கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பெசிமர்...

 
பெசிமர்... தொழில்மயம் ஒட்டுமொத்த ஐரோப்பாவை புரட்டிப்போட்டபொழுது இங்கிலாந்தில் இணையற்ற வேலைகளை இவர் செய்தார். நுரம்பெர்க் எனும் இடத்தில் வெண்கலம் பொடியாக்கி பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருந்தது. அதை தயாரிக்கும் முறைகள் நேரம் எடுத்துக்கொண்டன. அந்த பொடியை பெற்று அதை மேலும் தரமேம்படுத்தி, அதை எளிமையாக தயாரிக்கும் வழிமுறையை உருவாக்கினார். இதை மாற்று பொறியியல் என கொண்டாடினார்கள்.

இவர் வருவதற்கு முன்வரை வார்ப்பிரும்பு மற்றும் தேனிரும்பு எனும் இரண்டு வகைகளையே பாலங்கள், தண்டவாளங்கள் முதலியவற்றில் பயன்படுத்தி கொண்டிருந்தார்கள். இவை வலிமை குறைந்ததாக இருந்ததால் அடிக்கடி விரிசல் விட்டு செயலிழந்து விபத்துக்களுக்கு வழி வகுத்தன. இவர், உருக்கப்பட்ட பன்றி இரும்பை ஆக்ஸிஜனை கொண்டு வெப்பப்படுத்தி அழுக்குகளை நீக்கி அதன் மூலம் எஃகை தயாரிக்கும் முறையை உருவாக்கினார். வலிமை மிகுந்த பாலங்கள், கட்டடங்கள், தண்டவாளங்கள் உலகுக்கு கிடைத்தன.

சர்க்கரையை எளிமையாக தயாரிக்கும் தொழிற்சாலை நடைமுறைகளை உருவாக்கினார். மொத்தம் 129 பேடண்ட்கள் இவர் வசமிருந்தது. வார்ப்புகளின் மூலம் பல உருவங்களை ஒரே வடிவத்தில் தயாரிக்கும் முறையும் இவர் தந்த கொடையே.அவரின் பிறந்தநாள்  (ஜன.19).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நன்றாகப் படிக்கச் சொன்ன தந்தையைக் கொன்ற மகன் கைது

  நன்றாகப் படிக்கச் சொன்ன தந்தையைக் கொலை செய்த மகன் கைது  Son arrested for killing father who told him to study well நெல்லை மேலப்பாளையத்தில்...