உள்பட 35 மாவட்டங்களில் 133 காலி பதவிகள் உள்ளன.


தமிழ்நாட்டில் ஏப்ரல் 1 முதல் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு


 தமிழ்நாட்டில் ஏப்ரல் 1 முதல் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது


ரூ.5 முதல் ரூ.25 வரை கட்டணம் உயர்கிறது - தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்


எஞ்சி உள்ள 38 சுங்கச்சாவடிகளில் 2ம் கட்டமாக செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்த்தப்படும் எனத் தகவல்


தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளன


கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 சுங்கச்சாவடிகள் புதிதாக திறக்கப்பட்டன


சனிப்பெயர்ச்சி நிகழ்வு - திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் நிர்வாகம் விளக்கம்



 சனிப்பெயர்ச்சி நிகழ்வு - திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் நிர்வாகம் விளக்கம்


Saturn Transition - Shani Peyarchi Event - Thirunallar Saneeswarar Temple Administration Explains



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


நடிகர் மனோஜ் பாரதிராஜா இயற்கை எய்தினார்



 நடிகர் மனோஜ் பாரதிராஜா இயற்கை எய்தினார்


பாரதிராஜாவின் மகனும், நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக காலமானார்.


தாஜ்மஹால், சமுத்திரம், கடல் பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் ஆகியப் படங்களில் நடித்து பிரபலமானவர், நடிகர் மனோஜ் பாரதிராஜா. இயக்குநர் பாரதிராஜாவின் ஒரே மகன். தேனி மாவட்டம், கம்பத்தில் 1976ஆம் ஆண்டு, செப்டம்பர் 11ஆம் தேதி பிறந்த மனோஜ், திரைத்துறையில் நடிப்பதில் மட்டுமின்றி, இயக்குநர்களான மணிரத்னம், ஷங்கர், தனது தந்தை பாரதிராஜா ஆகியோரிடம் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தவர்.


இவர் இயக்குநர் பாரதிராஜாவின் மகன் ஆவார். அந்த வகையில், பாரதிராஜா தான் இயக்கிய 'தாஜ்மஹால்' திரைப்படத்தின் மூலம் மனோஜை கதாநாயகனாக அறிமுகம் செய்தார். தொடர்ந்து, சமுத்திரம், மாநாடு, அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈஸ்வரன், மாநாடு, விருமன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்தாண்டு இவர் இயக்கிய முதல் திரைப்படமான 'மார்கழி திங்கள்' வெளியானது. 


இவர் ஈரநிலம் என்ற படத்தில் நடித்தபோது அதில் கதாநாயகியாக நடித்து நடிகை நந்திதா உடன் காதல் ஏற்பட்டது. மனோஜ் - நந்திதா ஜோடிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.


ஒரு மாதத்திற்கு முன்பு, சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் மனோஜ் பாரதிராஜாவிற்கு ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதன் பிறகு, வீட்டில் இருந்தவாறு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இரண்டு, மூன்று தினங்களாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என கூறப்படுகிறது. 



நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு


 நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவன்


கள்ளக்குறிச்சி அருகே 23-03-2025 அன்று விடுமுறை தினத்தை ஒட்டி நண்பர்களுடன் அணைக்கட்டு பகுதியில் குளிக்கச் சென்ற 11ம் வகுப்பு மாணவன் புகழேந்தி நீரில் மூழ்கி உயிரிழப்பு.


இந்த சம்பவம் தொடர்பாக கச்சிராயப்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மத்திய பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு (CUET-UG) விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

மத்திய பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு (CUET-UG) விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு


 மத்திய பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு (CUET-UG) விண்ணப்ப காலக்கெடு மார்ச் 24 வரை நீட்டிப்பு - தேசிய தேர்வு முகமை



IOC முதல் பெண் தலைவர் தேர்வு

 



சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முதல் பெண் தலைவர் தேர்வு


IOC (International Olympic Committee) முதல் பெண் தலைவர் 



கிறிஸ்டி கோவென்ட்ரி யார்? முதல் பெண், இளைய, ஆப்பிரிக்க ஐஓசி தலைவர்


97 வாக்குகளில் 49 வாக்குகளைப் பெற்று, கிறிஸ்டி கோவென்ட்ரி ஸ்பானிஷ் ஐஓசி துணைத் தலைவர் ஜுவான் அன்டோனியோ சமரஞ்ச் ஜூனியர் மற்றும் உலக தடகளத் தலைவர் செபாஸ்டியன் கோ ஆகியோரை எதிர்த்து தீர்க்கமான வெற்றியைப் பெற்றார்


ஜிம்பாப்வேயின் முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் சாம்பியனான கிறிஸ்டி கோவென்ட்ரி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (IOC) முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . 41 வயதில், உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க விளையாட்டு அமைப்பின் 130 ஆண்டுகால வரலாற்றில் இளைய தலைவராகவும் ஆனார்.  

