கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>குழந்தை தொழிலில் மீட்கப்பட்ட மாணவி சாதனை

குழந்தை தொழிலாளராக இருந்து மீட்கப்பட்டு, பத்தாம் வகுப்பு தேர்வில், மாநில அளவில் சாதித்த மாணவியை கலெக்டர் பாராட்டினார்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் கருணாகரன் தலைமை வகித்தார். குழந்தை தொழிலாளராக இருந்து மீட்கப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டு, கல்வி பயின்ற சரண்யா என்ற மாணவி, 2011 -12ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 456 மதிப்பெண் பெற்றுள்ளார்.
குழந்தை தொழிலாளராக இருந்து மீட்கப்பட்ட மாணவர்களில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற, மாணவி சரண்யாவுக்கு சென்னை தொழிலாளர் நலத்துறை சார்பில் 3,000 ரூபாய் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கலெக்டரை சந்தித்து சரண்யா வாழ்த்து பெற்றார்; கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Dr.Radhakrishnan Award 2026–2027க்கு விண்ணப்பிக்கும் வழிமுறை

  Dr. Radhakrishnan Award Application 2026–2027 User Manual Dr.Radhakrishnan Award 2026–2027க்கு விண்ணப்பிக்கும் வழிமுறை Step 1 : Login into...