கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>முதல் வானொலி ஒலிபரப்பு...

 
இன்றைக்கு நம்மில் பலரது காதுகளை ஏதோ ஒரு எஃப்.எம் நிறைத்துக் கொண்டு இருக்கிறது. முதன்முதலில் வானொலி ஒலிபரப்பு எப்படி இருந்திருக்கும்?

ரொம்பவே சுவாரசியமான சம்பவம் அது.

ஜன.13, 1910 ஆம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் அந்த நிகழ்வு நடந்தது. ஆஸ்திரியாவில் நுஸ்பாமேர் எனும் பேராசிரியர் ஆறு வருடங்களுக்கு முன்னேயே அடுத்த அறைக்கு வானொலி ஒலிபரப்பை நிகழ்த்தி இருந்தாலும், பொதுமக்கள் கேட்கிற அளவுக்கு நடந்த முதல் வானொலி ஒலிபரப்பு இதுதான்.

இத்தாலிய இசைக்குழு ஒன்றின் இசையே முதலில் ஒலிபரப்பப்பட்டது. அப்பதிய மைக்குகள் ரொம்பவும் துல்லியமானவை அல்ல. அதனால், மேடையில் தூரத்தில் வைக்கப்பட்ட மைக்கில் விழுந்த இசை அரைகுறையாகவே கேட்டது. மேடைக்கு கீழே பாடிய பாடகர்களின் குரல் கொஞ்சம் சிறப்பாக கேட்டது. நியூயார்க் நகரில் இருந்து தூரத்தில் போன கப்பல்களில் இசையை மக்கள் கேட்டார்கள். டைம்ஸ் சதுக்கத்திலும் கேட்டு பூரித்தார்கள். ஒரு மைல் தூரத்துக்கு ஒபரா இசை கேட்டதாக செய்திதாள்களில் விளம்பரங்கள் வந்தன.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

01-01-2025 முதல் அகவிலைப்படி 55% ஆக உயர்வு - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

  01-01-2025 முதல் அகவிலைப்படி 55% ஆக உயர்வு - தமிழ்நாடு அரசு அரசாணை (நிலை) எண் : 95, நாள் : 28-04-2025 வெளியீடு D.A. Hike G.O. Ms No : 95, ...