 

மிகவும் திறமையான ஒலிம்பியன், கோவென்ட்ரி பல ஒலிம்பிக் போட்டிகளில் ஜிம்பாப்வேயைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார், தற்போது நாட்டின் இளைஞர், கலை மற்றும் பொழுதுபோக்கு அமைச்சராக பணியாற்றுகிறார். அரசியல் விஷயங்களில் தனது உறுதியான நிலைப்பாட்டிற்காக அறியப்பட்ட அவர், இப்போது ஐஓசியை வழிநடத்தும் முதல் ஆப்பிரிக்கர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் என்று அசோசியேட்டட் பிரஸ் அறிக்கை தெரிவிக்கிறது .

 

"இது ஒரு அசாதாரண தருணம். ஒன்பது வயது சிறுமியாக, எங்களுடைய இந்த நம்பமுடியாத இயக்கத்திற்கு நான் ஒரு நாள் இங்கு எழுந்து நின்று பதிலடி கொடுப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை," என்று கோவென்ட்ரி தனது ஏற்பு உரையின் போது சிரித்துக் கொண்டே, வெளியேறும் ஜனாதிபதி தாமஸ் பாக் தனது பெயரைக் கொண்ட ஒரு ஆவணத்தை வெளியிட்டார்.  


"இந்த வாக்கெடுப்பு பலருக்கு ஒரு உத்வேகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இன்று கண்ணாடி கூரைகள் உடைந்துவிட்டன, ஒரு முன்மாதிரியாக எனது பொறுப்புகளை நான் முழுமையாக அறிவேன்," என்று அவர் கூறினார்.  

 

97 வாக்குகளில் 49 வாக்குகளைப் பெற்று, கோவென்ட்ரி, ஸ்பானிஷ் ஐஓசி துணைத் தலைவர் ஜுவான் அன்டோனியோ சமரஞ்ச் ஜூனியர் (28 வாக்குகள்) மற்றும் உலக தடகளத் தலைவர் செபாஸ்டியன் கோ (எட்டு வாக்குகள்) ஆகியோரை எதிர்த்து ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெற்றார், இருவரும் இந்தப் பதவிக்கான வலுவான போட்டியாளர்களாக இருந்தனர்.  

அவர் 10வது ஐஓசி தலைவராகப் பணியாற்றுவார், அவரது எட்டு ஆண்டு பதவிக்காலம் 2033 வரை நீட்டிக்கப்படும். அவரது பதவிக்காலத்தில் ஒரு முக்கிய சவால் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிற்கான தயாரிப்புகளை மேற்பார்வையிடுவதாகும்.


கிர்ஸ்டி கோவென்ட்ரி யார்?

முன்னாள் நீச்சல் வீராங்கனையான கோவென்ட்ரி, ஜிம்பாப்வேயின் மிகவும் அலங்கரிக்கப்பட்ட ஒலிம்பியன் ஆவார். அவர் மார்ச் 20 அன்று ஐஓசியின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் தாமஸ் பாக்க்குப் பிறகு ஜூன் 2025 இல் அதிகாரப்பூர்வமாக பதவியேற்பார்.  

 

இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி மற்றும் முதல் ஆப்பிரிக்கர் என்ற பெருமையைப் பெற்றிருப்பதால், அவரது தேர்தல் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் குறிக்கிறது. ஜிம்பாப்வேயில் தனது அரசாங்கப் பொறுப்பிலிருந்து விலகி, ஐஓசி தலைமையகம் அமைந்துள்ள சுவிட்சர்லாந்தின் லொசானுக்கு இடம்பெயரப் போவதாக கோவென்ட்ரி அறிவித்துள்ளார்.  

 

தனது தடகள வாழ்க்கையில், கோவென்ட்ரி 2004 மற்றும் 2008 விளையாட்டுகளில் 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக்கில் தொடர்ச்சியான ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களைப் பெற்றார். அவர் கடைசியாக 2016 ரியோ ஒலிம்பிக்கில் போட்டியிட்டார், அங்கு அவர் தனது ஒலிம்பிக் பயணத்தை மொத்தம் ஏழு பதக்கங்களுடன் முடித்தார் - வேறு எந்த ஆப்பிரிக்க தடகள வீரரை விடவும் அதிகம்.  


