கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>எட்மண்ட் ஹிலாரி...

 
எட்மண்ட் ஹிலாரி... நியூசிலாந்து நாட்டில் பிறந்த இவர் குட்டிப் பையனாக படிப்பில் சுமார்தான். கூச்ச சுபாவம் வேறு. பள்ளிக்கு போகும்பொழுது இரண்டு மணிநேர ரயில் பயணத்தில் அவர் படித்த சாகச கதைகள் அவரை வேறு கனவு உலகத்திற்கு கூட்டிப்போனது. அந்தக் கதைகளில் வரும் நாயகர்கள் போல சாகசங்கள் செய்ய குத்துசண்டை கற்றுக்கொண்டார். மலையேற்றம் என ஈடுபாட்டுடன் விஷயங்களை செய்தார்.

தேனீ வளர்ப்பில் வெயில் காலங்களில் ஈடுபட்டு அதில் வரும் வருமானத்தில் ஏறவே கடினமான சிகரங்களுக்கு நண்பர்களோடு போவார். உலகப் போரில் ஈடுபடபோய் தீக்காயங்களுக்கு உள்ளாகி மீண்டு வந்தார்.

எவரெஸ்ட் சிகரத்தை எப்படியாவது ஏறிவிட வேண்டும் என ஆவல் கொண்டிருந்தார். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அச்சிகரம் செல்லும் பார்டர் திறக்கபடும். அப்பொழுது அங்கு போய் சேர்ந்தார். உடன் நேபாளிய செர்பா மக்களுள் ஒருவரான டென்சிங் சேர்ந்து கொண்டார். நெருங்கிப் பழகிய இருவரும் முன்னேறினார்கள். கடுமையான சூழலில் பனி பள்ளங்களில் தப்பித்து சென்று சிகரத்தை 1953-ல் தொட்டார்கள்.

யார் முதலில் தொட்டார்கள் என இறுதி வரை சொல்லாமல் பெருந்தன்மையாக இருவரும் சேர்ந்தே தொட்டதாக சொன்னார்கள். அதற்கு பிறகும் தன் சாகசத்துக்கான தேடலை விடாமல் தென் மற்றும் வட துருவங்களை தொட்டார். நேபாளில் ஹிமாலய அறக்கட்டளையை உருவாக்கி பல பழங்குடியினரின் மருத்துவ மற்றும் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க உதவினார். எப்படி இப்படி சாதனைகள் செய்கிறீர்கள் என கேட்ட பொழுது, "இயல்பான எளியவன் நான்! புத்தகங்கள் படித்து மேகங்களில் மிதந்தவன் நான். அசாதரணமான கனவுகளை கண்டு அசாதரணமாக ஊக்கத்தோடு உழைத்தேன். சிம்பிள்" என்றார்.

(இன்று - ஜன.11: முதன்முதலில் எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட எட்மண்ட் ஹிலாரி மறைவு தினம்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Selection of outstanding teachers for Dr. Radhakrishnan Award | DSE Proceedings

 05-09-2026 அன்று ஆசிரியர் தின விழாவில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்க சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்தல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செ...