கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>எட்மண்ட் பர்க்...

 
எட்மண்ட் பர்க்... அயர்லாந்தில் பிறந்த இவர் தன் மாற்று சிந்தனைகளால் கவனம் பெற்றார். பத்திரிக்கை துறையை நான்காவது தூண் என அழைத்தவர் இவரே. 1765 இல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நுழைந்தார். அவர் பேசிய முதல் பேச்சே எல்லாரையும் மெய்மறக்க செய்தது. அமெரிக்காவின் சுதந்திர போருக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்தார்; அதே சமயம் பிரெஞ்சு புரட்சி ஐரோப்பா முழுக்க பரவி குழப்பத்தை உண்டாக்கும் என்றார் - அவ்வாறே நடந்தது.

இந்தியாவின் மீது தனிக்கரிசனம் அவருக்கு இருந்தது; வாரன் ஹாஸ்டிங்க்ஸ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்து எண்ணற்ற ஊழல்கள் செய்தார். நிர்வாகத்தில் மக்களை பற்றி கவலைப்படவில்லை. அவரை நாடாளுமன்றத்தில் ராஜா துரோக குற்றத்துக்காக நிற்க வைத்தார் பர்க். அப்பொழுது அவர், இந்தியாவின் கர்நாடகத்தில் வறண்ட பூமியை அம்மக்கள் நீர்த்தேக்கங்கள் கட்டி பசுமை பூமியாக்கினர்; அவர்களை முட்டாள் என நினைத்து அவற்றை சீரழிய விட்டு தினமும் பஞ்சத்தொடு இரவுணவு அருந்தப்போனார் ஹாஸ்டிங்க்ஸ் என பின்னி எடுத்தார்; ராஜா துரோக குற்றம் நிரூபிக்கப்பட்டது இந்த உரையை பதினாறு முறை திருத்தி எழுதி தயாரானார் அவர்.

மிகவும் அதிகமாக வாசிக்கும் பழக்கம் கொண்ட அவர், உலக வரலாற்றை நாற்பதாண்டு கால உழைப்பில் எழுதினார். ஒரு கொலை அவர் வீட்டருகில் நடந்தது. பார்த்த பலரும் பல விதமாக அதை விவரிக்க தன் உழைப்பை எல்லாம் தீயிட்டு கொளுத்திவிட்டு, "இயேசுவை புத்தரை பற்றி இவர்கள் பதிவு செய்தது உண்மை என நான் எப்படி நம்புவது? புத்தக அறிவு மட்டும் போதாது!" எனக் கம்பீரமாக சொல்லிவிட்டு நடந்தார்.

"நல்லவர்கள எதுவும் செய்யாமல் இருப்பதே தீமையை செழிக்க வைக்கும்" என்று சொன்ன தலைசிறந்த மனிதர் அவர்.

இன்று - ஜன.12: உலகின் தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களில் தனிப்பெரும் இடம் பெற்றிருக்கும் எட்மண்ட் பர்க் பிறந்தநாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNEA 2025 Schedule

 பொறியியல் சேர்க்கை 2025 - கால அட்டவணை வெளியீடு TamilNadu Engineering Admission 2025 - Timetable Release