ஐஓசி உடனான அவரது தொடர்பு 2013 ஆம் ஆண்டு தடகள ஆணையத்தின் ஒரு பகுதியாகத் தொடங்கியது. 2012 முதல் 2021 வரை உலக ஊக்கமருந்து எதிர்ப்பு ஏஜென்சியில் (வாடா) ஐஓசி தடகள பிரதிநிதியாகவும் பணியாற்றினார், மேலும் 2014 முதல் 2021 வரை வாடாவின் தடகளக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். தற்போது ஐஓசி நிர்வாகக் குழுவில் பணியாற்றும் கோவென்ட்ரி, உலகளவில் ஒலிம்பிக் தினமாகக் கொண்டாடப்படும் ஜூன் 23 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.  

 

ஜிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதி ராபர்ட் முகாபே, அவரை நாட்டின் "தங்கப் பெண்" என்று பிரபலமாக அழைத்தார், மேலும் விளையாட்டுக்கான அவரது பங்களிப்புகளை கௌரவித்து ஒரு இராஜதந்திர பாஸ்போர்ட் மற்றும் $100,000 வெகுமதியை வழங்கினார்.  

 

கல்வி மற்றும் தொழில்

கோவென்ட்ரி தனது ஆரம்பக் கல்வியை ஜிம்பாப்வேயின் தலைநகரான ஹராரேவில் உள்ள அனைத்து பெண்கள் கான்வென்ட் பள்ளியில் பயின்றார், பின்னர் அலபாமாவில் உள்ள ஆபர்ன் பல்கலைக்கழகத்தில் சேர அமெரிக்காவிற்குச் சென்றார், அங்கு அவர் ஒரு தொழில்முறை நீச்சல் வீராங்கனையானார்.  


உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே 2000 ஆம் ஆண்டு சிட்னி விளையாட்டுப் போட்டிகளில் ஒலிம்பிக்கில் அறிமுகமானார். 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில், அவர் மூன்று பதக்கங்களை வென்றார், அதைத் தொடர்ந்து 2008 பெய்ஜிங் விளையாட்டுப் போட்டிகளில் நான்கு பதக்கங்களை வென்றார்.

 

2018 மற்றும் 2021 க்கு இடையில், கோவென்ட்ரி தாமஸ் பாக் கீழ் IOC நிர்வாகக் குழுவில் தடகள பிரதிநிதியாக பணியாற்றினார்.

 

சர்வதேச ஒலிம்பிக் குழு

ஒலிம்பிக் போட்டிகளை ஒழுங்கமைப்பதற்கும் ஒலிம்பிக் இயக்கத்தை வழிநடத்துவதற்கும் பொறுப்பான நிர்வாகக் குழு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) ஆகும். 1894 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி பாரிஸில் பியர் டி கூபெர்டினால் நிறுவப்பட்ட IOC, விளையாட்டு மூலம் சர்வதேச புரிதலை ஊக்குவிப்பதற்கும் பண்டைய ஒலிம்பிக் போட்டிகளை புதுப்பிப்பதற்கும் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் லொசானில் உள்ளது, இது 1994 ஆம் ஆண்டு ஒலிம்பிக் தலைநகராக நியமிக்கப்பட்டது.


தேசிய ஒலிம்பிக் குழுக்கள், சர்வதேச கூட்டமைப்புகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஏற்பாட்டுக் குழுக்கள் உள்ளிட்ட ஒலிம்பிக் சமூகத்தின் பல்வேறு பங்குதாரர்களிடையே ஒத்துழைப்புக்கு ஐ.ஓ.சி உதவுகிறது. விளையாட்டின் மூலம் சிறந்த உலகத்தை உருவாக்குவதும், உலகளவில் ஒலிம்பிக்கை ஊக்குவிக்கும் அதே வேளையில் ஒலிம்பிக் போட்டிகளை வழக்கமாகக் கொண்டாடுவதை உறுதி செய்வதும் இதன் நோக்கமாகும்.

 

அதன் வரலாறு முழுவதும், IOC பத்து தலைவர்களைக் கொண்டுள்ளது:

 

-டிமெட்ரியஸ் விகேலாஸ் (கிரீஸ்) - 1894 முதல் 1896 வரை

-பியர் டி கூபெர்டின் (பிரான்ஸ்) - 1896 முதல் 1925 வரை

-ஹென்றி டி பெய்லெட்-லடோர் (பெல்ஜியம்) - 1925 முதல் 1942 வரை

-ஜே. சிக்ஃப்ரிட் எட்ஸ்ட்ரோம் (ஸ்வீடன்) - 1946 முதல் 1952 வரை

-ஏவரி பிரண்டேஜ் (அமெரிக்கா) - 1952 முதல் 1972 வரை

-லார்ட் கிலானின் (அயர்லாந்து) - 1972 முதல் 1980 வரை


-ஜுவான் அன்டோனியோ சமரஞ்ச் (ஸ்பெயின்) - 1980 முதல் 2001 வரை

-ஜாக்ஸ் ரோஜ் (பெல்ஜியம்) - 2001 முதல் 2013 வரை

-தாமஸ் பாக் (ஜெர்மனி) - 2013 முதல் 2025 வரை

-கிர்ஸ்டி கோவென்ட்ரி (ஜிம்பாப்வே) - 2025 முதல்

 

