கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டே இட ஒதுக்கீடு வழங்கப்படுமா - சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்...

 மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இடஒதுக்கீடு இந்த ஆண்டே வழங்கப்படுமா என்பது குறித்து, ஆளுநரிடம் ஒப்புதல் பெறும் கால அளவைப் பொறுத்தே முடிவு செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


சென்னை எழும்பூரில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு நிலையத்தில், "தேசிய தன்னார்வ ரத்ததான நாள் - 2020" என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1 புள்ளி 6 சதவீதத்தில் இருந்து, 1 புள்ளி 3 சதவீதமாக குறைந்துள்ளதாகத் தெரிவித்தார். மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு குறித்து ஆளுநரின் ஒப்புதலை பொருத்தே முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

7000 கிராமங்களில் கைம்பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு

மகாராஷ்டிராவில் சுமார் 7000 கிராமங்களில் கைம்பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு Maharashtra declares end to oppr...