கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இடைவெளியுடன் இருமுறை தடுப்பூசி - மத்திய அரசு...

 கொரோனா தடுப்பூசி, 28 நாள் இடைவெளியில், இரண்டு முறை போடப்படும். தடுப்பு மருந்து செலுத்தி, 14 நாட்களுக்கு பின், பலன் தெரியும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

 கொரோனா தடுப்பூசி பற்றி, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது: ஒவ்வொருவருக்கும், 28 நாள் இடைவெளியில், இரண்டு முறை தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி போடப்பட்டு, 14 நாட்களுக்கு பின், அதன் பலன் தெரியும். மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள இரண்டு தடுப்பூசிகளும், பாதுகாப்பு மிக்கவை என, மருத்துவரீதியாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் இயக்கம், 16ல் துவங்க உள்ளது. இதற்காக, நாட்டின், 13 முக்கிய நகரங்களுக்கு, நேற்று மட்டும், 56 லட்சம், 'டோஸ்' புனேயில் உள்ள, சீரம் நிறுவனத்தின் ஆலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள், இதன் வாயிலாக வேகம் எடுத்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துதல் - புத்தகங்கள் தயாரிக்க கதைகள் வரவேற்றல் - ஆசிரியர்களின் EMIS login வழியே அனுப்பும் வழிமுறை - SPD Letter

  வாசிப்பு இயக்கம் - பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துதல் - நுழை, நட, ஓடு, பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரித்தல் கத...