கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>6,500 இடைநிலை ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டங்களில் வேலை

ஒரே நாளில், 9,664 இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாநிலம் முழுவதும், நேற்று பணி நியமன கலந்தாய்வு நடந்தது. 6,532 பேருக்கு, அவரவர் சொந்த மாவட்டங்களிலேயே, இடங்கள் கிடைத்தன. டி.இ.டி., தேர்வில், 9,000 இடைநிலை ஆசிரியர்கள், தேர்வு பெற்றனர். இவர்கள் அனைவரும், தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு ஆரம்பப் பள்ளிகளில், பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, 32 மாவட்டங்களிலும், நேற்று நடந்தன. காலையில், மாவட்டத்திற்குள் பணி நியமனத்திற்கான கலந்தாய்வும், பிற்பகலில், வெளி மாவட்டங்களில், பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வும் நடந்தன. மொத்த ஆசிரியரில், 6,532 பேருக்கு, அவரவர் சொந்த மாவட்டங்களிலேயே, பள்ளிகளை தேர்வு செய்தனர் என்றும், மீதமுள்ள 3,132 பேர், வெளி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை தேர்வு செய்தனர் என்றும், தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

999 Nursing Assistant Grade II பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியீடு

  999 Nursing Assistant Grade II பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியீடு >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்