கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மலைப்பகுதிகளில் பணிபுரிய ஆர்வம் காட்டிய ஆசிரியர்கள்...

மலைப் பகுதிகளில் வேலை என்றாலே, ஆளை விடுங்க சாமி என, கையெடுத்து கும்பிடாத குறையாக, அரசு அலுவலர்கள், ஊழியர்கள், "எஸ்கேப்' ஆகி விடுவர். இப்போது, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மலைப் பிரதேச பகுதிகளை அனுபவித்துப் பார்க்க, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தயாராகவே உள்ளனர். அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, நேற்று முன்தினமும், நேற்றும், "ஆன்-லைன்' வழியாக, 32 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடந்தன. முதல் நாள் கலந்தாய்வில், 224 பேர், பதவி உயர்வு பெற்றனர். இரண்டாம் நாளான நேற்று, 221 காலியிடங்களை நிரப்ப, கலந்தாய்வு நடந்தது.தஞ்சாவூர் மாவட்டத்தில், 39 இடங்கள், கிருஷ்ணகிரி, 42, திருவண்ணாமலை, 23, விழுப்புரம், 16 இடங்கள் காலியாக இருந்தன. மற்ற மாவட்டங்களில், குறைந்த அளவு இடங்களே இருந்தன.  இதில், நீலகிரி மாவட்டத்தில், 16 இடங்கள் காலியாக இருந்தன.வழக்கமாக, நீலகிரி உள்ளிட்ட மலை சார்ந்த பகுதிகளில், ஆசிரியர் பணியிடங்கள், அதிகளவில் காலியாகவே இருக்கும். இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் பணி என்றாலும், "ரிஸ்க்” அதிகம் என்பதால், இது போன்ற பணியிடங்களை, ஆசிரியர் விரும்புவதில்லை. போக்குவரத்து இல்லாதது, பெரும் பிரச்னையாக இருக்கும். அதனால், உள்ளூர் அல்லது உள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே, பெரும்பாலும் பணிபுரிவர். நேற்று நடந்த கலந்தாய்வில், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளே எதிர்பார்க்காத நிலையில், 16 காலியிடங் களையும், பட்டதாரி ஆசிரியர், போட்டி போட்டுக்கொண்டு, தேர்வு செய்தனர். இவர்களில், சிலர் மட்டுமே, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற ஆசிரியர்கள், விழுப்புரம்,சேலம், புதுக்கோட்டை, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பணியிடங்களை தேர்வு செய்தது, அதிகாரி களை வியப்பில் ஆழ்த்தியது.இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் வாழ்வதையும், அந்த சூழலை அனுபவிக்கவும், ஆசிரியர்கள் தயாராகி விட்டதையே, இது காட்டுகிறது. இது குறித்து, கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாவது: மலை சார்ந்த பகுதிகளில் பணி என்றால், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருக்கும். ஆனால், இப்போது, அங்கேயும் பல்வேறு வசதிகள் வந்துவிட்டன. அதனால், மலை சார்ந்த பகுதிகளிலும், பணிபுரிய ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
மேலும், மலைப் பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, கூடுதலாக சில, "அலவன்ஸ்'கள் வழங்கப்படுகின்றன. பழமையான சில பள்ளி வளாகங்களில், தலைமை ஆசிரியருக்கு, விடுதிகளும் உள்ளன. எனவே, அங்கேயே ஆசிரியர், குடும்பத்துடன் கூட தங்கலாம். இப்படி, பல வசதிகள் இருப்பதால் தான், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும், நீலகிரி மாவட்ட பள்ளிகளை தேர்வு செய்துள்ளனர். இவ்வாறு கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இடு அட்டி... எருமாடு...மாவட்டத்தில் உள்ள 16 இடங்களும், கேரளா, கர்நாடகா எல்லைகளை ஒட்டி வருவதா கவும், பெரும்பாலான பள்ளிகள், மலை சார்ந்த பகுதிகளில் இருப்பதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர். எகோனி, கட்ட பெட்டு, கை உன்னி, இடு அட்டி, சோளூர் மட்டம், தெங்கு மராடா, எருமாடு உள்ளிட்ட இடங்கள், காலியிடங்களில் அடக்கம். மலை சார்ந்த பள்ளிகளாக இருந்தாலும், 300 முதல் 500 மாணவர் வரை, ஒவ்வொரு பள்ளிகளிலும் படித்து வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

THIRAN மதிப்பீடுகள் : State Team தகவல்

  THIRAN மதிப்பீடுகள் : State Team தகவல் Dear Team, As mentioned in the circular regarding the monthly assessments, the August THIRAN assess...