விளையாட்டுகளில் நெறிமுறை நடைமுறைகளை மேம்படுத்துதல், ஊக்கமருந்து பயன்பாட்டை எதிர்த்துப் போராடுதல் மற்றும் நியாயமான போட்டியை உறுதி செய்தல் ஆகியவற்றில் ஐ.ஓ.சி முக்கிய பங்கு வகிக்கிறது. விளையாட்டு வீரர்களை ஆதரிப்பதையும் உலகளவில் விளையாட்டுகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை இது நிர்வகிக்கிறது. இந்த அமைப்பு முற்றிலும் தனியார் மூலங்கள் மூலம் நிதியளிக்கப்படுகிறது, அதன் வருவாயில் தோராயமாக 90 சதவீதத்தை விளையாட்டு இயக்கத்திற்கு மீண்டும் விநியோகிக்கிறது.


தொகுதி மறுவரையறையை பேசுபொருளாக்கியது ஏன்? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 


தொகுதி மறுவரையறையை திமுக ஏன் பேசுபொருளாக்கியது? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ


Why did the constituency fair delimitation become a topic of discussion? - Chief Minister M.K. Stalin's video


Why did the constituency redelineation become a topic of discussion? - Chief Minister M.K. Stalin's video




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


எரிவாயு சிலிண்டர்கள் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு

 


எரிவாயு சிலிண்டர்கள் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு அறிவிப்பு


Restrictions on the use of Gas cylinders


ஆண்டுக்கு இனி 15 சிலிண்டர்கள் மட்டுமே


வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் சிலிண்டர்கள், ஆண்டுக்கு 15 (14.20kg) மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என இந்திய எண்ணெய் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.


இந்தியாவிலுள்ள வீடுகளில் ஆண்டுக்கு 15 சமையல் கேஸ் சிலிண்டர் வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கேற்ப, அனுமதிக்கப்பட்ட அளவை கடந்தால், 'அன்புள்ள வாடிக்கையாளரே, ஆண்டு ஒதுக்கீடான 213 கிலோவை பயன்படுத்தி விட்டீர்கள். மேலும் பதிவு செய்ய முடியாது' என்ற SMS தகவல் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுகிறது.



ஆண்டுக்கு 15 சமையல் சிலிண்டர் மட்டுமே முன்பதிவு


ஆண்டுக்கு 15 சமையல் சிலிண்டர் (14.20KG) மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 


15 சிலிண்டர்கள் பெற்றவர்கள் அதற்குமேல் தேவைப்பட்டால் அதற்கான உரிய காரணத்தை கடிதமாக தந்தபின் சிலிண்டர்களை பெறலாம்.


வீடுகளில் ஒரே இணைப்பு அல்லது இரட்டை இணைப்பு வழியாக கேஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறது. இரட்டை இணைப்பு வைத்திருப்பவர்கள், முன்பதிவு செய்து சிலிண்டரை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், ஒரே இணைப்பு கொண்டவர்கள், சிலிண்டர் காலியான பிறகே புதியதை பெற முடியும். மத்திய அரசு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கும் நிலையில், இதற்கு மேல் சிலிண்டர் பெறுவோருக்கு மானியமின்றி வழங்கப்படும்.


இந்தியன் ஆயில் தரப்பில் இருந்து கூறப்பட்டது :

"ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 15 சிலிண்டர் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் 12 சிலிண்டர்களுக்கு மானியம் கிடைக்கும். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் சிலிண்டர் தேவைப்படுவோருக்கு, அவர்கள் ஏஜென்சியில் முறையான காரணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகே கூடுதல் சிலிண்டர் வழங்கப்படும்" எனத் தெரிவித்தனர்.



எனவே, 15 சிலிண்டர் பயன்படுத்தியவர்கள், அதற்கு மேல் பெற வேண்டும் என்றால், ஏஜென்சியில் காரணத்துடன் கடிதம் வழங்கி அனுமதி பெற வேண்டும். இது முறைகேடுகளை தடுக்கும் ஒரு நடவடிக்கையாகவும் அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு D.A Hike

   மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு Dearness allowance hike for central government employees மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்ப...